தவறாமல் தரிசிக்க வேண்டிய கோவில்கள்

தவறாமல் தரிசிக்க வேண்டிய கோவில்கள், மு. ஆதவன், புதிய வாழ்வியல் பதிப்பகம், பக். 96, விலை 95ரூ. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மனக்குறை இருக்கும். அவற்றை தீர்க்க வல்லவை கோவில்கள் மட்டுமே. வீதிக்கு ஒரு கோவில் இருந்தாலும், சில கோவில்கள், குறிப்பிட்ட பிரார்த்தனைகளை நிறைவேற்ற வல்லதாக இருக்கும். தலையெழுத்து நன்கு இருக்க, திருமணம் ஆக, குழந்தை பிறக்க, பிள்ளைகள் நன்கு படிக்க, அவர்கள் பேச்சாற்றலுடன் திகழ, வாய் பேசாதோர் சரியாகப் பேச, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக என 16 பிரார்த்தனைத் தலங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் […]

Read more

நாகூர் குலாம் காதிறு நாவலர்

நாகூர் குலாம் காதிறு நாவலர், ஏவி.எம். நசீமுத்தீன், சாகித்திய அகாடமி, பக். 128, விலை 50ரூ. ஒரு நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்த தமிழப் பெரும் புலவர் குலாம் காதிறு நாவலர். பாண்டித்துரை தேவர், பாஸ்கர சேருபதி, மு.ராகவையங்கார் போன்றோரோடு இணைந்து, மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர். புலமைத்திறம் மிக்கவராக, உரைநடை வல்லுனராக, மொழிப்பெயர்ப்பாளராக, நாவன்மை கொண்ட நாவலராக இயங்கிய, குலாம் காதிறுவின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும், அவர்தம் அளப்பரிய தமிழ்ப்பணிகளும், பெருங்குணங்களும் நூலில் குறிக்கப்பட்டுள்ளன. சிற்றிலக்கியங்கள் பல படைத்தவர். இவரது நாகூர்ப் புராணம் குறிப்பிடத்தக்கதொன்று. […]

Read more

வள்ளுவர் வாக்கும் வாழ்வியல் நிஜங்களும்

வள்ளுவர் வாக்கும் வாழ்வியல் நிஜங்களும், சி.வி. மலையன், மேகலா பதிப்பகம், பக். 280, விலை 150ரூ. இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் நடந்த சமீபகால சில நிகழ்வுகள் பற்றி, தினமலர் முதலான சில நாளிதழ்களில் வெளியான செய்திகளைக் கருவாகக் கொண்டு, அந்த நிகழ்வுகளோடு திருக்குறட்பாக்களை பொருத்திக் காட்டுகிறது இந்த நூல். மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சுவினை எனும் குறட்பாவுக்கு இந்து, முஸ்லிம் பெண்கள் முறையே முஸ்லிம், இந்து பெண்களின் கணவர்களுக்கு, தங்களின் சிறுநீரகத்தை தானமாக கொடுத்த நிகழ்வையும், பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் […]

Read more

ஆபிரகாம் பண்டிதர்

ஆபிரகாம் பண்டிதர், நா.மம்மது, சாகித்திய அகாதெமி, பக். 112, விலை 50ரூ. கருணாமிர்த சாகரம் தந்த கருணையாளர் தமிழ் இசை துறையில் மறக்க முடியாத ஒரு ஆளுமை, ஆபிரகாம் பண்டிதர். திருநெல்வேலி மாவட்டம். சாம்பவர் வடகரை ஊரில் பிறந்து, படித்து, திண்டுக்கலில் பணிபுரிந்து, தஞ்சையில் இறுதி வரை வசித்து, அங்கேயே மறைந்தவர். இசை மட்டுமின்றி, சித்த மருத்துவம், தமிழாசிரியர் பணி, விவசாயம், பாடகர், வீணை, வயலின் கலைஞர், கீர்த்தனை ஆசிரியர், ஓவியர், புகைப்படக் கலைஞர், பதிப்பாசிரியர், ஜோதிட பண்டிதர், கதாகாலட்சேப விற்பன்னர், இசை புரவலர் […]

Read more

வைணவ இலக்கியம்

வைணவ இலக்கியம் (ஆய்வுக்கோவை), எட்டுதொகுதிகள், பதிப்பாசிரியர்கள்-முனைவர் ந.வெங்கடேசன், முனைவர் தெ.மேகநாதன், முனைவர் இரா. சதாசிவம், வெளியீடு-அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பக். 2038. தமிழ் இலக்கியத்தின் நாடளாவிய தன்மைக்கு எடுத்துக்காட்டு ஒம் நமோ நாராயணாய் எனும் எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில், எட்டுத் தொகுதிகளுடன் வெளியிடப்பட்ட நூல். நானூற்று நான்கு கட்டுரைகளுடன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுடன் வெளிவந்துள்ள இந்த நூல், வைணவ இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல். வைணவ இலக்கியங்களான நாலாயிரத்திவ்ய பிரபந்தம், பாகவதம், ராமாயணம் முதலான இலக்கியங்களில் வெளிப்படையாகத் தோன்றும் கருத்துகளையும், உணர்த்துப்பட்டுள்ள கருத்துகளையும் வெளிப்படுத்தும் […]

Read more

தி.க.சி.வின் நாட்குறிப்புகள்

தி.க.சி.வின் நாட்குறிப்புகள், சந்தியா பதிப்பகம், சென்னை. கம்யூ. இலக்கிய வட்டத்தின் பெயர் கலைஞர் கழகம் சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த புத்தகம் தி.க.சி.யின் நாட்குறிப்புகள். அவர் 1948ம் ஆண்டு எழுதிய நாட்குறிப்பை தேடிப்பிடித்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம். ஒருவரின் டைரி அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி இருக்கும். ஆனால் நாடு சுதந்திரம் அடைந்த தருவாயில் தி.க.சி. எழுதிய டைரி அவரை பற்றியோ அவர் குடும்பத்தைப் பற்றியோ இல்லை. நண்பர்களை பற்றியும், அவர் படித்த நூல்களைப் பற்றியும் மட்டுமே உள்ளது. ஓராண்டு மட்டுமே இந்த நாட்குறிப்பை […]

Read more

தென்குமரியின் சரித்திரம்

தென்குமரியின் சரித்திரம், அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில். நூலாசிரியர் அ.கா.பெருமாள் தமிழகம் அறிந்த ஆய்வாளர். அவர் எழுதிய இந்த நூலில் கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆய் அரசர்களின் காலம் துவங்கி, பாண்டியர் காலம், பிற்கால சோழர் காலம், வேணாட்டரசர்கள் காலம், திருவிதாங்கூர் அரசு காலம் என, 14 தலைப்புகளில், தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஏராளமான பழைய அரிய புகைப்படங்களும் தேவையான இடங்களில் தரப்பட்டுள்ளன. தகவல்களில் பல, யூகங்கள், கதைகள் சார்ந்தவை. நாஞ்சில்நாடு பற்றி பல இடங்களில் குறிப்புகள் வருகின்றன. கதை சார்ந்த குறிப்பும் உள்ளது. பல […]

Read more

உங்களின் முன் மாதிரி யார்?

உங்களின் முன் மாதிரி யார்?, பேரா. கு. நல்லதம்பி, விஜயா பதிப்பகம், கோவை. ஆசிரியர் பணி ஓர் அறம் என்ற நமக்குப் பரிச்சயமான தத்துவத்தை ஒரு புதிய கோணத்தில் புதிய வடிவத்தில் இந்த நூல் விவரிக்கிறது. அதே நேரத்தில் ஆசிரியரின் இலக்காகிய நன் மாணாக்கரையும் இணைத்துப் பேசுகிறது இந்த நூல். இருவரின் பரிணாம வளர்ச்சி பூரணத்துவம் பெறுவது எப்படி, எப்போது என்பதை ஆசிரியர் விரித்துரைத்துள்ளார். ஓர் அநை நூற்றாண்டுக்கும் முந்தைய கல்விக்கூடச் சூழலில், தமக்குக் கிடைத்த அனுபவங்களின் சாறு பிழிந்து, தம் ஆசிரியர்கள், மாணக்கர்களின் […]

Read more

கல்வியே மகாசக்தி

கல்வியே மகாசக்தி, நரேந்திர மோடி, சப்னா புக் ஹவுஸ், பக். 100, விலை 150ரூ. கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி பேசிய பல விஷயங்கள் இப்போதும் பேசப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கல்வி குறித்து அவர் சொன்ன விஷயங்கள் கல்வியாளர்களாலும் கருத்தாளர்களாலும் பாராட்டப்படுகின்றன. அவர் அன்று பேசிய பேச்சு, அவரது ஆழ்மனதில் பல வருடங்களாக உறங்கிக்கிடந்த எண்ணங்களின் எழுச்சியே. கல்வி குறித்து அவர் கொண்டிருந்த எண்ணங்களை அவ்வப்போது குறித்து வைத்திருப்பது வழக்கம். அந்த குறிப்புகள்தான் இந்த நூல். குஜராத்தி மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் […]

Read more

கோடையில் ஒரு மழை

கோடையில் ஒரு மழை, ச. ஆறுமுகம், ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 152, விலை 120ரூ. மருந்து கொடுக்காமல் பல்லை பிடுங்கி பழிதீர்க்கும் பல் மருத்துவர் கொரியன், சீனம், பிரித்தானியா, இலத்தீன் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகள் அடங்கியுள்ள தொகுதி. இதில் மலை மேல் வந்தது கரடி என்ற கதைதான். தொகுதியில் உள்ள கதைகளிலேயே சிறந்த கதை. ஆலிவ் மன்றோ (கனடா) எழுதிய கதை. ஞாபக மறதி நோயில், தன் கணவனையே மறந்துவிடும், வயது மனைவியின் நலத்திற்காக, எதையும் செய்ய […]

Read more
1 183 184 185 186 187 240