எஸ்.எஸ்.போத்தையா கரிசக்காடு

எஸ்.எஸ்.போத்தையா கரிசக்காடு, பா. செயப்பிரகாசம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 188, விலை 140ரூ. மொத்தம் 900 சொலவடைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார் எஸ்.எஸ். போத்தையா, அதை அகர வரிசைப்படுத்தி அழகாகப் பதிப்பித்துள்ளார் பா. செயப்பிரகாசம். பழமொழிகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்தாமல், சொலவடைகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்துவதற்கான விளக்கத்தை இந்த நூல் தெரிவிக்கிறது. மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் முதலானவையும், கம்பளத்தார் குறித்த வரலாறும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. டைரி எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்த போத்தையாவின் டைரிக் குறிப்புகளும், அவர் பயணித்த ஊர்களின் காட்சிகளும் படங்களுடன் […]

Read more

நீவாநதி

நீவாநதி, கவிப்பித்தன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 502, விலை 385ரூ. பொன்னை ஆற்றின் நுரைத்து ஓடிய வெள்ளத்தோடும் அதில் துள்ளிக் குதித்த மீன்களோடும் வாழ்ந்த வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் தொலைத்துவிட்டதுமட்டுமல்ல, அதைப் பற்றிய கவலை எதுவும் இல்லாமல் வாழப் பழகிக் கொண்ட கொடுமையை அவர்களின் மொழியிலேயே ‘நீவாநதி’ என்ற தலைப்பில் நாவலாக்கித் தந்துள்ளார் கவிப்பித்தன். வேலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கைதான் நாவலின் மைய இழை. அவர்களின் உயிர் ஆதாரமாக இருந்த நீவாநதி எனும் பொன்னை ஆறு ஆந்திர அரசு கட்டிய குறுக்கணையாலும் […]

Read more

விகடன் மேடை

விகடன் மேடை, விகடன் பிரசுரம், விலை 435ரூ. விகடன் மேடையில் வாசகர்களின் கேள்விகளுக்கு பிரபலங்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள் இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், சினிமா, சமூகம், எழுத்து போன்ற துறைகளில் பிரபலமானவர்கள், வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் சுவையாகவும்,சிந்தனைக்க விருந்தாகவும் அமைந்துள்ளன. நடிகர் கமல்ஹாசன் தொடங்கி டிராபிக் ராமசாமி வரை 40 பேர்களின் பதில் உரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பழ. நெடுமாறன், வைகோ, மு.க. ஸ்டாலின், திருமாவளவன், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், கவிஞர்கள் வைரமுத்து, வாலி […]

Read more

மன்மதன் வந்தானடி

மன்மதன் வந்தானடி, பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், விலை 130ரூ. ஒவ்வொரு பெண்களும் தனக்கு வரப்போகிற கணவன் பற்றி இனிய கனவு காண்கிறார்கள். அது நனவாகும்போது பிரச்சினை எதுவும் இல்லை. நேர்மாறாக அமையும்போது ஏமாற்றம், விரக்தி, குழப்பம் எல்லாம் சூழ்ந்து கொள்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதை எப்படி எதிர்கொள்வது என்பதை இந்தக் கதையின் நாயகி வைதேகி எடுக்கும் முடிவே கதையின் மையக்கருத்து. அதுவே தாம்பத்தியத்தில் உண்மையான வெற்றி என்பது கதை நாயகி, நவயுக பெண்களுக்கு விடுக்கும் செய்தியாகும். வசீகர நடையால் வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளை […]

Read more

தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரை

தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரை, திரட்டித் தொகுத்தவர் ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 327, விலை 260ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024589.html கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தைப் பற்றி பலர் எழுதிய பல புத்தகங்கள், கட்டுரைகள், குறிப்புகள் பலவற்றிலிருந்து 140 தகவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை முதல் நீலகிரி வரை மற்றும் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான பயணக் குறிப்புகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் தூர தேசப் பிரயாணம் செய்வது அசாத்தியமான காரியம். […]

Read more

கருமை செம்மை வெண்மையைக் கடந்து

கருமை செம்மை வெண்மையைக் கடந்து, வே.மு. பொதியவெற்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 280ரூ. செறிவான ஆய்வு நூல்! மூத்த எழுத்தாளர் வே.மு.பொதியவெற்பனின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்ட்டு மிகவும் செறிவான ஒரு நூலாக இது இருக்கிறது. இலக்கியம், மெய்யியல், தெருக்கூத்து, கலைகள், சித்தர் மரபுகள், மணிமேகலை, இறையியல், தத்துவம் என்று பல்வேறு துறைகளில் ஆய்வுப்புலத்தில் இருப்பவர்களுக்குபேருதவி செய்யக்கூடிய கட்டுரைகள். ஒவ்வொரு தலைப்பிலும் இவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் கிட்டத்தட்ட 360 பாகைக் கோணத்தில் மையப்பொருளை ஆராய்கின்றன. ஒப்பியல் நோக்கில் சித்தர் […]

Read more

மார்க்சிய சிந்தனை சுருக்கம்

மார்க்சிய சிந்தனை சுருக்கம் (மூலதனம் பற்றிய எளிய விளக்கம்), தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 184, விலை 135ரூ. சமூக விஞ்ஞானி கார்ல் மார்க்ஸி எழுதிய மூலதனம் என்ற நூலின் சாராம்சத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல். பொருளியல் அறிவுடையவர்கள் மட்டுமே மார்க்ஸின் மூலதனத்தைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி, பாமர மனிதர்களும் மூலதனத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பெரிய முயற்சியின் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நூலை மார்க்சிய […]

Read more

நினைவுகள் நிறைந்த வெற்றிடம்

நினைவுகள் நிறைந்த வெற்றிடம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 100ரூ. எழுத்ளரும் மங்கையர் மலர் பொறுப்பாசிரியருமான ஜி.மீனாட்சி, சிறுகதை எழுதுவதில் தனக்கென ஒரு தனி பாணியை வைத்துக்கொண்டிருக்கிறார். கதைகளை வீணாக வளர்க்காமல், ரத்தினச் சுருக்கமாக எழுதுவார். அதுவும், நல்ல தமிழில் அமைந்திருக்கும். கதைகளில் நிச்சயம் ஒரு மெசேஜ் இருக்கும். இந்த சிறுகதைத் தொகுதியில் 12 கதைகள் உள்ளன. எல்லா கதைகளிலும் அவருடைய முத்திரைகளாகப் பதிந்துள்ளார். நினைவுகள் நிறைந்த வெற்றிடம் என்ற கதை, புரட்சிகரமானது. நெஞ்சில் அதிர்வுகளை உண்டாக்குகிறது. சிந்திக்க வைக்கிறது. […]

Read more

துடியான சாமிகள்

துடியான சாமிகள், நா. இராமச்சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 292, விலை 240ரூ. நெல்லில் பதரைக் கலந்தோமோ? முக்கடல் சங்கமம் ஆகும் குமரி மாவட்டத்து கிராமக் கோவில்களில் நடக்கும் வில்லுப்பாட்டை, மிக விரிவாகக் கள ஆய்வு செய்கிறது இந்த நூல். வன்கொலை செய்யப்பட்டு தெய்வம் ஆக்கப்பட்ட நாட்டார் தெய்வங்களின் ஆறு கதைகள், ஆய்வு செய்யப்பட்டு, அதன் வழி வரலாறு, பண்பாடு, சமூகச் சூழல் ஆராயப்பட்டுள்ளன. கலப்பு மணமும், அதனால் எழும் சிக்கல்களும் முத்துப்பட்டன் கதை, மதுரைவீரன் கதை, சின்ன நாடான் கதையில் […]

Read more

நினைவுகள் நிறைந்த வெற்றிடம்

நினைவுகள் நிறைந்த வெற்றிடம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 100ரூ. மனக்காயங்களுக்கு மருந்து 12 சிறுகதைகள் அடங்கிய இந்த நினைவுகள் நிறைந்த வெற்றிடம் நூலில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு பிரச்னையை அலசுகிறது. குறிப்பாக பதின் பருவத்து குழந்தைகளின் உளப்பூர்வமான சிக்கலை எடுத்துவைப்பதில் தம் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார் ஜி. மீனாட்சி. பிறவிப் பெரும்பயன் என்ற கதையில் ஒரு தம்பியின் தியாகத்தையும் அக்காவின் பாசத்தையும் அடி ஆழம்வரை சென்று படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். புதிய பாடம் என்ற கதையில் கிராமத்திலிருந்து கணவனை இழந்து […]

Read more
1 10 11 12 13 14 26