முதலாம் இராசராச சோழன்

முதலாம் இராசராச சோழன், ஆனந்தவிகடன், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 135ரூ. தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவர் அருண்மொழித்தேவர் என்ற இயற்பெயர் கொண்ட இராசராச சோழன். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டி பெரும் புகழ்பெற்றவர். அவர் வரலாற்றை கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும், மெய்க்கீர்த்திகளையும் ஆதாரமாகக் கொண்டு, விரிவாக எழுதியுள்ளார். நூலாசிரியர் கே.டி. திருநாவுக்கரசு. இராசராசனின் அண்ணனும், பட்டத்து இளவரசனுமான ஆதித்தகரிகாலன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டான் என்பது சோழர் காலத்து மிக முக்கிய நிகழ்ச்சி. இதுபற்றி ஆசிரியர் விரிவாகவும், சுவைபடவும் குறிப்பிட்டுள்ளார். […]

Read more

தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்

தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும், சா. காந்தி, முகம் வெளியீடு. தமிழக மின்வெட்டின் 50 ஆண்டு வரலாற்றைத் துல்லியமான தரவுகளுடன் சரியான அரசியல் நிலைப்பாட்டில் இருந்து தொகுத்து வழங்குகிறது இந்த நூல். மின்மிகை மாநிலமாக விளங்கிய தமிழகத்தில், 28/11/2008ம் தேதிக்குப் பின்னர்தான் அசுர மின்வெட்டு தொடங்கியது என்று துல்லியமான தரவுகளுடன் விவரிக்கிறார் சா. காந்தி. மின்சார அரசியலின் பன்முகங்களை, அரசு மின்வாரியத்தை அழித்து தனியார் துறையினர் ஆக்கிரமிப்பதையும், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரத்தை சகாய விலையில் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும் நெஞ்சம் பதைபதைக்க […]

Read more

செள்ளு

செள்ளு,செல்வராஜ், பாரதி புத்தகாலயம்.(சிறந்த சிறுகதைத்தொகுப்பு). தமிழ்ச்சூழலில் அதிகம் அறியப்படாத கடலோர மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்வை, அதன் அசலான மொழியில் முன்வைக்கிறார் செல்வராஜ். கன்னியாகுமரி மாவட்டக் கடலோரக் கிராமமான சைமன் காலனியில் பிறந்த இவர், பாரம்பரிய மீன்பிடிச் சமூகமான முக்குவர்களின் வாழ்வையும், அவர்களின் பாடுகளையும் மிகவும் நெருக்கமாக, உள்ளிருந்து பேசுகிறார். தமிழ் இலக்கியப் பரப்புக்குப் புத்தம் புதியதான இந்த மொழி, உள்ளே நுழையும்போது சற்றே மிரளவைக்கலாம். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி, 1990களில் வீச்சுடன் வெளிப்பட்ட தலித் இலக்கிய எழுத்துகளை உள்வாங்க, அப்போது வாசக மனம் […]

Read more

போதியின் நிழல்

போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, ஜி4, குருவைஷ்ணவி அப்பார்ட்மென்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர், மெயின்ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை 600117, பக். 266, விலை 180ரூ. உலக வரலாற்றை, பயணிகள்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களின் சாகசங்களும் அறிவார்ந்த செயல்களும் உலக வரலாற்றின் நீள அகலங்களை மாற்றி அமைத்திருக்கின்றன. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தின் மூலம் நமக்கு ஒரு வரியில் அல்லது ஒரு பத்தியில் மட்டுமே அறிமுகமான சீனப் பயணி யுவான் சுவாங்கின் இந்திய பயணம்தான், அசோகன் நாகமுத்துவின் இந்த நாவல். நாட்டைவிட்டு இன்னொரு […]

Read more

ஓர் இந்திய கிராமத்தின் கதை

ஓர் இந்திய கிராமத்தின் கதை, தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை, தமிழில் ச. சரவணன், பதிப்பாசிரியர் ரெங்கை முருகன், சந்தியா பதிப்பகம், 77, 53 வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, பக்கங்கள் 160, விலை 100ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-713-8.html சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பண்ணை வீடு வாங்கிப் போட்டிருக்கும் கேளம்பாக்கம் நான்கு தலைமுறைகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்? பாம்பாட்டிகளும், குறிசொல்லிகளும், மோடிவித்தைக்காரர்களும், கூத்தாடிகளும் கடந்து செல்லும் ஓர் எளிமையான கிராமமாக இருந்தது. […]

Read more

மார்பகப் புற்றுநோய் விளக்கக் கையோடு

மார்பகப் புற்றுநோய் விளக்கக் கையோடு, டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை- 17; விலை; ரூ.100. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-6.html மார்பக வளர்ச்சி, புற்றுநோய் எதனால் வருகிறது. அதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் பற்றி விளக்கமாக தரப்பட்டுள்ளது. புற்று நோய் சிகிச்சை மேற்கொண்ட பிறகு எப்படி பராமரிக்க வேண்டும் என்றும், உணவு கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை, பிற சிகிச்சை முறைகள் என நிறைய விவரங்கள் உள்ளன. பெண்கள் […]

Read more

ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம், பிலிப் மெடோஸ் டெய்லர், தமிழில் போப், சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53வது தெரு,9வது அவின்யூ, அசோக் நகர், சென்னை 83, பக்கங்கள் 800, விலை 550ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-713-5.html வட இந்தியாவில் 1832ல் பயங்கரமான தொழில்முறை கொள்ளைக்காரன் ஒருவன் ஆங்கிலேய அதிகாரியிடம் அளிக்கும் வாக்குமூலமாகத் தொடங்குகிறது நாவல். ஆங்கிலத்தில் Confessions of a Thug என்ற பெயரில் 1839ல் வெளியான நாவலின் மொழிபெயர்ப்பு இது. நாவல் முழுக்க […]

Read more

திருப்பட்டூர் அற்புதங்கள்

திருப்பட்டூர் அற்புதங்கள்,வி. ராம்ஜி, விகடன் பிரசுரம், விலை 95ரூ. To buy this tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-7.html திருப்பட்டூர் வரும் அடியவர்களுக்கு வாழ்க்கை வசதிசெய்து தருவதை சிறப்பாகச் சொல்கிறது இந்த நூல். ஒரு தத்துவ விஷயத்தை எளிதாக விளக்க, ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பிரம்மாவில் ஆரம்பித்து வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் என்று பலரும் திருப்பட்டூர் வந்ததையும், அவர்கள் பெற்ற அனுபவத்தையும் மிக நேர்த்தியான நெசவாக பின்னப்பட்டுள்ளது. பிரம்மாவுக்கு இத்தனைப் பெரிய உருவமா, முழுவதும் மஞ்சளா? என்று பிரம்மாவை வணங்குவதை சுவைபட விவரிக்கிறது […]

Read more

திருப்பட்டூர் அற்புதங்கள்

திருப்பட்டூர் அற்புதங்கள், வி. ராம்ஜி, விகடன் பிரசுரம், விலை 95 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-7.html திருப்பட்டூர் வரும் அடியவர்களுக்கு வாழ்க்கை வசதி செய்து தருவதை சிறப்பாகச் சொல்கிறது இந்த நூல். ஒரு தத்துவ விஷயத்தை எளிதாக விளக்க, ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பிரம்மாவில் ஆரம்பித்து வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் என்று பலரும் திருப்பட்டூர் வந்ததையும், அவர்கள் பெற்ற அனுபவத்தையும் சேர்த்து மிக நேர்த்தியான நெசவாக பின்னப்பட்டுள்ளது. பிரம்மாவுக்கு இத்தனை பெரிய உருவமா, முழுவதும் மஞ்சளா? […]

Read more