இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், குமரன் பதிப்பகம், விலை 50ரூ. இந்திய மக்கள் அனைவருடைய அன்பையும் பெற்று, மக்கள் ஜனாதிபதி என்று புகழ் பெற்றவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அவர் திடீரென்று காலமானபோது, இந்தியாவே கண்ணிரில் மிதந்தது. இளமையில் ஏழ்மையில் எதிர்நீச்சல் போட்டு, கல்வியாலும், அறிவாற்றலாலும் அணுசக்தி விஞ்ஞானியாக விஸ்வரூபம் எடுத்தார். ஏவுகணை வீச்சில் சாதனை படைத்து, இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்தார். உலகம் போற்றும் உத்தமத் தலைவரான அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை, இளைஞர்களின் வழிகாட்டி அப்துல் கலாம் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார், எழுத்தாளரும், […]

Read more

பாவார்த்த ரத்னாகரம்

பாவார்த்த ரத்னாகரம், விருத்தியுரை எட்டயபுரம் க.கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், பக். 672, விலை 400ரூ. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, தீண்டாமையை எதிர்த்துக் குரல் கொடுத்து, பெரும் மதப்புரட்சி செய்த ராமானுஜரால், இந்த ஜோதிட நூல் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது வியப்பான விஷயம். மொத்தம், 383 சமஸ்கிருத சுலோகங்களில், 14 நீண்ட அத்தியாயங்களில் லக்ன பலாபலன்கள், 12 பாவகங்களில் நவக்கிரகங்களின் பலம், பலவீனம், கிரக சேர்க்கைகளின் பலன்கள், காரக கிரகங்களின் வலிமை, தசாபுத்திப் பலன்கள், ராஜயோகங்கள், வாகன பாக்கிய யோகங்கள், மரணம் தரும் திசா புத்திகள் […]

Read more

இலக்கிய மாண்புகள்

இலக்கிய மாண்புகள், செம்மூதாய் பதிப்பகம், ஒவ்வொரு நூலும் விலை 60ரூ. குறுந்தொகை காட்சிகள், சிற்றிலக்கியங்களில் வாழ்வியல், அனுமனின் வீரச்செயல்கள், பெரியு புராணத்தில் பக்தி, பாரதியின் பாஞ்சாலி போன்ற தலைப்புகளில் முனைவர் தா. நிலகண்ட பிள்ளை இந்த நூலில் இலக்கிய நயங்களை எழுத்தோவியங்களாக்கித் தருகிறார். இதேபோல அவர் எழுதிய சிலப்பதிகாரச் சிந்தனைகள், செம்மொழிச் சிந்தனைகள், செவ்விலக்கியப் பதிவுகள் ஆகிய நூல்களிலும் இலக்கிய மணம் வீசுகிறது. நன்றி: தினத்தந்தி, 24/6/2015.   —- வெற்றி உங்களுக்காக, கவிதாசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. வெற்றியை விரும்பாதவர்கள் […]

Read more

பிஸினஸ் மகாராணிகள்

பிஸினஸ் மகாராணிகள், சு. கவிதை, குமுதம் புது(த்)தகம், பக். 136, விலை 95ரூ. தாங்கள் வாழும் சூழ்நிலையை மீறி, ஜெயிக்கும் பெண்கள் பற்றிய சாதனைத் தொகுப்பு இந்நூல். குமுதம் சிநேகிதியில் தொடராக வந்தபோது பல பெண்களின் வாழ்வில் சாதிக்க தூண்டுகோலாகவும், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருந்தது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் எல்லாம் பெண்களும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய கிரண் மஜுர்தார்ஷா வினிதாபாலி, லீனாநாயர், இந்திராநூயி உள்ளிட்ட பல பிஸினஸ் மகாராணிகளின் அனுபவங்கள் தன்னம்பிக்கை ஊட்டுவன. அவர்கள் தரும் சக்ஸஸ் டிப்ஸகள், சவால்களை […]

Read more

சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள்

சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. தமிழ் இலக்கியத்தில் சித்தர்கள் பாடலுக்கு சிறப்பான இடம் உண்டு. அறிவியல் பார்வைக்கும், ஆன்மிகத்தேடலுக்கும் உறவுப் பாலம் அமைத்து உயர்ந்த கருத்துகளை எளிமையாய் விளக்கியவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர் பாடல்களில் சிந்தை கவர்ந்த பாடல்களை முனைவர் சொ. சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார். சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர் போன்ற 24 சித்தர்களின் பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடல்களுக்கும் பொழிப்புரையோ அல்லது விளக்கவுரையோ இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். […]

Read more

பிரிவை நேசித்தவன்

பிரிவை நேசித்தவன், அம்பி. ராஜேந்திரன், முல்லை பதிப்பகம், சென்னை, விலை 40ரூ. பாசத்தின் உணர்வுகளையும், தாய்மையின் உயர்வையும், உலக நடப்புகளையும் கவிதை வரிகளில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.   —- நானொரு சிந்து, இசைப்பிரியன், இசை ஆலயம் மியூசிக் புக் பப்ளிகேஷன், சென்னை, விலை 70ரூ. நடப்பது நடக்கட்டும், எதைக்கொண்டு உட்பட பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட பல்வேறு கவிதை தொகுப்புகள் இடம் பெற்ற நூலாகும். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.   —- […]

Read more

நெப்போலியன்

நெப்போலியன், எஸ்.எல். வி. மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, விலை 300ரூ. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நெப்போலியன், பிரான்ஸ் நாட்டுச் சக்கரவர்த்தியாக உருவான வரலாற்றைக் கூறும் நூல். நெப்போலியனின் குடும்ப வாழ்க்கை, அந்தரங்கக் காதலிகள், அவர் நடத்திய வீரப் போர்கள், வாட்டர்லூ போரில் படுதோல்வி, ஹெலனா தீவில் சிறைவைப்பு, நாள்பட கொல்லும் விஷத்தால் மரணம் என்பன போன்ற வரலாற்று நிகழ்வுகளை இந்த நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தி சுவைபடச் சொல்கிறார். மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகளைக் கண்டால் குலை நடுக்கம். வெயில் காலத்திலும் வெந்நீரில்தான் குளிப்பார், தினமும் […]

Read more

முயற்சியே முன்னேற்றம்

முயற்சியே முன்னேற்றம், மெர்வின், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டும் நூல்களை எழுதுவதில் புகழ்பெற்ற மெர்வின் எழுதிய புத்தகம் இது. “முயற்சி திருவினையாக்கும்” என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இப்புத்தகத்தின் விலை 60ரூ. “உழைப்போம் உயர்வோம்” விலை 80ரூ. உயர்வு தரும் உன்னத சம்பவங்கள் விலை 70ரூ ஆகிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார். மூன்று புத்தகங்களையும் வெளியிட்டோர் குமரன் பதிப்பகம். நன்றி: தினத்தந்தி, 24/3/2015.   —- அனைத்து நோய்களுக்கும் யோகாகசன மருத்துவம், ஜவ்வை இஜெட், முஜீப் இந்தியா கிரியேசன், […]

Read more

மகாபாரதம் மாபெரும் விவாதம்

மகாபாரதம் மாபெரும் விவாதம், பழ. கருப்பையா, கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. பன்முக திறமை கொண்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா எழுதியுள்ள இந்த ஆய்வு நூலின் மிக பழமைவாய்ந்த மகாபாரம் இதிகாசத்தை இதுவரையில் யாரும் செய்யாத அளவுக்கு அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து புகழ் மாலையும் சூடியிருக்கிறார். ஆங்காங்கு பல கண்டன கணைகளையும் வீசியிருக்கிறார். மகாபாரதம் என்ற ஆழ்கடலில் மூழ்கி அங்கு இருக்கும் முத்துக்களை மட்டுமல்லாமல், விமர்சனத்துக்குரிய பல கருத்துக்களையும் அடையாளம் காட்டியிருக்கிறார். மகாபாரதத்தை நேசிப்பவர்களுக்கும், அதை முழுமையாக எல்லா கோணங்களிலும் […]

Read more

நான் கண்ட ஜப்பான்

நான் கண்ட ஜப்பான், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் மீது 2 குண்டுகளை அமெரிக்கா வீசியது. அதனால் 2 நகரங்கள் அடியோடு அழிந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். இப்படி பலத்த சேதம் அடைந்த ஜப்பான் கடுமையாக உழைத்து, இன்று பொருளாதாரத்தில் உலகில் மிக முன்னேறிய நாடாக விளங்குகிறது. இந்த நூலின் ஆசிரியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் எத்திராஜன் ராதாகிருஷ்ணன், 23 முறை ஜப்பான் சென்று திரும்பியவர். ஜப்பானின் சிறப்புகளை இந்நூலில் அழகிய […]

Read more
1 3 4 5 6 7 9