ஈழக்கனவும் எழுச்சியும்

ஈழக்கனவும் எழுச்சியும், ஜெகாதா, நக்கீரன், சென்னை, விலை 300ரூ. தனி ஈழம் கோரி, இலங்கையில் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடத்திய போராட்டம் முடிவடைந்து, ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைப்புலிகளின் வீரப்போரை விரிவாகக் கூறுகிறது இந்நூல். சம்பவங்களை ஆதாரங்களுடனும், தெளிவாகவும் விவரிக்கிறார் ஆசிரியர் ஜெகாதா. பிரபாகரனுக்கும் மாத்தையா செய்த துரோகத்தைப் படிக்கும்போது, நெஞ்சம் பதைபதைக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட மாத்தையா, கடைசி முறையாக மனைவியைப் பார்க்க விரும்பியபோது, அந்த துரோகியைக் காண நான் விரும்பவில்லை என்று கூறிவிடுகிறார் அந்த வீரப்பெண். […]

Read more

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கல்வியை கடல் என்பார்கள். ஆனால் நூலாசிரியர் கல்வியை பூங்கா என்று புதிய சிந்தனையுடன் அணுகியுள்ளார். கல்வி களஞ்சியமாக திகழும் இந்த நூலில், சுமையான கருத்துக்களுக்கும், நீதிக்கதைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. நூலில் உள்ள கல்விச்சிந்தனை, குரு வணக்கம், இளைஞர்கள், பெண்கள், கல்வித் தத்துவங்கள் ஆகிய தலைப்புகள் வாசிப்பவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நாட்டை வல்லரசாக்கும் வலிமையும், புத்திக் கூர்மையும் இளைஞர்களுக்கு அவசியம் வேண்டும் என்று நூலாசிரியர் முனைவர் மு.ராசாராம் ஐ.ஏ.எஸ். வலியுறுத்துகிறார். […]

Read more

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கல்வியை கடல் என்பார்கள், ஆனால் நூலாசிரியர் கல்வியை ‘பூங்கா’ என்று புதிய சிந்தனையுடன் அணுகியுள்ளார். கல்வி களஞ்சியமாக திகழும் இந்த நூலில், சுவையான கருத்துக்களும் நீதிக்கதைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. நூலில் உள்ள கல்விச்சிந்தனை, குருவணக்கம், இளைஞர்கள், பெண்கள், கல்வித் தத்துவங்கள் ஆகிய தலைப்புகள் வாசிப்பவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நாட்டை வல்லரசாக்கும் வலிமையும், புத்திக்கூர்மையும் இளைஞர்களுக்கு அவசியம் வேண்டும் என்று நூலாசிரியர் முனைவர் மு.ராசாராம் ஐ.ஏ.எஸ். வலியுறுத்துகிறார். திசைமாறி போகும் […]

Read more

ரகசியமாய் ஒரு ரகசியம்

ரகசியமாய் ஒரு ரகசியம், ஓஷோ, தமிழில் சிவாமி சியாமானந்த், கவிதா பதிப்பகம், சென்னை, பக். 992, விலை 600ரூ. ஓஷோ, தனது பக்தர்களிடம் ஆற்றிய உரைகயின் தொகுப்பாக வெளிவந்துள்ள மற்றும் ஒரு நூல். தியானம் செய்வது எப்படி? துறவறம் என்பது அவசியம்தானா? காமம் என்றால் என்ன? சுய இன்பம் அனுபவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதுதானா? என்பது போன்ற பலதரப்பட்ட விஷயங்களை அப்பட்டமாக அலசி இருக்கிறார். இடையிடையே ருசிகரமான சிறுகதைகள், புத்தர், போதிதர்மர், குரு லூத் சூ போன்றவர்களின் மேற்கோள்கள் ஆகியவற்றைக் கூறி படிக்க ஆவலைத் தூண்டுகிறார். ஓஷோவே […]

Read more

ஊமைச் சங்கு

ஊமைச் சங்கு, கி. தனவேல் இ.ஆ.ப., குமரன் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-296-4.html பால்ய கனவுகள் கி. தனவேல், இ.ஆ.ப., தனது ஊமைச்சங்கு கவிதைத் தொகுப்பில் சமூக அக்கறையோடு, இன்னும் ஈரம் காயாத பால்ய கால நினைவுகளையும், தான் பார்க்கும், காட்சித் தோற்றங்கள் பலவற்றையும் ரசனையோடு சின்ன சின்ன வார்த்தைகளில் கவிதைகளுக்குள் அடக்க முயற்சித்திருக்கிறார். குரோட்டன்ஸ் பூப்பதில்லையே எனச் சொல்பவர்கள் அது இலைகளாய் பூத்திருப்பதைப் பார்க்கத் தவறியவர்கள். என்பது ஒரு சின்ன உதாரணம். மனிதர்கள் […]

Read more

சிந்தனைக் களஞ்சியம்

சிந்தனைக் களஞ்சியம், உ. நீலன், அருள் பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. பல நூல்களைப் படித்த திருப்தியை தரக்கூடிய அளவுக்கு பல்வேறு செய்திகள் மற்றும் கருத்துக்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக, பிரபலமானவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும்போது, அவற்றிலுள்ள பலம், பலவீனங்களையும் ஆரோக்கியமான விமர்சனத்துடன் குறிப்பிடுவது இந்நூலாசிரியரின் தனிப் பணியாகும். இந்நூலின் முதல் கட்டுரையான காந்தியடிகளுக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை? என்ற காரணங்களை படிக்கும்போது, தேர்வு கமிட்டியினர் இப்படியெல்லாமா யோசிப்பார்கள் என்று தோன்றுகிறது. எத்தனையோ இக்கட்டான நேரங்களில் மிகச் சரியான […]

Read more

எனக்குள் எம்.ஜி.ஆர்.

எனக்குள் எம்.ஜி.ஆர்., காவியக் கவிஞர் வாலி, குமரன் பதிப்பகம், விலை 250ரூ. சிலர் எதை எழுதினாலும் அது ரஸமாகத்தான் இருக்கும். வேறு மாதிரி அவர்களால் எழுதவே முடியாது. அந்த வகையைச் சேர்ந்தவர் மறைந்த காவியக் கவிஞர் வாலி. தமக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் இடையே நிலவிய நெருக்கத்தை சுவைபட எழுதியிருக்கிறார் இந்தக் கட்டுரைகளில். நல்லவன் வாழ்வான் படத்துக்குப் பாடல் எழுத வாய்ப்புக் கிடைத்து அதற்கு அண்ணாவும் ஓ.கே. சொன்னதுபோது தாம் ஏழுமலையானுக்கு நேர்ந்து கொண்டபடி திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுக் கொண்டு வந்தாராம் வாலி. […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழனிபாரதி, குமரன் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. யாருக்கு பிடிக்காது மழை? மழைக்கு பிடிக்காதவர்கள் யார்? காதல் மழை, காதல் கவிதைகள் படிப்பது சுவாரசியமானது. மாலை நேர மெல்லிய மழையில் நனைவதற்கு இணையானது. பழனிபாரதியின் இந்த கவிதை தொகுப்பும் அதுபோன்றதே. தொகுப்பு முழுக்க காதல் கவிதைகள் மட்டுமே இருந்தாலும் உள்ளங்கையில் பொத்தி வைத்திருந்த மின்மினிப் பூச்சி, நம்மை அறியாமல் விரல் இடுக்குகளில் இருந்து நழுவுவதைப்போல், படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. குறிப்பாக அபூர்வா, உயிர்த்துளை, உன்னதம், உச்சிப்பூக்கள், இரவு, அதன்பிறகு, […]

Read more

ஐ.ஏ.எஸ். பொது அறிவு கேள்விகள் பதில்கள்

ஐ.ஏ.எஸ். பொது அறிவு கேள்விகள் பதில்கள், நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது அனைவரது லட்சியம், கனவாகவே இருக்கும். அதற்கான சூழலும், வழிகாட்டுதலும் அமையப்பெற்றவர்கள் அந்த இலக்கை எட்டிப்பிடித்து விடுகிறார்கள். அத்தகைய வழிகாட்டுதலை செவ்வனே செய்துள்ளது இந்த நூல். சிவில் சர்வீசஸ் தேர்வின் கீழ் எத்தனை பணிகள் வருகின்றன. சிவில் சர்வீசஸ் தேர்வை யார், யார் எழுதலாம்? எத்தனை முறை எழுதலாம்? அதற்கான வயது வரம்பு என்ன? , அதற்கு நாம் தேர்வு செய்ய […]

Read more

வால்மீகி இராமாயணம்

வால்மீகி இராமாயணம், வர்த்தமானன் வெளியீடு, பக்.2000,  விலை (நான்கு தொகுதிகளும் சேர்த்து) – 700ரூ. மனிதனுடைய வாழ்க்கையை நல்வழிப்படுத்துவதில் இரண்டு இதிகாசங்கள் தோன்றியுள்ளன. அவைதான் இராமாயணம், மகாபாரதம். இவ்விரண்டு நூல்களுமே தர்மத்தையே அடிப்படையாகக் கொண்டு வந்த நூல்கள். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று தர்மத்தை மாத்திரமே அதிகம் வலியுறுத்துகிறது இராமாயணம். நடத்தியும் காட்யிருக்கிறது. அறம், பொருள், இன்பம் என்பவற்றில் அறத்தை இராமரும், பொருள் இன்பங்களை இராவணனும் தங்கள் இலட்சியமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இராவணன் கடுந்தவம் புரிந்து தேவர்களையும் தலைமிதித்து நிற்கும் ஆட்சிப் பேற்றை வரமாகப் […]

Read more
1 4 5 6 7 8 9