திருக்குறளில் காமம்

திருக்குறளில் காமம், இ.கி.இராமசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 188, விலை 125ரூ. ஒரு பொருள் பற்றிய இருபத்து மூன்று அறிஞர்களின் கட்டுரை தொகுப்பு இந்த நூல். திருக்குறளில், காமத்துப்பாலின் சிறப்பு, காமமும், இன்பமும் ஒன்றா, காமம் இழிபொருளாக எப்போது மாறியது, காமம் தரும் கனிந்த வாழ்வு, காமத்துப் பாலும் கானல்வரியும், அகத்திணை மரபும், காமத்துப்பாலும் எனப் பல்வேறு தலைப்புகளில், திருக்குறள் கருத்துக்கள் ஆராயப்பட்டு உள்ளன. காமம் என்பதற்கு சரியான பொருள், நூலின் முதலிலேயே கருத்துரைகள் என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கிறது. மனமொத்து இருபாலும் […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்-மீரா

இந்திய இலக்கியச் சிற்பிகள்-மீரா, டாக்டர் இரா.மோகன், சாகித்ய அகாதெமி, பக். 112, விலை 50ரூ. பேராசிரியர் மீரா எப்படி கவிஞராய், போராளியாய், கட்டுரை ஆசிரியராய், பத்திரிகையாளராய், பதிப்பாளராய் பல்வேறு அவதாரங்கள் எடுத்து, அதில் வெற்றியும் கண்டார் என்ற வரலாற்றை டாக்டர் இரா. மோகன், நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்து எழுதியுள்ளார். மீரா கவிதைகளில் அவரது மரப்புத் திறமையும் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் நூலில் அவரது வசன கவிதைத்திறனையும், குக்கூ, ஊசிகள் அங்கதச் சுவையின் அணிவகுப்பையும், கட்டுரைகளில் அவரது மொழி வீச்சையும், இந்நூலாசிரியர் ஆய்வுக் கண்ணோட்டத்தில் தந்துள்ளது மீரா பற்றிய […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், அ.ச. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 128, விலை 30ரூ. பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் என்று பல பெருமைகளைக் கொண்ட முதுபெரும் தமிழ் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தனைப் பற்றி, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளார் நிர்மலா மோகன். அ.ச.ஞா.வின் வாழ்வும் பணியும் பற்றிய கட்டுரையில் அவர் இலக்கியச் சிற்பியாக செதுக்கப்பட்டு உருமாறி வந்த வளர்ச்சிப்பாதை தொகுக்கப்பட்டுள்ளது. வி.எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி, திரு.வி.க. தெ.பொ.மீ. […]

Read more

திரவ்பதி

திரவ்பதி, லட்சுமி பிரசாத், தமிழில் இளம்பாரதி, சாகித்ய அகாதெமி,  சென்னை, விலை 200ரூ. இந்திய மொழிகளின் ஆதார நாவல் இலக்கியமான மகாபாரதம், மீள்பார்வையாக இங்கு பெண்ணிய நோக்கில் விவரிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு ஏற்கனவே அறிமுகமான மகாபாரத கதைமாந்தர்கள், புதிய கோணத்தில் விமர்சிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் மையமாக இருந்து, மகாபாரத கதையை இயக்கி நடத்துவதாக அமைந்த இலக்கியப்போக்கு எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கவல்லது. 2010ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற இந்தத் தெலுங்கு நாவலில், லட்சுமி பிரசாத் கையாண்டிருக்கும் கதை சொல்லும் முறையும், வர்ணனைகளின் துணைக்களமும் வாசகர்களை மிகவும் […]

Read more

வேதாளம் கேட்காத கேள்விகள்

வேதாளம் கேட்காத கேள்விகள், சாகித்ய அகாதெமி, சென்னை, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 85ரூ. தேர்வறையில் மாணவனின் மனநிலையின் வழியே நாட்டு நடப்புகளை விவரிக்கும் புதுமையான நூல் வேதாளம் கேட்காத கேள்விகள். எழுத்தாளர் சுனில் மலையாளத்தில் எழுதிய விக்ரமாதித்யம் என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூல். முனைவர் த.விஷ்ணுகுமாரன், நூலாசிரியரின் நோக்கம் சிதையாமல் அழகாக மொழி பெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 13/11/2013.   —-   அறியப்படாத தமிழ் உலகம், பா. இளமாறன் சிவக்குமார் கோ. கணேஷ் பல்வேறு […]

Read more

அநீதி, நீதி, சமூக நீதி

அநீதி, நீதி, சமூக நீதி, தேவ். பேரின்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41, பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 126, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-006-8.html ஆசிரியர் தேவ். பேரின்பன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர். மார்க்சியக் கொள்கைகள், தமிழியல் ஆய்வுகள், விவாதங்களை முன்னெடுக்கும் சமூக விஞ்ஞானம் இதழின் நிர்வாக ஆசிரியர். மார்க்சிய நோக்கிலான பல நூல்களின் ஆசிரியர் என்பதன் மூலம் இந்நூலின் சிறப்பை உணர்ந்து […]

Read more

பத்துப்பாட்டு ஆராய்ச்சி

பத்துப்பாட்டு ஆராய்ச்சி, மா. இராசமானிக்கனார், சாகித்ய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 688, விலை 365ரூ. சங்கத் தொகை நூல்களுள் ஒன்று பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவை பத்துப்பாட்டு நூல்கள், ஆற்றுப்படை இலக்கியங்கள் பற்றிய ஆராய்ச்சி ஐவகை நிலங்கள், நாடுகள், அரசர்கள், பாட்டுடைத் தலைவர்கள், பாணர், விரலி போன்ற இசைவாணர்கள், ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் தொழில், வாணிகம், உணவு, பழக்கவழக்கங்கள், […]

Read more

பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்

பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், பெ. முத்துலிங்கம், கயல் கவின் புக்ஸ், 16/25, இரண்டாம் கடல்போக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41, விலை 160ரூ. இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட துமிழர்கள், அங்கு அடைந்த துயரங்கள், இழப்புகளை வாய்மொழி பாடல்களாக பாடியுள்ளனர். பல்வேறு சான்றோர்களால் சிலவற்றை பெ.முத்துலிங்கம் தொகுத்துள்ளார். இந்த பாடல்கள் மூலம், தமிழர்கள் இலங்கையில் கால் வைத்த நாள் முதலே இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்ட விதம் விளங்குகிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் […]

Read more

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், தொகுப்பாசிரியர்-கோபிநாத் மொகந்தி, தமிழில்-ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 208, விலை 125ரூ. ஒரிய மொழியில் எழுதப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பில், மலைகளில் ஒற்றையடிப் பாதைகளின் ஊடே சரிவுகளில் ஜீவ மரண போராட்டங்களும், அங்கு வாழும் பெண்களின் சுய கௌரவமும், சங்கடமான நிலைமைகளும், சுதந்திரத்துக்குப் பிறகான ஒரிய கிராமப்புற வாழ்வில் ஏற்பட்ட அரசியல் தாக்கங்களும் என்று பல கருப்பொருட்களைத் தாங்கி 13 அற்புதமான சிறுகதைகளாக மலர்ந்திருக்கின்றன. உதாரணமாக எறும்பு என்ற சிறுகதையில் ஓர் […]

Read more

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், பாலசர்மா, டி.எஸ்.புத்தக மாளிகை, 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 100ரூ. ராஜாஜி என்ற அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு. வாழ்க்கையில் தூய்மையும், நேர்மையும் முக்கியமானவை என்று கருதி, அதன்படியே நடந்தவர் ராஜாஜி. சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் அப்பழுக்கின்றி வாழ்ந்து, வரலாற்றில் நிலைபெற்றவர். அவரது குணநலன்கள், சாதனைகள், அறிவுரைகள் என்று திரட்டித் தரப்பட்டுள்ளது. இந்நூலைப் படிக்கும்போது எப்பேர்ப்பட்ட தலைவர்களை நாம் பெற்றிருந்திருக்கிறோம் என்று பெருமை ஏற்படுவது உண்மை.   —-   […]

Read more
1 2 3