இராஜேந்திர சோழன்

இராஜேந்திர சோழன், ம. ராஜசேகர தங்கமணி, எம்.ஏ., பி.டி., விகடன் பிரசுரம், சென்னை, பக். 416, விலை160ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-196-4.html கங்கை கொண்ட சோழன் என்று புகழப்படும் சோழ மாமன்னனின் வீர வரலாறு. ராஜராஜ சோழனின் புகழுக்கும், புத்தி கூர்மைக்கும் தஞ்சைப் பெரிய கோவிலே சாட்சி என்றால், அவனுடைய மைந்தன் ராஜேந்திர சோழனின் கீர்த்திக்கு கங்கை கொண்ட சோழபுரம் கோவில், ஒரு மகத்தான அடையாளம் எனலாம். தமிழ் நிலம் முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து, ஈழம் […]

Read more

மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்

மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள், எஸ்.குருபாதம், மணிமேகலை பிரசுரம், பக். 372, விலை 250ரூ. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் துறையில் ஆசிரியராக இருக்கும் குருபாதம் எழுதியுள்ள, இந்த நூலின் உள்ளடக்கம். பிறப்புக்குப் பின் பிறப்பு-இறப்பு குறித்து அலசுகிறது. ஆசிரியர் இந்த சர்ச்சைக்குரிய மிக சிக்கலான, நுட்பமான விஷயத்தை ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன், மிகுந்த பொறுப்புடன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். இவருடைய கருத்துக்களுடன் உடன்படுகிறோமோ இல்லையோ, நூலாசிரியரின் நேர்மையான அணுகுமுறைக்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழில் இது மாதிரியான, வித்தியாசமான புத்தகங்கள் வந்திருப்பதாகத் தெரியவில்லை. -ஜனகன். நன்றி: […]

Read more

இந்தியச் சூழலும் முஸ்லிம்களும்

இந்தியச் சூழலும் முஸ்லிம்களும், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, விலை 60ரூ. பல்வேறு மதங்கள், இனங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், பண்பாடுகளைச் சேர்ந்த மக்களைக் கொண்ட சமூகமாக நமது இந்தியத் திருநாடு திகழ்கிறது. இத்தகைய பன்மைச் சமூகச் சூழலில் ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும்? முஸ்லிம் அல்லாத சமூகத்தாருக்கு மத்தியில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு இஸ்லாம் தருகின்ற அறிவுரைகள் யாவை? என்பன போன்ற கேள்விகளுக்கு மவுலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அழகிய முறையில் விளக்கம் அறித்துள்ளார். முஸ்லிம் அல்லாத நாட்டில் வாழ்கின்ற ஒரு முஸ்லிம், அந்த […]

Read more

சிவசங்கரி குறுநாவல்கள் தொகுதி 8

சிவசங்கரி குறுநாவல்கள் தொகுதி 8, சிவசங்கரி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 344, விலை 175ரூ. எழுத்தாளர் சிவசங்கரி தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இதுவரை 150 சிறுகதைகள், 30 நாவல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய கதைகளில் ஒரு மனிதனின் கதை, நண்டு, அம்மா சொன்ன கதைகள் ஆகியவை இன்றும் அவரது எழுத்துக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன. பொதுவாக அவருடைய கதைகளில் சமூகச் சிந்தனைகள் மேலோங்கி நிற்கின்றன. போதைப் பொருளுக்கு அடிமையாவது, மதுவுக்கு அடிமையாவது ஆகியவற்றைத் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் தொடர்ந்து கண்டித்து வருகிறார். முதுமை சார்ந்த […]

Read more

சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

சேக்கிழார் பிள்ளைத்தமிழ், மூலமும் விளக்கவுரையும், விளக்கஉரை-வித்துவான் பாலூர் கண்ணப்பமுதலியார், பூம்புகார் பதிப்பகம், சென்னை, பக். 926, விலை 580ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-789-8.html சேக்கிழார் பெருமான் மீது கொண்ட தீராத பக்தியின் காரணமாக, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடிய நூல்தான் சேக்கிழார் பிள்ளைத்தமிழ். இது குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுகிறது. இவ்வரிய நூலுக்கு அரும்பத உரையும், விளக்க உரையும் எழுதியுள்ளார் பாலூர் கண்ணப்ப முதலியார். இவ்விளக்கவுரை சாதாரண உரையாக அல்லாமல், பெருவிளக்க உரையாகவும் […]

Read more

முதலாம் இராசராச சோழன்

முதலாம் இராசராச சோழன், கே.டி. திருநாவுக்கரசு, விகடன் பிரசுரம், சென்னை, பக். 326, விலை 135ரூ. முதலாம் இராசராசனின் வரலாற்றை சொல்லும் நூலாக இது இருந்தாலும் நூலின் இரண்டாவது பகுதியில்தான் இராசனின் வரலாறு தொடங்குகிறது. முதலாம் இராசராசசோழனின் முன்னோராகிய மன்னர்கள் திருமாவளவன், முதலாம் பராந்தகன், விசயாலயன், ஆதித்தன், பராந்தகன் பரகேசரி, கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தர சோழன் போன்றோரின் ஆட்சிக் காலச் சாதனைகள் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இராசராச சோழன் வரலாறு, காந்தளூர் போர், ஈழப் படையெடுப்பு, கலிங்க வெற்றி போன்ற பகுதிகளோடு தொடங்கி, இராசராசனின் ஆட்சி […]

Read more

ஜெயந்திசங்கர் சிறுகதைகள்

ஜெயந்திசங்கர் சிறுகதைகள், ஜெயந்திசங்கர், காவ்யா, சென்னை, பக். 965, விலை 880ரூ. சிறுகதை, சமகால நிகழ்வுகளைப் பதிவு செய்யும் சமூக இலக்கியம். அவசர உலகில் பயணிக்கும் இன்றைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்றவாறு, இதழ்களில் ஒரு பக்க கதைகளாகப் புதிய பரிணாமம் பெற்றிருக்கும் சிறுகதையின் உலகத்தில், ஜெயந்தி சங்கரின் சஞ்சாரம் சிறுகதை இலக்கியத்துக்கான மைல் கல்லாக இருக்கிறது. வாசகன் புரிந்து கொள்ளும்படியான ஒரு படைப்பாளிக்கான இலக்கணத்தையும் முன்வைத்துள்ளது. அன்றாடம் நம் வாழ்க்கையில் பெறும் அனுபவங்களை, இவரது கதைகளின் மூலம் மீண்டும் நாம் பெற முடிகிறது. அங்கங்கே […]

Read more

இந்தியப் புதையல் ஒரு தேடல்

இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், பக். 520, விலை 300ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-221-2.html ஆன்மிகத்தில் உச்ச நிலையை அடைவதற்காக பால் ப்ரன்டன் என்ற இங்கிலாந்து பத்திரிகையாளர் இந்தியாவில் மேற்கொண்ட பகீரத பிரயத்தன பயணங்களை விளக்கும் நூல். 1930களில் அவ்வளவு போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இதற்காக பல ஆண்டுகள் இந்தியா முழுவதும் நகரங்களிலும், சிற்றூர்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், மலைகளிலும், பாலைவனங்களிலும், நதிக்கரைகளிலும், குகைகளிலும் அலைந்து திரிந்துள்ளார். இந்தப் பயணத்தின்போது […]

Read more

இந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள்

இந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள், நிராஜ் டேவிட், தோழமை வெளியீடு, சென்னை, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-561-4.html ஈழப் போராட்டம் இலங்கையில் நடந்தாலும், இந்தியாவின் கால் நூற்றாண்டு கால அரசியலைப் பாதித்த போராட்டம். இந்திய அமைதிப்படையை அனுப்பி 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளோடு யுத்தம் தொடங்கியது முதல் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கோரக்கொலைக்கு ராணுவரீதியாக உதவிகள் செய்தது வரை இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் கடுமையான விமர்சனத்துக்கு உரியவை. சிங்கள அரசின் இரவல் […]

Read more

தாய்மை

தாய்மை, பத்மா பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-368-1.html பேறு கால பராமரிப்பும், குழந்தை வளர்ப்பும் குறித்து டாக்டரும், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான வெ. குழந்தைவேலு எழுதிய நூல். கருவுற்ற காலம் தொடங்கி, குழந்தை பிறக்கும் வரை பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய அரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கருவுற்ற நாளில் இருந்து அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிடக்கூடாது என்பன போன்ற நலம் பயக்கும் அறிவுரைகள். இதைத் தொடர்ந்து குழந்தையை […]

Read more
1 2 3 4 5 6 9