மதுக்குவளை மலர்

மதுக்குவளை மலர், வே. பாபு, தக்கைப் பதிப்பகம், சேலம், விலை 50ரூ. சங்கக் கவிதைகளில் இருந்து தனித்திருத்தல் கவிதையில் இருந்துவந்த ஒரு வெளிப்பாடு. எமிலி டிக்கன்ஸன், ஸில்வியா ப்ளாத் போன்ற ஆங்கிலக் கவிஞர்களும் தங்களை படைப்புகளில் தனிமையை ஆதாரப் பொருளாக வெளிப்படுத்தினர். தொடக்க காலத் தமிழ் நவீனக் கவிதைகளிலும் இதன் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. வே. பாபுவின் மதுக்குவளை மலர் தொகுப்பையும் இதன் கீழ் வகைப்படுத்தலாம். 90களில் இருந்து எழுதிவருபவரான வே. பாபுவின் இம்மதுக்குவளை மலருக்கு ஆதாரமாக இருப்பதும் தனிமைதான். அது அம்முவின் இல்லாமை […]

Read more

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் அமுதமொழிகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் அமுதமொழிகள், இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9. ஒரு காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு யாரும் எந்த உதவியும் இலவசமாகத் தர வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டிப் பெறுகின்ற நிலை இருக்கக்கூடாது. அதை எனது வாழ்நாளில் நான் காண வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அதுதான் என் லட்சியம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இது போன்ற பல்வேறு உணர்ச்சிமயமான கருத்துகளைத் தொகுத்து தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுதமொழிகள் என்ற நூலாகத் தமிழக […]

Read more

நீர் கொத்தி மனிதர்கள்

நீர் கொத்தி மனிதர்கள், அபிமானி, காவ்யா, சென்னை, பக். 318, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-231-5.html தண்ணீர் வணிகமயம் ஆக்கப்பட்டிருக்கும் காலத்தில் அது சாதிமயம் ஆக்கப்பட்டிருப்பதைத் தோலுரித்துக் காட்டும் புதினம் நீர் கொத்தி மனிதர்கள். அபிமானியின் கவிதைகள், சிறுகதைகள், தமிழ்ப் படைப்புலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. அவரது அனுபவக் கிடங்கு ஆழமானது. கட்டவிழ்க்க முடியாத வலிகளோடு நிரம்பிக் கிடப்பது. அதன் ஒரு பகுதியே இப்புதினம். அணிந்துரையில் தண்ணீர் கொடுமையை முன்னிறுத்தித் தமிழில் முதலில் வரும் தலித் எழுத்து இது […]

Read more

தவிக்குதே தவிக்குதே

தவிக்குதே தவிக்குதே, பாரதி தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 223, விலை 110ரூ. ஜீவராசிகளின் உயிர் ஆதாரமாக விளங்கும் தண்ணீர் உலகமயச்சூழலில் வணிகமயமாகிப் போனதைக் கவலையுடனும், தீர்வுகளுடனும் முன் வைக்கும் நூல். இயற்கையின் கொடையாள தண்ணீரை வணிகமயமாக்கியதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் அரசியலை நூலாசிரியர் விளக்கியுள்ளார். நாடு முழுவதும் அரசு தனியார் கூட்டில் உருவாகும் குடிநீர்த் திட்டத்தில் கொள்ளை லாபம் அடிக்கும் பன்னாட்டு, தனியார் நிறுவனங்களின் முகத்திரையைக் கிழிக்கும் ஆசிரியர், அதற்குத் துணை போகும் மத்திய, மாநில அரசுகளையும் சாடியுள்ளார். அடிப்படைத் தேவையான குடிநீரை […]

Read more

அடைபட்ட கதவுகளின் முன்னால்

அடைபட்ட கதவுகளின் முன்னால், மலையாளத்தில்-அனுசிரீ, தமிழில்-யூமா. வாசுகி, திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை, விலை 60ரூ. மகனுக்குத் தாலாட்டுப் பாடிய ஒரு தாயின் போர்ப் பாட்டு இது. எல்லாத் தாயும் தன் பிள்ளைகளை சில ஆண்டுகாலம்தான் சுமப்பார்கள். 24 ஆண்டுகளாகச் சிறையில் சுமக்கும் தாய் அற்புதம் அம்மாள். சிறையின் கொடும் தனிமையிலும் எனக்குப் போராடுவதற்கான சக்தி என் அம்மாவிடம் இருந்து கிடைக்கிறது. வெயில் மழையைப் பொருட்படுத்தாது எனக்காக நீதிமன்றத்திலும் சிறையிலும் ஏறி தளரும் போதெல்லாம் ஒருக்கால் தூக்கு மரத்தின் கீழே நிற்க வேண்டி […]

Read more

புதியதேசம்

புதியதேசம், ப. திருமலை, புதிய தரிசனம், சென்னை. சமூகப் பார்வை சமூகப் பிரச்னைகளைத் தேடிப்பிடித்து அதற்காக அலைந்து, திரிந்து தகவல்களைத் திரட்டி, அவற்றைச் சரிபார்த்து வழங்குவதே ஒரு செய்தியாளனின் முக்கியக் கடமை. அவ்வகையில் ப. திருமலை தன் பல்லாண்டு செய்தி உலக அனுபவத்தில் வழங்கி இருப்பதே புதிய தேசம் என்ற இந்நூல். இந்தியாவில் நீர் வழிச்சாலை தேவை, தமிழகத்தில் தொடரும் அரசியல் கொலைகள் பற்றிய ஆழமான கட்டுரை, சீமைக் கருவேல மரத்தினால் காலியாகும் கிராமங்கள், காவல்நிலைய மரணங்கள், தமிழர்களின் தற்கொலை மனஙப்பான்மை, கருக்கொலை, குழந்தை […]

Read more

வந்தாராங்குடி

வந்தாராங்குடி, கண்மணி குணசேகரன், தமிழினி, சென்னை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு வீடு வாசல் நிலபுலம் எல்லாம் தந்துவிட்டு, வேறுவேறு ஊர்களில் குடியேறி வந்தாரங்குடியாய் வாழ நேர்ந்த மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை அப்படியே அசலாய்ப் படம் பிடித்திருக்கிறது கண்மணி குணசேகரனின் இந்த நாவல். குருவிகளின் சிலும்பல்கள், கொட்டப்புளிகளின் கெக்களிப்புகள் இணைகளோடும் குஞ்சுகளோடும் கூடுகள் தோறும் விடியல் ஒலிகள், ஏகத்துக்குமாய் பச்சைப் பசேல் என்று விரிந்த கம்மங்கொல்லைகள், தாய்மடி போல் இம்மண், உயிர்களை ஊட்டி வளர்க்கும் பரிவு-இந்த அறிமுகத்தோடு வேப்பங்குறிச்சி கிராமத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் நாவலாசிரியர். […]

Read more

நூறு வயது வாழவேண்டுமா?

நூறு வயது வாழவேண்டுமா?, திரிசக்தி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 70ரூ. புரியாதவர்களுக்கு புதிராகத் தெரியும் சித்தர்கள், புரிந்தவர்களுக்கோ புதையலாகத் தெரிபவர்கள். மனித சமூகத்தின் மீது அவர்கள் காட்டிய அக்கறை கொஞ்ச நஞ்சமல்ல. எது வாழ்க்கை என்பதையும், அதை எப்படி முறைப்படி வாழவேண்டும் என்பதையும் வகுத்துக் காட்டிய சித்தர்களின் வாழ்வியல் ரகசியங்களை தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் சைதை முரளி. நன்றி: தினத்தந்தி, 30/4/2014.   —- எனை வெறுப்பவன் எனக்களித்த பரிசு, தமிழ்பிரியன்(எ) பெ.வை.மணிகண்டன், அறம் பதிப்பகம், புதுச்சேரி, விலை 65ரூ. காதலிக்கு காதல் வருவதற்காக சற்று […]

Read more

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள், ஜெயந்தி சங்கர், காவ்யா, சென்னை, விலை 880ரூ. சிங்கப்பூர் சூழ்நிலையில் உருவான சிறுகதைகள் உலகப் பெண்களின் உள்ளார்ந்த வலிகளையும், நகர எந்திரங்களுக்கு இடையே நசுங்கிவிடாமலும் உலகமயமாதலால் உடைந்து நொறுங்கிப் போகாமலும் மனிதனை நூலாசிரியர் ஜெயந்தி சங்கரின் கதைகள் காப்பாற்றுவதுடன், கை கொடுக்கும் வகையில் 99 சிறுகதைகளும், 3 குறுநாவல்களும் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதைகளிலும் ஈரம் அதிக அளவில் இருப்பதால் அனைவருடைய மனதையும் எளிதாக தொட்டுவிடுகிறது. நூலாசிரியர் மதுரையில் பிறந்து, சிங்கப்பூரில் வசித்தாலும், தனது நாட்டையும், மக்களையும் தனது படைப்புகள் மூலம் […]

Read more

ஆயிரம் ஆண்டு ரகசியம்

ஆயிரம் ஆண்டு ரகசியம், அமுதன், தந்தி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழகத்தை ஆண்ட மாமன்னர்களில் வீரத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும், ஆன்மிகத்திலும் சிகரம் தொட்டவர் ராஜராஜசோழன். வானளாவிய தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டி வான்புகழ் பெற்றவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜசோழன் நிகழ்த்திய அற்புத நிகழ்வுகளை அரிய செய்திகளை நாம் அறியும் வகையில் ஆயிரம் ஆண்டு அதிசயம் என்ற தலைப்பில் ஆசிரியர் அமுதன் அழகுபட விவரித்துள்ளார். இன்றைய பொறியியல் திறனுடன் போட்டி போடக்கூடிய அளவுக்குக் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின் தொழில்நுட்பம், நாட்டியக் கலையில் […]

Read more
1 2 3 4 9