ஒளிந்திருப்பது ஒன்றல்ல

ஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, தமிழில சுதாங்கன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 254, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-337-1.html இன்றைய உலகின் மனிதனின் தலையாய்ப் பிரச்னையான மனஅழுத்தத்துக்குத் தீர்வு காண்பது எப்படி என்பதற்கு எளியமுறை தியானங்கள் மூலம் விளக்கமளிக்கிறது இந்த நூல். உங்களை நீங்களே மன ரீதியாக சோதித்துக் கொள்ளுங்கள், இதில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அல்லது உங்களுக்கு எது எளிதானதோ அதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதுவே உங்கள் பிரச்னைக்குத் தீர்வு. இதற்காக உடலை வருத்திக்கொண்டு, […]

Read more

இலக்கியச் சுவடுகள்

இலக்கியச் சுவடுகள், ஆ. மாதவன், ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை, பக். 376, விலை 250ரூ. பல்வேறு காலகட்டங்களில் ஆ. மாதவன் எழுதிய பல நிகழ்வுகளில் வாசித்த 40 இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. நாற்பதாண்டு கால தமிழ் இலக்கியச் சூழலின் தடத்தைக் காட்டுகிறது. எண்பதுகளின் தமிழ் நாவல்கள் நான்கு கட்டுரை மிக நேர்த்தி. ஆண்டுதோறும் இத்தகைய மதிப்பீடுகளை அவர் செய்திருக்கலாகாதா? என கேட்கத் தோன்றுகிறது. பஷீரின் படைப்புலகம் கட்டுரை மிக நீண்டது (30 பக்கங்கள்) என்றாலும், ஒரு தமிழ் வாசகனுக்கு வைக்கம் முகமது பஷீரின் படைப்பாற்றலை […]

Read more

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை), தொகுப்பும் உரையும் – ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், சென்னை, பக். 284, விலை 215ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-349-5.html சங்ககாலம் என்பது புனைவானது. சமயவாதிகளால் இட்டுக்கட்டப்பட்டதுதான் மதுரைத் தமிழ்ச் சங்கம் என்றெல்லாம் கருதும் சில ஆய்வாளர்களின் கருத்துகளை மறுத்து, ஆதாரங்களுடன் பல உண்மைகளை முன்வைக்கிறது தொகுப்புரை. சங்க காலத்தில் நூற்றுக்கணக்கான பெண் கவிஞர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும், தொகுப்பாளரின் […]

Read more

சர்வோதய ஆளுமைகள்

சர்வோதய ஆளுமைகள், வீ. செல்வராஜ், அருள்மிகு வீரமா காளியம்மன் கல்வி அறக்கட்டளை, மதுரை, பக். 576, விலை 400ரூ. காந்தியக் கொள்கையை 11 பெருந்தலைப்புகளில் 138 உள் தலைப்புகளில் மிக மிக எளிமையாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர். சர்வோதய தத்துவத்தை விளக்கும் வகையில் ஜெய்ஜகத் சுவாமிகளும் சிஷ்யர்களும் எனும் தலைப்பில் உழவர், நெசவாளர் உழைப்பை வெளிப்படுத்தும் நூலாசிரியர் களத்து மேட்டுக் காட்சிகளின் மூலம் கிராமப்புற சமதர்ம சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறார். அதன் மூலம் உடல் உழைப்பினால் வாழும் ஒரு பாட்டாளியின் வாழ்க்கையும், உழுது பாடுபடும் ஓர் […]

Read more

அறிவியல் போற்றுதம்

அறிவியல் போற்றுதம், நெல்லை சு.முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 268, விலை 100ரூ. தினமணி நாளிதழில் நூலாசிரியர் நெல்லை சு.முத்து எழுதி வெளியான அறிவியல் தொடர்பான கட்டுரைகளில் 27 கட்டுரைகளைத் தொகுத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் விண்ணில் செலுத்திய விண்கலன்கள், ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள், வானிலை ஆய்வூர்திகள் என சகல விஷயங்களையும், அதற்கான காரண காரியங்களையும் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. ஒருபுறம் சாதனைகளைப் பட்டியலிடும் நூலாசிரியர், மறுபுறம் அதனால் விளைந்த தீமைகளையும் விவரிக்கத் […]

Read more

மீசை என்பது வெறும் மயிர்

மீசை என்பது வெறும் மயிர், ஆதவன் தீட்சண்யா, சந்தியா பதிப்பகம், விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-366-1.html மீசை அலங்காரமா? அதிகாரமா? ஆதவன் தீட்சண்யா எழுதிய மீசை என்பது வெறும் மயிர் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். சந்தியா பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நந்தா ஜோதி பீம் தாஸ் என்ற கற்பனை கதாபாத்திரத்தை ஒட்டி, நாவல் செல்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அவருக்கு, கல்வி மறுக்கப்படுகிறது. அவர் ஊரை விட்டுச் சென்று கடந்த 1964ல், சுனாமியால் தனுஷ்கோடி அழிந்தபோது, […]

Read more

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

சாகுந்தல நாடக ஆராய்ச்சி, மறைமலை அடிகள், சேகர் பதிப்பகம், பக். 168, விலை 125ரூ. சமஸ்கிருதத்தை வெறுத்தவரே மொழிபெயர்த்தார் கடந்த 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வடமொழி மகாகவி காளிதாசரின், சாகுந்தலம் காவியத்தை, 100 ஆண்டுகளுக்கு முன் அழகு தமிழில், மறைமலையடிகள் அதே பெயரில் செய்யுளாக ஆக்கினார். அந்த நூல், தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது. தனித்தமிழ் இயக்கத்தை துவக்கிய மறை மலையடிகளின் தூய தமிழ் நடையை அறிய, இந்த நூலைப் படித்து மகிழலாம். தமிழனின் வீர விளையட்டான ஜல்லிக்கட்டை பார்ப்பதுபோல், படிப்பவரை சிலிர்க்க வைக்கும் […]

Read more

இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் தொழிலாளர் நிலை

இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் தொழிலாளர் நிலை, குமரி அனந்தன், பூம்புகார் பதிப்பகம், பக். 395, விலை 320ரூ. எல்லா நூற்றாண்டிலும் சுரண்டல் கி.பி. 19ம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சு புரட்சிக்கு பின்னர், உலக அளவில் தொழிலாளர்களின் உரிமை குரல்கள், ஓங்கி ஒலிக்க துவங்கியது. அதன் ஒரு பகுதியாக, 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், தமிழகத்திலும் தொழிலாளர் நலன், அவர்களின் முக்கியத்துவம், வாழ்நிலை, துன்பத்துக்கான காரணம், அதற்கான மீட்சி போன்றவை குறித்த கருத்தாடல்கள் எழ துவங்கின. திரைப்படம், இலக்கியம், நாடகம் போன்ற கலை வடிவங்களிலும் அவை எதிரொலித்தன. […]

Read more

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே, நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், பக். 156, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-375-4.html மாற்றுக் கல்விக்கான விதை தமிழகத்தில் கல்வி பற்றி விவாதங்களும் கருத்தாடல்களும் சமீப காலங்களில் கூடுதலாய் நடைபெற தொடங்கியிருக்கின்றன. இது நல்ல தொடக்கமே. அத்தகைய முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் வெளிவந்துள்ள நூல் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே. 34 ஆண்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அரை நூற்றாண்டு காலமாகத் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த புலமையுடைய படைப்பாளியாகவும் […]

Read more

இல்லாதது இருத்தல்

இல்லாதது இருத்தல்,  ஆங்கில மூலம் நகுலன், தமிழில் தஞ்சாவூர்க்கவிராயர், அனன்யா வெளியீடு, தஞ்சாவூர், விலை 50ரூ. நகுலனின் தனித்திணை சி.சு.செல்லப்பா கொண்டுவந்த எழுத்து இதழ் மூலம் புதுக்கவிஞராகவும் சிறுகதையாளராகவும் அறிமுகமானவர் நகுலன் என்ற டி,கே. துரைசாமி. இவரது ஆங்கிலக் கவிதை நூலான நான் பீயிங் (non being) கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. நகுலன் படைத்த நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், அவ்வளவிலும் நகுலன் தன்மை என்ற ஒன்றை சாத்தியப்படுத்தியவர் அவர். மனிதன் இருக்கிறான். சில நேரம் தன்னை மறந்து இல்லாமல் இருக்கும் நிலையிலே மனம் சலித்தபடியும் […]

Read more
1 6 7 8 9