வடலிமரம்

வடலிமரம், ஐரேனிபுரம் பால்ராசய்யா, முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், பக். 124, விலை 80ரூ. இலக்கியவாதிகளான தகழி, கேசவ, தேவ், வைக்கம் முகம்மது பஷீர் ஆகியோரின் நாவல்களைப் படித்தபோது அடைந்த இலக்கிய இன்பத்தை, இந்த நாவலைப் படித்த போதும் அடைந்தேன். பள்ளிப் பருவத்திலேயே காதலிக்க துவங்குகின்றனர் கதாநாயகன் அனந்தகிருஷ்ணனும், கதாநாயகி சொர்ணாவும். அனந்தகிருஷ்ணனின் தந்தை காதலுக்கு எதிராக நிற்கிறார். ஜாதி ஆதிக்கமும், பண ஆதிக்கமும் காதலர் பாதையில் குறுக்கிடுகின்றன. பள்ளிப் பருவத்திலேயே ஊரை விட்டுப் போய் வேற்றூரில் கல்யாணம் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். அங்கும் வந்து […]

Read more

சகுனி

சகுனி, விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 543, விலை 410ரூ. மாபெரும் இந்திய இதிகாசமான மகாபாரதத்தில், சகுனி கதாபாத்திரம் முக்கியமானது. சூது, வஞ்சத்தின் தலைவனாக, சகுனி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். சகுனியின் மறுபக்கத்தை அலசியிருக்கிறார் ஆசிரியர். காந்தார நாட்டுத் தலைவன், காந்தாரியின் மகன், துரியோதனனின் தாய் மாமன் சகுனி என்ற அறிமுகம் சிறப்பாக உள்ளது. தான் கொண்ட சபதத்தை நிறைவேற்ற, பொறுமை காப்பதிலும், திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும் சகுனி தீர்க்கமானவர் என்கிறார் ஆசிரியர். தங்கையின் வாழ்விற்காக, சகுனி செய்யும் காரியங்கள் அனைத்தையும் வாசிப்பவர் ஏற்கும்படி தர்க்க ரீதியில் […]

Read more

அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும்

அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும், ரவிக்குமார், மணற்கேணி, சென்னை, விலை 30ரூ. மதுவிலக்கு-இன்னொரு கோணம் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற வாசகங்களை மதுக்குடிப்பியில் அச்சிடுவதோடு கடமை முடிந்துவிட்டது என்று அரசுகள் நினைக்கின்றன. இந்நிலையில் மதுவிலக்கை வலியுறுத்தித் தமிழகத்தில் வெவ்வேறு தரப்பிலிருந்தும் உறுதியான குரல்கள் எழுகின்றன. இச்சூழ்நிலையில் மதுப்பழக்கத்தால் உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுபவர்களான அடித்தட்டு,தலித் மக்கள் நோக்கிலிருந்து மதுவிலக்கை வலியுறுத்திப் பேசும் சிறுகட்டுரைகள் இவை. மதுப்பழக்கத்தை கீழ்மக்களோடு தொடர்புபடுத்தும் மேல்தட்டு வர்க்கக் கற்பிதங்களையும் இக்கட்டுரைகள் கேள்விக்குள்ளாக்குகின்றன. குடியை மாற்றுப் பண்பாடாக அணுகும் போக்கையும் ரவிக்குமார் […]

Read more

நான் மலாலா

நான் மலாலா (சுயசரிதை), ஆங்கிலம்-மலாலா, கிறிஸ்டினா லாம்ப், தமிழ்-பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 312, விலை 275ரூ. இன்று உலகம் முழுதும் நேசிக்கப்படும் பெயர் மலாலா. அந்த பெயருக்குரிய 15 வயது சிறுமி, தன் வாழ்வில் அனுபவித்த துயரம் மிகக் கொடுமையானது. முஸ்லிம் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என, பிரசாரம் செய்த ஒரே காரணத்தால், 2012, அக்டோபரில், பள்ளியில் இருந்து மலாலா வீட்டிற்கு திரும்பியபோது, தலிபான்கள் அவரது தலையை குறிவைத்து சுட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, இன்று நோபல் பரிசு பெற்று, […]

Read more

மெய்நிகரி

மெய்நிகரி, கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், பக். 152, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/meinigari.html முதன்முறையாக, தொலைக்காட்சி ஊடகத்தில் நடைபெறும் கதை சூழலை கொண்ட நாவல் என்ற அறிமுகத்தோடு, இந்த நூல் பரிச்சயமாகிறது. ஆங்கில சொற்களுக்கு தமிழில் பெயர் சூட்டுதல் ஒரு கலை. ஆசிரியருக்கு அது கைவரப் பெற்றிருக்கிறது. தொலைக்காட்சி படத் தொகுப்பாளர், டெரன்ஸ் பாலின் அனுபவங்களில் கதை நாயகனும், தன் அனுபவங்களைக் காட்சித் தொகுப்பாக ஆவணப்படுத்தி வைத்திருக்கிறான். இரண்டு ஆண்டுகளாக சேகரித்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள முக்கிய […]

Read more

ரகசிய ஆசைகள்

ரகசிய ஆசைகள், ப்ரீத்தி ஷெனாய், தமிழில் என்.டி. நந்தகோபால், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை 200ரூ. பெண் விடுதலையைப் பேசும் நாவல் இது. நாவலின் கதாநாயகி பள்ளிப்பருவத்தில் ஒருவனைக் காதலிக்கிறாள். அவர்கள் முத்தமிட்டுக் கொள்கின்றனர். நாயகியின் பெற்றோர் வெகுண்டு எழுந்து காதலரைப் பிரித்து, நாயகியை வேற்றூரில் படிக்க வைக்கின்றனர். 19 வயதிலேயே அவளுக்கு வலுக்கட்டாயமாக ஒரு திருமணமும் செய்கின்றனர். கட்டிய கணவன் மனதிற்கு இனியவனாக இல்லை. கணவனின் முட்டாள் தனங்களாலும், சுயநலமான நடத்தைகளாலும் கதாநாயகி மனம் சோர்ந்து போகிறாள். கடைசியில் தன் […]

Read more

நாரதரின் பக்தி நெறி

நாரதரின் பக்தி நெறி, மும்பை ராமகிருஷ்ணன், பகவன் நாமா பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 100ரூ. நாரதர் என்ற பெயருக்கு, மனிதர்களின் அஞ்ஞானத்தை போக்கி, ஞானம், ஆனந்தம் அளிப்பவர் என்பது பொருள். பிரம்மாவின் மானச புத்திரரான நாரதர் எழுதிய பக்தி சூத்திரத்தை இந்த நூல் விளக்குகிறது. இதில் 84 நாரத பக்தி சூத்திரங்கள் விளக்கப்படுகின்றன.  முதல் 24 சூத்திரங்கள் பக்தியின் நிலையைக் கூறுகின்றன. மற்றவை அதன் விளக்கம் கூறுகின்றன. சூத்திரங்களை விளக்கும்போது, பகவத்கீதை, அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதி, திருப்புகழ், திருமூலரின் திருமந்திரம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, […]

Read more

தோட்டாக்கள் பாயும் வெளி

தோட்டாக்கள் பாயும் வெளி, ந.பெரியசாமி, புது எழுத்து வெளியீடு, விலை 70ரூ. மதுவாகினியின் சுவடுகள் பெரியசாமியின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. எளிய சொற்கள் மூலம் பெரியசாமி கட்டியெழுப்பும் காட்சிகள் அசாதாரணமானவை. இறந்தவர்களெல்லாம் பறவைகளாகிவிடும் மரணமற்ற ஊர், ஆசிரியரைக் கேலிச்சித்திரமாக்கும் சிறுமி. தற்கொலைக்கு முயல்கிறவனுக்குக் குழந்தைகளாகத் தெரியும் ரயில்பெட்டி, பசுவின் நிழலை வளர்ப்பவன், மேகத் துண்டைத் தலையணையாக்கும் சிறுவன், துணை வானத்தைச் சிருஷ்டிக்கும் சிறுமி, அக்டோபர் முதல்நாள் திக்விஜயம் செய்யும் காந்தி… என்று மாறுபட்ட காட்சிகள் வழியே பரந்துபட்ட தளத்தில் நமது வாசிப்பை சாத்தியப்படுத்துகிறார். […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், பிரபஞ்சன், நற்றிணை பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. அரசியல் கற்க வேண்டியவர்கள் முதலில் படிக்க வேண்டிய பாடம் கல்கி வார இதழில், 58 வாரங்களாக, எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய, மகாபாரதத்தை சமீபத்தில் படித்தேன். நற்றிணை பதிப்பகம் அதைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ராஜாஜி முதல், மகாபாரதத்தை தமிழில் பலர் கொடுத்துள்ளனர். ஆனால் பிரபஞ்சன் அளித்துள்ள மகாபாரதம், பெரும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. சுயசரிதை நூல்களுக்கு, அடிப்படை மகாபாரதம். வியாசர் தன் பேரப்பிள்ளைகளோடு இருந்ததை, தன் சுயசரிதையாக எழுதியது தான் மகாபாரதம். சிறு வயதில், கிராமங்களில் கூறப்பட்ட, […]

Read more

மகடூஉ முன்னிலை பெண் புலவர் களஞ்சியம்

மகடூஉ முன்னிலை பெண் புலவர் களஞ்சியம், தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், அமைந்தகரை, பக். 704, விலை 300ரூ. கைம்பெண் நோன்பின் கடுமையை விட உடன்கட்டை ஏறுதல் உயர்ந்ததோ? சங்ககாலத்தில், கற்றவராகவும், கவிஞராகவும், காதல் சமத்துவம் உடையவராகவும் பெண்கள் இருந்தனர் என்பதை, பல அகச்சான்றுகளோடு நிறுவுகிறார், நூலாசிரியர் தாயம்மாள் அறவாணன். சங்ககால மகளிர், அனைத்து நிலையிலும் முன்னிலைப்படுத்தப்பட்டனர் என்பதற்கு, நூலின் தலைப்பே, கட்டியம் கூறுகிறது. பிற்காலத்து பெண்டிர் கல்வி கற்பது மறுக்கப்பட்ட சூழலில், சங்ககாலப் பெண்டிர், ஒரு தடையும் இல்லாமல், ஆணுயக்கு நிகராக கற்றிருந்தனர். பொருளாதார […]

Read more
1 4 5 6 7 8 9