நேருவின் ஆட்சி, பதியம் போட்ட 18 ஆண்டுகள்

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள், ரமணன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 115ரூ. சுதந்திர இந்தியாவில் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் தலைவர்களில் மகாத்மா காந்திக்கும், பண்டித ஜவஹர்லால் நேருவுக்கும் முக்கியமான இடம் உண்டு. காந்தியைக் கூட இநத் நாடு விமர்சனத்துக்கு உட்படுத்தியது என்றால், அரசியல்வாதியான நேருவைப் பற்றி கேட்கவே வேண்டாம். நேரு, நாடு சுதந்திரம் பெற்ற 1947 முதல் அவர் இறந்த 1964 வரையில் பிரதமராகப் பதவி வகித்தார். அந்த 17 ஆண்டு காலத்தில் நாட்டை வடிவமைத்த சிற்பி […]

Read more

பாரதியும் தேசியத் தலைவர்களும்,

பாரதியும் தேசியத் தலைவர்களும், சு. சுப்புராமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், சென்னை, பக். 74, விலை 65ரூ. மகாகவி பாரதிக்கு காந்தியடிகைள், வ.உ.சி., அரவிந்தர், திலகர், நெல்லையப்பர், பாரதிதாசன், வ.வே.சு. அய்யர் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களுடன் இருந்த உறவுகளையும், வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களையும் தனித்தனி கட்டுரைகளாக விரிவாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை சந்தித்த பிறகு பாரதி வாழ்வில் ஏற்பட்ட மனமாற்றம், இந்தியா பத்திரிகையை நடத்துவதற்காக பாரதியார் பட்ட துயரங்கள் மற்றும் பாரதியாரின் தந்தை சின்னச்சாமி […]

Read more

காஞ்சி மகான் தரிசனம்

காஞ்சி மகான் தரிசனம் (கச்சிமூர்த்தி நூலின் மறுபதிப்பு), ஸ்ரீமடம் பாலு, இலக்கியப் பீடம் பதிப்பகம், பக். 256, விலை 150ரூ. நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த காஞ்சி மாமுனிவரான மகா பெரியவரின் பெருமையும் புகழும் அவர் நிகழ்த்திய தெய்வீக நிகழ்வுகளும் சொல்லில் அடங்காதவை. அவருடன் அணுக்கமாக இருந்து அவருடைய அருளைப் பெற்று, அனுபவித்தவர்கள் சொல்லிக் கேட்க வேண்டும் என்றால் அதன் சுவையே தனிதான். காரணம் மகா பெரியவரின் சின்னச் சின்ன காரியங்களில்கூட தத்துவார்த்தமான செய்திகள் பொதிந்து கிடந்ததை அதுவும், மகா பெரியவருக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த […]

Read more

மணப்பேறும் மகப்பேறும்

மணப்பேறும் மகப்பேறும், டாக்டர் ஞானசௌந்தரி, இந்திய மருத்துவ மையம், சென்னை, பக். 1217, விலை 1000ரூ. இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1990இல் வெளிவந்துள்ளது. அதன் பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தப் புத்தகம் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியரும் மகப்பேறு நிபுணருமான டாக்டர் ஞான சௌந்தரியின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஓர் அனுபவமே இந்த நூலை எழுதுவதற்கு முக்கிய காரணம். அவரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இரண்டு பிரசவத்திலும் பெண் குழந்தைகளே பிறந்தன. மூன்றாவது பிரசவத்துக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண், டாக்டரின் […]

Read more

இந்த விநாடி

இந்த விநாடி, நாகூர் ரூமி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, பக். 200, விலை 150ரூ. கவிஞர் நாகூர் ரூமியின் இந்தப் புத்தகம், சுய முன்னேற்றம் வகை புத்தகம் அல்ல, சுயத்தை மீட்டெடுக்கும் புத்தகம். எட்டு அத்தியாயத்திலும் எட்டு எளிய விஷயத்தை நமக்கு அவர் அறிமுகப்படுத்துகிறார். அவை நமக்கு வெளியே இருப்பவை அல்ல. நமக்கு உள்ளே இருப்பவை. நம் உடலையும், மனதையும் சீரமைத்துக் கொள்வதற்கான எளிய வழி முறைகள். நம் பழக்க வழக்கங்களால், நம்பிக்கைகளால் விலகிச் சென்ற பாதையிலிருந்து, வழி தவறிய பாதையிலிருந்து அழைத்து சரியான பாதை […]

Read more

உலகத் தமிழ்க் கவிதைகள் எமது மொழி பெயர் உலகினுள்

உலகத் தமிழ்க் கவிதைகள் எமது மொழி பெயர் உலகினுள், தொகுப்பு செல்வா கனநாயகம், நூல் உரிமை தமிழ் இலக்கியத் தோட்டம், விகடன் வெளியீடு, பக். 288, விலை 250ரூ. உலகம் முழுவதும் உள்ள 78 தமிழ்க் கவிஞர்களின் இலங்கை, இந்தியா மற்றவை நாடுகளில் வாழும் தமிழர்களின் கவிதைகளை மிக நறுக்காகத் தேர்வு செய்து, அற்புதமானவை, மற்றவர்களுக்கு முன்னுதாரமாக ஒரு நூலை விகடன் பிரசுரம் வாயிலாக வெளியிட்டுள்ளது தமிழ் இலக்கியத் தோட்டம். கவிஞர்களின் பட்டியலை இறுதி செய்வது பெரும் பணி. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கவிஞரின் […]

Read more

நல்லா எழுதுங்க நல்லதையே எழுதுங்க

நல்லா எழுதுங்க நல்லதையே எழுதுங்க, பி.ஆர். ஜெயராஜன், ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ், சேலம், பக். 144, விலை 75ரூ. நமது வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் சில பழமொழிகளுக்கான விளக்கங்கள், பிறருக்குத் தொந்தரவு கொடுக்காமல் எவ்வாறு செயல்படுவது, ஒட்டுக் கேட்பதால் ஏற்படும் விபரீதம், பொதுத் துறையில் பணியிலிருக்கும் அரசு ஊழியரின் அசாதாரண செயல்கள், மனைவியின் மொழியைக் கணவர் புரிந்து கொள்வது எப்படி, மனைவியின் கொடுமையிலிருந்து கணவனைக் காப்பதற்கான சட்டங்களின் அவசியம், கடன் அட்டை வங்கியிலிருந்து அனுப்பப்படும்போது, அந்த அட்டை அடங்கிய உறை நன்கு மூடி […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, தொகுப்பாசிரியர் கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 500, விலை 200ரூ. இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நாயகரான சுவாமி விவேகானந்தரின் தாக்கம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பலரிடமும் இருந்தது. அவர்களுள் மகாகவி பாரதியார் முதன்மையானவர். விவேகானந்தரும் பாரதியாரும் நேரில் சந்தித்ததில்லை என்றபோதும், இவ்விருவரின் சிந்தனையும் கருத்துகளும் ஒத்திருப்பதைக் காண முடிகிறது. இருவரும் ஆன்மிக அடிப்படையில்தான் இந்தத் தேசம் உயர்வடையும் என்ற நம்பிக்கையை வலுவாக முன்வைத்தவர்கள். பாரதியாரின் கவிதைகள் பேசப்படும் அளவுக்கு அவரது இதழியல் பணிகள் […]

Read more

நான் பார்த்ததெல்லாம் அழகின் சிரிப்பு

நான் பார்த்ததெல்லாம் அழகின் சிரிப்பு, டாக்டர் அ. கலாநிதி, வெற்றி பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அ.கலாநிதி, தமது நியூசிலாந்து சுற்றுப்பயண அனுபவங்கள் பற்றி எழுதிய புத்தகம் இது. நியூசிலாந்து நாட்டில் பார்க்க வேண்டிய இடங்களையும், அந்த நாட்டின் சிறப்புகளையும் நூலாசிரியர் சிறப்பாக வர்ணித்து இருப்பதால், நாமும் அங்கு இருப்பது போன்ற பிரமை உண்டாகிறது. புத்தகம் முழுவதும் வண்ணத்தில் அச்சிடப்பட்டு இருப்பதால், புத்தகத்தின் சிறப்பு மேலும் உயருகிறது. நியூசிலாந்துக்கு செல்ல இருப்பவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டி. செல்ல இயலாதவர்களுக்க […]

Read more

வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்

வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள், தி இந்து தமிழ், சென்னை, விலை 250ரூ. தமிழ் சினிமா பற்றிய முக்கியமான புத்தகம் இது. யுடிவி நிறுவனத்தின் தென்னகப் பிரிவுத் தலைவரான கோ. தனஞ்செயன், இதை எழுதியுள்ளார். படத்தயாரிப்பு, பட விநியோகம் மற்றும் திரைப்படத்துறையின் சகல பிரிவுகளில் நேரடி அனுபவம் உடையவர் இவர். தமிழில் இதுவரை 5 ஆயிரத்துக்கு மேற்படங்கள் வெளிவந்துள்ளன. திரையில் பார்த்த படங்களைத்தவிர, முக்கியமான பழைய படங்களையும் டிவிடி மூலம் பார்த்தவர். படங்களின் வெற்றி தோல்வி பற்றி பல கோணங்களில் ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார். இந்தப் […]

Read more
1 2 3 4 5 6 9