ஜமாஅத் கடந்து வந்த பாதை

ஜமாஅத் கடந்து வந்த பாதை (மூன்றாம் தொகுதி), தமிழில்-டி.அஜிஸ்லுத்புல்லாஹ், இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட், பக். 432, விலை 160ரூ. சுதந்திரத்திற்கு முன்பு பிரிக்கப்படாத இந்தியாவில் ஜமாஅத்தே இஸ்லாமி என்ற இயக்கம் முக்கிய பங்கு வகித்தது. 1945இல் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள், விவாதங்கள் குறித்த அரிய தொகுப்பு இந்நூல். தனிமனித ஒழுக்கம், ஆட்சி, சமூகத்தை கட்டமைத்தல் போன்றவற்றைப் பற்றி அந்த இயக்கம் என்ன விரும்புகிறது? அதனுடைய செயல்திட்டம், வழிமுறைகள் எவை என்பதே இந்நூல். நம்முடைய அழைப்பு என்ன? […]

Read more

குழந்தைகளின் அற்புத உலகில்

குழந்தைகளின் அற்புத உலகில், உதயசங்கர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 116, விலை 90ரூ. குழந்தைகளின் உலகில் அத்து மீறி பிரவேசிக்கக்கூடாது. அவர்கள் நாம் வைத்திருக்கும் பொம்மைகள் அல்ல என்று குழந்தைகளின் சுதந்திரம், அறிவாற்றல், சிந்தனை வளம், பெரியவர்கள் அவர்களை அணுக வேண்டிய முறை ஆகியவற்றை அலசுகிறது இந்த நூல். பொதுவாகவே குழந்தைகளுக்குக் கதை கேட்பதில் ஆர்வம் அதிகம். அவர்களுக்குக் கதைகள் சொல்ல வேண்டும். அந்த கதைகள் அவர்கள் புரிந்துகொள்ளும்படியான சாகசக் கதைகளாகவும், மலர்கள், விலங்குகள், பறவைகள், எளிய விஞ்ஞானம் தொடர்புடைய […]

Read more

அஷ்டாவக்ர மகாகீதை

அஷ்டாவக்ர மகாகீதை, ஓஷோ, தமிழில் என். ஸ்ரீதரன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 448, விலை 350ரூ. அஷ்டாவக்ர ஸம்ஹிதாவின் 298 சூத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது சூத்திரங்கள் சார்ந்து ஓஷோ நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நூல். வடமொழி ஸ்லோகங்கள், அவற்றுக்கான விளக்கங்கள், முல்லா நசுருதீன் கதைகள், ஜென் கதைகள், சூஃபி மார்க்க கதைகள், பைபிள் கதைகள், திபேத்திய பழங்குடியினர் கதைகள், மகாபாரதக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், புத்தர், விவேகானந்தர் போன்றோரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், தனக்கே நேரிட்ட அனுபவங்கள் – இப்படி எல்லாவற்றையும் மேற்கோள் […]

Read more

வறட்சியிலும் வளமை

வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி), ஆர். எஸ். நாராயணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 136, விலை 100ரூ. உணவுப் பயிர்களின் சாகுபடியில் குறைந்த அளவு நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்நூல் விவரிக்கிறது. நாட்டின் மொத்தப் பரப்பளவில் 50 சதவிகித காடுகள் இருந்தபோது, மாதம் மும்மாரி மழை பொழிந்தது. ஆனால் தறேபாது பல்வேறு காரணங்களால் காடுகளின் மொத்தப் பரப்பளவு 10 சதவிகித அளவுக்குக் குறைந்துவிட்டது. இதனால், 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட மழை பெய்வதில்லை. […]

Read more

எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். பா. தீனதயாளன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 452, விலை 300ரூ. எம்.ஜி.ஆரின் பிறப்பில் தொடங்கி, இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்றை இந்நூல் சுவைபட விவரிக்கிறது. நூலின் முகப்பில் சொல்லியிருப்பதைப்போல், திரையுலகம் அரசியல் இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய அவரின் மலைப்பூட்டும் சரித்திரத்தில், அதிகம் வெளிவராத, ஆனால் ஆதாரப்பூர்வமான தகவல்கள் இந்நூலில் நிரம்பவே இருக்கின்றன. எம்.ஜி.ஆரின் குழந்தைப் பருவத்தையே விவரிக்கும் முதல் அத்தியாயத்திலேயே, அரை வயிற்றுச் சாப்பாடாவது கிடைக்கட்டும் என்று நாடகக் கம்பெனியில் அவரைச் சேர்த்து விடுவதும், நாடக வாத்தியார் அவரைச் சேர்த்து விடுவதும், […]

Read more

மாற்றமுடியாதவை மகிழ்ச்சியின் மந்திரங்கள்

மாற்றமுடியாதவை மகிழ்ச்சியின் மந்திரங்கள், டேவிட் ரிகோ, தமிழில் அகிலன் கபிலன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 248, விலை 150ரூ. நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகின்றன. அவற்றை நாம் தவிர்க்கவும் முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களில், 1. எல்லாமே மாறுகின்றன, முடிவடைகின்றன. 2. எல்லாமே நினைக்கிறபடி நடப்பதில்லை. 3. வாழ்க்கை எப்போதும் நியாயமாய் இருப்பதில்லை. 4. வலி என்பது வாழ்வின் அங்கம். 5. மனிதர்கள் எப்போதும் அன்பாகவும், விசுவாசமாகவும் நடப்பதில்லை என்ற இந்த ஐந்தும் சவாலாகவே இருக்கின்றன. இந்த விஷயங்கள் […]

Read more

கடமையைச் செய் பலன் கிடைக்கும்

கடமையைச் செய் பலன் கிடைக்கும், வாரண்ட் பாலா, கேர் சொசைட்டி, ஓசூர், பக். 376, விலை 200ரூ. சாதாரண மனிதர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்ட அறிவூட்டும் நூல்களை எழுதியுள்ள நூலாசிரியரின் மற்றுமொரு படைப்பு இந்நூல். நாம் நம் கடமையைச் செய்தால், நம்மைப் பின் தொடரும் நிழல்போல், கடமையின் விளைவான நமது உரிமைகளும், தானே நம்மைப் பின்தொடரும் என்கிறார் நூலாசிரியர். சேவை என்பது கடமை என்பதும் ஒன்றே என்று பலரும் கருதுகிறார்கள். இதற்கு ஏற்ப காசு வாங்காமல் செய்வது சேவை. காசு வாங்கினால் […]

Read more

களப்பணியில் கம்யூனிஸ்டுகள்

களப்பணியில் கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், சென்னை, விலை 200ரூ. எந்த ஒரு அரசியல் கட்சியும், தொண்டர்கள் சிந்திய வியர்வை அந்த தலைவர் மீது விழுந்த பன்னீர் என்ற முறையில் கட்சியை பெரிதும் வளர்க்கும்.ஆனால் தலைவர்களை போற்றி வணங்கும் அரசியல் உலகம் தொண்டர்களை பற்றி நினைப்பதில்லை. அதற்கு நேர்மாறாக தொண்டர்களின் ரத்த வியர்வையால் வளர்ந்ததுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்பதை மறக்காத கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தமிழ்நாடு முழுவதிலும் கட்சிக்காக பல போராட்டங்களில் […]

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், வசந்தா பிரசுரம், சென்னை, விலை 220ரூ. தமிழ்த் திரையுலகில், சாதனை படைத்த இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ.சி. திருலோகசந்தர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட இயக்கிய படங்கள் 65. அதில் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் 25. “ஏவி.எம்.” பட நிறுவனத்தை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் “அன்பே வா”. அதை இயக்கியவர் திருலோகசந்தர். இவர் தயாரித்த “பத்ரகாளி” படத்தின் கதாநாயகி ராணி சந்திரா, படம் முடிவடைவதற்கு முன் விமான விபத்தில் இறந்து போனார். படத்தைக் கைவிட்டால், பல லட்சங்கள் நஷ்டம் […]

Read more

கீதைப் பேருரைகள்

கீதைப் பேருரைகள், ஆசார்ய வினோபா பாவே, காந்திய இலக்கிய சங்கம், மதுரை, பக். 416, விலை 80ரூ. விடுதலைப் போராட்டத்தின் போது சிறையில் அடைக்கப்பட்ட ஆசார்ய வினோபா பாவே 1932இல் கீதை குறித்து சிறையில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு இந்நூல். சுய தர்மத்துக்குத் தடையாக உள்ள மோகத்தை அகற்றுவதே கீதை உபதேசத்தின் முக்கிய குறிக்கோள் என்கிறார் நூலாசிரியர். உயர்ந்த தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவது எப்படி என்று கூறுவது கீதையின் சிறப்பு. பாராயணம் செய்வதுடன் சிந்திக்கவும். ஆன்ம சோதனை புரியவும் தூண்டுவது கீதை. கர்ம […]

Read more
1 4 5 6 7 8 9