விடுதலைப் போரில் தமிழகம் (முதல் பாகம்)

விடுதலைப் போரில் தமிழகம் (முதல் பாகம்), ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, பக். 688, விலை 600ரூ. 1930 வரையிலான சுதந்திரப் போரின் வரலாற்றையும் அதில் தமிழகத்தின் பங்களிப்பையும் முன்வைக்கிறது முதல் பாகம். கிபி 1790 களில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்த பாளையங்கோட்டை கட்டபொம்மன் ஏன் வரலாற்றாசிரியர்களால் விடுதலைப் போர் வீரனாக ஏற்கப்படவில்லை என்ற கவலையுடன் தமிழகத்தின் பங்களிப்பைத் தொடங்குகிறார் ம.பொ.சி. அது மட்டுமல்ல 1857 சிப்பாய் புரட்சியை முன்னிலைப்படுத்துவோர், ஏன் 1806 வேலூர் சிப்பாய்க் கலகத்தை ஒரு சுதந்திரப் போராட்ட கிளர்ச்சியின் முன்னோடியாகக் […]

Read more

இது சக்சஸ் மந்திரம் அல்ல

இது சக்சஸ் மந்திரம் அல்ல, சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 112, விலை 85ர வாழ்வில் சாதனை புரிந்தவர்களைப் பற்றி எழுதப்பட்ட 24 ஆங்கில நூல்களை அறிமுகம் செய்யும்விதமாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. அந்த நூல்களில் அடங்கியுள்ள செய்திகள் என்ற அளவில் நின்றுவிடாமல், வாசகர்களைச் சாதனையாளராக மாற்றும் முனைப்புடன் நூலாசிரியர் எழுதியிருப்பது வியக்க வைக்கிறது. ‘பெரிய குட்டையில் சிறிய மீன் ஆக இருப்பதைவிட சிறிய குட்டையில் பெரிய மீனாக இருப்பது நல்லது. ‘நம்பிக்கையில்லாதவன் காற்றைக் குறை சொல்வான்; நம்பிக்கையுள்ளவன் மாற்றத்தை எதிர்பார்ப்பான்; […]

Read more

புத்தகத்தின் பெருநிலம்

புத்தகத்தின் பெருநிலம், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 238, விலை 210ரூ. நாட்டார் வழக்காற்றியலில் புலமையாளரான நூலாசரியர், ‘உங்கள் நூலகம்’ இதழுக்காக எழுதிய நூல் அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தேர்வு செய்யப்பட்ட 22 கட்டுரைகள் சமூகவியல் – மானிடவியல், வரலாறு, சமயம் – தத்துவம், வாழ்க்கை வரலாறு, இலக்கியம் என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் அறிமுகக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் அந்த நூலின் சாராம்சத்தை மிகவும் எளிமையாகவும், சுவைபடவும் விளக்குகின்றன. நூலின் சிறப்புகளை மட்டுமன்றி, அது கூற வந்த, கூறியுள்ள […]

Read more

தமிழ் இதழியல் கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ் இதழியல் கருத்தரங்கக் கட்டுரைகள், பெ.சு.மணி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பக். 362, விலை 175ரூ. தமிழ் இதழியல் வரலாறு தொடர்பாக 13 கருத்தரங்கங்களில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. 1831-ஆம் ஆண்டு தொடங்கி 1892-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் பத்திரிகைகள் உருவான விதம், அதற்கு பிரிட்டிஷார் ஏற்படுத்திய தடைகள், அதையும் மீறி பத்திரிகை சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்ததோடு, பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தியவர்கள் குறித்து இந்நூலில் விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுதேசமித்திரன், லோகோபகாரி, ஞானபோதினி, தத்துவபோதினி, திராவிடன், தினமணி உள்ளிட்ட பத்திரிகைகளைப் பற்றியும் […]

Read more

அயல் பசி

அயல் பசி, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. உலகம் முழுவதும் பரவியிருக்கும் பலவகையான உணவு கலாசாரங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஷாநவாஸ். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.   —-   மனோராமா இயர்புக், மலையாள மனோரமா வெளியீடு, சென்னை, விலை 150ரூ. உலகம், இந்தியா, தமிழ்நாடு பற்றிய விவரங்களும், கடந்த ஆண்டு நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் மனோரமா இயர் புக்கில்,அத்துடன் “இயர்புக்” தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால் வெள்ளி விழா மலராக மலர்ந்துள்ளது. வெள்ளி […]

Read more

நல்லுறவுகள்

நல்லுறவுகள், இல.பழனியப்பன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. குடும்ப வாழ்வில் உறவு நிலையில் தொடங்கி உலக நாடுகள் உறவு நிலை வரை எதிர்காலச் சந்ததியினருக்குப் படம் பிடித்துக் காட்டும் வகையிலான 19 தலைப்புகளில் பல்வேறு கருத்துகள் இடம் பெற்றுள்ள நூலாகும். உறவுக்கு கை கொடுக்கவும், அதன் வழி உலகம் உயரவும் வழிவகுக்கும் வகையில் நூல் திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 114/1/2015.   —- ராணி பெற்ற முத்து, ஜ்வாலாமுகி ராஜ், கிருஷ்ணாலயா பதிப்பகம், நாமக்கல், விலை 350ரூ. எயிட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோய் […]

Read more

வரலாறு படைத்த வைர மங்கையர்

வரலாறு படைத்த வைர மங்கையர், புதுகைத் தென்றல் வெளியீடு, சென்னை, விலை 200ரூ. நாட்டுக்கு உழைத்து வரலாற்றில் இடம் பெற்ற பெண்களின் வரலாற்றை மனதைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார் பேராசிரியர் பானுமதி தருமராசன். இரண்டு பாகங்களாக புத்தகம் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில் வீரமங்கை வேலுநாச்சியார், ஈ.வெ.ரா. நாகம்மாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி, தில்லையாடி வள்ளியம்மை, ருக்மணி அருண்டேல் உள்பட 22 பேருடைய வாழ்க்கை வரலாறுகள் உள்ளன. இப்புத்தகத்தின் விலை 200ரூ. அடுத்த புத்தகத்தில் கவிக்குயில் சரோஜினி தேவி,அம்மு சுவாமிநாதன், கேப்டன் லட்சுமி […]

Read more

நல்ல நிலம்

நல்ல நிலம், கண்மணி கிரியேட்டிங் வேவ்ஸ், சென்னை, விலை 600ரூ. வாழ்ந்த மண்ணின் மேல் ஒரு மனிதன் வைக்கிற பற்றும் பாசமும் வார்த்தைக்கு அடங்காதவை. சொந்த பூமியை மனிதன் இழந்து வெறும் நினைவுகளோடு மட்டும் நிற்பதுதான் இன்றைய வாழ்க்கை நிர்ப்பந்தம். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒரு மனிதனை அவனது சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடிங்கியெடுத்து, இன்னொரு மண்ணில் வீசி எறிந்து விடுகின்றன. ஆனால் மனிதன் ஜடமல்ல. வீசியெறித் இடத்தில் வேரூன்றி அவன் நிலை கொள்ள முயல்கிற சந்தர்பங்கள் எல்லாம், அவனது சொந்த மண்ணின் நினைவு வந்து […]

Read more

தமிழர் இலக்கியமும் சமூக அரசியலும்

தமிழர் இலக்கியமும் சமூக அரசியலும், தமிழறிஞர் க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, சென்னை, விலை 80ரூ. தமிழறிஞர் க.ப. அறவாணன், பல்வேறு காலக்கட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எனினும், எல்லாக் கட்டுரைகளிலும் அடிநாதமாக ஒலிப்பது தமிழ்ப்பற்றே. சிதம்பரம் கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் ‘ஆடல் வல்லான்’ என்று அப்பரின் தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பிற்காலத்தில் ‘நடராஜன்’ என்று மாற்றப்பட்டது. இதேபோல், தூய தமிழில் அழைக்கப்பட்ட பல ஊர்களின் பெயர்களும் மாறிவிட்டன. ஹோமரின் இலியட் என்ற நூலையும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தையும் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள கட்டுரையும் சிந்தனைக்கு […]

Read more

ஆசைக்கிளியே அழகிய ராணி

ஆசைக்கிளியே அழகிய ராணி, அனுராதா ரமணன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. 480க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 365க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர் அனுராதா ரமணன். கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, கதையை வேகமாக கொண்டு செல்வதில் வல்லவர். அதனால்தான் இவருடைய 4 நாவல்கள் தமிழிலும், ஒரு கதை தெலுங்கிலும், ஒரு கதை கன்னடத்திலும் திரைப்படங்களாக வெளிவந்து வெற்றிவாகை சூடின. ஆசைக்கிளியே அழகியராணி “உனக்காக உமா”, “குயில் வேட்டை” ஆகிய மூன்று நாவல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. மூன்று கதைகளையும், மூன்று முக்கனிகளுடன் ஒப்பிடலாம். வழக்கமான முத்திரையை […]

Read more
1 5 6 7 8 9