காஷ்மீர் இந்தியாவுக்கே

காஷ்மீர் இந்தியாவுக்கே, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 304, விலை 250ரூ. இந்திய பாகிஸ்தான் பகைக்கு முக்கிய காரணமே காஷ்மீர் பிரச்னைதான். இதை வைத்துத்தான் இந்தியா மீது நேரடியான மற்றும் மறைமுகமான போர்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இந்த காஷ்மீர் பிரச்னை எப்படி உருவானது, இது தொடர்பான இந்திய தரப்பு நியாயங்கள் என்ன, இதில் பாகிஸ்தானின் சதித்திட்டங்கள், அத்துமீறல்கள், ஆக்ரமிப்புகள், போர்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், இந்திய அரசியல்வாதிகளின் தவறுகள், பிரிட்டிஷாரின் தந்திரங்கள், ஐ.நா.சபை விவாதங்கள், அதன் தீர்மானங்கள், ஆர்ட்டிகிள் 370… […]

Read more

அப்துல் கலாம் சாதிக்கலாம்

அப்துல் கலாம் சாதிக்கலாம், ச. உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக். 176, விலை 140ரூ. ‘பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என்ற தனது கூற்றுக்கு, தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம். படகோட்டியின் மகனாகப் பிறந்து பாரதத்தின் முதல் குடிமகனாக உயர்ந்த இந்த மாபெரும் தலைவர், தன் நலன் கருதாது தேச நலனையே உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்தவர். தனது மறைவால் தமிழகத்தை மட்டுமன்றி, பாரதத்தின் குக்கிராமம் வரை பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தி […]

Read more

தலைமைப் பண்புகளின் பேராசான் லால் பகதூர் சாஸ்திரி

தலைமைப் பண்புகளின் பேராசான் லால் பகதூர் சாஸ்திரி, அனில் சாஸ்திரி, தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன், விஸ்டம் வில்லேஜ், பக். 274, விலை 245ரூ. பிரதமர் கார் வாங்கிய கண்ணீர் கதை! நிர்வாகக் குறைபாடுகளுக்காகவும், ஊழல் விவகாரங்களுக்காகவும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை இங்கே காலம் காலமாக வைக்கப்படுகின்றது. அமைச்சர்கள் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கும் பழக்கமில்லை. என்பது ஒரு தற்காப்பு விதி. இதில் முக்கியமான விதிவிலக்கு, லால் பகதுார் சாஸ்திரி. கடந்த, 1956, நவ., 22-ம் தேதி, சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டது […]

Read more

வலம்

வலம், விநாயக முருகன், உயிர்மை பதிப்பகம், பக். 336, விலை 310ரூ. அழகைப் புதைத்து எழுந்த நகரத்தின் கதை சென்னை நகரின் உருவாக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட விலைதான் ‘வலம்’ நாவலின் பின்னணி. நரிகளுக்கும், சென்னை கிராமப்புறங்களுக்கும் இருந்த உறவையும், அவை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட விதத்தையும் சுவாரசியமாகப் பேசுகிறது ‘வலம்’. கதை, நரிமேட்டுச் சித்தரில் தொடங்குகிறது. நரிகளுக்கும், இயற்கைக்கும், சுற்றி வாழ்ந்த மக்களுக்குமான உறவைப் பேசி, 18ம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. நரிமேடு தகர்க்கப்படுகிறது. நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. சென்னைப் பட்டணம் எழுகிறது. இதன் பிறகு, 19ம் நூற்றாண்டில் […]

Read more

என் உளம் நெற்றி நீ

என் உளம் நெற்றி நீ, ஞனக்கூத்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 184, விலை 160ரூ. பயப்பட வைக்கும் கவிதைகளின் தொகுப்பு என் உளம் நெற்றி இன்றைக்கு, 43 வருடங்களுக்கு முன்னால், ‘அன்று வேறு கிழமை’ என்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியானது. எழுதியவர் ஞானக்கூத்தன். அந்தப் புத்தகம் ஏறக்குறைய பொன்விழா கொண்டாடவிருக்கும் காலத்தில், இப்போது ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார் கவிஞர். தலைப்பு: ‘என் உளம் நிற்றி நீ’. தலைப்பே வாசகருக்கு ஒரு செய்தியைச் சொல்லி நிற்கிறது. ‘இது ‘நெஞ்சுக்குள் நீ’ பாணி கவிதைகள் […]

Read more

நீரிழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள்

நீரிழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள், டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன், சஞ்சீவியார் பதிப்பகம், பக். 272, விலை 250ரூ. எனக்கு டயாபடிக்’ என்று சொல்வது, ‘இன்று வெயில் அதிகம்’ என்பது போல இயல்பான ஒன்றாகி விட்டது. சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்; செய்யக் கூடாது என்பது போன்ற பொதுவான கேள்விகளுக்கு நண்பர்கள் உள்ளிட்டோர், நாம் எதிர்பார்த்ததற்கும் மேலாக, தகவல்கள் தருவர். ஆனால் அப்படியும் சர்க்கரை நோயாளிகளின் சந்தேகம் தீர்ந்திருக்காது. இந்த நூல், அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. அவர்களுக்கு, சுய கட்டுப்பாடும் மனோ […]

Read more

தி கிப்ட்

தி கிப்ட், தமிழில் கு. அழகிரிசாமி, ஆங்கிலத்தில் பட்டு எம். பூபதி, சாகித்ய அகாடமி, பக். 176, விலை 130ரூ. கு.அழகிரிசாமி தமிழில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர். ‘அன்பளிப்பு’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமியின் விருதினைப் பெற்றவர். அந்த தொகுப்பினை பட்டு எம்.பூபதி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘ராஜா ஹேஸ் கம்’ கதையில், தன் குழந்தைகளை அரவணைத்துப் போற்றும் ஏழையான தாயம்மாள், தன் குழந்தைகள் வயதை ஒத்த அநாதைச் சிறுவனிடம் அன்பைப் பொழிகிறாள். ‘எங்கள் வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்’ என்று பணக்கார நண்பன் இராமசாமி பீற்றிக்கொள்ளும்போது, […]

Read more

கலைமாமணி வி.சி. குகநாதன்

கலைமாமணி வி.சி. குகநாதன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 224, விலை 200ரூ. திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் வி.சி. குகநாதனின், திரையுலக வாழ்க்கை வரலாற்றை, சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர். இந்தியா – இலங்கை இடையே உள்ள பல தீவுகளில், ஒன்றான, புங்குடு தீவில் பிறந்து, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக வளர்ந்து, அவரின் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் அளவுக்கு உயர்ந்தவர் குகநாதன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆவலில் வந்தவரை, மடைமாற்றிவிட்டவர், அண்ணாதுரை. எம்.ஜி.ஆருக்காக, எடுத்த திரைப்படம், தெலுங்கு திரையுலகில் செய்த சாதனைகள் […]

Read more

காளவாய்

காளவாய், கு.வெ. பாலசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 190, விலை 145ரூ. காலம் காலமாக அச்சத்தின் வழிநடக்கும் அடிமை மனநிலையில் அமைந்த பெண்கள் மற்றும் சமூகத்தின் மவுனத்தை, உறுதியான எதிர்ப்பு மனநிலையோடு, ஆவேசத்தோடு மாற்றம் கொள்ளும் சாத்தியங்களை உருவாக்கி காட்டுகிறது இந்த நாவல். சமூக அநீதிகளுக்கு எதிரான பலதரப்பட்ட கதாபாத்திரங்களின் ஒருங்கிணைந்த குரலாக ஓங்கி ஒலிக்கிறது நாவல். நீதியையும், நேர்மையையும் அறவழியில் நிலைநாட்டும் முயற்சியில் ஒவ்வொரு கதாபாத்திரமும் போராடுவதும், இறுதியாக உண்மையும் தர்மமும் நிலைநாட்டப்படுவதும் சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்தவே செய்கின்றன. ஆங்காங்கே பளிச் […]

Read more

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம்

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், விலை 90ரூ. தமிழ்க் கவிதைகளிலும் கதைகளிலும் நாடகங்களிலும் தாகூரின் தாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதைத் தெளிவாக விளக்குகிறது இந்த நூல். பாரதியார், வ.வே.சு. ஐயர், உ.வே.சாமிநாதையர், த.நா.குமாரசுவாமி, விபுலானந்த அடிகள், கி.வா.ஜ., போன்ற இலக்கிய அறிஞர்களின் வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் தாகூரின் தாக்கத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தந்துள்ளார் நூலாசிரியர். தாகூரின் கவிதைகள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வரலாற்றையும்  அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தமிழ்மொழிபெயர்ப்பையும் தந்துள்ளதால், தமிழ் வாசகர்கள் பயன் பெறுவார்கள் என்பது உறுதி. […]

Read more
1 4 5 6 7