கொங்கு நாட்டுப்புற இசைக்கருவிகள்

கொங்கு நாட்டுப்புற இசைக்கருவிகள், முனைவர் பெ. சுப்பிரமணியன், ராம்குமார் பதிப்பகம், விலை 300ரூ. முனைவர் பெ. சுப்பிரமணியன், அருள்மிகு பழனியாண்டவர் கலை, பண்பாட்டுக் கல்லூரித் தமிழ்த் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாட்டுப்புறவியலில் நாட்டமும் மானிடவியலில் நேசமும் கொண்டவர். இந்நூல் கொங்கு நாட்டுப்புறங்களில் புழக்கத்தில் உள்ள இசைக் கருவிகளைப் பற்றியது. பானைத்தாளத்துடன் தொம்மாங்கும், உடுக்கை ஒலியுடன் கதைப்பாட்டுகளும், கொம்பும் மொடா மேளமும் முழங்கும் விழாக்களும் கொங்கு நாட்டில் பிரபலம். பம்மை, உறுமி, திடும், நகார், தப்பு, பேரிகை, நாகசுரம், சங்கு, சத்தக்குழல், […]

Read more

அமரனின் கவிதாவெளி

அமரனின் கவிதாவெளி, ஓவியா பதிப்பகம், விலை 250ரூ. இது கவிஞர் அமரனின் 400 ஹைக்கூ கவிதைகளின் அழகான தொகுப்பு. பக்கங்கள்தோறும் கவிதைகள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அத்துடன் ஆங்காங்கே வண்ணவண்ணப் படங்கள் விதவிதமாக, இயல்கருதி, இருப்பினும் இயல்பில் பின்றி, நம் சட்டைகளைப்போல, புத்தக அட்டைகளைப் போல. இவரது கவிதைகள் எளிய உயிர்களின் மீது அன்பையும் இயற்கை நட்பையும் சமூகச் சாடல்களையும் ஆழ்மன்த் தேடல்களையும் கொண்டிருக்கின்றன. அலைகள் ஆர்ப்பரிப்பு கையில் தேநீர் கோப்பையுடன் அமைதியான நான்! இதுதான் அமரன் – அமரத்துவம் பகலில் அலைகளின் முன்பும் இரவில் […]

Read more

தொல்தமிழியச் சிந்து நாகரிகம்

தொல்தமிழியச் சிந்து நாகரிகம், பி. இராமநாதன், தமிழ்மண், விலை 125ரூ, 90ரூ. தொல்தமிழியச் சிந்து நாகரிகமும் பன்னாட்டு அறிஞர்கள் பார்வையில் தமிழும் தமிழரும் இவ்விரு நூல்களும் ‘தமிழ்மண்’ணில் விளைந்தவை. இவ்விரண்டும் முறையே 2012 இலும், 2014இலும் வெளிவந்தவை. பி. இராமநாதன் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் வழிநிலை ஆய்வறிஞர். வரலாற்றுத் துறையிலும் ஆழங்கால்பட்டவர். தமிழிய ஆய்வுப் புலங்கள் பலவற்றிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருபவர். எக்கருத்தையும் உரிய ஆதாரங்களுடன் நடுவுநிலையில் அறிவுலகத்தின் முன்வைப்பவர். மாந்த இனத்தின் தொல் வரலாறு – சிந்து […]

Read more

கவிதை வானம்

கவிதை வானம், முனைவர் தி. நெல்லையப்பன், மணிபாரதி பதிப்பகம், விலை 180ரூ, 150ரூ. நெல்லையப்பனின் கவிதை வானமும் அம்மாதான் ஆசிரியரும் முனைவர் நெல்லையப்பன் நெல்லைக்காரர் என்றாலும் சிதம்பரம்வாசி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலை தூரக் கல்வி இயக்கத் தமிழ்த்துணைப் பேராசிரியர். எனினும் எழுத்திலும் பேச்சிலும் இனிய அண்மையர். எட்டு நூல்களின் ஆசிரியர். கண்ணில் தெரியும் வானம் கைகளில் வருமா? வரும். கவிஞர்களுக்கு வரும். கவிதைகள் போலவே விதைகள் மண்ணில் விழுந்தாலும் விண்ணை நோக்கியே வாழும் – வளரும் என்பதை இவரது கவிதைகள் நிரூபிப்பன. “நாற்றுகள் தான் […]

Read more

மௌனத்தின் பிளிறல்

மௌனத்தின் பிளிறல், புதிய மாதவி, எழுத்து. புதிய மாதவி திருநெல்வேலிக்காரர் என்றாலும் தற்போது மும்பைவாசி. பன்னாட்டு வங்கிப் பணிக்குப் பின் விருப்ப ஓய்வில் விருப்பம் போல் கவிதை, சிறுகதை, பெண்ணிய நுண்ணரசியல், இலக்கிய விமர்சனம், மொழியாக்கம் என எழுதி வருகிறார். சாகித்ய அகாடெமி, மும்பைத் தமிழ்ச்சங்கம், பத்திரிகை, இலக்கிய மேடை, கருத்தரங்கு, எழுத்தாளர் சந்திப்பு, பல்கலைக்கழகம், மண்டலம் என்று பல தளங்களில் தன் இலக்கியப் பங்களிப்புகளைச் செய்து வருகிறார். பாரீஸ், இலங்கை என்று பெண்களின் சந்திப்பிலும் கலந்து வருகிறார். ‘மௌனத்தின் பிளிறல்’ இவரது புதிய […]

Read more

வசப்படாத வார்த்தைகளுடன்

வசப்படாத வார்த்தைகளுடன், கா. அமீர்ஜான், முரண்களரி படைப்பகம், விலை 100ரூ. உள்வெளிக் கவிதைகள் உள்ளிருந்து புறமும், புறமிருந்து உள்ளுமாய் வாழ்க்கையை விசாரணை செய்யும் கவிதைகளை ஐம்பதாண்டுகளாக எழுதிவரும் கவிஞர் கா. அமீர்ஜானின் முதல் கவிதை நூல் இவ்வளவு காலங்கடந்து இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. ‘அன்பென்று எதனையும் சொல்…’ என்ற முதல் கவிதை முடிவடையும் இடத்திலிருந்தும், ‘என் பிள்ளைகளின் நிமித்தம் எழுதப்படாத நாட்குறிப்பாய் நானும்..’ என்று கடைசிக் கவிதை முடிவடையும் இடத்திலிருந்தும் மட்டுமில்லாமல், தொகுப்பு முழுவதுமான கவிதைகளில் உள்ளும் வெளியுமாய் தன்னையே நிறுத்திப் பார்த்து எழுதியுள்ளார் கா. […]

Read more

மீண்டும் ஆசிரியரைத் தேடி

மீண்டும் ஆசிரியரைத் தேடி, த. தங்கவேல், சமூக இயங்கியல் ஆய்வு மையம், விலை 240ரூ. ஆசிரியர் வருகை : ஒரு விவாதம் ஆசிரியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? வந்தார்களா, சென்றார்களா? என்ற விவாதம் பல காலமாக நடக்கிறது. அந்த விவாதத்தின் கேள்விகளையும் பதில்களையும் நம்முன் வைத்து விவாதிக்கும் நூல். பல நாடுகளில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் முதலாக மனிதர்களின் மரபணு ஆய்வுகள் வரை பலதரப்பட்ட ஆராய்ச்சிகளைத் தொகுத்து விவாதிக்கிறது இந்த நூல். விருப்பு வெறுப்பில்லாத வாதம், தமிழகத்தில் அரசியலாக்கப்பட்டுள்ள ஒரு கருத்தை அறிவியல் […]

Read more

இவர்தாம் பெரியார்

இவர்தாம் பெரியார், 8.திருமணம், புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், விலை 70ரூ. பெரியார் வரலாறு தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை “இவர்தாம் பெரியார்” என்ற தலைப்பில் தொடர்ந்து புத்தகங்களாக புலவர் நன்னன் எழுதி வருகிறார். எட்டாவது புத்தகம், “திருமணம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. திருமணம் என்றால் அது பெரியாரின் திருமணம் பற்றியது அல்ல. பல்வேறு திருமணங்கள் பற்றி பெரியார் வெளியிட்ட அறிக்கைகளும், நிகழ்த்திய சொற்பொழிவுகளும் கொண்டது. மாதிரிக்கு ஒன்று- 24/2/1932-ல் “குடியரசு” பத்திரிகையில் பெரியார் வெளியிட்ட அறிக்கை: “புதுவை முரசு” ஆசிரியர் தோழர் பொன்னம்பலனார் […]

Read more

வாழ்வை வளமாக்கும் பூஜை விரதமுறைகள்

வாழ்வை வளமாக்கும் பூஜை விரதமுறைகள், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ. விரதமும், பூஜையும் இந்து மதத்தின் இரு கண்கள். மனிதன் முழுமையாக வாழ்வதற்கும், உயிர்கள் ஆனந்தமாக வாழ்வதற்கும் விரதங்கள் இன்றியமையாதவை. ஜம்புலன்களை அடக்கி இறைவனிடம் சரணாகதி நிலையை அடைய விரதங்கள் உதவுகின்றன. இந்த நூலில் துன்பங்கள் நீங்க, செல்வம் பெருக, திருமணத் தடை நீங்க, தம்பதியர் ஒற்றுமை ஓங்க, குழந்தை வரம் கிடைக்க, கல்வி சிறக்க, தொழில் தடைகள் நீங்க, பகை விலக, நவக்கிரக தோஷம் நீங்க, தீர்க்க சுமங்கலி வரம் அருள, எதிரிகளை […]

Read more

ராமச்சந்திர ரகசியம்

ராமச்சந்திர ரகசியம், குமரவேல்,முல்லை பதிப்பகம், விலை 150ரூ. எம்.ஜி.ஆரின் சித்தாந்த சிறப்பை, பண்பாற்றைல பலர் சொல்ல மறந்த நுட்பங்களை எடுத்துக்காட்டியிருக்கிறார் நூலாசிரியர் வே. குமரவேல். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.   —-   நின்று ஒளிரும் சுடர்கள், உஷா தீபன், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 130ரூ. சிவாஜி கணேசன், எஸ்.வி. ரங்காராவ், எஸ்.எஸ். ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, நாகேஷ் உள்பட 11 நடிகர்களின் சிறப்பை வர்ணிக்கும் நூல். எம்.ஜி.ஆர். பற்றியும் எழுதி இருக்கலாமே. நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more
1 6 7 8 9