பறந்து மறையும் கடல்நாகம்

பறந்து மறையும் கடல்நாகம், சீனக் கலாசார கட்டுரைகள், ஜெயந்தி சங்கர், காவ்யா பதிப்பகம், பக். 1038, விலை 1000ரூ. சீனாவின் பண்பாடு, பெண்களின் நிலை, உணவு முறைகள், அதிகார கட்டமைப்பு பற்றிய ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தும் நூல் இது. கன்பூஷியஸ் வகுத்தளித்த கோட்பாட்டின் கீழ், மூதாதையர் வழிபாடு, ஆண் வாரிசை உருவாக்குதல், பெற்றோரை மதித்து பேணிக்காத்தல் ஆகிய மூன்று முக்கிய பண்பாட்டு அலகுகளைச் சுற்றி உருவாக்கப்பட்டதே சீனக் கலாசாரம். இரண்டாம் உலகப் போருக்குப் பின், சீனாவில் நிலவிய பிரச்னைகளை களைய, விவசாய துறையில் நவீன […]

Read more

பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம், ஜெகவீர பாண்டியனார், தோழமை வெளியீடு, பக். 640, விலை 500ரூ. இந்தியாவை சுரண்டிய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, நாடு தழுவிய அளவில், 1857ல் நடந்த, முதல் இந்திய சுதந்திர போர், முதல் விடுதலை எழுச்சியாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு, 50 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே, தென் தமிழகத்தில் நடந்த பாளையக்காரர்களின் எழுச்சி மிகு போராட்டம், அதற்கு முன்னோட்டம். அவ்வகையில், தென்னிந்திய புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான ஊமைத்துரை மற்றும் அவரது சகோதரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறு, கும்மி பாடல்கள் முதல் சினிமா வரையிலும் […]

Read more

பூர்வா

பூர்வா (பன்னிரு ஆழ்வார்களின் கதை), லக்ஷ்மி தேவ்நாத், தமிழில் பத்மா நாராயணன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 295ரூ. பூர்வாவுக்கு கிடைத்த ஸ்வாமித் தாத்தா! தாத்தா பாட்டிகள் கதை சொன்ன காலத்து அனுபவங்களை அழகாக மீட்டெடுத்துத் தருகிறார் லக்ஷ்மி தேவ்நாத். ஆங்கிலத்தில் வெளியான ‘பூர்வா’ நூலை வெகு நளினமாகத் தமிழாக்கியிருக்கிறார் பத்மா நாராயணன். ‘பூர்வாவை மீண்டும் ஒருமுறை அவர் புதிதாக உருவாக்கியிருக்கிறார்’ என்று மொழிபெயர்ப்பாளரை மூல ஆசிரியரே வியப்பது அழகு. எல்லோருக்கும் நன்கு தெரிந்த பன்னிரு ஆழ்வார்களின் திவ்ய சரிதம்தான். எறும்புகள் சாரிசாரியாக ஊர்ந்து […]

Read more

கந்தர்வன் காலடித் தடங்கள்

கந்தர்வன் காலடித் தடங்கள், புலவர் வை. சங்கரலிங்கம், ஏ.ஆர். பப்ளிகேஷன்ஸ், விலை 140ரூ. மானுடம் பாடிய கவிஞர்! கவிஞர் என்று மட்டுமே பரவலாக அறியப்பட்ட கந்தர்வன் சம அளவில் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். ஒரு கதையை எழுதி முடித்ததும் அதைத் தன் மனைவி, மகள்கள், மருமகன்கள் என்று அனைவரிடம் படிக்கத் தந்து விமர்சனம் பெற்ற பிறகே பத்திரிக்கைக்கு அனுப்புவாராம். எத்தனை பேருக்கு இத்தகைய மனவளமும் நம்பிக்கையும் வாய்க்கும்? ‘மண் பொய் பேசுவதில்லை.மிதிக்கிறோம், மரங்கள் பொய் பேசுவதில்லை.வெட்டுகிறோம், மந்திரி பொய் பேசுகிறார். மாலை போடுகிறோம்’ என்று பாடுவார். […]

Read more

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி, ப. திருமலை, புதிய வாழ்வியல் பதிப்பகம், விலை 70ரூ. உலக நாடுகளின் குப்பைத் தொட்டி!? முன்னெல்லாம் மாட்டுவண்டிகளில் பயணம் செய்த ஆற்று மணலுக்கு இப்போது டிம்பேர் லாரிகளிலும் கப்பல்களிலும் போகும் ‘யோகம்’ வந்துவிட்டது. நிஜம்தான்! இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆற்று மணலின் இலக்கு 2016 ஆம் ஆண்டில் 10.26 லட்சம் டன்னாக உயர்ந்தது என்று இந்த நூலில் எழுதுகிறார் சுற்றச்சூழல் ஆர்வலரான ப. திருமலை. ‘ஆறுகளில் பத்து சென்டிமீட்டர் உயரத்துக்க மணல் படியவேண்டுமானால் தொடர்ந்து ஓராண்டுக்கு நீர் […]

Read more

மாவீரன் அலெக்சாண்டர்

மாவீரன் அலெக்சாண்டர், எஸ்.எல்.வி.மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், பக்.312, விலை ரூ.235. ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் ஒன்றுதான்… கிரேக்கப் பேரரசன் அலெக்சாண்டரின் வாழ்க்கையைப் படிப்பதும் ஒன்றுதான் என்ற வரிகளுடன் தொடங்குகிறது இந்தப் புத்தகம். பொதுவாகவே, வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படைப்புகளை கட்டுரை வடிவிலேயே பார்த்து பழகிய நமக்கு, இந்தப் புத்தகம் சற்று மாறுபட்டதாகத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஒரு கதையைப் படிப்பது போன்ற உணர்வையே தருகிறது இந்நூல். 33 யுகங்கள் எடுத்தாலும் அடைய முடியாத சாதனைகளை வெறும் 33 ஆண்டுகளில் வென்றெடுத்த அலெக்சாண்டரின் வாழ்க்கைப் […]

Read more

திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம்

திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம் (51 பகுதிகள் 51 ஆய்வுரைகள்), பதிப்பாசிரியர்கள் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், குன்றக்குடி பெரியபெருமாள், தா.மணி, பக்.256, விலை ரூ.100. 2002ஆம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூல், தற்போது இரண்டாவது(2016) பதிப்பு கண்டிருக்கிறது. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ள 51 பதிகங்களுக்கும் 51 சமயத் தமிழறிஞர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. தவத்திரு ஊரன் அடிகள், சாந்தலிங்க இராமசாமி அடிகளார், வை.இரத்தினசபாபதி, தமிழண்ணல், கலைமாமணி விக்கிரமன், ச.வே.சுப்பிரமணியன், அய்க்கண், கு.வெ. பாலசுப்பிரமணியன், பழ.முத்தப்பன், சரஸ்வதி இராமநாதன், சோ.சத்தியசீலன், கவிஞர் மரு.பரமகுரு, […]

Read more

நான் இராமானுசன்

நான் இராமானுசன், ஆமருவி தேவநாதன், விஜயபாரதம் பதிப்பகம், விலை 60ரூ. நாவல் வடிவில் ராமானுஜர் மணிப்பிரவாளத்தைத் தவிர்த்த நடையில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை நாவல் வடிவில் முயற்சி செய்திருக்கிறார் ஆசிரியர். அத்துடன் துவைதம், அத்துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற மூன்றையும் எல்லோருக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். ஸார்வாகம், ஜைனம், பவுத்தம், வேதங்கள், உபநிஷத்துகள், யாகங்கள் பற்றிய விளக்கங்களும் பொருத்தமாகவும் அளவோடும் இருக்கின்றன. வைணவத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியவனவற்றைத் திட்டமிட்டு, ‘சூடிக்கொடுத்த நாச்சியிரைப்’ போலவே வண்ணமயமாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். வேற்றுமைகளை விதைக்கும் ‘கலை’ தெரிந்தவர்களைப் பற்றிய […]

Read more

இந்தியா பாகிஸ்தான் போர்கள்

இந்தியா பாகிஸ்தான் போர்கள், துவாரகை தலைவன், கிழக்கு பதிப்பகம், பக். 317, விலை 250ரூ. பொது வாசகர்கள் விரும்பி வாசிக்கும்படி சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் வரலாற்று நூல்கள் தமிழில் மிக அரிதாகவே வெளிவருகின்றன. இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த யுத்தங்கள் குறித்த புத்தகம் வருவது வரவேற்கத்தக்கது. மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டிய இரு நாடுகள் அல்லது இரு சமூகங்கள், நம்பவே முடியாத அளவுக்குப் பகை கொள்வது இந்தியா – பாகிஸ்தானுக்கு மட்டுமே உரித்தான விஷயமல்ல. இராக்-ஈரான், இன்றைய இஸ்ரேல் பகுதி போன்ற இடங்களிலும் நெடுங்காலமாகப் […]

Read more

நாகூர் இ.எம்.ஹனீபா

நாகூர் இ.எம்.ஹனீபா, செ. திவான், சுஹைனா பதிப்பகம், விலை 350ரூ. செ. திவான் பாளையங்கோட்டைவாசி. படிப்பு, எழுத்து, மறுமலர்ச்சி எனத் தம் வாழ்நாளைக் கழித்துக் கெண்டிருப்பவர், அடுத்த தனது 100வது நூலை மலபார் மாப்பிள்ளை புரட்சி – 1921 என்ற பெயரில் அதுவும் 1000 பக்கங்களில் வெளியிட இருக்கிறார். சுஹைனா பதிப்பகம் இவரது சொந்தப் பதிப்பகம் திவானுக்கு ‘தி’வானே எல்லை. ஹனீபா இசை முரசு அல்ஹாஜ். இரவது பாடல்கள் ‘ஹனி’போல் மென்மையன்று, முரசுபோல் ஆரவாரமுடையது. திராவிடமும் தெய்வீகமும்(தீன்) இவரது இரண்டு கண்கள். பொருந்தவில்லையே என்று […]

Read more
1 5 6 7 8 9