மருதநாயகம்

மருதநாயகம், தொகுப்பு பேரா.சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 500ரூ. மருதநாயகம் என்கிற ஒற்றைப் பெயரின் பின்னே இத்தனை ஆண்டுகளாக கவிழ்ந்துள்ள இருளின் மீது வெளிச்சம் பாய்ச்சும் முயற்சியில் தொகுக்கப்பட்டுள்ள நூலிது. மருதநாயகம் பற்றிப் பேசும்போதெல்லாம் அவர் ஒரு இந்துவா இஸ்லாமியரா விடுதலைப் போராளியா துரோகியா என்கிற பல கேள்விகள் முன்நிற்கின்றன. இப்படியான கேள்விகளுக்கான விடையை அ.மாதவையா, துர்க்காதாஸ், எஸ்.கே.ஸ்வாமி, ந.சஞ்சீவி, நா.வானமாமலை, ந.இராசையாவின் கட்டுரைகள் வழியாகத் தேடிக் கண்டெடுத்துள்ளார் காவ்யா சண்முகசுந்தரம். நன்றி: தி இந்து, 14/10/2017.

Read more

முன்னொரு காலத்தில்

முன்னொரு காலத்தில், உதயசங்கர், நூல்வனம், விலை 90ரூ. கோவில்பட்டி மண்ணில்தான் எத்தனையெத்தனை படைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள். 1980-களில் தீவிர இலக்கிய தேடலோடு இயங்கிய 20-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் சங்கமிக்கும் ஊராக கோவில்பட்டி விளங்கியது. எழுதுவதோடு மட்டுமே சுருங்கிவிடாமல், இலக்கிய நிகழ்வுகள், எழுத்தாளர் சந்திப்புகள் என தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்குவதற்கான ஒரு சூழல் அங்கே நிலவியிருக்கிறது. எழுத்தாளர் உதயசங்கர் தனது பின்னோக்கிய நினைவுகளைத் தொகுத்து எழுதியிருக்கிறார். இதில், கோவில்பட்டி எனும் ஊரில் பெருமை மட்டுமல்ல, எழுத்தாளர்களின் நட்பு மற்றும் சமூகம் குறித்த அக்கறையுள்ள மனிதர்களின் துடிப்பும் அடங்கியிருக்கிறது. […]

Read more

தனிநாயக அடிகளாரின் தமிழியல் பங்களிப்பு

தனிநாயக அடிகளாரின் தமிழியல் பங்களிப்பு, இரா. காமராசு, சாகித்திய அகாதமி, விலை 200ரு. இலங்கியின் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்த சேவியர் நிக்கோலஸ் எனும் இயற்யெருடைய தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் நூலாக்கம் பெற்றுள்ளன. ப. மருதநாயகம், மு.இராமசாமி, வீ.அரசு, அ.க.இளங்கோவன், அமுதன் அடிகள், இரா. காமராசு உள்ளிட்டோர் எழுதிய 19 கட்டுரைகள் தனிநாயகம் அடிகளாரின் பன்முகப்பட்ட படைப்பாளுமையை பறை சாற்றுகின்றன. பேரா.கி. நாச்சிமுத்துவின் பதிவுகளும், பின்னிணைப்பிலுள்ள தனிநாயகம் அடிகளாரைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகளும் அவரது படைப்புகள் குறித்த பட்டியலும் மிகுந்த […]

Read more

பசித்த சிந்தனை

பசித்த சிந்தனை, புவியரசு, அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், விலை 120ரூ. பூடக வேடம் பூணாத எதார்த்தம் – எளிமை விலகாத வெளிப்பாடு’ என கவிதை புனையும் கவிஞர் புவியரசு எழுதிய 68 கவிதைகளின் தொகுப்பு. சமூக விமர்சனப் பார்வையை எள்ளலோடு வெளிப்படுத்தும் கோபமான கவிதை மொழியால் கட்டமைக்கப்பட்டுள்ள கவிதைகளிவை. யாப்பு மரபைத் திறம்படக் கையாள்பவர் என்பதைச் சொல்லும் கவிதையொன்றும் உள்ளது. ‘எழுதுவதற்கு நீங்கள் ஒன்றும் கொடுப்பதில்லை’ என்று ஒரு கவிதையை தொடங்கியிருக்கும் கவிஞருக்கு, சமூக நிகழ்வுகள் ஏராளமான கவிதைகளைக் கொடுத்திருக்கின்றன. இவற்றைத் திங்கள் புரொமீதிசுகள், […]

Read more

பன்னிரு திருமுறை

பன்னிரு திருமுறை, பதிப்பாசிரியர் இராம லெட்சுமணன், சகுந்தலை நிலையம், விலை 1200ரூ. திருஞான சம்பந்தர் – திருநாவுக்கரசர் – சுந்தரர் ஆகியோரின் தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார், திருவிசையப்பா, திருமூலர் திருமந்திரம் தொடங்கி பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் வரலாறு, அறுபத்து மூவர் வரலாறு என்று மொத்தம் 18,375 பாடல்கள் அனைத்தும் ஒரே புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் சைவர்களுக்கும் நல்விருந்து என்றே சொல்ல வேண்டும். உரையையும் சேர்த்து வெளியிட்டிருந்தால் இன்னம் பெருவிருந்தாக அமைந்திருக்கும். தமிழுக்கு வைசம் செய்துள்ள அருந்தொண்டின் தொகுப்பே இந்நூல். […]

Read more

100 ஆண்டுகளாக பொதுச்சார்பியல்

100 ஆண்டுகளாக பொதுச்சார்பியல்,பேராசிரியர் க.மணி, அபயம் பதிப்பகம், பக்.116, விலை 100ரூ. ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சார்பியல் கோட்பாட்டைக் கண்டுபிடித்ததற்குப் பின்பு அறிவியல் உலகில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களை மிக எளியமுறையில் இந்நூல் விவரிக்கிறது. ஆகாயத்துக்கும் வடிவக் கட்டமைப்பு உண்டு; ஒருவர் எங்கேயிருக்கிறார் என்பதைப் பொறுத்து காலம் மெதுவாகவும், வேகமாகவும் நகரும்; ஒளி துகள்களால் ஆனது; ஆற்றலும் பொருளும் வேறு வேறானவை அல்ல. இரண்டும் ஒன்றே. பொருள் ஆற்றலாக மாறும். ஆற்றல் பொருளாக மாறும்; இவைதான் ஐன்ஸ்டினின் கண்டுபிடிப்புகள். நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக் கண்டுபிடிப்பை […]

Read more

நான் பால் அருந்துவதைத் துறந்த நாள்

நான் பால் அருந்துவதைத் துறந்த நாள், சுதா மூர்த்தி, தமிழில் உமா மோகன், சப்னா புக் ஹவுஸ், பக். 204, விலை 130ரூ. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களைப் பற்றிய தொகுப்பு இந்தப் புத்தகம். நூலாசிரியர் சுதாமூர்த்தி இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர். நூலாசிரியரின் உதவியால் இன்போசிஸ் அறக்கட்டளையின் நிதியுதவி பெற்று பொறியியல் படித்த தபால்காரரின் மகன், பின்னாளில் உயர்ந்த நிலைக்கு வருகிறார். தனது தோழியின் மகளைப் பெண் பார்க்க வந்த அந்த இளைஞனின் குடும்பம். எதேச்சையாக சுதா மூர்த்தியை அந்த வீட்டில் […]

Read more

பயன் தரும் பட்டிமன்றம்

பயன் தரும் பட்டிமன்றம், புலவர் கு.அனாதரட்சகன், மீனாட்சி பிரசுரம், பக். 304, விலை 300ரூ. பட்டிமன்ற நிகழ்ச்சி என்பது மற்ற நிகழ்ச்சிகளை விட அறிவார்ந்த நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல நூல்களைப் படித்து அறியக்கூடிய பல்வேறு கருத்துக்களை, தகவல்களை பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் அறிய முடிகிறது. தவிர, ஒரு விஷயத்தைப் பற்றிய நேர்மறை, எதிர்மறைக் கருத்துக்களையும், அவை குறித்த ஆதாரப்பூர்வமான புள்ளி விபரங்களையும் மனதில் ஆழமாகப் பதிய உக்கிரமாகவும், சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவையாகவும் எடுத்துரைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள், பெரியவர் முதல் சிறியவர் வரை […]

Read more

உயிர்ச்சொல்

உயிர்ச்சொல், த.சித்தார்த்தன், மேன்மை வெளியீடு, விலை 100ரூ. மனித இனம் பெருகிக்கொண்டு இருக்கிறது. அதேசமயம் மண்வளம் அழிந்து கொண்டிருக்கிறது. இருப்பவர்க்கே இயற்கையால் ஈடுதரமுடியாத சூழலில் இனி வருபவர்க்கு என்ன வளம் மீதம் இருக்கும்? இனியாவது இயற்கையைச் சீழிப்பதை நிறுத்தி அதைக் காப்போம் என சமுதாய அக்கறையுடன் வலியுறுத்தும் நூல். நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

100 ஆண்டுகளாக பொதுச்சார்பில்

100 ஆண்டுகளாக பொதுச்சார்பில்,பேராசிரியர் க.மணி, அபயம் பதிப்பகம், விலை 100ரூ. ஐன்ஸ்டைன் பொதுச்சார்பியல் கோட்பாட்டினை வெளியிட்டு நூறு ஆண்டுகள் முடித்துவிட்ட நிலையில், நோபல் பரிசுபெறும் அளவுக்கு அவர் சாதித்தது என்ன? அவரது கண்டுபிடிப்புகளால் மக்களுக்கு என்ன லாபம்? அவரது மூளையில் இருந்த சிறப்பு அம்சம் என்ன? ஐன்ஸ்டைன் பற்றி வித்தியாசமான கோணத்தில் விளக்கமாகச் சொல்லும் நூல். நன்றி: குமுதம், 11/10/2017.

Read more
1 2 3 4 5 6 12