விளக்குகள் பல தந்த ஒளி

விளக்குகள் பல தந்த ஒளி, லில்லியன் எயிஷ்லர் வாட்சன், தமிழில்: பி. உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், பக்.398, விலை ரூ.230. தமிழில் ஆயிரக்கணக்கான சுயமுன்னேற்ற நூல்கள் வந்துள்ளன. இருப்பினும், அவை அனைத்திலிருந்தும் வித்தியாசமான நூலாக இது விளங்குகிறது. உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய லைட் ஃப்ரம் மெனி லேம்ப்ஸ் என்ற புகழ்பெற்ற நூலின் தமிழாக்கம்தான் இது. பக்கத்துக்கு பக்கம் அறிவுரைகளை அள்ளித் தெளித்து வாசகர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தாமல்,புகழ்பெற்ற சாதனையாளர்களின் மேற்கோள்களையும், அவை உதயமானதன் பின்னணி சம்பவங்களையும் தொகுத்து அளித்திருப்பது இதன் தனிச் சிறப்பு. வாழ்க்கைப் […]

Read more

எல்லாமே இலவசம் இந்தியாவில் இலவச காய்கறி புரட்சி

எல்லாமே இலவசம், இந்தியாவில் இலவச காய்கறி புரட்சி, பாரதி சின்னசாமி,எழில்மதி பதிப்பகம், பக்.188, விலைரூ.120. சந்தைப் பொருளாதாரம் தற்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உலகச் சந்தையை தேசியச் சந்தைகளாக பிளவுபடுத்துகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் உலக அளவில் தனக்கிருந்த சந்தையை இழந்து சரிந்து விழத் தொடங்கியுள்ளன. சந்தையின் கட்டுடைவு சந்தையில்லாப் பொருளாதாரத்தை அதாவது இலவசப் பொருளாதாரத்தைத் தோற்றுவிப்பது தவிர்க்க முடியாதது ஆகும் என்ற அடிப்படையில் சந்தைப் பொருளாதாரத்துக்கு மாற்றாக நூலாசிரியர் இலவசப் பொருளாதாரத்தை முன்மொழிகிறார். ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து கீரை, காய்கறிகள் விளைவித்து அந்த ஊரின் […]

Read more

மகாத்மா 200

மகாத்மா 200, முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், விலை 145ரூ. அதிகாரம் ஈரோட்டில் இருக்கிறது! தேசப்பிதா மகாத்மா காந்தி, மோகன் தாஸ் ஆகப் பிறந்து 150ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. பாபுஜியைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சிறிதளவேனும் அவரைப் பின்பற்ற முயல்கிறவர்களின் எண்ணிக்கை தான் நாளும் அருகிக்கொண்டே வருகிறது. முனைவர் இளசை சுந்தரம், பாபுஜியின் வாழ்க்கையிலிருந்து 200 அரிய நிகழ்வுகளைத் தொகுத்துப் பலாப்பழத்தைச் சுளை சுளையாகப் பிரித்துத் தந்திருக்கிறார். ஒரு சமயம் பாபுஜியின் பவுண்டன் பேனா காணாமல் போய்விட்டது. […]

Read more

அச்சப்படத் தேவையில்லை

அச்சப்படத் தேவையில்லை, சீனிவாசன் நடராஜன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ. அப்பாவை புதுப்பிப்பது? இலங்கையில் பிறந்த ஆனந்தகுமாரசாமி, அந்தையை இழந்த நிலையில் இரண்டு வயதுக் குழந்தையாக அவருடைய தாயாரால் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கல்வி பெற்றார். ஆனாலும், இந்தியக் கலை, பண்பாடுகளின் தாக்கம் அவரிடம் நிரம்பவே குடிகொண்டது. தம்முடைய குழந்தைகளுக்கு ராமா, நாரதா, ரோகிணி என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார் டாக்டர் ஆனந்தகுமாரசாமி. தம்முடைய வாழ்நாள் முழுவதும், உலகெங்கும் பயணம் செய்து அவர் சேர்த்து வைத்த அரிய கலைப் பொக்கிஷங்கள் அனைத்தும் தற்போது பாஸ்டன் […]

Read more

இதழியல் இலக்கியம் ஆகுமா

இதழியல் இலக்கியம் ஆகுமா?, இளசை எஸ்.எஸ்.கணேசன், யுனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், விலை 75ரூ. வாழ்க்கையில் ஒன்றிணைந்த பத்திரிகைகள் தோன்றிய வரலாறு மட்டுமல்லாமல் வளர்ந்த விதம், சந்தித்த பிரச்சினைகள், தற்போதைய நிலையை புள்ளி விவரத்தோடு ஆசிரியர் தந்துள்ளார். சுதந்திர போராட்டத்தில் பத்திரிகைகள் ஆற்றிய பணிகளையும், சுதந்திரத்திற்கு பிறகு உருவான பிராந்திய மொழி பத்திரிகைகள் பற்றியும் விவரித்த விதம் சிறப்பு. உலகமய அரசியலில் ஊடகங்கள் என்ற தலைப்பில் உலக, இந்திய அரசியலில் ஊடகங்கள் செய்த மாற்றங்களும் நாட்டின் முதல் பத்திரிகையாளர் ராஜாராம் மோகன்ராய் உள்ளிட்ட புகழ்பெற்ற பத்திரிகையாளர்களின் […]

Read more

நவீன சூரிய மின்சக்தி

நவீன சூரிய மின்சக்தி, குன்றில் குமார், அழகு பதிப்பகம், விலை 100ரூ. தண்ணீர், நிலக்கரி, அணுசக்தி ஆகியவற்றால் மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் மாற்று முறையாக சூரிய மின் சக்தி கண்டுபிடிக்கப்பட்டது பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. சூரிய மின்சக்தி என்றால் என்ன, அவை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, வீடு மற்றும் விவசாயத்துக்கு அவற்றை பயன்படுத்திக் கொள்வது எப்படி என்ற பயனுள்ள அனைத்து தகவல்களையும் ஆசிரியர் தந்து இருக்கிறார். சூரியமின் சக்தி பற்றி தெரிந்து கொள்வதற்கு நல்ல கையேடாக இந்தப் புத்தகம் விளங்குகிறது. நன்றி: […]

Read more

இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை

இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை, ரவி பிரகாஷ், உங்கள் ரசிகன் பதிப்பகம், விலை 420ரூ. 50 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். படிப்பதற்கு சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளன. ஒவ்வொரு கதைக்கும் பிரபல பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பல பிரமுகர்கள் வழங்கி இருக்கும் மதிப்புரைகள், சிறந்த முன்னோட்டமாக அமைந்து ஆர்வத்தை தூண்டுகின்றன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027228.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

பேதமறுத்த பிராமணன்

பேதமறுத்த பிராமணன், ஆச்சாரியர் பிரம்மதர்மதாசன்(எழிலரசு), வேங்கடாசலம் பிள்ளை நினைவு வெளியீடு,  பக்.360, விலை ரூ.200. இந்திய வரலாற்றில் மேற்கு வங்க மாநிலம் பல மகத்தான மனிதர்களை உருவாக்கியிருக்கிறது. சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர், பக்கிம் சந்திரர் என்ற அந்த வரிசையில் மற்றுமொரு மகத்தான மனிதர் ராஜா ராம்மோகன் ராய். அவரது வாழ்க்கை வரலாற்றை முப்பத்தைந்து அத்தியாயங்களில் முழுமையாகப் பதிவு செய்கிறது இந்நூல். ராஜா ராம்மோகன் ராய் ஸதி எனப்படும் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க பாடுபட்டவர் என்பது உலகமறிந்ததுதான். ஆனால் அவரது சாதனை […]

Read more

மெய்ப்பொய்கை பாலியல் பெண்களின் துயரம்

மெய்ப்பொய்கை பாலியல் பெண்களின் துயரம், தொகுப்பு ருச்சிரா குப்தா, தமிழில் சத்தியப்பிரியன், கிழக்கு பதிப்பகம், விலை 325ரூ. சதை தின்னும் கழுகுகள் மனித வாழ்வில் துயரங்களும் ஒரு அங்கமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சிலருக்கோ துயரங்களே வாழ்க்கையாகிப்போகிறது. பெண்களுக்குத் துயரங்கள் பெண்ணாக இருப்பதாலேயே வந்தடைகின்றன. பெண்ணின் உடல் ஆணின் வக்கிரத்தால் எந்தளவுக்குச் சீரழிக்கப்படும் என்பதை சராசரியான வாழ்விலுள்ளவர்களால் கற்பனை செய்யவே முடியாது. இந்த நேரத்தில் சின்னச் சின்ன சந்துகளிலும் மறைவிடங்களிலும் பூட்டிய அறைகளுக்குள்ளும் பாலியல் தொழிலிடங்களிலும், உறவினர்களாலும் நண்பர்களாலும் காமுகர்களாலும் எத்தனையெத்தனை உடல்கள் வன்முறைக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றனவோ. பெண்களின் […]

Read more

திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை

திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை, இரா.இளங்குமரனார் (ஆறு தொகுதிகள்), பாவேந்தர் பதிப்பகம், தொகுதி-1, பக்.624, ரூ.500; தொகுதி-2, பக்.352, ரூ.300; தொகுதி-3, பக்.608, ரூ.500; தொகுதி-4, பக்.464, ரூ.350; தொகுதி-5, பக்.480, ரூ.400; தொகுதி-6, பக்.416, ரூ.350; ஆறு தொகுதிகள் மொத்தம் ரூ.2400; திருக்குறளுக்குப் பல்வேறு விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன – எழுதப்பட்டும் வருகின்றன. அவற்றுள்  இரா. இளங்குமரனாரின் திருக்குறளுக்கான வாழ்வியல் விளக்கவுரை தனிச்சிறப்புப் பெற்றது.திருக்குறள் நம் மறை என ஆணித்தரமாகக்கூறும் இளங்குமரனாரின் ஆழங்காற்பட்ட புலமையை இத்தொகுதிகள் வெளிப்படுத்துகின்றன. முப்பொருள் கூறிய திருவள்ளுவர்  பற்றிக் கூறாமைக்கான விளக்கம்; […]

Read more
1 2 3 4 5 6 9