சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்

சேரன்மாதேவி, குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், பழ.அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், விலை 275ரூ. தமிழ்நாட்டு அரசியலை அப்படியே புரட்டிப் போடக் காரணமான ஊர் சேரன்மாதேவி. அந்த ஊரில் இருந்து செயல்பட்டு வந்த குருகுலத்தில் குறிப்பிட்ட நிகழ்வு மட்டும் நடக்காமல் போயிருக்குமானால், தமிழகத்தின் கடந்த முக்கால் நூற்றாண்டு வரலாற்றை கணிப்பதே சிரமமாக இருக்கும். காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரியார் வெளியேறாமல்கூட இருந்திருக்கலாம். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளே உருவாகி இருக்காது. அப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பற்றிய […]

Read more

என் பயணம்

என் பயணம், அசோக மித்திரன், நற்றிணை பதிப்பகம், சென்னை, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-343-1.html அசோகமித்திரனுக்கு அறிமுகம் தேவை இல்லை. செறிவான உள்ளடக்கத்தை எளிமையாகக் காட்சிப்படுத்துவதன் மூலமாகத் தனது படைப்பைக் காலங்கள் கடந்தும் உயிரோட்டமாக வைத்திருக்கும் ஒரு சில எழுத்தாளர்களில் அசோகமித்திரனும் ஒருவர். அதைப்பற்றி அவர் அலட்டிக்கொள்வதில்லை என்பது மற்ற எழுத்தாளர்களில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டும். மனிதர்கள் நடுவில் இருக்கிறேன். நான் எழுதும் எழுத்தை நான் புரிந்துகொள்ளும் வகையில் புரிந்துகொண்டு வாசிக்க ஒரு வாசகனாவது இருப்பான் […]

Read more

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான், தொகுப்பு ஷோபாசக்தி, கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 140ரூ. ஈழம் பேசிப் பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப்படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமிழ் தேசியம் சார்ந்த ஆதரவு தளத்தில் இயங்கியவர்கள். புலிகள் இயக்கத்துடன் கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள். பழ. ரிச்சர்ட், இடது சாரியாக அறியப்பட்டவர். […]

Read more

என் ஆசிரியப் பிரான்

என் ஆசிரியப் பிரான், கி.வா. ஜகந்நாதன், ஜெ. வீரநாதன், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோயம்புத்தூர், பக். 192, விலை 145ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-195-4.html தமிழ்த்தாத்தா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் இல்லையேல், சங்க இலக்கியங்கள் பல நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும். அந்தளவுக்கு அவர் கிராமம் கிராமமாகச் சென்று, அலைந்து திரிந்து, அந்த ஓலைச் சுவடிகளைச் சேகரித்து, அச்சடித்து வெளியிட்டார். அது தவிர, தனது ஆழ்ந்த தமிழ்ப் புலமையால் அப்பாடல்களுக்கு பொருளுரையும் இயற்றி […]

Read more

திரை

திரை, கன்னடமூலம் எஸ்.எல். பைரப்பா, தமிழில் ஜெயா வெங்கட்ராமன், விஜயபாரதம் வெளியீடு, சென்னை, விலை 300ரூ. பைரப்பாவின் ஆவரணா (2007) என்ற நாவல் தமிழில் திரை என்ற தலைப்பில் விஜயபாரம் பதிப்பகத்திலிருந்து வெளிவந்திருக்கிறது. கத்தி மேல் நடப்பது போல்தான் ஆசிரியர் நாவலை எழுதி இருக்கிறார். கலப்புத் திருமணங்களில் மதத்தை விடக் கலாசார மற்றும் உணவுப் பழக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கன்னட நாவலுக்கு நிறைய எதிர்ப்பு இருந்தபோதிலும் வாசகர் ஆதரவு அமோகமாக இருந்திருக்கிறது. ஆறு ஆண்டுகளில் முப்பது பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் மொழி பெயர்ப்புப் பிரதியில் […]

Read more

திருப்புகழும் திருத்தலங்களும்

திருப்புகழும் திருத்தலங்களும், உரையாசிரியர் சண்முக.செல்வகணபதி, தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர், பக். 152, விலை 60ரூ. நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் தொடங்கி, முருகனைப் போற்றிப் பாடும் நூல்கள் பல இருப்பினும், தமிழ் வளம், சொல் வன்மை, தொடை நயம், சந்தப் பொலிவு, கற்பனைத் திறன், பக்திப் பெருக்கு போன்ற கவிதைப் பண்புகளால் தமிழ் பக்தி இலக்கிய வரிசையில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ். முருகப் பெருமானின் திருவண்ணாமலையில் அருணகிரிநாதரை தடுத்தாட்கெண்டபோது முத்தைத் திரு பத்தித் திருநகை என்று […]

Read more

பள்ளிப்பருவம்

பள்ளிப்பருவம், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 80ரூ. பள்ளியில் ஒரே பாடத்திட்டத்தைக் கற்றாலும் கற்றல் அனுபவம் அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பள்ளி அனுபவங்கள் இருக்கின்றன. அதனாலேயே பள்ளிப்பருவம் குறித்த அனுபவப் பகிர்தல்கள் எப்போதுமே சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கின்றன. ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி, அ.ராமசாமி, இமையம், பேராசிரியர் கல்யாணி, க. பஞ்சாங்கம் ஆகிய ஆறு ஆளுமைகள் தங்களது பள்ளிப்பருவம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்தநூல். இவர்களின் அனுபவம் அந்தக் காலத்தில் நிலவிய சமூக, […]

Read more

புதுவை வரலாற்றுச் சுவடுகள்

புதுவை வரலாற்றுச் சுவடுகள், நந்திவர்மன், சேகர் பதிப்பகம், சென்னை, பக். 244, விலை 170ரூ. புதுவையின் தொடர்ச்சியான வரலாறாக இல்லாமல், புதுவையில் தங்கியிருந்த அறிஞர்கள், புதுவையில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள், புதுவைக்கு வந்த கப்பல்கள் என்று புதுவையோடு தொடர்புடையவை பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அலக லல்ல லாடக நி என்று தியாகராஜ கீர்த்தனையைப் பாவேந்தர் பாரதிதாசன் தமிழாக்கம் செய்தள்ளார். பிரெஞ்சுக் கவிஞர் ப்ளோரியான் எழுதிய கவிதையை செம்மறியாடும் நாயும் என்ற தலைப்பில் பெரும்புலவர் மு.த. வேலாயுதனார் மொழியாக்கம் செய்துள்ளார் என்பன போன்ற […]

Read more

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம், ஜஸ்டின் ஓ பிரையன், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 632, விலை 300ரூ. இமயமலை மீது நூலாசிரியர் ஜஸ்டின் ஓ பிரையன் பல முறை ஏறியிருக்கிறார். துறவிகள் அமர்ந்து தவம் செய்யும் புனிதமான இடங்களுக்கு நடந்தே சென்றிருக்கிறார். கும்பமேளாவில் தற்காலத் துறவிகளின் காலடியில் அமர்ந்து பாடம் கேட்டிருக்கிறார். அவருடைய ஆசான் சுவாமி ராமா பலமுறை அவரைப் புனிதப் பயணங்களுக்கு அனுப்பி ஆற்றலை அதிகரிக்க வைத்திருக்கிறார். அந்த ஆசான் மறைந்துவிட்டாலும் ஒளி வடிவில் இருந்துகொண்டு தகதியானவர்களின் […]

Read more

முதுமையை வெல்வோம்

முதுமையை வெல்வோம், டாக்டர் வ.செ. நடராசன், வெற்றி நலவாழ்வு மையம், பக். 96, விலை 100ரூ. முதுமைப் பருவம் நம் வாழ்க்கைப் பயணத்தில் இயல்பானதுதான். ஆனால் நம் மனம், முதுமைப் பருவத்தை மட்டும் வேண்டா வெறுப்பாகத்தான் ஏற்றுக்கொள்கிறது. முதுவையில் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளும், இந்த பருவத்தில் மரணம் குறித்து உண்டாகும் பயமும்தான் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கக்கூடும். முதுமையில் ஏற்படும் உடல், மனரீதியான பிரச்னைகளுக்கான தீர்வுகளையும், மரண பயத்தை வெல்வதற்கான சூட்சுமங்களையும் உள்ளடக்கிய நூல்தான் இது. முதுமையில், சர்க்கரை நோய், உயர் […]

Read more
1 120 121 122 123 124 336