அடையாளங்கள்

அடையாளங்கள், சேது, தமிழில் குறிஞ்சிவேலன், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 496, விலை 290ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-317-6.html இரண்டு கனவுகளுக்கு நடுவே விரிகிறது நாவல். நீது கனவு காண்கிறாள். அதில் அவளுடைய அம்மா பிரியம்வதா நீண்ட மணற்பரப்பில் ஒரு குன்றின் அருகே தனியாக அமர்ந்து தியானத்தில் இருக்கிறாள். தன்னைத் தேடி கண்டடையும் மகளிடம், தன் தியானத்தை கலைக்க வேண்டாம் போய்விடு என்கிறாள். நாவலின் இறுதியில் ஒரு பனிப்பரப்பில் அவள் தியானம் தொடர்கிறது. பிரியம்வதா ஒரு தனியார் சிமென்ட் […]

Read more

என் ஆசிரியப்பிரான்

என் ஆசிரியப்பிரான், கி.வா. ஜகந்நாதன், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோவை, பக். 192, விலை 145ரூ. தமிழின் மிகச் சிறந்த தன் வரலாற்று நூலான உ.வே. சாமிநாதையரின் என் சரித்திரம் நூலின் தொடர்ச்சி என்று சொல்லத்தக்க வகையில், அந்நூலில் இடம் பெறாத அவர் வாழ்வில் நிகழ்ந்த பல முக்கிய சம்பவங்களைச் சுவையாகவும் சுருக்கமாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் உ.வே.சா.வின் மாணாக்கரான கி.வா. ஜகந்நாதன். ஒவ்வொரு சம்பவத்தையும் படிக்கும்போதும் பழந்தமிழ இலக்கியங்களைத் தேடியெடுத்துப் பதிப்பில் உ.வே.சா.வுக்கு இருந்த அளப்பரிய ஆர்வமும், அந்தப் பணியில் அவருக்கு நேர்ந்த இன்னல்களும், […]

Read more

ம.கோ. களஞ்சியம்

ம.கோ. களஞ்சியம் (பண்டித ம.கோபாலகிருஷ்ண ஐயர் படைப்புகள்), உஷா மகாதேவன் பதிப்பாசிரியர், காவ்யா, சென்னை, பக். 816, விலை 800ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-335-7.html ம.கோ. பாலகிருஷ்ண ஐயரின் படைப்புகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார் அவரின் மகன் வழிப்பெயர்த்தி உஷா மகாதேவன். திருச்சி லால்குடியில் 1878இல் பிறந்த ம.கோபாலகிருஷ்ண ஐயர், 49 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்திருந்தாலும், இலக்கிய வாழ்வாக வாழ்ந்தவர். மதுரை தமிழ்ச் சங்கத்தை பாண்டியத்துரைத் தேவர் தொடங்கும் முன்னரே ம.கோ. மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். வங்கக் […]

Read more

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும், டாக்டர் சங்கர சரவணன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 480, விலை 195ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-243-9.html பொது அறிவுக் களஞ்சியம் வரிசையில் விகடன் பிரசுரம் வெளியிடும் மூன்றாவது நூல். பள்ளிகளில் நாம் அனைவரும் படித்த ஒரு பாடத்தை மீண்டும் ஏன் புத்தக வடிவில் படிக்க வேண்டும் என்ற கேள்விக்கு புத்தகத்தின் முகப்பிலேயே விடை இருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராவோருக்காக இந்தப் புத்தகம் பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது. […]

Read more

மறைக்காட்டில் ஒரு மாணிக்கம்

மறைக்காட்டில் ஒரு மாணிக்கம், பகீரதன், கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம், வேதாரண்யம், பக். 261, விலை 250ரூ. சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் வாழ்வை விவரிக்கும் நூல். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளின் அடியொற்றி நடந்த வேதரத்தினம் பிள்ளை, பின்னர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டார். அவருடன் பழகியவர்களின் அனுபவத்தையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது நோய்வாய்ப்பட்ட நிலையிலும் பேரவைக் கூட்டங்களில் அவர் தவறாமல் பங்கெடுத்ததை பொள்ளாச்சி நா. மகாலிங்கம் குறிப்பிடுகிறார். அகில இந்திய அளவில் சர்தார் எனும் பட்டம் பட்டேலுக்குப் பிறகு வேதரத்தினம் […]

Read more

மகான் ஷைகு சாஅதி

மகான் ஷைகு சாஅதி, ஆர்.பி.எம். கனி, நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 184, விலை 100ரூ. இஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ அறிஞர்கள் தங்கள் ஞானத்தால் இந்த உலகிற்கு ஒளியூட்டியுள்ளனர். உதாரணமாக இஸ்லாத்தில் பற்று கொண்ட பக்தாத்தை சார்ந்த முகைதீன் அப்துல்காதல் ஜிலானி, உமர் கய்யாம், இந்தியாவில் புகழ்பெற்ற சூபி ஞானி நிஜாமுதீன் அவுலியா போன்றவர்களைக் குறிப்பிடலாம். அந்த வரிசையில் ஷைகு சாஅதி 12ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தில் பிறந்த ஒப்பற்ற நீதி அறிஞர், கவிஞரான அவர் கஜல் கவிதைகளில் உள்ள உணர்ச்சி பிரவாகத்தை விட நீதி […]

Read more

மெய்ப்பொருள் காண்போம்

மெய்ப்பொருள் காண்போம், மேனிலை அடைவோம், சிங்கப்பூர் சித்தார்த்தன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தில் பல பொறுப்புகளை வகித்தவர் இந்நூலாசிரியர். இவர் தமிழ்க் கல்வி குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார். இந்நூலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளின் மூலமும், படைப்பு இலக்கியங்களின் மூலமும், பல உன்னதமான கருத்துக்களை உலகிற்குத் தந்து உயரிய இடத்தைப் பெற்றவர்கள். இதற்கு திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் போன்றவை சான்றுகள் என்கிறார். இப்படைப்புகள், இலக்கிய இலக்கண நயத்துடன் எப்படி வாழ்க்கை […]

Read more

திருக்குறளுக்கு புதிய உரை

திருக்குறளுக்கு புதிய உரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. திருக்குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட சில உரைகள், மிகக் கடினமாக இருந்தன. அவற்றுக்கே உரை எழுத வேண்டும்போல் இருந்தன. காலமாற்றத்துக்குத் தக்கபடி சமீப காலமாக எளிய உரைகள் வரத் தொடங்கின. 1000 படங்களுக்கு மேல் வசனம் எழுதியவரும், பல மொழிகள் அறிந்தவருமான ஆரூர்தாஸ் தமிழ் மறை என்ற தலைப்பில் திருக்குறளுக்கு இனிய, எளிய தமிழில் புதிய உரை எழுதியுள்ளார். பாமர மக்களுக்கு புரிந்து கொள்ளத்தக்க வகையில் உரை எளிய […]

Read more

அறிவார்ந்த ஆன்மிகம்

அறிவார்ந்த ஆன்மிகம், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ. தினத்தந்தியின் அருள் தரும் ஆன்மிகம் பகுதியில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தீப ஆரத்தி எடுப்பது எதற்காக? கோவில் வழிபாடு ஏன்? உபவாசம் எதற்காக? கார்த்திகை தீபத்தின் சிறப்பு, கும்பாபிஷேகம் எதற்காக? திருநீறு அணிவது எதற்காக? தேங்காய் உடைப்பது ஏன்? ருத்ராட்சம் அணிவதன் சிறப்பு என்பன போன்ற 52 கட்டுரைகளில் இந்து மதத்தில் உள்ள சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் எழுத்தாளர் என். கணேசன் விளக்கியுள்ளார். அந்தச் சடங்குகளின் பின்னணியில் பின்னப்பட்டுள்ள, காரணங்களை ஏன், எதற்காக, எப்படி […]

Read more

பட்டினத்தார் பாடல்கள்

பட்டினத்தார் பாடல்கள், புதுக்கவிதை வடிவில், கிருஷ்ண பிரசார், காவ்யா, பக். 1354, விலை 1300ரூ. சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையாக இடம்பெற்றள்ள பட்டினத்தார் பாடல்களும், பட்டினத்தாரின் ஏனைய பாடல்களின் தொகுப்பில் உள்ள பாடல்களும், புதுக்கவிதை வடிவில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சித்தர்களுள் ஒருவராக போற்றப்பட்ட பட்டினத்தார், தம் பாடலுள் கூறும் அரிய சைவ சித்தாந்த கருத்துகளை, எளிய, இனிய கவிதை வடிவில் இந்நூல் தந்துள்ளது. சித்ததர் என்போர் யாவர், மூடநம்பிக்கைகளை வேரறுத்து, உருவ வழிபாட்டை எள்ளி நகையாடிய இவர்கள், பின் ஏன் பல தலங்களின் இறைவனை […]

Read more
1 141 142 143 144 145 336