உங்களுக்கும் ஒரு குழந்தை

உங்களுக்கும் ஒரு குழந்தை, ஐஸ்வர்யா மகளிர் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம், சென்னை, விலை 300ரூ. குழந்தை இல்லாவிட்டால் வாழ்க்கையில் பெரும் பிரச்சினை ஏற்படுகிறது. தம்பதிகளில் எவரிடம் குறைபாடு இருந்தாலும், முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் குழந்தைப்பேறு அடைய முடியும் என்று கூறும் டாக்டர் சந்திரலேகா, அதற்காக இருக்கும் பல்வேறு நவீன சிகிச்சை முறைகளை தெள்ளத் தெளிவாக விளக்குகிறார். புதிதாகத் திருமணம் செய்துகொண்ட பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும், பருவம் அடைந்த பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் நூலாசிரியர் […]

Read more

பட்டினத்தார் பாடல்கள்

பட்டினத்தார் பாடல்கள், புதுக்கவிதை வடிவில், கிருஷ்ண பிரசார், காவ்யா, பக். 1354, விலை 1300ரூ. சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையாக இடம்பெற்றள்ள பட்டினத்தார் பாடல்களும், பட்டினத்தாரின் ஏனைய பாடல்களின் தொகுப்பில் உள்ள பாடல்களும், புதுக்கவிதை வடிவில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சித்தர்களுள் ஒருவராக போற்றப்பட்ட பட்டினத்தார், தம் பாடலுள் கூறும் அரிய சைவ சித்தாந்த கருத்துகளை, எளிய, இனிய கவிதை வடிவில் இந்நூல் தந்துள்ளது. சித்ததர் என்போர் யாவர், மூடநம்பிக்கைகளை வேரறுத்து, உருவ வழிபாட்டை எள்ளி நகையாடிய இவர்கள், பின் ஏன் பல தலங்களின் இறைவனை […]

Read more

விடியலை நோக்கி

விடியலை நோக்கி, க. ராகிலா, வாசகன் பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. ராகிலாவின் எழுத்து, லட்சிய எழுத்து. ஒவ்வொரு கதையும், ஒரு நீதியை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் அவர் இந்தச் சிறுகதைகளை எழுதி இருக்கிறார். 18 சிறுகதைகள், இந்தத் தொகுதியில் இருக்கின்றன. எல்லாமே, மணி மணியான கதைகள். முதியோர் இல்லங்களில், பெற்றோரை தவிக்க விடாதீர்கள் என்று சொல்லும் முதல் கதையான, உறவுகள் பிரிவதற்கல்ல கதை அருமை. பல சிறுகதைகளில், அருமையான குணச்சித்திர வார்ப்புகள். குட்டச்சிக் கிழவி என்ற கதையில் வரும் […]

Read more

வள்ளுவர் முப்பால் அறத்துப்பால்

வள்ளுவர் முப்பால் அறத்துப்பால், உரையும் உரைவும், உரையாசிரியர் தி.முருகரத்தனம், தமிழ்ச்சோலை வெளியீடு, பக். 145, விலை 100ரூ. உலகம் போற்றும் அறநூலாம் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். நாட்டின் தேசிய நூலாக அறிவிப்பதற்குத்தகுதியுடைய திருக்குறளை, பலரும் தத்தம் போக்கில் வெளியிடுகின்றனர். இந்நூலை வெளியிட்டுள்ள இந்த உரையாசிரியர், முதல் நாற்பது குறட்பாக்களை (பாயிரம்) வள்ளுவர் இயற்றவில்லை என கருதுகிறார். திருக்குறளை முப்பால் என்றுதான் கூற வேண்டும் என்றெண்ணும் ஆசிரியர், காரணம் கூறாமல் தம் விருப்பப்படி குறட்பாக்களை புதிய முறையில் வரிசைப்படுத்தி எண்கள் கொடுத்துள்ளார். இந்நூலின் ஆசிரியர் ஒவ்வொரு […]

Read more

காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், நேசம் பதிப்பகம், பக். 124, விலை 90ரூ. காந்தியம் எனும் காயகல்பம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பட்டிமன்ற, இலக்கியமன்ற மேடைகளில், தனித்தன்மையுடன் சொற்பொழிவு ஆற்றி வருகிறார், இப்புத்தகத்தின் ஆசிரியர். தேச தந்தை மகாத்மா காந்தி பற்றி, லட்சக்கணக்கான புத்தகங்கள் உலகெங்கும் பதிப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இப்புத்தகத்தில் மொத்தம் 31 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர், தன் நண்பர் புகழ் மதியிடம் உரையாடியபோது, எழுந்த கேள்விகளுக்கு, காந்தியின் வாழ்வில் நடந்த சம்பவத்தை விவரித்து, அதன் மூலம் விடை சொல்கிறார். […]

Read more

போட்டுத்தள்ளு

போட்டுத்தள்ளு, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்குப் பதிப்பகம், சென்னை, பக். 200, விலை 170ரூ. தொழிலில், விற்பனையில் போட்டியை வெல்லும் கலையை சொல்லி தருகிறார் சதீஷ். நாம் செய்யும் தொழிலின் அடிப்படையை நாமே சரியாக தெரிந்துகொள்ளவில்லை என்றால், போட்யை எப்படி சரியாகக் கணிப்பது? போட்டியாளர் யார் என்பதை எப்படி அறுதியிடுவது, நம் தொழிலின் துவக்கமே நான் யார், எந்தத் தொழிலில் இருக்கிறேன், யார் என் வாடிக்கையாளர், அவரின் எந்தத் தேவையை நான் பூர்த்தி செய்கிறேன் என்ற ஆதார கேள்விகளுக்கு விடை காண்பதுதான். நீங்கள் சுய தொழில் […]

Read more

எண்ணுகிறேன் எழுதுகிறேன்

எண்ணுகிறேன் எழுதுகிறேன், டாக்டர் நா. மகாலிங்கம், ராமானந்த அடிகளார் அறக்கட்டளை, கோவை, பக். 216, விலை 155ரூ. தொழிலதிபர் நா. மகாலிங்கத்தின் 92வது பிறந்த நாளில் வெளியிடப் பெற்ற நூல். காஷ்மீ பிரச்னைக்கு ஒரு தீர்வு என்பது முதல், வீழ்ந்த விவசாயம் விருத்தியடைய என்ற கட்டுரையோடு 21 தலைப்புகளில் நூல் நிறைவடைகிறது. மகாலிங்கம் அவ்வப்போது, ஓம் சக்தி இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். கட்டுரைகள் அனைத்திலுமே அருட்செல்வரது நாட்டுப்பற்று, ஆன்மிகச் சிந்தனை, ஆழ்ந்த அறிவியல் கண்ணோட்டம், பரந்துபட்ட உகறிவு, சமுதாய அவலங்களையும், வன்முறைகளையும் […]

Read more

இன்றைய செய்தி அன்றைய இலக்கியம்

இன்றைய செய்தி அன்றைய இலக்கியம், முனைவர் வெ. நல்லதம்பி, மங்கை பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. இன்றைய செய்தியையும், அந்றைய இலக்கியத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட 60 கட்டுரைகளின் தொகுப்பு நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியத்தில் காட்டப்பெற்றவை இன்று உண்மையிலேயே நடந்துள்ளன என்பதை நூலாசிரியர் ஒப்புமைபடுத்தி வெளிப்படுத்தியதை பார்க்கையில் மனதை மனங்களின் செயல்பாடுகளுக்கு ஒரு தொடர்ச்சி இருந்துகொண்டே வந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. சங்க கால இலக்கியங்களை நவீன காலச் செய்திகளுடன் இணைத்திருக்கும் விதமும், எளிய சொற்களை பாமரர்களுக்கும் புரியும்வண்ணம் பயன்படுத்தி இந்நூலை படைத்திருக்கிறார் […]

Read more

வேலை பெறத் தயாராகுங்கள்

வேலை பெறத் தயாராகுங்கள், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், மதுரை, விலை 150ரூ. வேலையில்லாத் திண்டாட்டம் என்பது நமது நாட்டில் படித்த இளைஞர்களுக்கு தடைக்கல்லாகவும், பெரும் சவாலாகவும் உள்ளது. அறிவும், திறமையும் உள்ள மாணவர்களுக்கு உகந்த வேலை இருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அதைப் பெற இயலவில்லை. இதைப் போக்கும் வகையில் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி எம். கருணாகரன், தினத்தந்தி இளைஞர் மலரில் எழுதிய கட்டுரைகள் இப்போது நூலாக வெளிவந்துள்ளது. வேலை பெறுவதற்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது. கூடுதல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள […]

Read more

உலகத்தின் தோற்றமும் வரலாறும்

உலகத்தின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ரத்னம், சேது அலமி பிரசுரம், சென்னை, விலை 170ரூ. சுமார் 460கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் இருந்து தெறித்து வந்த ஒரு அக்கினிப் பிழம்புதான் பிறகு பூமியாக மாறியது. அதன்பின் ஜீவராசிகள் தோன்றின. காட்டிமிராண்டியாக வாழ்ந்த மனிதன், பல ஆண்டுகளுக்குப்பின் படிப்படியாக கற்கால மனிதனாக மாறினான். உலகின் பல்வேறு பகுதிகளில் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. பூமியின் வரலாற்றை கதைபோல் கூறுகிறார் ஆசிரியர். பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 17/9/2014.   —- நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி, செந்தமிழ்க்கிழார், […]

Read more
1 142 143 144 145 146 336