உலகத்தின் தோற்றமும் வரலாறும்

உலகத்தின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ரத்னம், சேது அலமி பிரசுரம், சென்னை, விலை 170ரூ. சுமார் 460கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் இருந்து தெறித்து வந்த ஒரு அக்கினிப் பிழம்புதான் பிறகு பூமியாக மாறியது. அதன்பின் ஜீவராசிகள் தோன்றின. காட்டிமிராண்டியாக வாழ்ந்த மனிதன், பல ஆண்டுகளுக்குப்பின் படிப்படியாக கற்கால மனிதனாக மாறினான். உலகின் பல்வேறு பகுதிகளில் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. பூமியின் வரலாற்றை கதைபோல் கூறுகிறார் ஆசிரியர். பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 17/9/2014.   —- நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி, செந்தமிழ்க்கிழார், […]

Read more

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா?

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா?, நோசன் பிரஸ், சென்னை, விலை 350ரூ. 40 ஆண்டுகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியை அலிஸ் கே. ஜோஸ்ன் வாழ்க்கை வரலாற்று நூல். ஒரு சாதாரணப் பெண் கூச்சமும், மிரட்சியும் மிக்க ஒரு சாதுப்பெண் எவ்வாறு இறையருளால் மன உரம் பெற்றாள் என்பதைக் கூறுவதே நூலாசிரியரின் நோக்கம். சுயநலத்தோடும், வன்முறையோடும் தீயவற்றைச் சொல்லிலும், செயலிலும் மறைவாகவும், வெளிப்படையாகவும் வெட்கமின்றி வெளிப்படுத்தும் மனிதர்களிடையே நன்மையில் நாட்டம் கொண்டு குற்றங்குறைகளை நீக்கி வாழ முயற்சிப்போர் பலர் உள்ளனர். அவவ்கையில் நல்ல ஆசிரியையாக வாழ்ந்து […]

Read more

தவறாமல் தரிசிக்க வேண்டிய கோவில்கள்

தவறாமல் தரிசிக்க வேண்டிய கோவில்கள், மு. ஆதவன், புதிய வாழ்வியல் பதிப்பகம், பக். 96, விலை 95ரூ. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மனக்குறை இருக்கும். அவற்றை தீர்க்க வல்லவை கோவில்கள் மட்டுமே. வீதிக்கு ஒரு கோவில் இருந்தாலும், சில கோவில்கள், குறிப்பிட்ட பிரார்த்தனைகளை நிறைவேற்ற வல்லதாக இருக்கும். தலையெழுத்து நன்கு இருக்க, திருமணம் ஆக, குழந்தை பிறக்க, பிள்ளைகள் நன்கு படிக்க, அவர்கள் பேச்சாற்றலுடன் திகழ, வாய் பேசாதோர் சரியாகப் பேச, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக என 16 பிரார்த்தனைத் தலங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் […]

Read more

கடைத்தெருக் கதைகள்

கடைத்தெருக் கதைகள், ஆ. மாதவன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 130ரூ. ஆ. மாதவன் தமிழ்ச் சிறுகதை உலகில் அனைவராலும் அறியப்பட்ட எழுத்தாளர். இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு, அன்றைய சிற்றிதழ்களில் வெளியானவை. மறுபதிப்பு காண்பதும் இவை வெளியான சிற்றிதழ்களும் இத்தொகுப்பின் சிறப்புக்கு சாட்சியங்கள். திருவனந்தபுரத்தில் அங்காடி வீதியில் கடை வைத்திருந்தவர் பார்க்க நேர்ந்த மனிதர்களையும், அவர்களது வாழ்க்கையில் நேர்ந்த, நேர்ந்திருக்கக்கூடிய, நேர்ந்திருக்க வேண்டிய சம்பவங்களின் நீட்சிதான் இந்தச் சிறுகதைகள். கடைத்தெருவில் சிற்றேவல் செய்தும், […]

Read more

பாரதிதாசன் யாப்பியல்

பாரதிதாசன் யாப்பியல், ய. மணிகண்டன், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 120ரூ. எட்டயபுரத்துக் கவிஞரின் அடியொற்றி இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இரண்டாவது பெரும் கவிஞராகத் திகழ்ந்தவர் புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால் படைப்புகளின் எண்ணிக்கை என எடுத்துக்கொண்டால் பாரதியை விட அதிக படைப்புகளைத் தந்தவர் அவர். ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து, வண்ணம் என விதவிதமான யாப்பு வகைகளை தமது கவிதை இலக்கியங்களில் எழிலுறக் கையாண்டவர் அவர். மரபை அடியொற்றி மட்டுமின்றி, அதில் புதுமைகளைப் புகுத்தும் விதத்திலும் அந்தந்தச் சூழலுக்கு […]

Read more

கோழிப்பாட்டி

கோழிப்பட்டி, ஐ.சிவசுப்பிரமணி ஜெயசேகர், அய்யா நிலையம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 128, விலை 100ரூ. சமகத்தில் புரையோடிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள், சமூக அவலங்களை இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் வாயிலாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் உள்ள சிறுகதைகள் அனைத்துமே கற்பனை அல்ல. நெஞ்சை உலுக்கும் நிஜங்கள். ஒவ்வொரு சிறுகதையைப் படித்து முடிக்கும்போதும் சோகத்தால் மனம் கனத்துப் போகிறது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள கோழிப்பாட்டி கதையில் கொள்ளி வைக்க ஆம்புளப்புள்ள வேணும் என்று மார்தட்டும் கோழிப்பாட்டி, அதே ஆம்புளப்புள்ளைகளால் துன்புறுத்தப்படும்போது தானே தனக்குக் கொள்ளி […]

Read more

பகதூர்கான் திப்பு சுல்தான்

பகதூர்கான் திப்பு சுல்தான், டி.கே. இரவீந்திரன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 256, விலை 120ரூ. இந்தியாவில் தனது அரசை ஸ்தாபிக்க விரும்பும் கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியவர்கள், மைசூர் அரசின் மன்னர்கள் ஹைதர் அலியும் அவரது மகன் திப்பு சுல்தானும்தான். மராட்டியப் படைகளும், ஹைதராபாத் நிஜாம் படைகளும் ஆங்கிலப் படைகளுடன் கைகோர்த்துக் கொண்டபோதும் திப்பு சுல்தான் சமரசமாகப் போகாமல், தனது பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிக்கொள்ள இறுதிவரை போராடுகிறான். திப்பு சுல்தானின் செயலின் விளைவுகள் இந்தியத்துவத்திலிருந்து விலகி மேனாட்டு நிலைக்கு உயர்வுடையதாக […]

Read more

திருலோக சீதாராம்

திருலோக சீதாராம், ஏ.ஆர். இராஜமணி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 104, விலை 50ரூ. திருவையாறு லோகநாதய்யர் சீதாராமன் என்கிற திருலோக சீதாராம் அகத்திய முனிவரைப்போல் குள்ளமான உருவம் தாங்கியவர். பளிச்சென்று குங்குமப் பொட்டும் வெற்றிலைச் செல்லமுமாக எந்த நேரமும் உலா வந்தவர். கந்தர்வ கானம் என்னும் கவிதைப் படைப்பால் புகழ்பெற்றவர். சிறந்த மேடைப் பேச்சாளருமான அவர் சிவாஜி இதழின் ஆசிரியர். அவருடைய சித்தார்த்தன் மொழிபெயர்ப்பு சிறப்பு மிக்கது. பாரதி புகழ் பாடியும், பரப்பியும், பாரதி கவிதைகளை மேடையில் உணர்வுடன் பாடியும் பாரதிப் பித்தாக […]

Read more

நாகூர் குலாம் காதிறு நாவலர்

நாகூர் குலாம் காதிறு நாவலர், ஏவி.எம். நசீமுத்தீன், சாகித்திய அகாடமி, பக். 128, விலை 50ரூ. ஒரு நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்த தமிழப் பெரும் புலவர் குலாம் காதிறு நாவலர். பாண்டித்துரை தேவர், பாஸ்கர சேருபதி, மு.ராகவையங்கார் போன்றோரோடு இணைந்து, மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர். புலமைத்திறம் மிக்கவராக, உரைநடை வல்லுனராக, மொழிப்பெயர்ப்பாளராக, நாவன்மை கொண்ட நாவலராக இயங்கிய, குலாம் காதிறுவின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும், அவர்தம் அளப்பரிய தமிழ்ப்பணிகளும், பெருங்குணங்களும் நூலில் குறிக்கப்பட்டுள்ளன. சிற்றிலக்கியங்கள் பல படைத்தவர். இவரது நாகூர்ப் புராணம் குறிப்பிடத்தக்கதொன்று. […]

Read more

மணிக்கொடி

மணிக்கொடி, சேது அலமி பிரசுரம், சென்னை, விலை 500ரூ. கல்கியின் பொன்விழாப் போட்யில் முதல் பரிசு பெற்ற நாவல் இது. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது எனும் உயரிய கருத்துக்கு முழு வடிவம் கொடுத்து உருவான நாவல். நாடு தழுவிய மாபெரும் பிரச்சினைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும், நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள் என்பதைச் சொல்லுவதற்காகவும் இந்த வரலாற்று புதினத்தை படைத்திருக்கிறார் நேதிர்லதா கிரிஜா. இப்புதினம், விடுதலைக்காக நம் முன்னோர்கள் பட்ட வடுக்களின் […]

Read more
1 143 144 145 146 147 336