தமிழ்ச்சுடர் மணிகள்

தமிழ்ச்சுடர் மணிகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 230ரூ. மறைந்த தமிழறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை எழுதிய இந்நூல் மிகப் புகழ் பெற்றது. தொல்காப்பியர், திருவள்ளுவர், கபிலர், கம்பர், சடையப்ப வள்ளல், பரிமேலழகர் உள்பட 24 தமிழ்ச்சான்றோர்களின் வரலாறுகளை விரிவாகவும், சுவைபடவும் எழுதியுள்ளார் வையாபுரிப்பிள்ளை. நீண்ட இடைவெளிக்குப் பின் சிறந்த கட்டமைப்புடன் இந்நூல் வெளிவந்துள்ளது. திருவள்ளுவர் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து இவர் எழுதிய வாழ்க்கைக்குறிப்பு குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பகுதி வருமாறு, இவர் வள்ளுவர் குடியிற் பிறந்தவர். […]

Read more

ஓவியமாய் ஒரு பெண்

ஓவியமாய் ஒரு பெண், யோகா, யோக சாவித் பப்ளிகேஷன்ஸ், 15/90, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை 75ரூ. பிரபல புகைப்படக் கலைஞர் கலைமாமணி யோகா எழுதிய 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே ஓவியமாய் ஒரு பெண். 11 கதைகளில் முதல் கதையாக அமைந்து நூலின் தலைப்புக்கு பெருமை சேர்த்திருக்கிறது ஓவியமாய் ஒரு பெண் சிறுகதை. அவரவர் துறையில் பிரபலமாயிருக்கிற தம்பதிகளின் அன்பின் நேசத்தை ஆழமாகவே பதிவு செய்திருக்கிறது. கணவர் குடும்பத்தில் அவரது சகோதர வட்டம் எல்லாரும், 58 வயதுக்குள் இறைவனடி சேர்ந்துவிட, […]

Read more

சுவரொட்டி

சுவரொட்டி, கலாப்ரியா, கயல்கவின் புக்ஸ், 16/25, 2வது கடல்போக்கச் சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41. வெளிப்படையான அனுபவங்களை எழுதுவது தங்களது பிம்பங்களை உடைத்துவிடும் என்பது அனேக தமிழ் எழுத்தாளர்களின் பயமாக இருக்கிறது. போலி முகமூடிகளின்றி நேர்பட பேசும் கலாப்ரியாவின் உரையாடல்களின் தொடர்ச்சிதான் அவரது கட்டுரைகள். கலாப்ரியாவின் நான்காவது கட்டுரைத் தொகுப்பான சுவரொட்டி வாழ்வின் பெரும்பகுதியை சினிமாவில் தொலைத்த தமிழர்களின் வாழ்வை சுவாரஸ்யமாக விவரிக்கிறது. தீவிர சினிமா ரசிகர்களுக்கு தியேட்டரில் வேலை பார்ப்பவர்களுடனான உறவு பற்றி சொல்லும்போது, Murder She Said என்ற […]

Read more

தமிழகத்தில் தேவதாசிகள்

தமிழகத்தில் தேவதாசிகள், முனைவர் கே. சதாசிவன், தமிழில்-கமலாலயன். பெண்கள் சார்ந்தும், பெண்ணியம் சார்ந்தும் எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில மட்டுமே முழுமைபெற்றவையாக இருக்கின்றன. ஆனால் முனைவர் சே. சதாசிவன் எழுதி, கமலாலயன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் தமிழகத்தில் தேவதாசிகள் என்ற புத்தகம், தன் இலக்கைக் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இரந்துவந்த தேவதாசி நடைமுறையைப் பற்றி விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். கோயில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்கள்தான் தேவதாசிகள் என்றழைக்கப்படும் தேவரடியார்கள். பக்தி இலக்கியம் கோலோச்சிய ஆறாம் நூற்றாண்டு வாக்கில் […]

Read more

பாவேந்தம்

பாவேந்தம், பதிப்பாசிரியர்கள்-முனைவர்கள் இரா. இளங்குமரன், இரா. இளவரசு, கு. திருமாறன், பி. தமிழகன், கிடைக்குமிடம்-தமிழ் மண் பதிப்பகம், 2, சங்கார வேலர் தெரு, தி.நகர், சென்னை 17. பாரதிதாசன் படைப்புகள் முழுவதும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதைகள், காவியங்கள், கட்டுரைகள் அனைத்தும் 25 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. பாரதிதாசன், தொடக்க காலத்தில் ஆத்திகராக இருந்தவர். அப்போது எழுதிய பக்திப் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. 25 தொகுதிகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து இவ்வளவு தொகுதிகளை வெளியிடுவது […]

Read more

கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும், வெ. துரைசாமி, ஆப்பிள் பப்ளிகேஷன்ஸ், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 29. இந்நூலாசிரியர், இந்திய அளவில் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவராக பல ஆண்டுகள் தொண்டாற்றியவர். இன்றைய அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்னைகளை படம்பிடித்துக் காட்டும் இந்நூலாசிரியர், இவற்றைக் களைந்து இந்தியாவை செழிப்பான ஒரு நாடாக ஆக்கிக் காட்டும் வழிகளை இந்நூலில் கூறியுள்ளார். வாசகர்களுக்குப் போரடிக்காமல் இருக்க, விறுவிறுப்பான நாவலாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒரு சாதாரண மனிதன் இறையருளால் பிரதமராகி, நாட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் கதைக்கரு. […]

Read more

பூ மலரும் காலம்

பூ மலரும் காலம், ஜி. மீனாட்சி, பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட், விலை 85ரூ. இலக்கிய வெளியில் பெண் எழுத்தாளர்கள் குறைந்துவிட்ட நிலையில் ஜி. மீனாட்சி போன்ற சிலரின் சிறுகதைகள் புதிய தெம்பூட்டுகின்றன. இவரின் பூ மலரும் காலம் என்னும் தொகுப்பில் 11 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இச்சிறுகதைக் குறித்து, எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் கருத்து- எழுத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஓர் எழுத்தாளரின் தொகுதி என்பதை இதிலுள்ள படைப்புகள் புலப்படுத்துகின்றன. வணிக நோக்கில்லாமல் தனி மனிதனையும், சமுதாயத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இவரின் […]

Read more

ஓநாய் குலச்சின்னம்

ஓநாய் குலச்சின்னம், ஜியாங் ரோங், தமிழில்-சி.மோகன், அதிர்வு பதிப்பகம், 38, இரண்டாவது தெரு, ராமலிங்க நகர், விருகம்பாக்கம், சென்னை 93. வரலாற்றில் படித்த செங்கிஸ்கான் மீது இன்னும் பலருக்கு அச்சம் நீங்கியிருக்காது. அவரும் அவரது மங்கோலியப் படையினரும் எப்படி உலகில் பல நாடுகளை அச்சுறுத்திப் பணிய வைத்தனர் என்பதற்கான விடைகளைத் தரும் வரலாற்றுப் புனைவு நாவல் ஓநாய்குலச் சின்னம். சீன எழுத்தாளரான ஜியாங் ரோங் என்பவர் எழுதிய புகழ்பெற்ற இந்நாவலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் சி.மோகன். கலாச்சார புரட்சி காலத்தில் உள்மங்கோலியாவில் வாழ்ந்த […]

Read more

கர்ணனின் கவசம்

கர்ணனின் கவசம், கே.என்.சிவராமன், சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை 600004. நாடி நரம்புகளில் எல்லாம் மகாபாரதமும், ராமாயணமும், பொன்னியின் செல்வனும் சாண்டில்யனின் சரித்திர நாவல்களும் ஊறிக்கிடக்கும் ஒருவர் விறுவிறுப்பான தொடர்கதை எழுதத் தொடங்கினால் எப்படி இருக்கும்? கர்ணனின் கவசம் என்ற நாவல் இதற்குப் பதிலாக இருக்கிறது. முதல் அத்தியாயத்தில் தொடங்கும் ஓட்டம் சரித்திரத்தில், பூகோளத்தில், புராணத்தில், சொர்க்கத்தில், வைகுண்டத்தில் என எங்கெங்கு மனிதன் யோசிக்க முடியுமோ அங்கெங்கெல்லாம் சஞ்சரித்து கடைசியில் கபாடபுரத்தில் முடிவடைகிறது. முடிவடைகிறது என்று சொல்வது தவறு. மீண்டும் […]

Read more

மாணவர்களுக்கு வள்ளுவர்

மாணவர்களுக்கு வள்ளுவர், என். வீரகண்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 168, விலை 100ரூ. இந்த நூலில், அறத்துப் பால், பொருட்பால் ஆகியனவற்றில் இடம் பெற்றுள்ள, 108 அதிகாரங்களில் உள்ள, 1080 குறட்பாக்களின் எளிய, இனிய உரைகள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, கற்கக் கசடற என்ற குறளை, கற்க வேண்டிய நூல்களை மிகத் தெளிவுடன் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் கற்ற கல்விக்குத் தக்கபடி நல்வழியில் வாழ வேண்டும் என்று சொல்கிறார். மாணவ, மாணவியர் படித்துப் பயன் […]

Read more
1 211 212 213 214 215 336