கடல் கிணறு

கடல் கிணறு (சிறுகதைகள்), ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 79, விலை 60ரூ. கேள்விகளை எழுப்பும் கதைகள் அடக்குமுறையின் மாமிசத்தைப் பிய்த்துத் துப்பும் கதைகள்: வாசிப்பதோடு விவாதிக்கவும் வேண்டியவை. நிர்ப்பந்தங்களுக்கு அப்பால் வாழ்வை அதன் மங்கலான பிம்பங்களில் இருந்து பதிவு செய்வதாய் எழுதப்பட்டிருக்கும் ஒன்பது கதைகளைக் கொண்டிருக்கும் ரவிக்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பான கடல் கிணறு இந்தக் காலகட்டத்தில் வாசிப்பதோடு விவாதிக்கப்படவும் வேண்டிய புத்தகம். மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், கவிதைகள் என வெவ்வேறு தளங்களில் முக்கியமான ஆக்கங்களைத் தந்துள்ள ரவிக்குமாரின் இந்த கதைகள் பெரும்பாலும் […]

Read more

தடித்த கண்ணாடி போட்ட பூனை

தடித்த கண்ணாடி போட்ட பூனை, போகன் சங்கர், உயிர்மை பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 130ரூ. அவர்களை மன்னியும் அவர்கள் தாம் செய்வது (எழுதுவது) இன்னதென்று அறியாமல் செய்கின்றனர். அவர்களை மன்னியும்! சிறுவயதுதொட்டு அவரை நான் பார்த்திருக்கிறேன். வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். அவரிடம் ஒரு சைக்கிள் உண்டு. அந்த சைக்கிளை அவர் ஒட்டி நான் பார்த்ததே கிடையாது. ஏனெனில் அவருக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது. வாழ்நாள் முழுக்க அவர் அந்த சைக்கிளை உருட்டிக் கொண்டே திரிந்தார். மற்றவர் ஓட்டினால், பின்னால் உட்கார்ந்திருப்பார். போதையான […]

Read more

டாவின்சி கோட்

டாவின்சி கோட், டான் பிரவுன், தமிழில் பெரு. முருகன், இரா. செந்தில், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 599ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023804.html அறிவின் புதிர்களைத் தேடி பாரிசில் உள்ள லூவ்ர் அருங்காட்சியகத்தில் அதன் மேற்பார்வையாளர் ஜாக்குவஸ் கொலை செய்யப்படுகிறார். அவர் இறக்கும் நேரத்தில் தனது வயிற்றில் ரத்தம் கொண்டு சில சின்னங்களையும் ரகசிய எண்களையும் எழுதிவைத்து இறக்கிறார். அவர் விடுத்திருந்த புதிரை அவிழ்க்க மத அடையாளங்கள் மற்றும் குறியீடுகளை ஆராயும் சரித்திரப் பேராசிரியர் ராபர்ட் லாங்டன் அழைக்கப்படுகிறார். […]

Read more

சீன அதிசயங்கள் இந்தியத் தாக்கங்கள்

சீன அதிசயங்கள் இந்தியத் தாக்கங்கள், டி. ஞானையா, அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், சென்னை. சீனச் சுவடுகள் சீனாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மீது இந்தியா ஏற்படுத்திய தாக்கங்களை விவரிக்கும் நூல் இது. சீனப் பெருமைவாதம், இந்திய தற்பெருமைவாதம், சீன அதிசயங்களில் இந்தியா உள்ளிட்ட ஏழு தலைப்புகளில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. சீனாவுக்கு பவுத்தத்தை அளித்த இந்தியாவுடன் அதற்கு இருக்கும் தொன்மையான உறவை இந்நூல் பல உதாரணங்கள் வழியாக விளக்குகிறது. சீனா மீது இந்தியர்களுக்கு இருக்கும் தவறான எண்ணங்கள் மீதும் இந்நூல் கவனம் குவிக்கிறது. சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் […]

Read more

ஒடுக்கப்பட்ட சாதிகள்:இறையாண்மை அரசு அமைப்புகள்

ஒடுக்கப்பட்ட சாதிகள்:இறையாண்மை அரசு அமைப்புகள், ச. சிவலிங்கம், புலம் வெளியீடு, விலை 180ரூ. இரு துருவங்களின் இணைப்பு சாதியின் தோற்றம், வளர்ச்சி, ஒழிப்பைப் பற்றிதான் எவ்வளவு விவாதங்கள்! சாதியும் வர்ணமும் மனித நாகரிகத்துக்கு இந்தியா அளித்துள்ள கொடை என்று உலகத்திடம் விவாதிக்கிற இந்திய அறிவாளிகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனினும், நம்பிக்கை அளிக்கும் மாற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. தலித் சுயமரியாதை சக்தியின் மூலமாக மக்கள் பணியாற்றும் இந்த நூலின் ஆசிரியர் ஒரு கல்லூரி ஆசிரியரும்கூட. அவர் இடதுசாரிக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவர். ஆனால், சமூகப் […]

Read more

உல்லாசக் கப்பல் பயணம்

உல்லாசக் கப்பல் பயணம், கிருத்திகா, தமிழ் காமிக்ஸ் உலகம் வெளியீடு, சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024753.html உல்லாசக் கப்பல் பயணம் ஓர் அனுபவம் ஆசியாவைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்து மக்கள் மத்தியிலும் கேளிக்கைகள் மற்றும் உல்லாசச் சுற்றுல்லாக்கள் இக்காலத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் க்ரூஸ் என்றழைக்கப்படும் உல்லாசக் கப்பலில் ஐந்து நாட்கள் மேற்கொண்ட பயண விவரங்களைச் சற்று கற்பனை கலந்து இந்நூலில் சிங்கப்பூரைச் சேர்ந்த கிருத்திகா எழுதியுள்ளார். ஒரு உல்லாசக் கப்பல் எப்படியிருக்கும் என்பதைச் சராசரி மக்கள் […]

Read more

108 திருப்பதிகள் (பாகம் 5)

108 திருப்பதிகள் (பாகம் 5), ப்ரியா கல்யாணராமன், குமுதம் பு(து)த்தகம், பக். 192, விலை 200ரூ. மகாவிஷ்ணு எப்போதும் இருந்து அருள்பாலிக்கும் 108 திருப்பதிகள் ஒவ்வொன்றுக்கும் நேரில் சென்று தங்கி தரிசித்து அதன் விவரங்களை பக்தர்களுக்காக வழங்கியுள்ளார் ப்ரியா கல்யாணராமன். புண்ணிய ஸ்தலங்களை நேரில் தரிசிக்கும் அனுபவத்தை, இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்குவதாக உள்ளது. இதற்கு முன் வந்த நான்கு பாகங்களைப் போலவே இதுவும் குமுதம் பக்தி ஸ்பெஷலில் தொடராக வந்தபோது பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. காஞ்சிபுரத்தில் திரு நிலாத் திங்கள் தூண்டத் […]

Read more

முக்கோணக் கிளிகள்

முக்கோணக் கிளிகள், சி.ஜெயபாரதன்(கனடா), தாரிணி பதிப்பகம், சென்னை, பக். 92, விலை 75ரூ. முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணலாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இம்முக்கோணக் காதல் கதை படக் கதையாக நூல் வடிவம் பெற்றுள்ளது. கனடா எழுத்தாளர் சி. ஜெயபாரதன், சிவா-சித்ரா-அவள் தாய் புனிதா ஆகியோரின் முக்கோணக் காதலில் ஜெயிப்பது யார்? என்ன காரணம்? அது சரியா? என்பதை சுவைபட எழுதியுள்ளார். ஓவியர் தமிழின் ஓவியங்கள் கதைக்கு உயிரூட்டுகின்றன. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/6/2015.   —- மனஅலசல், க. செல்லப் […]

Read more

நான் கண்ட மாமனிதர்கள்

நான் கண்ட மாமனிதர்கள், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, பக். 152, விலை 70ரூ. பேராசான் டாக்டர் மு. வரதராசனார், கிராமங்களுக்காக வாழ்ந்த கர்மயோகி ரா. குருசாமி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார், காந்தியப் பேராசான் மகரிஷி க. அருணாசலம், காந்தியடிகள் கனவுகண்ட கிராம சுயராஜ்யத்தை உருவாக்க வாழ்நாளெல்லாம் தொண்டு செய்த கோ. வேங்கடாஜலபதி, அன்னைதெரசா போல் தமிழகத்திற்கு சேவை செய்த பெல்ஜியத்தைச் சேர்ந்த அன்னை லியோபிரவோ, மக்கள் தலைவர் ப. ஜீவானந்தம், தனித்துவம்மிக்க சர்வோதயத் தலைவர் ச.ஜெகந்நாதன், காந்தி முதல்வர் […]

Read more

எட்டு கதைகள்

எட்டு கதைகள், இராஜேந்திர சோழன், வம்சி புக்ஸ், விலை 100ரூ. சிறந்த சிறுகதைகள் சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை, மேலை நாடுகளிலிருந்துதான் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழில் சுவீகரித்தோம். புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா. போன்ற சாதனையாளர்களின் பங்களிப்பால் தமிழ்ச் சிறுகதை தொடக்க நிலையிலேயே உயிர்ப்பையும் வளத்தையும் நுட்பங்ககளையும் பெற்றுவிட்டது. தமிழின் வளமான சிறுகதை மரபின் தொடர்ச்சியாக, இரோஜந்திர சோழன் எழுதி,  எண்பதுகளில் வெளியான எட்டு கதைகள் சிறுகதைத் தொகுப்பு பேசப்பட்டது. மனிதனின் கோணல்களையும் பிறழ்களையும் நுட்பமாகப் பேசிய அசலான சிறுகதைக்காரர் இராஜேந்திர சோழன். வடக்குத் […]

Read more
1 66 67 68 69 70 336