புறநானூறு மூலமும் உரையும்

புறநானூறு மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர்., வெளியீடு டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, விலை 400ரூ. முச்சங்கத்துள் கடைசி சங்க காலப் புலவர்கள் ஆக்கிய எட்டுத்தொகை நூல்கள் எட்டாவதாகப் போற்றப்படுவது புறநானூறு. காலத்தால் அழியும் நிலையில் இருந்த இதனை, தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் தேடிக் கண்டுபிடித்து புதுப்பித்து, பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் 1894-ம் ஆண்டு முதல் முறையாக வெளியிட்டார். தற்போது வெளியாகி இருக்கும் இந்த நூலில் புறநானூற்றுப் பாடல்கள் அனைத்தும் எளிமையான உரையுடன் இடம் பெற்று இருப்பது, படிக்க சுவையாகவும், மிக்க பயன் உள்ளதாகவும் […]

Read more

ஒரு கதை ஒரு விதை

ஒரு கதை ஒரு விதை, ராம்குமார் சிங்காரம், குமுதம் புத்தகம், பக். 112, விலை 90ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024748.html பொதுவாக 20 பக்கங்கள் எழுதி, அதன் மூலம் புரிய வைக்கக்கூடிய ஒரு கருத்தை, இரண்டே பக்கங்களில் மிக அழகாகப் புரிய வைக்க கதைகள் உதவும். அதைத்தான் நூலாசிரியர் இந்தப் புத்தகத்தில் செய்துள்ளார். கல்கண்டு வார இதழில் தொடராக வெளிவந்து, தற்போது குமுதம் பு(து)த்தகத்தால் நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. முல்லா நஸ்ருதீன் கதை, தெனாலிராமன் கதை, பீர்பால் கதை என, […]

Read more

சாதேவி

சாதேவி, ஹரன் பிரசன்னா, மயிலை முத்துக்கள், சென்னை, விலை 300ரூ. விரியும் அக உலகம்! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023779.html ஹரன் பிரசன்னா எழுதிய 34 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு சாதேவி என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளன. பெரும்பாலும் சமூகத்தில் வலுவிழந்த மாந்தர்களைப் பற்றியே இக்கதைகள் பேசுகின்றன. மனித உறவுகளின் நுட்பமான இயங்கியலை பதிவு செய்கின்றன. வயதான அம்மாக்கள், குடும்பபாரம் சுமக்கும் மாமிகள், வீட்டு வேலை செய்யும் மாமாக்கள், கணவனை இழந்த விதவைகள், மாற்றுத் திறனாளிப் பெண், மரணத்துக்குப் பிந்தைய குடும்ப […]

Read more

மதங்களை மறப்போம்! மனிதனை நேசிப்போம்!

மதங்களை மறப்போம்! மனிதனை நேசிப்போம்!, மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 130ரூ. மதங்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்தோடு பகவத்கீதை, பைபிள், குரான் போன்ற வேதப் புத்தகங்களிலிருந்து ஒற்றுமையுள்ள வாக்கியங்களை தேர்ந்தெடுத்து விளக்கம் அளிக்கிறது இந்நூல். இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு ஆகியவற்றின் ரகசியத்தை உலகில் இதுவரை எந்த நூலாசிரியரும் கண்டுபிடித்து எழுதவில்லை. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்த அந்த ரகசியத்தை முதன் முறையாக இந்நூலில் வெளிப்படுத்துகிறேன் என்கிறார் நூலாசிரியர் எம்.ஜி.ஆரோக்கியராஜன். இறைவன் பெயரில் பல மதங்களை ஏற்படுத்திக் கொண்டு அந்த மதப்பிரிவுகளில் மனிதர்கள் மனக்கசப்புடன் […]

Read more

கருநாவு

கருநாவு, ஆழியாள், மாற்று வெளியீடு, சென்னை, விலை 60ரூ. புலம்பெயர் வாழ்வியல் வலிகள் புலம்பெயர் இலக்கியங்களுள் பெண் படைப்புகளுள் தன்னை முனைப்புடன் பதிவு செய்துகொள்ளும் கவிதைகள். எவ்வளவு தவிர்த்தும் சில கவிதைகள் இனம் புரியாத ஒரு உந்துதலை, ஆர்மூடுகல் மனநிலையை மீண்டும் மீண்டும் என்னுள் ஏற்படுத்துகின்றன. அதனாலே அவை ஏதோ ஒரு உத்வேகத்தோடு சடுதியாக எழுத்தில் பதியப்படுகின்றன. சில கவிதைகள் பள்ளிக் குழந்தைகள் போன்று தொடர்ந்து பேசிக்கொண்டே வருவதால் ஒரு சிட்டுக்குருவி போலே தொடர்ந்து கண்ணாடியைக் கொத்திக் கொண்டே இருப்பதால் அவை தரும் செல்லத் […]

Read more

சிறகை விரிக்கும் மங்கள்யான்

சிறகை விரிக்கும் மங்கள்யான், தந்தி பதிப்பகம், பக். 256, விலை 180ரூ. கையருகே செவ்வாய் 2013ம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதி பூமியில் இருந்து மங்கள்யான் செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. இந்த நிகழ்வுகளை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, அறிவியல் திறனோடு எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் நேர்முக வர்ணனை செய்வதைப் போல தினத்தந்தியில் தொடர் கட்டுரையாக எழுதி வந்தார். செவ்வாய்ப் பயணம் ஏன்? செயற்கைக்கோள் பற்றிய தகவல்கள், செயற்கைக்கோளின் வடிவமைப்பு, பயண வழியைத் தேர்ந்தெடுப்பது எப்படி? செவ்வாய் கிரகத்தில் […]

Read more

பட்டுத்தெறித்த பார்வைகள்

பட்டுத்தெறித்த பார்வைகள், பேராசிரியர் தி. இராசகோபாலன், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 75ரூ. ஆங்கிலத்திலும், தமிழிலும், பேச்சாற்றலிலும், எழுத்தாற்றலிலும் ஒருங்கே வல்லவரான பேராசிரியர் தி. இராசகோபாலன் எழுதியுள்ள பட்டுத்தெறித்த பார்வைகள் என்ற நூலில் உள்ள கருத்துகள், நடைகள் எல்லாமே பொறிகளாகத்தான் திகழ்கிறது. எடுத்துக்காட்டாக சாயம் போன சேலையை பார்த்திருப்பீர்கள். சாயம் போன சொக்காயைப் பார்த்திருப்பீர்கள். சாயம் போன ஒரு நாட்டை பார்த்திருக்கிறீர்களா? எந்த நாடு அந்த நாடு? எந்த நாடு விவசாயத்தை புறக்கணித்து, விவசாயிகளை தற்கொலைக்கு ஆளாக்குகின்றதோ, அந்த நாடு சாயம் போன நாடு. […]

Read more

போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், எஸ். குருபாதம், மணிமேகலைப் பிரசுரம், பக். 304, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023529.html யாழ்ப்பாணத் தமிழரான இந்நூலாசிரியர், பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி வருபவர். போதிதர்மரைப் பற்றிய அற்புதமான பல விஷயங்களைத் தேடிப் பிடித்து இந்நூலில் தொகுத்துள்ளார். புத்த பெருமானின் மறுஅவதாரமாகப் பேசப்படும் போதி தர்மர், தமிழகத்தில் தோன்றிய பௌத்த ஞானியாவார். இவர் ஆன்மிகம் மட்டுமின்றி, அறிவியல், தற்காப்புக் கலை, அக்குபஞ்சர், சித்த மருத்துவம், உடல் உறுப்புகள் தானம் பற்றிய மருத்துவ விஞ்ஞானம், […]

Read more

உலகத்தின் தோற்றமும் வரலாறும்

உலகத்தின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ரத்னம், சேது அலமி பிரசுரம், பக். 272, விலை 170ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023188.html புவியின் 460 கோடி ஆண்டுகள் வரலாற்றை, 17 தலைப்புகளின் கீழ் சுருக்கி தந்துள்ளார் ஆசிரியர். உலக தோற்றத்திற்கான அணுக்கள் பற்றி சிறிய விளக்கத்தோடு, புவியின் வரலாற்றை துவங்குகிறார். இயங்குகின்ற ஒன்று, வளர்ச்சியை பெறும் ஒன்று, மாற்றத்தை அடையும் என்பதற்கிணங்க, அணுக்கள், பிரம்மாண்ட விண் பாறைகளாக உருவம் பெற்றன என, எளிய உரைநடையில் அறிவியலை தருகிறார் ஆசிரியர். ஒவ்வொரு […]

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், பக். 352, விலை 220ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024366.html தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர், தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்திருக்கிறார் இந்த நூலின் மூலம். ஒரு திரைக்கதாசிரியராக, உதவி இயக்குனராக எத்தனை போராட்டங்களைச் சந்தித்து, இயக்குனராக வேண்டியிருந்தது. அதன்பின் அந்தப் புகழைத் தக்க வைத்துக் கொள்ள, எத்தனை போராட வேண்டியிருந்தது என்று சினிமாவைத் தாண்டிய பல விஷயங்கள் நூலில் அடங்கியிருப்பது, திரைத்துறையில் வெல்வதற்கு போராடும், உதவி இயக்குனர்கள் […]

Read more
1 64 65 66 67 68 336