திருவருட்பா

திருவருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய திருஅருட்பா எளியவுரை, ஆறு திருமுறைகள் மற்றும் திருவருட்பா உரைநடை, புலவர் அடியன் மணிவாசகன், முதல் திருமுறை, பக். 760, விலை 400ரூ, இரண்டாம் திருமுறை, பக். 715, விலை 360ரூ, மூன்று – நான்காம் திருமுறைகள், பக். 352, விலை 200ரூ, ஐந்தாம் திருமுறை, பக். 560, விலை 280ரூ, ஆறாம் திருமுறை, தொகுதி 1, பக். 947, விலை 480ரூ, ஆறாம் திருமுறை தொகுதி 2, பக். 1122, விலை 550ரூ, திவட்பா உரை […]

Read more

நாடு படும் பாடு

நாடு படும் பாடு, ஆர். நடராஜன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. கல்லூரி முதல்வராகவும், பத்திரிகையாளராகவும், அமெரிக்கத் தூதரக அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றிய இந்நூலாசிரியர், தமிழிலும், ஆங்கிலத்திலும் 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பத்திரிகைகளில் எதையும் தெளிவாகவும், துணிவாகவும் எழுதும் அரசியல் விமர்சகர் என்ற சிறப்பும் இவருக்குண்டு. இந்நூலில் அரசியல், சமுதாயம், பொருளாதாரம் போன்றவை குறித்து துக்ளக் உட்பட பல பத்திரிகைகளுக்கு எழுதியவற்றில், சிறப்பான 51 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸின் கடந்த கால ஆட்சி குறித்த இவரது கடுமையான […]

Read more

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன், வெ. நீலகண்டன், சூரியன் பதிப்பகம், விலை 150ரூ. இந்திய மன்னர்களில் எவரும் செய்யாத சாதனையாக, தெற்கு ஆசியாவின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த மாமன்னர் ராஜேந்திரன் பற்றிய முழுமையான தகவல்கள், சுவையான நாவல் போல விறுவிறுப்புடன் ஆக்கித் தரப்பட்டுள்ளது. சோழர்களின் வரலாறு, மன்னர் ராஜேந்திரன் ஆட்சித் திறன், அவரது கப்பல் படை சாகசங்கள், இலங்கை மன்னன் மகிந்தனை போரில் வென்று கைதியாகக் கொண்டுவந்தது, கங்கை கொண்ட சோழீச்வரம் கோவில் எழுப்பப்பட்ட விதம், அவரது இறுதிக் காலம் எப்படி […]

Read more

இலட்சியப் பெண்டிர்

இலட்சியப் பெண்டிர், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 125ரூ. சங்க காலம் முதல் இன்று வரை இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய பெண்கள் ஏராளம். அது பற்றிய அரிய செய்திகள் பலவற்றை இந்த நூலில் கூறுகிறார் தாயம்மாள் அறவாணன். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர்கள்தான். அதிலும் பெண்கள் 3 சதவீதம் பேர்களே கல்வி கற்றவர்கள். பெண்கள், பள்ளிக்கூடத்துக்கு சென்று படிக்கும் வழக்கம் வெள்ளையர்களின் வருகைக்குப்பின்னரே ஏற்பட்டது. கி.பி. 1657ல் ஹென்றிக் பாதிரியார், தூத்துக்குடிக்கு அருகில் உள்ள புன்னைக் […]

Read more

செம்பியன்மாதேவி கலைக்கோயில்

செம்பியன்மாதேவி கலைக்கோயில், கோ. எழில் ஆதிரை, இயல், விலை 70ரூ. இன்றும் வாழும் மாதேவி! பொன்னியின் செல்வனில் அமரர் கல்கி உயர்த்திக் காட்டிய உன்னதப் படைப்பு, உச்சரிக்கும்போதே உள்ளம் பரவசமடையும் பெயர் செம்பியன் மாதேவி. கண்டராதித்த சோழனின் மனைவியாக, உத்தம சோழனின் தாயாக, முதலாம் இராசராச சோழனின் பாட்டியாக, பராந்தகன், சுந்தரசோழனின், கண்டராதித்தன், அரிஞ்சயன், உத்தமசோழன், முதலாம் இராசராசன் ஆகிய ஆறு மன்னர்களின் ஆட்சிவரை இறைப் பணியிலும் கலைப்பணியிலும் ஈடுபட்டு ஏறக்குறைய 80 ஆண்டுகள் வாழ்ந்து புகழ்பெற்றவர் செம்பியன் மாதேவி. அவரின் முழு வாழ்க்கை […]

Read more

இப்படிக்கு அன்புடன் – ஆனந்தியின் கடிதங்கள்

இப்படிக்கு அன்புடன் (ஆனந்தி கடிதங்கள், தொகுப்பாசிரியர் சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், பக். 422, விலை 300ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024686.html அமரர் கல்கியின் புதல்வி ஆனந்தி ராமசந்திரன் எழுதிய இலக்கியத் தரம் வாய்ந்த கடிதங்களின் தொகுப்பு. தாயார் ருக்மணி அம்மாள், குஞ்சக்கா என்று பிரயமுடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்., சதாசிவம், கணவர் ராமசந்திரன், உறவினர்கள், இளைய தலைமுறையினருக்கும் பிறருக்கும் ஆனந்தி எழுதிய கடிதங்கள் பயணம் செய்த இடங்களைப் பற்றியெல்லாம் மிக விரிவாக எழுதியிருப்பது இந்நூலைப் பயண இலக்கியமாகவும் மிளிர வழி […]

Read more

பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்

பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை, பக். 264, விலை 140ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000022419.html இன்றைய தலைமுறை நம் முன்னோர்களைப் பற்றியும் அவர்களது சாதனைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு உதவும் நூல். குழந்தைகளின் மனதில் எப்போதும் முன்னோர்களைப் பற்றிய தாழ்வான எண்ணங்களை விதைத்துக்கொண்டே இருந்தால், அவர்கள் தங்கள் முன்னோர்களின் மீது மரியாதை இல்லாமல் இருப்பதோடு மட்டுமின்றி, தாங்களும் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட நிலை வரக்கூடாது என்பதற்கான முயற்சிதான் […]

Read more

பனியன்

பனியன், தி.வெ. இராசேந்திரன், அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 304, விலை 200ரூ. பனியன் நகரம் என்று அழைக்கப்படும் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்களின் நிலை எப்படி இருந்தது? என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல். சென்னை போன்ற பெருநகரத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு எப்போதோ கிட்டிய உரிமைகள் – அரசால் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டஇ.எஸ்.ஐ., பி.எஃப், பிடித்தம் செய்வது போன்றவைகூட அப்போது திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. வீட்டு வாடகைப்படி, […]

Read more

கற்க கசடற விற்க அதற்குத் தக

கற்க கசடற விற்க அதற்குத் தக, பாரதி தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 248, விலை 120ரூ. இன்றைய நவீன உலகம் கல்வியை, மிகப் பெரிய வியாபாரப் பொருளாக்கியிருப்பதை அம்பலப்படுத்தும் நூல். நான்காம் வகுப்பு மாணவனுக்கு டேப்லேட் கணினி, ப்ராஜெக்ட் செய்ய ரூ. 10 ஆயிரம் செலவு, மேஜை – நாற்காலியை உடைத்துவிடாமலிருக்க ரூ. 30 ஆயிரம் பிணையத்தொகை, அரசு கட்டணத்தை அலட்சியப்படுத்தி அதைவிட 4 மடங்கு கூடுதல் கட்டணம், தெருமுனை மட்டுமே வந்து செல்லும் பள்ளிப் பேருந்துக்கு ரூ.16 ஆயிரம் என […]

Read more

கடலும் கிழவனும்

கடலும் கிழவனும், எர்னஸ்ட் ஹெமிங்வே, மொழிபெயர்ப்பு ச.து.சு.யோகியார், எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. வயதில் முதிய மீன்பிடிக் கிழவர் சாண்டியாகோவுக்கு 84 நாட்கள் தொடர்ந்து கடலுக்குச் சென்றும் மீன் சிக்காத துரதிர்ஷ்டம் நேர்கிறது. அந்த துரதிர்ஷ்டம் பிடித்த கிழவருக்கு உதவியாளனாக இருப்பதற்குக்கூட யாரும் விரும்பாத நிலையில், மீனைத் தேடி ஆழ்கடலுக்குள் செல்கிறார். 18 அடி நீள மீன் ஒன்று சிக்குகிறது. அந்த மீன் சாண்டியாகோவையும் படகையும் நிலைகுலைய வைக்கும் போராட்டம்தான் இக்கதை. கடைசியில் சாண்டியாகோ வெல்கிறார். ஆனால் அவரால் மீனைக் கரைக்குக் கொண்டுவர முடிந்ததா […]

Read more
1 62 63 64 65 66 336