தமிழ்நாடு (நூற்றாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரைகள்

தமிழ்நாடு (நூற்றாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரைகள், ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 340, விலை 260ரூ. அனுபவங்களின் வழியே ஒரு பயணம் பயண அனுபவங்களைப் பதிவு செய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழில் தொடங்கிவிட்டது. வெளியுலகம் தொடர்பான செய்திகளைத் தனி மனிதர்களின் பயணங்கள்தான் உள்ளூர் மக்களிடம் கொண்டுசேர்த்தன. தமிழில் உரைநடை வளர்ந்துகொண்டிருந்த காலத்திலேயே பயணக் கட்டுரைகளும் எழுதப்பட்டத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கி 1960கள் வரை எழுதப்பட்ட பயணக் கட்டுரைகளின் […]

Read more

தில்லை என்னும் திருத்தலம்

தில்லை என்னும் திருத்தலம், சந்திரிகா சுப்ரமண்யன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 180, விலை 110ரூ. நடராஜரின் திருவுருவம் மிகப்பெரிய தத்துவத்தை உள்ளடக்கியது என்பார்கள். நடராஜ பெருமானுக்கு முக்கியத்தும் தரும் தில்லை திருக்கோயில் வெளிப்படுத்தும் தத்துவமே சிதம்பர ரகசியம். பஞ்சபூதங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை, காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி, நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயங்கள், ஒரே நேர்கோட்டில் சரியாக,  79 பாகை, 41 கலை கிழக்கில் தீர்க்க ரேகையில் அமைந்திருப்பதை எடுத்துக்காட்டி, இது பொறியியல், புவியியல், வானவியலின் உச்சகட்ட அதிசயம் என்று எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர். […]

Read more

ஒரு வீணையின் விசும்பல்

ஒரு வீணையின் விசும்பல், தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்த இந்நூலாசிரியரின் இச்சிறுகதைத் தொகுப்பு, அவருக்குப் பெரும் எழுத்தாளருக்குரிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ளது எனலாம். இந்நூலில் அவரது 21 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமியக் குடும்பங்களின் கதைகளாக உள்ளதால், அவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள், கலாசாரம், வழிபாட்டு முறைகள், இளைய தலைமுறையினரைப் பாதிக்கும் நவீனமயம்… என்று பல்வேறு கோணங்கள் இக்கதைகளில் படம்பிடித்துக் காட்டப்படுகிறது. இக்கதைகள் சில இஸ்லாமிய இதழ்களிலும், தூது வலைத் […]

Read more

கம்பன் கவியமுதம்

கம்பன் கவியமுதம், பேராசிரியர்கள் இரா.மோகன், நிர்மலாமோகன், வானதி பதிப்பகம், பக். 152, விலை 80ரூ. கம்பன் காவியத்தை முழுமையாக கற்கும் பேறு எல்லாருக்கும் கிடைப்பது அரிது. அது படிக்க படிக்க விரிந்து கொண்டே இன்பம் சேர்க்கும் பாடற்கடல். அதில் நூலாசிரியர்கள் நீந்தி தாங்கள் பருகியதை, அதன் சுவையை இனிமை குன்றாது, நமக்கும் தரும் அரிய நூல் இது. தெய்வப் புலவர் கம்பருயை சொல்லழகையும் பொருளழகையும் நமக்கு விளக்கும் இடம் சவை. கம்பர் தரும் செஞ்சொற் கவியின்பத்தையும், நடைச்சித்திரத்தையும் இவர்கள் தரும் எடுத்துக்காட்டுடன் படிக்கப் படிக்க […]

Read more

தித்திக்கும் தீந்தமிழ்

தித்திக்கும் தீந்தமிழ், கவிஞர் கா. வேழவேந்தன், மணிவாசகர் பதிப்பகம், பக். 175, விலை 100ரூ. கவிஞர் கா. வேழவேந்தன் சங்க இலக்கியம், சமகால இலக்கியம், தமிழகத் தமிழரின் படைப்புகள், புலம்பெயர் தமிழரின் ஆக்கங்கள் என்று ஒன்றுவிடாமல் தன் ஆய்வுப் பார்வையைச் செலுத்தி தீந்தமிழின் சுவையை அள்ளித்தரும் தொகுப்பு நூல் இது. அண்ணாவின் உயர் தனிப் பண்புகள், பெரியார், காந்தியடிகள், மு.வ.வின் பெருமைகள் என்று சான்றோர் பலரின் எளிமை, நேர்மை, ஒழுக்கத்தை, மன உறுதியை, கொள்கைப் பிடிப்பை மற்றவர் உணர்ந்து நடக்கும் வகையில் திறம்படத் தந்துள்ளார். […]

Read more

கலைமாமணி வி.சி. குகநாதன்

கலைமாமணி வி.சி. குகநாதன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், விலை 200ரூ. 250 படங்களுக்கு கதை, வசனம் எழுதிய வி.சி. குகநாதன். எம்.ஜி.ஆரால் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் வி.சி. குகநாதன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழிலும் மற்றும் பல மொழிகளிலும் தயாரான 250 படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். 48 படங்களை இயக்கியவர். 51 படங்களைத் தயாரித்தவர். திருப்பங்கள் பல நிறைந்த இவருடைய வாழ்க்கை வரலாற்றை கலைமாமணி வி.சி. குகநாதன் என்ற தலைப்பில் புத்தகமாக […]

Read more

ஸ்ரீரங்கம் பற்றி வண்ணப்புத்தகம்

ஸ்ரீரங்கம் பற்றி வண்ணப்புத்தகம், வேத ப்ரகாசனம் வெளியீடு, சென்னை, விலை 250ரூ. பூலோக வைகுந்தம் என்று வர்ணிக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். அதைப்பற்றிய அபூர்வ தகவல்களுடன் அரங்கமா நகருளானே என்ற தலைப்பில் அரிய புத்தகம் வெளிவந்துள்ளது. ஸ்ரீ ரங்கம் பற்றிய அனைத்து விவரங்களுடன், முழுவதும் ஆர்ட் பேப்பரில் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. பக்கத்துக்குப் பக்கம் வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. புத்தகத்தை எழுதிய வேதா டி.ஸ்ரீதரனம் வெளியிட்ட பதிப்பகத்தாரும் பாராட்டுக்கு உரியவர்கள். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.   —-  ஆடும் மயில், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, […]

Read more

திருக்குர்ஆன் விளக்கவுரை

திருக்குர்ஆன் விளக்கவுரை, இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், சென்னை, விலை 130ரூ. திருக்குர்ஆனுக்கு மவுலானா சையத் அபுல் அக்லா மவுதூதி (ரஹ்) எழுதிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது. இதை இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம் மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே அல் பாத்திஹா, அல் கஹ்பு ஆகிய இரு அத்தியாயங்களையும், அதைத் தொடர்ந்து மர்யம், தாஹா ஆகிய அத்தியாயங்களையும், இதன் பின்னர் அல் அராப் என்ற அத்தியாயத்தையும் வெளியிட்டது. இப்போது இந்த நூல் அல்அன்பால், அத்தவ்பா ஆகிய அத்தியாயங்களுக்கான விளக்கவுரையை தமிழில் மவுலவி எம்.ஐ. […]

Read more

சுந்தர காண்டம்

சுந்தர காண்டம், எஸ்.என். பி.ஜெயசிங், ஆனந்த நிலையம், சென்னை, விலை 60ரூ. ராமபிரானுக்காக சீதாதேவியிடம் அனுமன் தூது சென்ற காண்டத்தின் பெயர் இந்நூலின் தலைப்பாக இடம் பெற்றிருந்தாலும், ராமாயணத்தின் ஆறு காண்டங்களும் இந்த புத்தகத்தில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/7/2015.   —- அமுதமொழிகளின் அற்புத வரிகள், குந்தவையார் பதிப்பகம், தஞ்சாவூர், விலை 90ரூ. பயனுள்ள பொன்மொழிகளின் தொகுப்பு நூல் இது. நாமறிந்த வழக்கமான பொன்மொழிகளுடன், நூலாசிரியர் தஞ்சை பா.திருநாவுக்கரசு, திரட்டிச் சேகரித்த ஏராளமான அற்புத வரிகள் நூலுக்கு பெருமை சேர்க்கின்றன. நன்றி: […]

Read more

கம்பரும் வால்மீகியும்

கம்பரும் வால்மீகியும், அரிசோனா மகாதேவன், தாரிணி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ.   To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024576.html வெளிநாட்டு வாழ் தமிழரான இந்நூலாசிரியர், இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றின் மீது தனக்குள்ள ஈடுபாடு எத்தகையது என்பதை இந்நூலின் மூலம் உணர்த்தியுள்ளார். வடமொழியில் ராமாயணத்தை படைத்த வால்மீகிக்கும், அதை தமிழில் உருவாக்கிய கம்பருக்கும் ஆயிரக்கணக்கான வருட இடைவெளியுண்டு. ஆயினும், இவ்விருவரின் கவித் திறனும், கற்பனைத் திறனும் கற்றோரால் இன்றும் ஒப்பிட்டுப் புகழப்படுகிறது. இந்நூலாசிரியரும் அந்த ஒப்பீட்டு […]

Read more
1 67 68 69 70 71 336