வளரும் பேச்சாளருக்கு

வளரும் பேச்சாளருக்கு, முனைவர் மு. கலைவேந்தன், பதிப்பாசிரியர் கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 200ரூ. மேடைப்பேச்சு ஒரு கலை. சிலருக்கு மேடை ஏறினாலே உதறல் எடுக்கும். அச்சத்தைப் போக்கி, மேடைப்பேச்சில் வல்லவர் ஆவதற்கான வழிமுறைகளை இந்நூலில் விளக்குகிறார், முனைவர் மு. கலைவேந்தன். தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றோர், சிறந்த மேடைப்பேச்சுக்கு முன்னோடிகள். அதன்பின் அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பந்த் ஆகியோர் மேடைத் தமிழை […]

Read more

விடியலை நோக்கி ஒரு மாற்றம்

விடியலை நோக்கி ஒரு மாற்றம், கி. கார்த்திகேயன், மணிமேகலைப் பிரசுரம், விலை 170ரூ. “ஊழல்களின் தாக்கம்”, “விவசாயமே நம் சுவாசம்”, “உணவே உயிர்”, “குப்பைக் கூடையாகும் இந்தியா” முதலான தலைப்புகளில் 44 கட்டுரைகள் கொண்ட புத்தகம். சிந்தனைக்கு விருந்து தரும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 15/3/2017.   —- விளம்பரவியல், சிவகுரு பதிப்பகம், விலை 190ரூ. வியாபாரத்துக்கு விளம்பரம் அவசியம். நாளிதழ்களில் விளம்பரம் செய்வதால் நிறைய பலன் உண்டு. விளம்பரவியல் பற்றி, தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் இராஜா வரதராஜா […]

Read more

திருமூலரும் பாரதிதாசனும்

திருமூலரும் பாரதிதாசனும், முனைவர் மா. அண்ணாதுரை, பூங்கொடி பதிப்பகம், விலை 90ரூ. திருமூலரும், பாரதிதாசனும் ஆகிய இரு மாறுபட்ட படைப்பாளிகள் பற்றிய ஆய்வு நூல். இவர்களின் கருத்துக்களை ஒரு சேரக் காண்பது கடினம். திருமூலர் காலத்தால் முற்பட்டவர். பாரதிதாசன் 19-ம் நூற்றாண்டில் தோன்றிய மிகபெருமை வாய்ந்த கவிஞர். முன்னவர் ஆத்திகத்தில் தோய்ந்த சித்தர். பின்னவர் ஆத்திகக் கவிஞராக தோன்றி, பின்னாளில் நாத்திகக் கவிஞராக மலர்ந்தார். இருவரும் இறைக்கொள்கையில் மாறுபட்டு இருந்தாலும், சமுதாய சிந்தனைகளில் ஏறக்குறைய ஒன்றாக விளங்கியவர்கள். இவர்களைப் பற்றி திறனாய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர் […]

Read more

தமிழ் மொழி இலக்கிய வரலாறு சங்ககாலம்

தமிழ் மொழி இலக்கிய வரலாறு சங்ககாலம், பூம்புகார் பதிப்பகம், விலை 200ரூ. தமிழ்நாட்டில் மூன்று சங்கங்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது. அந்த சங்கங்கள் எக்காலத்தில் இருந்தன? அதில் இடம் பெற்றிருந்த புலவர்கள் யார்? அக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் எவை? என்று ஆராய்ந்து, தான் கண்டறிந்த உண்மைகளை இந்த நூலில் எழுதியுள்ளார் தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார். அத்துடன் தமிழ் மொழியின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை பற்றியும் ராசமாணிக்கனார் புதுத்தகவல்களை விவரித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப்பின், புதிய வடிவமைப்பிலும் சிறந்த கட்டமைப்பிலும் நூல் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/3/2017.

Read more

வடமொழி வரலாறு

வடமொழி வரலாறு, பூம்புகார் பதிப்பகம், விலை 250ரூ. “வடமொழி (சமஸ்கிருதம்) ஆதிக்கத்தில் இருந்து தமிழை மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர் தேவநேயப் பாவாணர். “தேவபாஷை” என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட வடமொழி, இன்று பேச்சு மொழியாக இல்லை. கோவில்களில் அர்ச்சனை செய்வதற்குப் பயன்படும் மொழியாகவே இருந்து வருகிறது. “திராவிடத்திற்கு தாயாக மட்டுமின்றி, ஆரியத்திற்கு (வடமொழி) மூலமாகவும் தமிழ் விளங்குகிறது” என்று இந்த நூலில் ஆணித்தரமாக விளக்குகிறார் பாவாணர். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

நெஞ்சில் நிறைந்த ஏ.என். டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்

நெஞ்சில் நிறைந்த ஏ.என். டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், விலை 160ரூ- தொலைக்காட்சி இயக்குநராக பணிபுரிந்த ஏ. நடராஜனின் நினைவு கூறும் நூல். அவர் எழுத்தாளரும் கூட. ஒரு கால கட்டத்தில் சதா சர்வகாலமும் நாம் கேட்டுக் கொண்டிருந்த பெயர் இது. நிறைய ரசனை உணர்வுகள் பெருகி வந்ததால் பார்த்து வந்த பணிக்கு மேலாக கல்வி கேள்விகளில் சிறந்திருக்கிறார். இசையின் மீதான அவரது ஈடுபாடு போற்றுதற்குரியது. மொத்த நூலிலும் அவர் பற்றி எழுதியிருக்கிற கட்டுரைகளில் ஆத்மார்த்தம் தெரிகிறது. அவர் எல்லோர் மீதும் […]

Read more

இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்

இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள், சல்மான் ருஷ்தீ, தமிழில் சா.தேவதாஸ், எதிர் வெளியீடு, விலை 320ரூ. சல்மான் ருஷ்தீக்கு அறிமுகம் தேவையில்லை. அவர் தீர்க்கமான நாவல்களுக்காக மேலான கவனம் பெற்றிருப்பவர். அவரது இந்த புத்தகம் அதிக நுட்பம் நிரம்பியது. அணுக்கமான வாசிப்பு இருந்தால் இதன் மைய இழைகளை சுலபமாக தொட்டுவிடலாம். அவரது உரைநடை குறித்தும் அதன் செதுக்கிய தன்மை குறித்தும் இலக்கிய உலகில் மாய்ந்து மாய்ந்து எழுதியிருக்கிறார்கள். பெரிதாக உரையாடல்கள் ஏதும் இல்லை. படிக்கும்போதே சில குறிப்புகள் கிடைக்கின்றன. சில ஒளித்து […]

Read more

சிவபெருமானுடன் ஒரு திருநடனம்

சிவபெருமானுடன் ஒரு திருநடனம், சத்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி, தமிழில் கொரட்டூர் கே.என். ஸ்ரீநிவாஸ், கண்ணதாசன் பதிப்பகம், விலை 425ரூ. இந்து மதம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் பல்வேறுவித வினாக்களுக்கு விடை அளிக்கும் வகையில் சின்னச் சின்ன தலைப்புகளில் ஏராளமான விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பிரபஞ்ச தோற்றம், கோவில்களின் அமைப்பு, சிவனின் திருநடன தத்துவம், இறைவழிபாடு, துறவு வாழ்ககை, திருவிழாக்கள், சடங்குகள் எனப் பல தகவல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் வேதங்கள், ஆகமங்கள், திருமந்திரம் ஆகியவற்றில் இருந்து மேற்கோள் காட்டி இருப்பது […]

Read more

வேலூர் புரட்சி

வேலூர் புரட்சி, பேராசிரியர் ந. சஞ்சீவி, அலைகள் வெளியீட்டகம், விலை 60ரூ. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதி காலகட்டத்தில் மக்கள் எழுச்சியும், பல்வேறு போராட்டங்களும் வலுப்பெற்றன. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராக இந்திய மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்ற செயலுக்கு வேலூர் புரட்சி அடித்தளமாக அமைந்தது. அத்தகைய வேலூர் புரட்சி குறித்து பேராசிரியர் ந. சஞ்சீவி ஓர் ஆய்வு நூலாக வழங்கியுள்ளார். வேலூரின் தொன்மையான வரலாற்றையும் அவர் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 15/3/2017.

Read more

காலத்தை வெல்லும் திருமுறைகள்

காலத்தை வெல்லும் திருமுறைகள், (ஆன்மிகக் கட்டுரைகள்), கற்பகம் புத்தகாலயம், விலை 150ரூ. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாக, சாட்சியாக திருமுறைகள் விளங்குகின்றன என்பதை இந்த நூலின் ஆசிரியர் ராதா நடராஜன் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 15/3/2017.   —-   சித்தர்களின் சித்தமெல்லாம் சிவமயமே, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. அகஸ்தியர், திருமூலர், போகர், பத்ரகிரியார் உள்ளிட்ட 11 சித்தர்கள் பற்றிய விவரங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அம்மணி அம்மாள் என்ற பெண் சித்தர் பற்றியும் […]

Read more
1 415 416 417 418 419 505