டேவிட்டும் கோலியாத்தும்

டேவிட்டும் கோலியாத்தும், மால்கம் கிளாட்வெல், தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 352 , விலைரூ.300. பின்தங்கியவர்கள், பொருந்தாதவர்கள் எனக் கருதப்படுவோர் – பேராற்றல் வாய்ந்தவர்களாகக் கருதப்படுவோரை, தங்களது போராட்டத்தின் மூலம் எதிர்கொண்டு, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள் என்ற கருத்தை பல்வேறு உண்மை நிகழ்வுகளை உதாரணம் காட்டி இந்நூல் விளக்குகிறது . முதலாம் உலகப் போரின் முடிவில், அரேபியாவை ஆக்கிரமித்திருந்த துருக்கியின் வலிமையான ராணுவத்தை, முறையான போர் உத்திகளை அறியாத பழங்குடியின மக்களைக் கொண்டு வீழ்த்திக் காட்டிய டி.இ.லாரன்ஸ், டிஸ்லெக்சியாவால் […]

Read more

உங்களுக்கான 24 போர் விதிகள்

உங்களுக்கான 24 போர் விதிகள், செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்., சுரா பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. 1987 ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நூலாசிரியர், தமிழக காவல்துறையின் உயர் பொறுப்புகள் பலவற்றிலும், நேர்மையாகவும், திறம்படவும் பணியாற்றி முதலமைச்சர் விருது, பிரதமர் விருது என்று பல விருதுகளையும் பெற்று வருபவர். தவிர, தமிழக இளைஞர்களுக்கு u.p.s.c.பதவிகளுக்கான போட்டித்தேர்வை எதிர்கொள்ள, இலவசப் பயிற்சி அளிப்பவர். இந்நூலில்இளைய தலைமுறையினரின் தன்னார்வத்தைக் கிளரச் செய்து, அவர்களின் வாழ்க்கைப் போர்க்களத்தில் எதிர்த்து நிற்கும் தடைகளை வெற்றி […]

Read more

மெல்லக் கொல்லும் பால்

மெல்லக் கொல்லும் பால், டாக்டர் ஜெகதீசன், எம்.டி., டிசிஎச்., எம்.எஸ்சி., விலை 100ரூ. பால் நல்லதா, கெட்டதா? என்று பட்டிமன்றம் வைத்தால் நிச்சயம் யார் வெல்வர் என்று நினைக்கிறீர்கள்? கெட்டது என்ற அணியினர் தான். காரணம் அதற்கான அத்தனை ஆதாரங்களையும் திரட்டி, புள்ளி விபரங்களோடு மருத்துவர் அவர்கள், மெல்லக்கொல்லும் பால் என்னும் நூலை எழுதியிருக்கிறார். இவர், முதுநிலை மரபியல் மருத்துவம் பயின்றவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்று குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவம் பார்த்துக்கொண்டிருப்பவர். ஒரு மருத்துவர் ஆதாரங்களுடன் எழுதி இருக்கும் […]

Read more

நினைவில் நிலைத்தவர்கள்

நினைவில் நிலைத்தவர்கள், வாசகன் பதிப்பகம், விலை 100ரூ. எழுத்தாளர்கள் பொன்னீலன், மெர்வின், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், நாட்டுப்புற இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி உள்பட 29 பிரமுகர்களின் சிறப்பை விவரிக்கிறார் நூலாசிரியரும், பத்திரிகையாளருமான அகநம்பி. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.   —-   மாவலி பதில்கள், நக்கீரன் பதிப்பகம், விலை 125ரூ. ‘நக்கீரன்’ இதழில் வெளியான கேள்வி – பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர். மாவலி என்ற பெயரில் கேள்விகளுக்கு பதில் அளித்தவர் கோவி. லெனின். ஒவ்வொரு கேள்விக்கும் அவர் அளித்த பதில் சுவையாகவும், சிந்தனையைத் […]

Read more

ராமாமிர்தம்

ராமாமிர்தம், லா.ச.ரா. நாவல்கள், காவ்யா, பக். 720, விலை 700ரூ. தமிழ் இலக்கிய முன்னோடிகளில் முக்கியமான ஒருவர் லா.ச.ராமாமிர்தம். நம்மை உணர்ச்சிமயமாக்கி, ஒரு மாய உலகுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் அவர் எழுத்துக்களுக்கு உண்டு. அவருடைய படைப்புகளை தொகுத்து, “ராமாமிர்தம்” என்ற தலைப்பில் பெருநூல்களாக வெளியிடுகிறது, “ராமாமிர்தம் 1” என்ற நூல் இப்போது வெளிவந்துள்ளது. இதில் “புத்ர”, “அபிதா”, கல்சிரிக்கிறது”, “கேரளத்தில் எங்கோ”, “கழுகு”, “பிராயச்சித்தம்” ஆகிய 6 நாவல்கள் அடங்கியுள்ளன. ராமாமிர்தத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் அன்னைக்கு அணிவிக்கப்பட்ட […]

Read more

வரலாறு படைத்த பெண்கள்

.வரலாறு படைத்த பெண்கள், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 90ரூ. இஸ்லாம் மார்க்கம் பெண்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கியுள்ளது. அவர்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள் மற்றும் உயரிய தகுதி குறித்தும் இந்த நூலில் எழுத்தாளரும் மார்க்க அறிஞருமான மவுலவி நூஷ்மஷ்ழரி அழகிய முறையில் எழுதியுள்ளார். கொடுஞ்கோலன் பிர் அவ்னின் மனைவி மற்றும் இம்ரானின் மகள் மர்யம் ஆகியோரை திருக்குர்ஆன் முன்மாதிரி பெண்களாக கூறுகிறது. அவர்கள் குறித்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்து போர்க்களத்திலும், அரசியல் களத்திலும் பல அரிய சாதனைகள் புரிந் […]

Read more

பண மதிப்பு நீக்கம்

பண மதிப்பு நீக்கம், ஷ்யாம் சேகர், தேவராஜ் பெரியதம்பி, கிழக்கு பதிப்பகம், விலை 75ரூ. 500ரூபாய், 1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை, கடந்த நவம்பர் 8-ந் தேதி அன்று தொலைக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பண மதிப்பு நீக்கத்துக்கு அவசியம் ஏற்பட்டது ஏன்? இந்த அறிவிப்பால் இதுவரை சாதித்தது என்ன? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான விடை காண முயற்சிக்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 15/2/2017.   —-   சைவ சமையல் அசைவ உணவு வகைகள், மெர்குரிசன் […]

Read more

மாடர்ன் தியேட்டர்ஸ்

மாடர்ன் தியேட்டர்ஸ், விஜயா பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ- திரைப்படத் தயாரிப்பில் ஜெமினி, ஏவி.எம்., பட்சிராஜா, ஜுபிடர் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலக் கட்டத்தில், அவர்களுடன் முன்னணியில் இருந்த நிறுவனம் “மாடர்ன் தியேட்டர்ஸ்.” இதன் அதிபரான டி.ஆர். சுந்தரம், 97 படங்களைத் தயாரித்து வெளியிட்டார். அவர் மறைவுக்குப் பின் நிர்வாகத்தை ஏற்ற அவர் மகன் ராமசுந்தரம், படங்களின் தயாரிப்பு எண்ணிக்கையை 118 ஆக உயர்த்தினார். தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தைத் தயாரித்தவர் டி.ஆர். சுந்தரம்தான். மாடர்ன் தியேட்டர்சில் பணியாற்றிய கலைஞர் மு. […]

Read more

எளிமையின் ஏந்தல்

எளிமையின் ஏந்தல், தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, விலை 240ரூ. கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர். நல்லகண்ணுவின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார்கள். மொத்தம் 48 கட்டுரைகள், எல்லாம், படிப்பவர்களை சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். “கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்” என்ற கட்டுரையில் நல்லகணணு கேட்கிறார்- “ராஜீவ்காந்தி – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை இலங்கை அரசுமதிக்கவில்லை. ஆனால், நாம் மட்டும் எவ்வாறு கச்சத்தீவு ஒப்பந்தத்தைப் புனிதமாகக் கருதமுடியும்? புனிதத்தின் பெயரில் இந்திய உயிர்கள் […]

Read more

சிகரத்தை நோக்கி

சிகரத்தை நோக்கி, குவைத் கா. சேது, மணிமேகலைப்பிரசுரம், விலை 240ரூ. தமிழகத்தில், செம்பொன்மாரி என்ற சிறுகிராமத்தில் பிறந்து, மும்பையில் வேலை பார்த்து, பின்னர் குவைத் நாட்டுக்குச் சென்ற கா.சேது, அங்கு விமானப் பணியாளராக சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றினார். குவைத் தமிழ்ச் சங்கத்தின் மூலம், மூத்த தலைமுறைக்கும், இளைய தலைமுறைக்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார். சிறந்த எழுத்தாளரான இவர், தன் வாழ்க்கை வரலாற்றை “சிகரத்தை நோக்கி” என்ற தலைப்பில் எழுதினார். அதன் இரண்டாம் பாகம் இப்போது வெளிவந்துள்ளது. தன் வாழக்கை அனுபவங்களை கதைபோல சுவைபட […]

Read more
1 414 415 416 417 418 505