108 திருப்பதிகள் (பாகம் 5)

108 திருப்பதிகள் (பாகம் 5), ப்ரியா கல்யாணராமன், குமுதம் பு(து)த்தகம், பக். 192, விலை 200ரூ. மகாவிஷ்ணு எப்போதும் இருந்து அருள்பாலிக்கும் 108 திருப்பதிகள் ஒவ்வொன்றுக்கும் நேரில் சென்று தங்கி தரிசித்து அதன் விவரங்களை பக்தர்களுக்காக வழங்கியுள்ளார் ப்ரியா கல்யாணராமன். புண்ணிய ஸ்தலங்களை நேரில் தரிசிக்கும் அனுபவத்தை, இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்குவதாக உள்ளது. இதற்கு முன் வந்த நான்கு பாகங்களைப் போலவே இதுவும் குமுதம் பக்தி ஸ்பெஷலில் தொடராக வந்தபோது பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. காஞ்சிபுரத்தில் திரு நிலாத் திங்கள் தூண்டத் […]

Read more

தில்லை என்னும் திருத்தலம்

தில்லை என்னும் திருத்தலம், சந்திரிகா சுப்ரமண்யன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 180, விலை 110ரூ. நடராஜரின் திருவுருவம் மிகப்பெரிய தத்துவத்தை உள்ளடக்கியது என்பார்கள். நடராஜ பெருமானுக்கு முக்கியத்தும் தரும் தில்லை திருக்கோயில் வெளிப்படுத்தும் தத்துவமே சிதம்பர ரகசியம். பஞ்சபூதங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை, காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி, நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயங்கள், ஒரே நேர்கோட்டில் சரியாக,  79 பாகை, 41 கலை கிழக்கில் தீர்க்க ரேகையில் அமைந்திருப்பதை எடுத்துக்காட்டி, இது பொறியியல், புவியியல், வானவியலின் உச்சகட்ட அதிசயம் என்று எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர். […]

Read more

ஸ்ரீரங்கம் பற்றி வண்ணப்புத்தகம்

ஸ்ரீரங்கம் பற்றி வண்ணப்புத்தகம், வேத ப்ரகாசனம் வெளியீடு, சென்னை, விலை 250ரூ. பூலோக வைகுந்தம் என்று வர்ணிக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். அதைப்பற்றிய அபூர்வ தகவல்களுடன் அரங்கமா நகருளானே என்ற தலைப்பில் அரிய புத்தகம் வெளிவந்துள்ளது. ஸ்ரீ ரங்கம் பற்றிய அனைத்து விவரங்களுடன், முழுவதும் ஆர்ட் பேப்பரில் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. பக்கத்துக்குப் பக்கம் வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. புத்தகத்தை எழுதிய வேதா டி.ஸ்ரீதரனம் வெளியிட்ட பதிப்பகத்தாரும் பாராட்டுக்கு உரியவர்கள். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.   —-  ஆடும் மயில், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, […]

Read more

திருக்குர்ஆன் விளக்கவுரை

திருக்குர்ஆன் விளக்கவுரை, இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், சென்னை, விலை 130ரூ. திருக்குர்ஆனுக்கு மவுலானா சையத் அபுல் அக்லா மவுதூதி (ரஹ்) எழுதிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது. இதை இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம் மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே அல் பாத்திஹா, அல் கஹ்பு ஆகிய இரு அத்தியாயங்களையும், அதைத் தொடர்ந்து மர்யம், தாஹா ஆகிய அத்தியாயங்களையும், இதன் பின்னர் அல் அராப் என்ற அத்தியாயத்தையும் வெளியிட்டது. இப்போது இந்த நூல் அல்அன்பால், அத்தவ்பா ஆகிய அத்தியாயங்களுக்கான விளக்கவுரையை தமிழில் மவுலவி எம்.ஐ. […]

Read more

சுந்தர காண்டம்

சுந்தர காண்டம், எஸ்.என். பி.ஜெயசிங், ஆனந்த நிலையம், சென்னை, விலை 60ரூ. ராமபிரானுக்காக சீதாதேவியிடம் அனுமன் தூது சென்ற காண்டத்தின் பெயர் இந்நூலின் தலைப்பாக இடம் பெற்றிருந்தாலும், ராமாயணத்தின் ஆறு காண்டங்களும் இந்த புத்தகத்தில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/7/2015.   —- அமுதமொழிகளின் அற்புத வரிகள், குந்தவையார் பதிப்பகம், தஞ்சாவூர், விலை 90ரூ. பயனுள்ள பொன்மொழிகளின் தொகுப்பு நூல் இது. நாமறிந்த வழக்கமான பொன்மொழிகளுடன், நூலாசிரியர் தஞ்சை பா.திருநாவுக்கரசு, திரட்டிச் சேகரித்த ஏராளமான அற்புத வரிகள் நூலுக்கு பெருமை சேர்க்கின்றன. நன்றி: […]

Read more

நான் கண்ட மாமனிதர்கள்

நான் கண்ட மாமனிதர்கள், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, விலை 70ரூ. பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார், கம்யூனிஸ்டடு தலைவர் ப. ஜீவானந்தம், எழுத்தாளர் நா. பார்த்தசாரதி உள்ளிட்ட 16 சான்றோர்கள் பற்றி எழுத்தாளரும், பேராசிரியருமான டாக்டர் மா. பா. குருசாமி எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம். உள்ளத்து உணர்ச்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி, அழகிய நடையில் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் எழுதியிருக்கிறார், மா.பா. குருசாமி. மாமனிதர்கள் பற்றிய அரிய தகவல்கள் பலவற்றை அறிய முடிகிறது. […]

Read more

தியாகராயநகர் அன்றும் இன்றும்

தியாகராயநகர் அன்றும் இன்றும், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ. சென்னையில் இதயம் போன்ற பகுதி தியாகராயநகர். நகைக்கடைகள், பெரிய பெரிய பட்டு ஜவுக்களிக்கடைகள் இங்கு அதிகம். அதுமட்டுமல்ல, சினிமா நட்சத்திரங்கள், வி.ஐ.பி.க்கள் நிறைய பேர் வகிக்கிறார்கள். தியாகராயநகர் முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை, அதே பகுதியில் நீண்டகாலமாக வசித்து வரும் நல்லி குப்புசாமி செட்டியார் இப்புத்தகத்தில் சுவைபட எழுதியுள்ளார். இங்கு வசித்த திராவிட இயக்கத் தலைவர்கள் பற்றிய விவரங்களும், மற்றும் ராஜாஜி, காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சத்தியமூர்த்தி, […]

Read more

இந்துமதம்

இந்துமதம், கலைஞன் பதிப்பகம், சென்னை, பக். 440, விலை 300ரூ. இந்து மதம் என்பது பல்வேறு சமயக் கொள்கையின் ஒருமைப்பாடு என்பதை தமிழ் உலகிற்கு நிறுவும் அரிய முயற்சி இந்நூல். பல மெய்ஞானிகள், நான்கு வேதங்கள், 108 உபநிடதங்கள், கீதை, பிரம்மசூத்திரம், பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம், ஆலய தரிசனம், தீர்த்த யாத்திரை என்றெல்லாம் பலவகையான எண்ணிறந்த வழிமுறைகளை நம் இந்து சமய நெறியில் எதற்காக எடுத்து வைக்கப்பெற்றுள்ளன என்பதை இந்நூலைக் கற்போர் யாவரும் புரிந்து கொள்வர். பலதரப்பட்ட மக்கள் வாழும் நம் சமூகத்தில் […]

Read more

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மெய்ப்பொருள் காண்பது அறிவு (ஸ்ரீசாலை ஆண்டவர்களின் வாக்கும் வரலாறும்), கே. நிறைமதி அழகன், விகடன் பிரசுரம், பக். 136, விலை 85ரூ. அனந்தர்களின் அற்புத குருநாதர் மெய்வழிச்சாலை என்பது, எம்மதமும் சம்மதம் எனும் ஒரு மார்க்கம். பல சமய நெறிகளைப் பின்பற்றி, உருவ வழிபாட்டை மறுக்கிறது மெய்வழிச்சாலை. கடந்த, 1922ம் ஆண்டு, காதர் பாட்சா என்பவர் ஆரம்பித்து வைத்த மார்க்கம் இது. இதை ஸ்தாபித்தவரை, சாலை ஆண்டவர் என, மெய்வழி அன்பர்கள் அழைக்கின்றனர். பல்வேறு அதிசயங்களைச் செய்த சாலை ஆண்டவர், பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், […]

Read more

ஆமுக்த மால்யத

ஆமுக்த மால்யத (சூடிக்கொடுத்தவள்), தமிழில் எளிய உரை எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம் வெளியீடு, சென்னை, பக். 352, விலை 200ரூ. தெலுங்கு மொழியின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான ஆமுக்த மால்யத கிருஷ்ணதேவராயரால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டது. விஷ்ணு சித்தரான பெரியாழ்வாரும் யமுனாச்சாரியரான ஆளவந்தாரும் விஷ்ணுவே பரம்பொருள் என்று உலகிற்கு உணர்த்தி வாழ்ந்துகாட்டியவர்கள். அவ்விருவரது வாழ்க்கையின் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள், கோதையாகிய ஆண்டாளின் பிறப்பும் ஸ்ரீமந் நாராயணனுடன் இணைந்த அவைளது வாழ்வு, மற்றும் கிளைக்கதைகளுடன் சுவைபடச் சொல்லியிருக்கிறார் கிருஷ்ண தேவராயர். இந்தக் காப்பியத்தை […]

Read more
1 71 72 73 74 75 128