ஒரு கதை ஒரு விதை

ஒரு கதை ஒரு விதை, குமுதம் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. வாழ்க்கை என்பதே போராட்டம்தான். தினமும் எத்தனையோ பிரச்சினைகளை சந்திக்கிறோம். எதிர்நீச்சல் போடுகிறவர்கள்தான், வாழ்க்கையில் முன்னேற முடியும். பிரச்சினைகளை சமாளித்து, வெற்றி பெறுவது எப்படி என்பதை, சின்னச்சின்ன கதைகள் மூலம் விளக்குகிறார், இராம்குமார் சிங்காரம். ஒவ்வொரு கதையிலும், நம்பிக்கையூட்டும் பொறிகள் பளிச்சிடுகின்றன. வெற்றி பெறுவோர் கையில் இருக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 13/5/2015.   —- வேரென நீ இருந்தாய், வசந்தா அம்பலவாணன், காரைக்கால், விலை 150ரூ. உலகிற்கு நல்லறம் புகட்டிய […]

Read more

இராமாயணம்

இராமாயணம், வெளியிட்டோர் சஞ்சீவியார், சென்னை, விலை 400ரூ. வடமொழியில் வான்மீகி முனிவர் எழுதிய இராமாயண இதிகாசம் 24,000 சுலோகங்களைக் கொண்டது. கம்பர் இக்காவியத்தை ஆறு காண்டங்களாக 12,000 விருத்தப்பாக்களால் பாடியுள்ளார். அவர் இந்நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம். இராமபிரானை மனிதத் தன்மையிலேயே வைத்து போற்றியவர் வான்மீகி முனிவர். கம்பர் இராமபிரானைத் தெய்வமாகப் போற்றியவர். கம்பரின் கவிதை கடவுள் பற்றை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் மக்கள் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. எனவே எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் இராமாயணத்தைப் படித்து, இன்புறுமாறு உரைநடை வடிவில் […]

Read more

இந்து மத சம்பிரதாயங்கள் ஏன்? எதற்காக?

இந்து மத சம்பிரதாயங்கள் ஏன்? எதற்காக?, யோகி ஸ்ரீ ராமானந்த குரு, அழகு பதிப்பகம், சென்னை, விலை 260ரூ. இந்து மதத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் கோட்பாடுகள் இறைவனை வழிபடும் முறை என்பது உள்பட அனைத்து தகவல்களையும் கொண்ட நூல். நன்றி: தினத்தந்தி, 27/5/2015.   —- செயல்திறன் மிக்க 5 எஸ்கள், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோயம்புத்தூர், விலை 35ரூ. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் தொழில் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மாற்றி அமைத்தன. இதற்கு உதவும் வகையில் ஒரு தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள். […]

Read more

பாரதத்தின் பக்த கவிகள்

பாரதத்தின் பக்த கவிகள், மு. ஸ்ரீனிவாசன், அருள் பதிப்பகம், சென்னை, பக். 264, விலை 175ரூ. ஒரு காலத்தில், கன்னட அரசால் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு, இரண்டு ரூபாய் விலையில் மக்களுக்கு வழங்கப்பட்ட குமார வியாசகனின், கன்னட பாரதம்; தெலுங்கில் கவித்ரயம் என்று போற்றப்படும் நன்னயர், திக்கணர், எர்ரப்ரகடா என்ற இலக்கிய மூம்மூர்த்திகளால் உருவான, தெலுங்கு மகாபாரதம்; இதிகாசங்களின் மொழிபெயர்ப்புகளாய் மாதவ கண்டாவி இயற்றிய, காலத்தால் முற்பட்ட, அசாமிய ராமாயணம்; தெலுங்கில் பதகவிதா பிதாமகர் எனும் உயர்பட்டம் பெற்ற, அன்னமாச்சார்யா; பண்டரிநாதரை மீட்ட பானுதாசர், ஒரிய […]

Read more

சக்தி பீடங்கள் 51

சக்தி பீடங்கள் 51, தெள்ளாறு இ. மணி, சங்கர் பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 225ரூ. பாரததேசத்தின் வரைபடத்தை உற்று நோக்கினால் அன்னை பராசக்தியின் திருவுருவை நாம் தரிசித்த உணர்வுதோன்றும். அவளே நம் இந்திய தாய். வடகோடியில் காமரூபத்து காமாக்யாதேவி கொலுவிருக்கிறாள் என்றால், தென்குமரியில் கன்னியாகுமரி பகவதி தேவியாகவும் அவளே குடியிருக்கிறாள். புராண வரலாற்றின்படி, பாரதம் முழுக்க 51 சக்தி பீடங்கள் அமைந்திருப்பதாகவும், அவை தேவியின் திருவுடலின் ஒவ்வொரு பாகத்தை அடையாளப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அந்த செய்தியின் ஆதாரமாக தட்சயக்ஞ சம்பவம் அமைந்துள்ளது. அதை […]

Read more

51 அட்சர சக்தி பீடங்கள்

51 அட்சர சக்தி பீடங்கள், ஜபல்பூர் ஏ. நாகராஜ சர்மா, வானதி பதிப்பகம், சென்னை, பக். 710, விலை 400ரூ. சிவனின் பேச்சை மீறி தட்சனின் யாகத்திற்குச் செல்கிறார் தாட்சாயிணி. அங்கு தந்தையான தட்சனால் அவமானம் நேர்கிறது. கொழுந்து விட்டெரியும் யாகத் தீயில் பாய்ந்து தன்னுயிரை விடுகிறார். செய்தி அறிந்த சிவபெருமான், தீ தீண்டாத உயிரற்ற உடலாய்க் கிடந்த தாட்சாயிணியின் உடலைத் தன் தோள்மீது தூக்கிப் போட்டுக் கொண்டு மிக உக்கிரமாக பித்துப் பிடித்தவர் போல் கூத்தாடுகிறார். அச்சமயம் தேவியின் உடல் பல கூறுகளாக […]

Read more

இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?

இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?, கவி காமு.ஷெரீப், கலாம் பதிப்பகம், சென்னை, விலை 35ரூ. இஸ்லாம் இந்து மதத்திற்கு மட்டுமின்றி வேறெந்த மதத்திற்கும் விரோதி அல்ல என்பதையும், வாள் கொண்டு இஸ்லாம் பரப்பப்படவில்லை என்பதையும் கவி காமு.ஷெரீப் ஆதாரங்களுடன் விளக்குகிறார். இந்து – முஸ்லிம் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நூல். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.   —- ஆங்கிலத்தில் கு. அழகிரிசாமியின் சிறுகதைகள், சாகித்ய அகாடமி, சென்னை, விலை 130ரூ. மறைந்த தமிழ் எழுத்தாளர் கு. அழகிரிசாமி, சிறுகதைகள் எழுதுவதில் புகழ் பெற்றவர். அவர் எழுதிய […]

Read more

விழிகளில் தெரிகிறது வெளிச்சம்

விழிகளில் தெரிகிறது வெளிச்சம், கவிஞர் தி. வேதரெத்தினம், நாகப்பட்டினம், விலை 50ரூ. ஓட்டைக் குடிசைகளில் இலவச மின்விளக்கு நிலவு, பாதசாரிகளின் இலவச விடுதி மரங்கள் இதுபோன்ற பல்வேறு கவிதை தொகுக்கப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.   —-   ஆஞ்சநேயர் கதைகள், பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன், அமராவதி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. ஆஞ்சநேயர் பற்றி குழந்தைகளும், பெரியவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் நூலாசிரியர் எழுதி வடிவமைத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 29/4/2015.   —- உருதுக் கதைகள், முக்தார் பத்ரி, […]

Read more

புத்த புனித காவியம்

புத்த புனித காவியம், குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, சென்னை, பக். 368, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-257-5.html உலகளாவிய முக்கிய மதங்களில் ஒன்று பௌத்தம். கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் இதைத் தோற்றுவித்தவர் கௌதம புத்தர். எல்லா மதங்களும் கடவுள் உண்டு என்ற கொள்கையில் தோன்றியவை என்றால், பௌத்தம் மதம் மட்டும் கடவுள் இல்லை என்ற வித்தியாசமான கருத்தில் உருவானது. ஆனாலும் கடவுளுக்கு அடுத்துள்ள தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரை மற்ற மதத்தினர் ஏற்பதைப்போல் புத்தரும் ஏற்கிறார். […]

Read more

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், பி. எல். முத்தையா, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை,  பக். 208, விலை 80ரூ. பெரியார், அண்ணா, ராஜாஜி ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில், அரசியல், வரலாறு, சமூகம், கலை, இலக்கியம் என்று பல்துறை சம்பந்தமாக ஆற்றிய உரைகளில் உதிர்த்த பயனுள்ள கருத்துக்களின் தொகுப்பு. மேடையில் மட்டுமல்லாது நண்பர்களிடையே பேசும்போதும், மக்கள் மன்றத்தில் உரை நிகழ்த்தியபோதும் பல்வேறு ஏடுகளில் எழுதியபோதும் அவர்கள் சொன்ன அரிய தகவல்களின் அணிவகுப்பு இந்நூல். தனக்குச் சரி என்று தோன்றுவதைக் கூறவோ எழுதவோ தயங்காதவர் பெரியார் என்பதை நிறுவும் […]

Read more
1 73 74 75 76 77 128