நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம்

நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம், மாதவ் பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. தமிழ் ஆதிமொழி என்று சுவாமி விவேகானந்தரும், திருக்குறளே என் வழிகாட்டி என்று ரஷ்ய அறிஞர் லியோ டால்ஸ்டாயும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் தமிழ் வாசகம் ஐ.நா.சபையின் முகப்பிலும்… இப்படி மாற்றாரும் மதித்துப் போற்றும் பெருமைகளைக் கொண்டது தமிழ். ஆனால் தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிங்கிலம் பேசும் இன்றைய தலைமுறையினருக்கு தமிழின் சிறப்புகள் சிறிதும் தெரியவில்லை என்று ஆதங்கப்படும் இந்நூலாசிரியர், அவற்றை இந்நூலில் உரிய ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளார். […]

Read more

மக்கள் சமூகத்தின் மனசாட்சி

மக்கள் சமூகத்தின் மனசாட்சி, பாரதி வசந்தன், பழனியப்பா பிரதர்ஸ், பக். 200, விலை 150ரூ. வீரமாமுனிவரின் ஒப்பற்ற தமிழ்தொண்டு அனைவரும் அறிந்தது. இத்தாலியில் இருந்து இந்திய மண்ணில், கிறிஸ்தவப் பணிபுரிய வந்த தொண்டரான அவரது இயற்பெயர், கான்ஸ்தன்ஸ் ஜோசப் எசோபியோ பெஸ்கி என்பதே. தமிழில் வீரவளன் என்றும், தைரியநாதர் என்றும், பின் வீரமாமுனிவர் என்றும் மாற்றம் கண்டது. தூயமுனிவர், இஸ்மத் சந்நியாசி, மலர்களின் தந்தை, புறநிலைக் காப்பியனார், குளுந்தமிழ்ச் சாத்தன், தெருட்குரு, வீர ஆரியவேதியன், திருமதுரைச் செந்தமிழ்த்தேசிகன், ராஜரிஷி, குருசாமியார் என்ற பெயர்களாலும் அவர் […]

Read more

அலாரத்தை எழுப்புங்கள்

அலாரத்தை எழுப்புங்கள், முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், கோவை, விலை 150ரூ. செயல்களாலும், சிந்தனைகளாலும் ஒவ்வொரு நாளையும் சாதனை நாளாக மாற்றும் பொறுப்பும், சக்தியும் நம்மிடம்தான் உள்ளது என்பதை உணரும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதை இந்த நூலின் ஆசிரியர் முனைவர் நா. சங்கரராமன் தெளிவாக கூறி உள்ளார். வெற்றி என்ற தாரக மந்திரத்தை மையமாக வைத்து வெற்றியாளர்களையும், அவர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்களையும் இந்த நூலில் பட்டியலிட்டு காட்டி இருக்கிறார். அலாரத்தை எழுப்புங்கள், முதல் தூக்கமும் தியானம்தான் உள்பட 20 கட்டுரைகளும் […]

Read more

ஆர்கொலோ சதுரர்?

ஆர்கொலோ சதுரர்?, பேரா. ஆதிமுருகவேள், ஆசிரியர் சங்கரதாண்டவம் அறக்கட்டளை, விலை 150ரூ. உலகத்து உயர்நெறியான சைவம் தழைத்து ஒங்க செய்வதற்காகவும், சிவலிங்க வழிபாட்டை உணர்த்துவதற்காகவும் சைவநெறிகளுடன் எழுதப்பட்ட 20 கட்டுரைகள் கொண்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- படித்துப்பழகு, மு.முருகேஷ், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 25ரூ. கற்பனை வளத்துடன், சுவாராசியமாக எழுதப்பட்ட குறுங்கதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- 27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர் தலங்களும் பைரவர் வழிபாட்டின் பலன்களும், எஸ்.எல்.எஸ். பதிப்பகம், சிவகங்கை மாவட்டம், விலை […]

Read more

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், குமரன் பதிப்பகம், விலை 50ரூ. இந்திய மக்கள் அனைவருடைய அன்பையும் பெற்று, மக்கள் ஜனாதிபதி என்று புகழ் பெற்றவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அவர் திடீரென்று காலமானபோது, இந்தியாவே கண்ணிரில் மிதந்தது. இளமையில் ஏழ்மையில் எதிர்நீச்சல் போட்டு, கல்வியாலும், அறிவாற்றலாலும் அணுசக்தி விஞ்ஞானியாக விஸ்வரூபம் எடுத்தார். ஏவுகணை வீச்சில் சாதனை படைத்து, இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்தார். உலகம் போற்றும் உத்தமத் தலைவரான அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை, இளைஞர்களின் வழிகாட்டி அப்துல் கலாம் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார், எழுத்தாளரும், […]

Read more

நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம்

நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம், மாதவ் பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ்நாட்டின் பெருமையையும் எடுத்துக்கூறும் புத்தகம் இது. நாம் தமிழர்கள் என்ற முதல் அத்தியாயத்திலேயே, தமிழ்நாடு பற்றிய பல அரிய தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர் ப. இலட்சுமணன். மேல்நாட்டினர் காட்டுவாசிகளாகத் திரிந்த காலத்தில், தமிழன் நாகரிகத்துடன் வாழ்ந்தான் என்பதை மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளாகப் பேச்சு வழக்கத்தில் இருந்து வரும் மொழி தமிழ். இங்கிலாந்து நாட்டு மகாராணி விக்டோரியா, தினமும் காலையில் எழுந்ததும் […]

Read more

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும்

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும், சுஹைனா பதிப்பகம், பாளையங்கோட்டை, விலை 200ரூ. சுதந்திரப் போராட்டத்தின்போது, மணியாச்சி ஜங்ஷனில் கலெக்டர் ஆஷ் துரையை வீரவாஞ்சி சுட்டுக்கொன்ற சம்பவம், வரலாற்றில் இடம் பெற்றதாகும். ஆஷ் துரை செய்த அட்டூழியங்கள், அவரை கொலை செய்ய வாஞ்சி வகுத்த திட்டங்கள் முதலியவற்றை, ஆசிரியர் செ. திவான் சிரமப்பட்டு சேகரித்துள்ளார். ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை, தன் எழுத்து வன்மையால் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். ஆஷ் துரையை சுட்டுக்கொன்றபின், வாஞ்சி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். எனினும் கொலைக்கு […]

Read more

திருப்புகழ்

திருப்புகழ், வி.எஸ். கிருஷ்ணன், உமா பதிப்பகம், பக். 408, விலை 200ரூ. அருணகிரிநாதர் பெண் பித்தர் அல்லர்! மிக இளம் வயதிலேயே முருக பக்தியில் மூழ்கி, திருப்புகழை ஓதுவதால் ஏற்படும் இன்பத்தையும், ஆன்ம லாபத்தையும் உணர்ந்த இந்த நூலாசிரியர், ஆங்கிலம் மட்டுமே அறிந்திருப்போரும். திருப்புகழின் பெருமையை உணர்ந்து உய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில், இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். திருப்புகழோடு, அருணகிரியார் அருளிச் செய்த கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களின் அருமையையும், பல கோணங்களில் அலசி ஆராய்ந்து, கட்டுரைகள் எழுதியிருக்கிறார். […]

Read more

ஆசிரியர்களே அச்சாணிகள்

ஆசிரியர்களே அச்சாணிகள், சுவாமி விமூர்த்தானந்தா, ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடு, பக். 205, விலை 75ரூ. பள்ளிகளில்தான், நாட்டின் எதிர்காலம் உள்ளது. ஆசிரியர்களின் தோள்களின்மீது, சிறந்த இளைஞர்களை உருவாக்கும் பொறுப்பு உள்ளது. தேவையான உதாரண புருஷர்களை உருவாக்குவரா அல்லது எப்போதும் தேர்விற்கான தயாரிப்பிலேயே மூழ்கி விடுவரா? மதிப்பெண் வாங்கி தருவதிலேயே அவர்களுக்கு முழு மகிழ்ச்சி கிட்டுகிறதா? இக்கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில், சிறந்த ஆசிரியர்கள் பலரின் அனுபவங்கள், கட்டுரைகளாக இந்த நூலுள் மலர்ந்துள்ளன. சிறந்த ஆசிரியராக முன்னேற, நான்கு முக்கிய அம்சங்களைப் பின்பற்ற வேண்டும். கற்பித்தலை […]

Read more

கனடா நாட்குறிப்பு

கனடா நாட்குறிப்பு, சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 110ரூ. கனடாவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அந்நாட்டில் பிறக்காதவர்கள். அதாவது, 120 நாட்டு மக்கள், பிறந்த நாட்டைவிட்டு, இங்கு வந்து குடியேறியவர்கள் என்கிறார் நூலாசிரியர் சா. கந்தசாமி. இது வழக்கமான பயணக்கட்டுரை அல்ல. தகவல்கள், வரலாறுகளின் குவியல் இந்நூல். உதாரணத்திற்கு விமானத்தில் சிற்றுண்டியாக வறுத்த வேர்க்கடலையைத் தருகிறார்கள். உடனே நூலாசிரியரின் நினைவு வேர்க்கடலையின் தாயகமான மணிலாவுக்குப் போய்விடுகிறது. மணிலாவிலிருந்துதான் இந்த ‘peanut’  இன்று உலகம் முழுவதும் பரவி விளைவிக்கப்பட்டு, பணப்பயிராக மாறியிருப்பதன் வரலாற்றைக் […]

Read more
1 17 18 19 20 21 88