சிந்தனைச் சுரங்கம்

சிந்தனைச் சுரங்கம் (முதல் பாகம்), கா. திரவியம், பூம்புகார் பதிப்பகம், பக். 432, விலை 425ரூ. தமிழக முன்னாள் தலைமை செயலர் அமரர் கா. திரவியம் இ.ஆ.ப. நான்கு தொகுதிகளாக எழுதி வெளிவந்த சிந்தனை சுரங்கம் என்ற நூலின் முதல் பாகம் மட்டும், தற்போது மறுபதிப்பாக வந்துள்ளது. மேலைநாட்டு, இந்திய நாட்டு அறிஞர்கள், தமிழ் இலக்கியங்கள், பழமொழிகள் என, சிந்தனைகளின் அகர வரிசைத் தொகுப்பு, பொருளகராதியுடன் வெளிவந்துள்ளது. சிறப்பான சிந்தனைகளின் தொகுப்பு. எளிய நடையில் மொழியாக்கம் செய்துள்ளது, ஆசிரியரின் ஆழ்ந்த தமிழ் புலமைக்கு எடுத்துக்காட்டு. […]

Read more

குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள்

குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள், ஜெகாதா, சபரீஷ் பாரதி வெளியீடு, பக். 128, விலை 80ரூ. ஒரு போர் பற்றிய தகவல்கள் எந்தளவுக்கு பரபரப்பை கிளப்பி விடுகின்றனவோ, அதேபோல்தான், போர் குறித்த புகைப்படங்களும். ஆனால் செய்யதிகளைவிட அவை, மக்களிடம் ஒருவித அச்சத்தையும், இரக்கத்தையும் ஏற்படுத்துவதில் முன்னிற்கின்றன. அப்படி போர்களில் உயிரை துச்சமாக மதித்து, கேமராக்களுடன் ஓடி, போரின் பாதிப்புகள், மனித உரிமைமீறல்கள், பரிதாபம், கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்த, 50 புகைப்பட கலைஞர்களின் வாழ்க்கை பதிவு தான் இந்த நூல். அமெரிக்கா, சோவியத், பிரிட்டன் […]

Read more

வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே, திருநாவுக்கரசு, அட்சரா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 140ரூ. வாழ்க்கை என்பது வரம். அதை நாம் அனுபவித்து வாழவேண்டுமே தவிர, ஒரு சில தோல்விகள் காரணமாக நாம் அதை இழந்துவிடக் கூடாது. முக்கியமாக தற்கொலை எண்ணம் கூடவே கூடாது என ஆணித்தரமாக நூலாசிரியர் விளக்குகிறார். ஒவ்வொர் வயதையும் நாம் கடக்கும்போது நம் மனதும் உடலும் பல்வேறு உளவியல் சிக்கல்களையும், மாறுதல்களையும் கையோடு கொண்டுவரும். அப்போது ஏற்படும் மன மாற்றங்களின் காரணமாக ஒரு சிலர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். […]

Read more

உலகக் காப்பியங்கள்

உலகக் காப்பியங்கள், இரா. காசிராசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 484, விலை 360ரூ. கற்பனை வளம், சிந்தனைத் திறன், சுவை உணர்வு, இலக்கிய நயம் ஆகியவை மிக்க ஓர் உன்னதப் படைப்புதான் காப்பியம். மனித சமுதாயமும், மனித வாழ்க்கையுமே இதன் அடிப்படை. உலக மொழிகளில் இலக்கியப் படைப்பு எவ்வாறு வளம் பெற்றுப் பொலிந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டும் நோக்கில் இந்நூல் அமைந்துள்ளது. தமிழ்க் காப்பிய ஆய்வாளர்களுக்கு ஒப்பீட்டு முறையில், உலகக் காப்பியங்களைத் தொகுத்து அளிக்கும் முயற்சியாக இந்நூல் உள்ளது. காப்பியத்தின் […]

Read more

காசி இராமேசுவரம்

காசி இராமேசுவரம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 599, விலை 420ரூ. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் மிகப்பெரிய பாலமான காசியும் இராமேசுவரமும் மிகப் பழமையான புண்ணிய திருத்தலங்கள் மட்டுமல்ல, அவை நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாகவும் திகழ்பவை. இவருடைய படைப்புகளின் வியக்கவைக்கும் தனித்தன்மை என்னவென்றால், அவர் எழுத எடுத்துக்கொள்ளும் பொருளின் மேல் அவருக்கிருக்கும் ஆதிக்கம். அவரது பரந்த விரிந்த அறிவு வேட்கை நூல்களின் தலைப்புகளைப் பார்த்தாலே பிரமிக்க வைத்துவிடும். எடுத்தது எப்பொருளாயினும் அப்பொருளின் நுணுக்கங்களையும் விழுமியங்களையும், ஒன்றுவிடாது ஆழ்ந்து ஆராய்ந்து தக்க […]

Read more

சோவின் ஒசாமஅசா

சோவின் ஒசாமஅசா, எழுத்தும் தொகுப்பும் மணா, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 256+256, விலை 190ரூ+190ரூ. ஒரு சாதாரண மனிதனுக்குள் இத்தனை அசாதாரண அனுபவங்களா என்று வியக்க வைக்கும் நூல். வழக்கறிஞர், பத்திரிகையாளர், விமர்சகர், நடிகர், அரசியல்வாதி, நாடகவாதி என்று பன்முகத்தன்மை கொண்ட சோவின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் கருத்துச் சுரங்கம். தாத்தா ராமநாதய்யர் தொடங்கி இந்தியாவின் மிகப்பெரிய தலைவர்கள் மற்றும் ஆளுமைகளுடனான அவரது அனுபவங்களைச் சொல்லும்போது, உண்மையைத் துணிந்து சொல்லும் போக்கு சோவுக்கே உரியது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, எம்.ஆர்.ராதா, காமராஜர், ராஜாஜி, பாலசந்தர், மொரார்ஜி, […]

Read more

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே, (அடித்தட்டுக் கண்ணோட்டத்தில் சமய நல்லுறவு உரையாடல்), ஆங்கில மூலம் ஆ. அலங்காரம், தமிழில் அ. அந்தோனி குருசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,  சென்னை, விலை 180ரூ. அனைத்து சமயங்களிலும் உள்ள சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வுகளை கொடுமைகளைப் போக்க சமயங்களின் மூலமாகவே என்ன செய்ய வேண்டும்? என்று ஆராயும் நூல். விவேகானந்தர் தன்னுடைய சீடர்களிடம், ஏழைகளுக்கும் துன்புறுவோர்களுக்கும் பணி செய்வதே உங்கள் தொழில். அதில் சாதி அல்லது நிறவேறுபாடு பார்க்கவும் கூடாது என்று கூறியிருப்பது […]

Read more

கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல், மாலன், கவிதா பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. இலக்கியங்களை ஆய்வு செய்து கட்டுரைகள் வடிப்பதில் புகழ் பெற்ற மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதிய சிறந்த இலக்கியக் கட்டுரைகள் கொண்ட நூல் கயல் பருகிய கடல். இதில் மாலன் முக்கியமாக ஆராய்ந்துள்ள விஷயம், தமிழில் வெளியான முதல் சிறுகதை எது? அதை எழுதியவர் மகாகவி பாரதியாரா? அல்லது வ.வே.சு. அய்யரா? தமிழ் இலக்கியவாதிகள் நீண்ட காலமாக சொல்லி வருவது, தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு. அய்யர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்பதாகும். […]

Read more

கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும்

கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும், தோழமை வெளியீடு, சென்னை, விலை 150ரூ. உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் டைரக்டர் பாலசந்தர். 100 படங்களை இயக்கியவர், புரட்சிகரமான கதைகளைத் துணிந்து படமாக்கியவர். ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். கமல்ஹாசனை பட்டை தீட்டியவர். ஒரு படத்தைப்போல இன்னொரு படம் இல்லாதபடி, விதம் விதமாகப் படங்களை எடுத்த திறமைசாலி. பாடல் காட்சிகளை படமாக்குவதில் புதுமையைப் பகுத்தியவர். அண்மையில் காலஞ்சென்ற பாலசந்தரின் நினைவாக இந்நூலை சேவியர் எழுதியுள்ளார். புத்தகம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. ரஜினியை பாலசந்தர் பேட்டி கண்டது […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், அ.ச. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 128, விலை 30ரூ. பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் என்று பல பெருமைகளைக் கொண்ட முதுபெரும் தமிழ் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தனைப் பற்றி, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளார் நிர்மலா மோகன். அ.ச.ஞா.வின் வாழ்வும் பணியும் பற்றிய கட்டுரையில் அவர் இலக்கியச் சிற்பியாக செதுக்கப்பட்டு உருமாறி வந்த வளர்ச்சிப்பாதை தொகுக்கப்பட்டுள்ளது. வி.எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி, திரு.வி.க. தெ.பொ.மீ. […]

Read more
1 26 27 28 29 30 88