எங்கேயும் எபோதும்

எங்கேயும் எபோதும், பொள்ளாச்சி அபி, ஒரு துளிக்கவிதை வெளியீடு, விலை 160ரூ. ஊடகவியலாளராகத் தன் பயணத்தைத் தொடங்கிய எழுத்தாளர் அபியின் சிறியதும் பெரியதுமான 27 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பிது. ‘நேத்து சாயங்காலம் நான் ரெண்டு பேரைக் கொன்னுட்டேன்னு சொன்னா உனக்கு ஆச்சரியமா இருக்கும்… சார்’ என்று மெல்லிய அதிர்வோடு தொடங்கும் ‘நீயே சொல்லு சார்’ கதையாகட்டும். ‘ஏய்… சரசு… மின்னல் வெட்றாப்புலே இருக்குது’ என்று இரைச்சலான அழைப்போடு தொடங்கும் ‘ஒரு ஊருல ஒரு இராஜகுமாரி’ கதையாகட்டும், எல்லாக் கதைகளிலுமே வற்றிப் போகாத நம்பிக்கை சுரந்துகொண்டேயிருக்கிறது. […]

Read more

டோக்கன் நம்பர் 18

டோக்கன் நம்பர் 18, திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகள், இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ. பத்துப்பேர் எழுதிய இருபது கதைகளின் தொகுப்பு. மண்வாசம் வீசுவது, மனதை அழுத்துவது, காதலைச் சொல்வது என்று ஒவ்வொரு கதையும் தனித்தனி பாதையில் பயணிக்கச் செய்கிறது. ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த பத்து எழுத்தாளர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து நூலாக்கி இருப்பது வித்தியாசமான முயற்சி. நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

நெசவு

நெசவு, சுப்ரபாரதிமணியன், சிற்பி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. மனிதர்களின் மானத்தைக் காக்கும் துணியை நெய்திடும் நெசவாளர்கள், தங்கள் தன்மானத்தைத் தக்கவைத்துக் கொள்ள நடத்திடும் போராட்டமான வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் கதைகள், சில கட்டுரைகள். நெய்யும் ஆடையின் தரம் நாளுக்குநாள் உயர்வதும், நெய்பவன் வாழ்வாதாரம் தாழ்வதும் அருமையாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

மாணவர்களுக்கான தன்னம்பிக்கைக் கதைகள்

மாணவர்களுக்கான தன்னம்பிக்கைக் கதைகள், தீபம் எஸ். திருமலை, செந்தூரான் பதிப்பகம், பக். 200, விலை 90ரூ. தெனாலிராமன் குறும்பு, மிருகக்காட்சி சாலை கலாட்டா, ஞானம் வெளியே இல்லை, இறைவனுக்கு உதவிய இரண்யன், பொறுப்பான மருமகள், பெண்மணியால் நாட்டை ஆள முடியுமா? உங்களுக்கே தருகிறேன், தருமம் செய், இது என்ன கணக்கு கதைகள், படிக்கும் சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

டாலர் அரசனும் ஆசை அரசியும் (தொகுதி 5)

டாலர் அரசனும் ஆசை அரசியும் (தொகுதி 5), பாமதி மைந்தன், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 48ரூ. பரந்த உலகில் பார்க்கும் காட்சிகள் எல்லாமே ஒவ்வொரு பாடம் சொல்லும். நாம்தான் அதனை கவனிப்பதில்லை. அந்த உண்மையே கருவாகி, கற்பனையில் கதைகளாகி, உருவெடுத்து நற்பண்புகளும் நல்லொழுக்கமும், பக்தியும் வளர்க்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. கணத்தில் படித்து முடித்தாலும் மனத்தில் பல கணங்கள் தங்கி கனக்கச் செய்யும் சிறப்பான கதைகளின் தொகுப்பு. நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய சாலையில் பார்த்தபோது

  நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய சாலையில் பார்த்தபோது, ஹாருகி முரகாமி, தமிழில் ஜி.குப்புசாமி, வம்சி புக்ஸ், விலை 170ரூ. முரகாமி… ஜப்பான் மட்டுமில்லை, அகில உலகமே அவரது எழுத்தின் மீது கவனம் வைக்கிறது. அவரின் ஆறு சிறந்த சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன இந்தத் தொகுப்பில். வலிமையான கதைக்களன் என்று எதுவும் இல்லை. மெல்லிய உரையாடல்களில் சித்திரம் விரிகிறது. அவரது உரையாடல்கள் ஏமாற்றும் எளிமை கொண்டவை. முதல் வாசிப்பிலேயே கிடைக்கக்கூடிய அபூர்வ அழகும் சாத்தியப்படுகிறது. அதே நேரத்தில் மறுவாசிப்பின் அவசியமும் நேரிடுகிறது. தத்துவ […]

Read more

ஜப்பான் நாட்டுச் சிறுவர்க கதைகள்,

  ஜப்பான் நாட்டுச் சிறுவர் கதைகள், அரு.வி.சிவபாரதி, ஜீவா பதிப்பகம், விலை 80ரூ. ஜப்பான் நாட்டுச் சிறுவர் சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலில் 21 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கு எளிதில் புரியும வகையில் அரு.வி.சிவபாரதி அழகிய முறையில் மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

அண்ணன்மார் சுவாமி கதை

அண்ணன்மார் சுவாமி கதை, கவிஞர் சக்திக்கனல், நர்மதா பதிப்பகம், விலை 290ரூ. கொங்கு நாட்டு வேளாளர் காவியமான பொன்னர் – சங்கர் வரலாறு, “அண்ணன்மார் சுவாமி கதை” என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நாடோடி இலக்கியம். பொன்னர், சங்கர், தங்கம் ஆகிய மூவரும் வரத்தால் பிறந்தவர்கள். தாயார் தாமரை, தான் பட்ட இன்னல்களை எல்லாம் மக்களிடம் சொல்கிறார். தான் செய்த சபதங்களையும் சொல்கிறாள். அண்ணன்மார் இருவரும், பங்காளிகளை பழிவாங்கி, அன்னையின் சபதத்தை நிறைவேற்றுகிறார்கள். பெற்றோர் மறைவுக்குப்பின், பொன்னர், சங்கர் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் […]

Read more

மதுரைக் கதைகள்

மதுரைக் கதைகள், நர்சிம், மெட்ரோ புக்ஸ், விலை 200ரூ. தூங்கா நகரான மதுரை மண்ணிண் மணம் கமழ எழுதப்பட்டிருக்கும் இருபத்தைந்து கதைகள். ஜல்லிக்கட்டு காளை விடுவதில் தொடங்கும். முதல் கதையில் இருந்து கடைசி கதைவரை ஒரே துள்ளலும், ஓட்டமும், தாவலுமாகவே நகர்கிறது. ஒவ்வொரு கதையும் ஜனனம் தொடங்கி மரணம் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்தைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. படித்து முடித்ததும் மனசு கொஞ்சம் கனமாவது நிச்சயம். நன்றி: குமுதம், 2/8/2017

Read more

சொல்லில் நிரம்பும் குளம்

சொல்லில் நிரம்பும் குளம், எஸ்ஸார்சி, சொல்லங்காடி, பக்.144 , விலை ரூ.130. நூலாசிரியரின் எட்டாவது சிறுகதைத் தொகுப்பு. இதில் 18 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பொங்கலுக்குப் படைக்க வாங்கிய கரும்பு வீணாகிறதே என்று அதைக் கடித்துச் சுவைத்து, பல் டாக்டருக்கு ரூ.12 ஆயிரம் அழும் சர்க்கரை வியாதிக்காரனின் கதை ‘சின்னத்தனம் 39’. ஓர் எழுத்தாளர், வட இந்தியக் கவிஞரின் புகழுரைக்கு மயங்கி அவருடைய 100 கவிதைகளை மொழிபெயர்த்து, அதனை தனது கைக் காசைச் செலவழித்து புத்தகமாக வெளியிட வேண்டிய நிர்பந்தத்திலும் சிக்கி அவதிப்படும் கதை […]

Read more
1 26 27 28 29 30 80