பாட்டி சொன்ன புத்திசாலித்தனமான கதைகள்

பாட்டி சொன்ன புத்திசாலித்தனமான கதைகள், சரோஜா வைத்தியநாதன், மணிமேகலைப் பிரசுரம், விலை 50ரூ. நல்லதையே நினை, நல்லதையே செய், நல்லது நடக்கும். சோம்பேறியாக வாழாதே, சுறுசுறுப்புடன் வாழ், பிறரிடம் பொறாமை கொள்ளாதே, உழைப்பு உயர்வு தரும், நீயும் ஏமாறாதே, பிறரையும் ஏமாற்றாதே போன்ற நன்மை தரும் கருத்துக்களுடன் நம் பாட்டி சொன்ன கதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —- சிவங்கங்கைச் சீமை படமாத்தூர் வரலாறு, கோ. மாரிசேர்வை, தமிழில் எஸ்.ஆர்.விவேகானந்தம், காவ்யா வெளியீடு, விலை 300ரூ. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த படமாத்தூர் […]

Read more

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம்

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம், கோ.வில்வபதி, பழனியப்பா பிரதர்ஸ், விலை 900ரூ. வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்துக்கு கவிதை அழகு மிக்க வர்ணனைகளுடன் புதுவடிவம் கொடுத்த கம்பரின் அற்புதத் திறமையால், ராமாயணம் என்றாலே கம்பராமாயணம் என்று கூறும் அளவுக்கு பெருமை பெற்ற கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திற்கு, மிகச் சிறப்பான தெளிவுரையாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. அயோத்தியா காண்டத்தில் இடம் பெற்ற அனைத்து கவிதைகளுக்கும் விரிவான தெளிவுரையும், விளக்கமும் கொடுத்து இருப்பதுடன், கடினமான சொற்களுக்கான அர்த்தத்தையும் தந்து இருப்பதால், கம்பரின் காவிய சுவையை முழுமையாக […]

Read more

மீண்டும் ஒரு மழைக்காலத்தில்

மீண்டும் ஒரு மழைக்காலத்தில், கவிஞர் தியாரூ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 194, விலை 210ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024600.html மனிதாபிமானமும், சமூகப் பிரக்ஞையும், சிந்தனைத் தெளிவும் உள்ள சிறந்த, 21 கதைகள். ‘சாமுத்யகா’ என்ற முதல் கதையே தனிச்சிறப்பு வாய்ந்தது. மலர் விட்டு மலர் தாவும் வண்டு போன்ற கதாநாயகன். ஆனால் அவன் அன்பு மனைவியையே, ஒரு மாற்றான் காமப் பார்வை பார்க்கிறான் என்று உணரும் சமயத்தில், அவன் தவறு அவனுக்கு உரைக்கிறது. நடைபாதை வாசிகளை […]

Read more

இந்த வானம் இந்த பூமி இந்த வாழ்வு இந்த மரணம்

இந்த வானம் இந்த பூமி இந்த வாழ்வு இந்த மரணம், ஏவியன், பத்திரிகையாளர் பதிப்பகம், விலை 200ரூ. மனிதனில் புதைந்திருக்கும் கெட்ட குணங்களை சுட்டிக்காட்டி அவனை திருத்த முயற்சிக்கும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் ஏவியன். உலக மனித ஒட்டு மொத்த சமூகத்தின் சரியான விடியலைத் தேடும் முதல் தொடக்கமாக இதனைப் பிரகடனப்படுத்துகிறேன் என்கிறார் ஆசிரியர். பாராட்டுக்குரிய லட்சியம். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.   —- வங்கமொழி சிறுகதைகள் தொகுதி 3, சாகித்ய அகாடமி, விலை 400ரூ. வங்க மொழியில் எழுதப்பட்ட 27 சிறுகதைகளின் தொகுப்பு நூல். […]

Read more

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள், பொன். வாசுதேவன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 488, விலை 400ரூ. புலன் விசாரணையில் தெரியாத புதிர்கள் ‘இரண்டாம் வகுப்பிலேயே பாட்டியிடம் இலக்கணம் படித்தேன்’ என்ற பிரகாஷின் முகப்பு வரிகளுக்குப் பின், தொகுப்பின் கதைகள் துவங்குகின்றன. முப்பத்தியொரு கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது, அதை நம்பித்தான் ஆகவேண்டும். கதையின் இரண்டாம் வாக்கியத்துக்குப் போகும்போதே, வாசகர்கள் எங்கே நின்று, கதை மாந்தர்களைத் தொடரவேண்டும் என, கடிவாளம் கட்டி விடுகிறார் பிரகாஷ். வாசகர்களுக்குத் தான் கடிவாளமே தவிர, கதை மாந்தர்களுக்கு இல்லை. […]

Read more

ரெகுராரத்தம்மா

ரெகுராரத்தம்மா, இரா. இராம் மோகன், இரா. இராம் மோகன் வெளியீடு, பக். 116, விலை 60ரூ. பதினோரு சிறுகதைகள் உள்ள இந்தத் தொகுதியில், பல கதைகள் சிறப்பாக அமைந்துள்ளன. ‘நீ யாதுமாகி நின்றாய் ரமணா’ என்ற கதை முதலிடம் பெறுகிறது. காதல் மனைவியின் கல்வி ஆர்வத்தை மதித்து, அவள் மேற்படிப்பு ஆசை நிறைவேற தாம்பத்ய சுகத்தையே தள்ளி வைக்கிறான், கதையின் நாயகன் ரமணன். பெண் சிசுக் கொலைக்கு எதிராகக் குரல் கொடுத்து, பெண் சிசுவின் பெருமையைப் பேசும் கதை, ‘அபாமிப் பாப்பாவும், அபிராமிப் பாட்டியும்’. […]

Read more

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், சீத்தாகந்த் மகாபாத்ரா, தமிழில் முனைவர் ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாடமி, பக். 208, விலை 125ரூ. பழங்குடி மக்களை விவரிக்கும் சிறுகதைகள்! இந்த நூல் 13 கதைகள் வழி, வித்தியாசமான பாடுபொருள்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மூலநூல் ஆசிரியர், புகழ்மிக்க கோபியாத் மொகந்தி, பழங்குடி மக்களின் வாழ்வியலைத் தம் கதைகளில் படம் பிடித்துக் காட்டுவதில் ஈடுபாடுடையவர். இந்த நூலிலும், ஒன்றிரண்டு கதைகள் அந்த பின்புலத்தில் அமைந்துள்ளன. இருப்பினும் குடும்பப் பாங்கான கதைகளும் இதில் உள்ளன. ‘அம்புப் படுக்கை, இருவீரர்கள், வீடு […]

Read more

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம், பெரியநாயகம் ஜேசுதாஸ், மணிமேகலைப் பிரசுரம், விலை 185ரூ. சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். சமூகத்தின் மீது சினிமா தாக்கம் ஏற்படுத்துவதையும், குறிப்பாக (வீதி) சிறுவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் பெரிய நாயகம் ஜேசுதாஸ் எழுதியுள்ளார். சினிமா மூலம் கற்றுக்கொள்கின்ற சாதகமான நிலையையும், கலாச்சார சீரழிவு என்ற பாதகமான நிலையையும் அலசி ஆராய்ந்துள்ளார். நற்பயனளிக்கக் கூடிய கற்றல் சூழ்நிலையைச் சிறுவர்களுக்கு கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும் என்பதை முடிவாகக் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 16/12/2015   —-   […]

Read more

நிகழ்வுகள் நினைவாக

நிகழ்வுகள் நினைவாக, ஆ. செந்தில்வேலு, காந்தகளம், சென்னை, விலை 75ரூ. வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும், கண்ணில் பார்த்த சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து கதை எழுதும் எழுத்தாளர்கள், சிறந்த படைப்பாளிகளாக விளங்குகிறார்கள். “நிகழ்வுகள் நினைவாக” என்ற இந்த சிறுகதைத் தொகுதியை எழுதியுள்ள ஆ. செந்திவேலு, அத்தகைய எழுத்தாளர்களில் ஒருவர். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆசிரியர் எழுதியுள்ள 11 கதைகள், இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளன. நல்ல நடையில், விறுவிறுப்பாக எழுதுவதில் ஆ. செந்தில்வேலுவுக்கு உள்ள ஆற்றலை இக்கதைகள் புலப்படுத்துகின்றன. நன்றி: தினத்தந்தி, 23/12/2015.   —- […]

Read more

எருது உலக சிறுகதைகள்

எருது உலக சிறுகதைகள், தமிழில் கார்த்திகைப் பாண்டியன், எதிர் வெளியீடு, பக். 150, விலை 120ரூ. தமிழுக்கு புதியதொரு கதை சொல்லல் முறை மொழிபெயர்ப்பு என்பது, வானத்தை பிழிந்து வட்டியில் இறக்கும் வேலை என்பர். அதில், ஒரு துளி அளவேனும் சந்தேகம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக வெளிவந்துள்ளது, ‘எருது’ உலக சிறுகதைகளின் தொகுப்பு. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட 10 நாட்டு எழுத்தாளர்களின் சிறுகதைகள், இதில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவாறும், புதுப்புது களங்களும் உள்ள சிறுகதைகள், தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளன. எட்மண்டோ பாஸ் […]

Read more
1 37 38 39 40 41 80