கடந்து போகிறவர்களின் திசைகள்

கடந்து போகிறவர்களின் திசைகள், ஆசு, இருவாட்சி, பக். 160, விலை 100ரூ. வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. வாழ்க்கையை உணர்ந்து, சமூக அக்கறையுடன் எழுதும் கதைகளில்தான் உயிர்ப்பு இருக்கும். இப்படிப்பட்ட கதைகளை எழுதுவதற்கு வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் தேவை. நூலாசிரியருக்கு அத்தகைய அனுபவங்கள் இருப்பதை இந்நூலில் உள்ள சிறுகதைகளைப் படிக்கும் வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள். பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள் இந்நூலில் உள்ள சிறுகதைகளில் மிகவும் இயல்பாக, உயிர்ப்புடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நாம் அன்றாடம் சந்திக்கும் பல மனிதர்களை […]

Read more

கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில்

கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில், மாலன், சாகித்ய அகாதெமி, பக். 176, விலை 110ரூ. புலம்பெயர் எழுத்தாளர்கள் 14 பேர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். புலம்பெயர்வது பற்றியும் அதன் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் மாலன் எழுதிய முன்னுரை குறிப்பிடத்தக்கது. வாசகனை இந்நூல் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு இட்டுச் சென்று இனிமையான வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துகிறது. புதிய சூழலில் எழுதும் எழுத்தாளர்களின் கதைக்கரு, சிறுகதை கட்டமைப்பு, சொற்றொடர்கள் புதியனவாக இருக்கின்றன. ‘இரண்டு வால் கிடைத்த […]

Read more

கனவுப்பட்டறை

கனவுப்பட்டறை, மதி, அகநாழிகை பதிப்பகம், பக். 160, விலை 160ரூ. அரசு பள்ளிகளில் படிக்கும், சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளின் மனங்களைப் புரிந்து கொள்வதற்கான முயற்சிதான் இந்த சிறுகதைத்தொகுப்பு. முகம் பார்த்து பேச மறுக்கும் மாணவன், உணவுக்கு வழியில்லாத சிறுவன், தற்கொலை எண்ணத்துடன் திரியும் சிறுமி, தாழ்வு மனப்பான்மையை மறைக்க முரடனான வேடமிடுபவன் என்று இந்தக் கதைகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவனையும், நாம் வெவ்வேறு பெயர்களில், தோற்றங்களில் தினம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். வளரிளம் பருவத்தில் மாணவர்கள் மீது செலுத்தப்படும் அழுத்தங்கள், வாழ்வின் பிற்பகுதி வரை […]

Read more

மனப்பலகை

மனப்பலகை, பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. மொத்தம் 31 சிறுகதைகள் கொண்ட புத்தகம். “எழுதுவதை புதுமையாக எழுத வேண்டும்” என்ற ஆசிரியரின் எண்ணம் கதைகளில் பிரதிபலிக்கிறது. கதைகள் ரத்தினச் சுருக்கமாக அமைந்துள்ளன. “காலமாகிப்போன கணவருக்கு மனைவி எழுதும் கடிதம்” மனதைத் தொடுகிறது. சில கவிதைகளை புதுக்கவிதை பாணியில் எழுதியிருப்பதை ‘புதுமை’ என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால் “வாழ்க்கை ஒரு தீராநதி”யில், சிவாஜிகணேசன், இளையராஜா, கண்ணதாசன், சுஜாதா, ஜெயகாந்தன் முதலிய சாதனையாளர்களைப் பற்றி தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். அதை சிறுகதை என்று […]

Read more

பாரதிதாசன் காதல் ஓவியங்கள்

பாரதிதாசன் காதல் ஓவியங்கள், டாக்டர் எஸ். ஜெகத்ரட்சன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 100ரூ. உலகில் ஒவ்வோர் உயிரும் காதலின்றி வாழ்வதில்லை. காதலைப் பாடாத கவிஞன் இல்லை. காதலைப் பாடவில்லை என்றால் அவன் கவிஞனே இல்லை” என்பார்கள். ‘காதல் என்பது உயிர் இயற்கை’ என்று கூறும் பாவேந்தர் பாரதிதாசன், தனிப்பாடல்களிலும், கதைப்பாடல்களிலும், காப்பியங்களிலும் ஆண்-பெண்களிடையே இருந்து வரும் தூய அன்பை-காதலை பல கோணங்களில் வர்ணிக்கிறார். புரட்சிக் கவிஞர் என்ற பெயரை பெற்ற அவர், காதலிலும் புரட்சி செய்தவர். விதவையர் காதலுக்கும், சாதி மதம் கடந்த […]

Read more

பூர்ணிமா கவிதைகள்

பூர்ணிமா கவிதைகள், டாக்டர் கோ. இளங்கோவன், பூர்ணிமா பதிப்பகம், விலை 150ரூ. டாக்டர் கோ. இளங்கோவன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. ‘வானம் சிரித்தால் மழையாகும். ஆழ் கடல் சிரித்தால் அலையாகும். அலைகள் சிரித்தால் நுரையாகும்”  என்பன போன்ற மனம் விரும்பும் கவிதைகள் உள்ளன. பளபளப்பான காகிதத்தில், வண்ணப் படங்கள் கண்ணைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, 27/1/2016.   —- மலர்ந்த வாழ்வு சிறுகதைகள், மா.செ. மாயதேவன், மா. ராமையா, ராமநாதன் பதிப்பகம், விலை 60ரூ. மலர்ந்த வாழ்வு, ரத்த தானம், கூண்டுக்கிளி மற்றும் உடைந்த […]

Read more

ஹிந்துத்துவ சிறுகதைகள்

ஹிந்துத்துவ சிறுகதைகள், அரவிந்தன் நீலகண்டன், தடம் பதிப்பகம், விலை 125ரூ. காவிக்கதைகள் எந்த முகமூடியும் இல்லை, தலைப்பே சொல்லிவிடுகிறது இந்துத்துவா என்று. அதற்காகவே அரவிந்தன் நீலகண்டன் கவனம் பெறுகிறார். பிரசார சிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களை அனாயாசமாகத் தொட்டுப் பார்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு என்கிறது பின்னட்டைக் குறிப்பு. உண்மைதான். வரலாற்றப்பின்னணியில் இந்து மதப் பெருமை பேசும் கதைகள் மிகவும் கவனமான இலக்கிய உத்திகளுடன் மொழியாளுமையுடன். அமுதம் என்கிற முதல் சிறுகதை நாயக்கர் காலத்தில் கோயில் ஒன்றில் நிகழ்ந்த சாதிக்கெதிரான தனிமனித கலகத்தைப் பேசுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு […]

Read more

கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா?

கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா?, குழந்தைகள் திரைப்படங்கள், ஸ்ரீரசா, கடவு வெளியீடு, விலை 100ரூ. நுண்ணிய உலகம் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் உண்மையில் குழந்தைகளுக்கு மட்டுமானவை அல்ல. பெரியவர்களுக்கும்தான். அதுபோன்ற 19 திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்நூல். மதுரையில் தமிழ்நாடு குழந்தைகள் திரைப்பட இயக்கத்தின் சார்பாக 2014ஆம் ஆண்டு திரையிடப்பட்ட படங்களைப் பற்றி நூலாசிரியர் தீக்கதிர் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. வாட்ஜ்தா என்ற சௌதி அரேபியாவில் உள்ள 11 வயது சிறுமியின் கனவுகளைச் சொல்லும் படமே பெண்ணியப்பார்வையிலும் பலவிஷயங்களைச் சொல்வதாக இருக்கிறது. சைக்கிள் ஓட்ட […]

Read more

வேலி

வேலி, வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 175ரூ. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்களை படைத்தவரும், பத்திரிகை துறையில் முத்திரை பதித்தவருமான வாஸந்தி படைத்த 14 சிறுகதைகள் கொண்ட நூல். “மனுசத்தனம் இல்லாத குலப் பெருமை நமக்கு வேணாம்! ஒரு பெண்ணோட மனசு எப்படிப்பட்டதுன்னு அவங்களுக்குத் தெரியுமா? பெண்ணுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கிறது கூடத் தெரியுமா? முகமே இல்லாத கும்பலா போயிட்டோம். இப்படியே வாயை மூடிக்கிட்டு இருந்தோம்னு வெச்சுக்குங்க, நமக்குன்னு அடையாளமே இருக்காது. அவங்க சொல்றதுதான் […]

Read more

ஸ்வரஜதி

ஸ்வரஜதி, சீதா ரவி, கல்கி பதிப்பகம், பக். 168, விலை 100ரூ. கல்கியின் ஆசிரியராக விளங்கிய, சீதா ரவி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இசையையும், மனித மனங்களையும் மிக நுணுக்கமாக அணுகி, அனுபவித் நூலாசிரியர், கதைகளாக வடித்திருக்கிறார். ஒரு மலர் மலர்ந்து இதழ் விரிப்பதைப் போன்ற வர்ணனைகள் மனதைக் கொள்ள கொள்கின்றன. ‘மடியிலிருந்து வீணையை இறக்கி வைத்தான் கமலம். வாசித்து முடித்த கல்யாணி ராகத்தின் ஒய்யார வளைவுகளும், ஒடுங்கிய முடுக்குகளும், மழை நாளின் குளிர்ச்சியாகச் சூழ்ந்திருந்தன. தியாகேசர் கோவிலில், அவள் நாட்டியம் செய்வதைப் பார்த்திருக்கிறான். […]

Read more
1 36 37 38 39 40 80