அர்த்தநாரீஸ்வரம்

அர்த்தநாரீஸ்வரம், இரா.த. பாலாஜி, முரண்களரி வெளியீடு, பக். 112, விலை 100ரூ. தற்போது, எஸ்.ஆர்.எம்., சிவாஜிகணேசன் பிலிம் இன்ஸ்ட்டியூட்டின் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பாலாஜியின், ஏழு சிறுகதைகளைக் கொண்ட நூல் இது. வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மனம் தளர வேண்டாம் என்பதை சொல்லும் ‘தன்னம்பிக்கை’, இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைச் சொல்லும் ‘தாகம்’, மனம் விட்டுப் பேசுங்கள், பகைமை உணர்ச்சி வேண்டாம் என்று விளக்கும் ‘எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’, ஆடம்பரச் செலவு அவசியம் அற்றது என்று சுட்டிக் காட்டும், ‘ராயல் […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், வீ. இளவழுதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. தமிழில் உருவான முதல் காப்பியம் ‘சிலப்பதிகாரம்’. ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் புகழப்பட்ட நூல். இயல், இசை, நாடகம் என்ற இலக்கண எல்லைக்குள் இடம் பெற்ற முத்தமிழ் நூல் எனப் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரத்தை கதை வடிவில் வீ. இளவழுதி எழுதியுள்ளார். மாணவர்களுக்கு பெரும் பயனளிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 30/12/2015.   —- கட்டுரைக் கதம்பம், மு. ஸ்ரீனிவாஸன், அருள் பதிப்பகம், விலை 150ரூ. கண்ணன் வாழ்ந்த துவாரகை, சேழர்களின் தலைநகரும், உலகின் […]

Read more

ஒரு யாகம் ஒரு தியாகம்

ஒரு யாகம் ஒரு தியாகம், ஆரூர்தாஸ், பூம்புகார் பதிப்பகம், விலை 90ரூ. சினிமா உலகில் ஏறத்தாழ 1000 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சாதனை படைத்தவர் ஆரூர்தாஸ். அவர் எழுதிய ஒரு யாகம் ஒரு தியாகம், பரிகாரம், வாத்தியாரய்யா ஆகிய 3 குறுநாவல்கள் அடங்கிய நூல். ஒரு யாகம் ஒரு தியாகம் என்ற கதையில் அமைச்சர் ஆளவந்தாரை அவரால் பாதிக்கப்பட்ட பலரும் பழி வாங்கத் துடிக்கிறார்கள். அந்தச் சம்பவங்களை அவருக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார். மேலும் பரிகாரம், வாத்தியாரய்யா […]

Read more

கணினித்தமிழ்

கணினித்தமிழ், முனைவர் இல.சுந்தரம், விகடன் பிரசுரம், விலை 230ரூ. நம் அன்றாட வாழ்வில் அனைத்து செயல்பாடுகளும் கணினி இல்லாமல் நடைபெறாது என்ற நிலை உருவாகிவிட்டது. கணினியின் அடிப்படை முதற்கொண்டு அனைத்து நிலைகளிலும் தமிழைக் கையாள்வதற்கு இந்த நூல் வழிகாட்டுகிறது. வன்பொருள், மென்பொருள் தொழில் நுட்பம் பற்றி அறிமுக நிலையில் தெரிந்து கொள்ளவும், இணையத்தின் அடிப்படையையும் அதில் தமிழை எவற்றிலெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் எளிதில் புரியும் வகையில் முனைவர் இல.சுந்தரம் விரிவாக விளக்கிக் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 25/11/2015.   —- மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கதைகள், […]

Read more

தமிழர் நாடு

தமிழர் நாடு, கி.ஆ.பெ. விசுவநாதம், காவ்யா பதிப்பகம், விலை 1300ரூ. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று வாழ்நாள் முழுவதும் முழங்கி வந்தவர், “முத்தமிழ் காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம். நீதிக்கட்சியின் பெயரை 1944ல் “திராவிடர் கழகம்” என்று பெரியாரும், அண்ணாவும் மாற்றினார்கள். “தமிழ்நாடு என்பதை உயிர் மூச்சாகக்கொண்ட கி.ஆ.பெ. விசுவநாதம், “திராவிட நாடு” என்பதை ஏற்க மறுத்து, அரசியலில் இருந்து விலகினார். அதன்பின், 1947ம் ஆண்டில் “தமிழர் நாடு” மாத இதழை தொடங்கினார். அதிழ் தமிழ் உணர்ச்சியைத் தூண்டும் தலையங்கங்களையும், கட்டுரைகளையும் எழுதினார். அவற்றை […]

Read more

மனங்கொத்தி

மனங்கொத்தி, புலவர் மு. அருளப்பன், அனலகம் வெளியீடு, விலை 60ரூ. நல்லொழுக்கம், நன்னெறி போன்ற சமூக சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட 21 சிறுகதைகளை கொண்ட தொகுப்பு நூல் இது. நம்மைச்சுற்றி அன்றாடம் அரங்கேறும் நிகழ்வுகளை கண்முன்னே காணும் வகையில், கதைகள் அனைத்தும் எழுதப்பட்டு உள்ளன. ‘விவாகரத்து’, ‘ஊனம்’, ‘சிறைக்குள் வரவேண்டியவன்’ என நூலில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் கருத்தையும், கவனத்தையும் ஈர்க்கின்றன. படிப்போரின் சிந்தையை கவரும் நோக்கில் பேச்சுவழக்கில் கதைகள், எழுதப்பட்டிருப்பது சிறப்பு. இது ஒரு சிறுகதை தொகுப்பு என்பதை விட, […]

Read more

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம், கௌதம நீலாம்பரன், சூரியன் பதிப்பகம், விலை 175ரூ. சங்க காலம் தொடங்கி நமது அரசர்கள், மானுட வாழ்வை மேம்படுத்த நன்னெறி கொண்டு வாழ்வில் நாம் சிறந்தோங்க ஆன்மிகம் என்னும் அன்பு நெறியை வளர்த்துத் தந்த வரலாற்றுச் செய்திகளை, நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகளை அருமையான கதைகளாகத் தொகுத்து அளித்திருக்கிறார் எழுத்தாளர் கவுதம நீலாம்பரன். புராணத்தில் பேசப்பட்ட அரசர்களாகட்டும் அல்லது சமீபத்தில் வாழ்ந்த கட்டபொம்மன் போன்ற மன்னர்களாகட்டும் இவரது கைவண்ணத்தில் மெருகேறி, மிகச்சிறந்த பாத்திரங்களாக உருவெடுக்கிறார்கள். கதை சொல்லும்பொழுது ஒரு இடத்தின் அழகைச் சொல்லி, […]

Read more

ஹிந்துத்துவ சிறுகதைகள்

ஹிந்துத்துவ சிறுகதைகள், அரவிந்தன் நீலகண்டன், தடம் பதிப்பகம், பக். 172, விலை 125ரூ. தமிழ் புனைவுலகின் புதிய யுக்தி To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000025209.html அழுக்கு சட்டையைத் துவைத்துப்போடுவதால் புரட்சி தாமதப்படும் என்றால் பரவாயில்லை. ஆடைகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்’ என்றார் பொதுவுடைமைவாதி வி.பி.சிந்தன். கொள்கைத் தீவிரத்தில் அழகியலுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை. அழகியல் வாழ்வின் சிறப்பான பகுதி என்பதைத்தான் அவர் குறிப்பிட்டார். பிரசாரக் கதை எழுதும்போது, கொள்கை சில இடங்களில் சங்கடமாகவும், சில இடங்களில் சவுகரியமாகவும் இருக்கிறது. கதை […]

Read more

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(தொகுப்பு 1)

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(தொகுப்பு 1), தொகுப்பாசிரியர் அ. சிதம்பரநாத செட்டியார், விகடன் பிரசுரம், பக். 304, விலை 120ரூ.   To buy this Tamil book online : http://www.nhm.in/shop/1000000021817.html தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், அகிலன் உள்ளிட்ட 20 எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே படித்திருக்கக்கூடிய கதைகள்தாம் என்றாலும், அத்தனை சிறுகதைகளையும் ஒரே புத்தகமாகப் படிக்கின்ற வாய்ப்பு பரவசத்தைத் தருவதாக உள்ளது. எல்லாச் சிறுகதைகளிலும் கதை இருக்கும். ஆனால் […]

Read more

செவக்காட்டு சொல் கதைகள்

செவக்காட்டு சொல் கதைகள், கழனியூரன், புக்ஸ் பார் சில்ட்ரன், சென்னை, விலை 140ரூ. செவக்காட்டு சொல்கதைகள் என்ற இந்த நாட்டுப்புற கதைக் களஞ்சியத்தை படைத்திருக்கிறார் எழுத்தாளர் கழனியூரன். கர்ணன் என்கிற மகாபாரதப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு நாட்டுப்புற மக்கள் உருவாக்கி இருக்கும் கதைகளை விவரிக்கும் அத்தியாயம் சுவாரசியம். அன்னதானம் மிக முக்கியமான மானுடப்பண்பாகப் பேணப்பட்டது என்பதைக் காண்பிக்கும் கதை இது. அத்துடன் கெட்டது செய்பவன் ஜெயிக்க முடியாது என்பதை தீர்மானமாக கிட்டத்தட்ட இதில் உள்ள எல்லா கதைகளும் சொல்கின்றன. நமது ஐதீகங்களில் புழுங்கும் ஐந்து […]

Read more
1 38 39 40 41 42 80