யட்சன்

யட்சன், சுபா, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. இரு இளைஞர்கள். அவர்கள் கனவுகள் வேறு, இலக்குகள் வேறு. ஒருவன் சாதுவானவன். குடும்பம் உள்ளவன். இன்னொருவன் முரட்டுத்தனமானவன். தனிமை விரும்பி அவர்கள் இருவரும் குறிப்பிட்ட பணிகளுக்காக புறப்படும்போது வாகனங்கள் மாறிவிட்டால்? அது அவர்களது கனவுகளை, இலக்குகளை, வாழ்க்கையை புரட்டிப் போட்டால் என்னவாகும் என்பதை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் யட்சன். எழுத்தாளர்கள் சுபா எழுதிய இந்தக் கதை திரைப்படமானது. மூலக்கதை இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் யட்சன் திரைப்பட ஸ்டில்கள் வண்ணப்படங்களாக இணைக்கப்பட்டுள்ளன. […]

Read more

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள்

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. மீண்டும் வரலாம் புன்ட்ஜில் கடவுள் பெரும்பாலும் வாய்மொழி இலக்கியமாகவே வலம் வருகிற பழங்கதைகள் சொல்லாமல் சொல்லி விளங்கவைக்கும் சிந்தனைகள் ஆழமானவை. இவற்றைப் புரிந்துகொள்ளவும் தனிப்பட்ட திறமை வேண்டும். அதுவும் ஆதிவாசிப் பழங்குடியினரிடையே உலவும் கதைகள் என்றால் அவற்றின் மதிப்பே தனி. அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அபாரிஜின் என்னும் ஆதிவாசிப் பழங்குடியினர் ஆஸ்திரேலியாவில் குடியேறினார்கள் என்றும், இவர்கள் இந்தியத் துணைக்கண்டப் பகுதியிலிருந்து சென்று குடியேறிய கற்கால மனிதர்களின் வழித் தோன்றல்கள் என்றும் […]

Read more

வைரமுத்து சிறுகதைகள்

வைரமுத்து சிறுகதைகள், கவிஞர் வைரமுத்து, சூர்யா வெளியீடு, விலை 300ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000025177.html கவிதைகளிலும், திரைப்படப் பாடல்களிலும் சிகரம் தொட்ட கவிப்பேரரசு வைரமுத்து, இப்போது சிறுகதை உலகிலும் தடம் பதித்து, வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். இதில் உள்ள 40 கதைகளையும் படிக்கும் எவருக்கும், கற்பனைக் கதைகளைப் படிக்கும் உணர்வு ஏற்படாது. ஏதோ ஒரு கட்டத்தில் நிகழ்ந்த அல்லது கேள்விப்பட்ட சம்பவங்களே நினைவுக்கு வரும். சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன், தன் வாழநாள் முழுவதும் எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கை […]

Read more

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள்

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. சுதந்திரப் போராட்டத்தை அகிம்சை வழியில் மகாத்மா காந்தி நடத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஆயுதம் ஏந்தினால்தான் சுதந்திரம் பெறமுடியும் என்று கருதினார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் நேதாஜி வெற்றி பெற, காந்தியின் வேட்பாளர் பட்டாபி சீத்தா ராமையா தோல்வி அடைந்தார். பட்டாபியின் தோல்வி, என் தோல்வி என்று காந்தி கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து காந்திக்கும், நேதாஜிக்கும் நடந்த கடிதப் […]

Read more

அறிவும் பகுத்தறிவும்

அறிவும் பகுத்தறிவும், பேராசிரியர் ஏ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, விலை 30ரூ. அறிவுத் தொடர்பான 6 கதைகளும், பகுத்தறிவுத் தொடர்பாக 6 கதைகள் அடங்கிய நூல். ஓவியங்களுடன் சிறுவர்களுக்கு பயனுள்ள வகையில் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி.   —- காலம் வெளி மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள், தேவரசிகன், தமிழாசை பதிப்பகம், திருபுவனம், விலை 80ரூ. வித்தியாசமான தலைப்பில், எளிமையான உணர்வுகளைப் பேசுகிற பாசாங்கற்ற பல நல்ல கவிதைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி.

Read more

தமிழ் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும்

தமிழ் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும், சுகுமாரன், தாமரை பப்ளிகேஷன்ஸ், பக். 134, விலை 115ரூ. சிறுவர் இதழ்கள் எங்கே போயின? மகாகவி பாரதியாருக்கு, ஒருநாள் அசா தாரணமான சூழ்நிலை ஏற்பட்டது. மனைவி செல்லம்மா வெளியில் போய்விட்டார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பாரதியாருக்கு. குழந்தையிடம், பாட்டுப் பாடட்டுமா என்று கேட்கிறார். இப்போது பாடக் கூடாது. தூங்கும்போதுதான் பாட வேண்டும் என்று குழந்தை அவருக்குச் சொல்கிறது. குழந்தையின் உலகத்தை விளக்கும் பதிவு இது. குழந்தைக்fகுப் பாட்டு எழுதும்போது, குழந்தையின் நிலையில் இருந்து துவங்கவேண்டும். […]

Read more

சுந்தர வால்மீகி ராமாயணம்

சுந்தர வால்மீகி ராமாயணம், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 450ரூ. ராமாயணம், பாரத தேசத்தின் தலைசிறந்த இதிகாசங்களில் ஒன்று. ராமாயணம்தானே, எல்லாருக்கும் தெரிந்ததுதானே எனலாம். ஆனால் இந்நூல் முழுமையையும் படித்து முடித்தால், ராமாயண நிகழ்வுகளுக்கு இத்தனை அர்த்தங்கள் உள்ளனவா, நிகழ்வுகளுக்குள் இத்துணை சூட்சுமங்களும், ரகசியங்களும் உள்ளனவா என்று அதிசயிக்கத் தோன்றும். ராமஜென்ப பூமியான அயோத்தியில் துவங்கி, சீதாதேவி சிறை வைக்கப்பட்டிருந்த அசோக வனம் வரையில் உள்ள பெரும்பாலான ராமாயண நிகழ்விடங்களுக்குச் சென்று அந்தந்த சேத்ரங்களில் அந்தந்த தலங்களில், அந்தந்த தீர்த்தங்களில், அந்தந்த […]

Read more

மகாகவி பாரதியாரின் பகவத் கீதை

மகாகவி பாரதியாரின் பகவத் கீதை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. எல்லோரும் படித்து பயன்பெற வேண்டிய நூல் பகவத் கீதை. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட கீதையை, மகாகவி பாரதியார் அழகிய தமிழில் மொழிபெயர்த்து முன்னுரையும் எழுதியுள்ள இந்நூல் தனிச்சிறப்பு வாய்ந்தது. நன்றி: தினத்தந்தி.   —- மாண்புமிகு மாணவராகலாம், சிவபாரதி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ. மதிப்புமிக்க மாணவ சமுதாயம் மலரவும், நாளைய உலகை ஆளநல்ல தலைவர்கள் உருவாவதற்கான 10 தலைப்புகளில் நல்கருத்துகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி.

Read more

மாரிஷஸ் ஹிந்திக் கதைகள்

மாரிஷஸ் ஹிந்திக் கதைகள், தொகுப்பாசிரியர் கமல் கிஷோர் கோயங்கா, தமிழில் மு. ஞானம், சாகித்ய அகாதெமி, பக். 576, விலை 330ரூ. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தேயிலைத் தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்த லட்சக்கணக்கானோரை இலங்கை, மொரிஷியஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு கப்பலில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர். அப்படி வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், துயரங்கள், சுக துக்கங்கள் பல்வேறு இலக்கிய வடிவங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொரிஷீயஸ் நாட்டில் அபிமன்யு அனத், ஜயதத் ஜீவுத், தீபந்த் பிஹாரி, தர்மவீர் கூரா, […]

Read more

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் வாழ்வும் வாக்கும், பா.சு. ரமணன், சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. நீர்க்குமிழி போன்ற இம்மானுட வாழ்க்கையில் ஒளிக்கீற்றாய், உலகை உய்விக்க, ஆங்காங்கே சில மாமனிதர்கள் தோன்றுவதுண்டு. அப்படித் தோன்றிய மகத்தான மாமனிதர்களுள் ஒருவர்தான் திருவருட் பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க வள்ளலார். வாழையடி வாழையென வந்த அடியார்கள் திருக்கூட்டத்தைச் சேர்ந்த வள்ளலார், தன்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த ஞானி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல், சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைச் சாடிய சமூக சீர்திருத்தவாதி. எல்லாரும் எல்லாமும் […]

Read more
1 40 41 42 43 44 80