மகிழ்ச்சி

மகிழ்ச்சி, நந்தவனம் சந்திரசேகரன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.150. திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் 21 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். மழபாடி ராஜாராமின் மவுனமொழி, விழுதுகளின் எழுச்சி, வேரின் மகிழ்ச்சி, பா.சேது மாதவனின் மனத்திறப்பு, கரையான், துறையூர் முருகேசனின் அருக்காணி, மாற்றும் ஏமாற்றும், மாராட்டி எம்.ஏ.ரமேஷின் திருத்தி எழுதிய கதை, உளி தாங்கும் கற்கள், கவுசிகனின் நான் இறந்து இருக்கிறேன், ஒன்றானோம்- ஒன்றாவோம், மிலிட்டரி போஸின் துரோகம் ஆகியவை சிறப்பாக உள்ளன. மூகாதேவி மகேஷின் ஆவியுடன் ஒரு நேர்காணல், பாசக் குடும்பம், ஜனனி அந்தோணி […]

Read more

செத்தை

செத்தை,  வீரபாண்டியன், எழுத்து, பக்.144,  விலை ரூ.110.  சமூகத்தின் எளிய மனிதர்களின் வாழ்வையும் அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் மையப்படுத்தி எழுதப்பட்ட 10 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.  தனிப்பட்ட தேர்ந்த களங்களை, இதுவரை யாராலும் பதிவுசெய்யப்படாத அடித்தட்டு மக்களை கதை மாந்தர்களாகக் கொண்டு அம்மக்களின் அடிமனதின் அடுக்குகளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளையும், அவர்களின் கையறு நிலையையும் காட்சிப்படுத்துகிறது “செத்தை’.  மிக்கி மவுஸ், ரேபிட் போன்று பொம்மை உடைகளை அணிந்துகொண்டு, கொண்டாட்ட நிகழ்வுகளில் விருந்தினர்களை மகிழ்விக்கும் வேலையை பகுதி நேரமாகப் பார்க்கும் கல்லூரி இளைஞர்களின் வாழ்க்கைச் சூழலையும், […]

Read more

ஆத்திசூடிக் கதைகள்

ஆத்திசூடிக் கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.200. ஒளவையாரின் ஆத்தி சூடியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்களுக்கு சின்னஞ் சிறு கதைகள் மூலம் நீதி போதிக்கும் சிறுகதைத் தொகுப்பு. இந்நூலில் ஆத்திசூடியின் கருத்துகளோடு, பல்வேறு கதை மாந்தர்களையும், விலங்குகளையும் வைத்து எளிய நடையில் கதைகள் புனையப்பட்டுள்ளன. இவை படிக்க சுவையாக இருப்பதுடன், சிந்தனைக்கும் விருந்தாக அமைந்துள்ளன. “ஊக்கமது கைவிடேல்’ என்பதற்கு சிலந்தியின் விடாமுயற்சியைக் கண்டு ஊக்கம் பெற்ற ராபர்ட் புரூஸின் வாழ்க்கைச் சம்பவம் ஓர் உதாரணம். “நேரிலும் பார்க்காத… நல்லதும் அல்லாத, யாருக்கும் ஒரு […]

Read more

தனிமனிதன்

தனிமனிதன்,  சிந்து சீனு,  லாவண்யா புத்தகாலயம், பக். 110, விலை  ரூ.110. எளிய மனிதர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளையும், அவர்தம் மனக் குமுறல்களையும் மையப்படுத்தி எழுதப்பட்ட 9 சிறுகதைகளின் தொகுப்பே ‘தனிமனிதன். அதிகார வர்க்கமும், மேல்தட்டு சமூகமும் விளிம்புநிலை மனிதர்களின் உழைப்பைச் சுரண்டுவதிலேயே எப்போதும் குறியாக உள்ளன. அடித்தட்டு மக்களின் மனக்குமுறல்களுக்கு முழுமையான தீர்வு கிடைப்பது இல்லை. இந்த அவலத்தை சில கதாபாத்திரங்கள் மூலமாக ‘தனிமனிதன்’ பதிவு செய்துள்ளது. குப்பை அள்ளும் தொழிலாளி, தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர், எதிர்பாராதவிதமாக வேலையை இழக்கும் தொழிலாளி, சுமை […]

Read more

செத்தை

செத்தை, வீரபாண்டியன், எழுத்து,  பக்.144, விலை ரூ.110. சமூகத்தின் எளிய மனிதர்களின் வாழ்வையும் அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் மையப்படுத்தி எழுதப்பட்ட 10 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். தனிப்பட்ட தேர்ந்த களங்களை, இதுவரை யாராலும் பதிவுசெய்யப்படாத அடித்தட்டு மக்களை கதை மாந்தர்களாகக் கொண்டு அம்மக்களின் அடிமனதின் அடுக்குகளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளையும், அவர்களின் கையறு நிலையையும் காட்சிப்படுத்துகிறது “செத்தை’. மிக்கி மவுஸ், ரேபிட் போன்று பொம்மை உடைகளை அணிந்துகொண்டு, கொண்டாட்ட நிகழ்வுகளில் விருந்தினர்களை மகிழ்விக்கும் வேலையை பகுதி நேரமாகப் பார்க்கும் கல்லூரி இளைஞர்களின் வாழ்க்கைச் சூழலையும், […]

Read more

வாய்மொழிக் கதைகள்

வாய்மொழிக் கதைகள், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.145. வாய்மொழிக் கதைகள் பற்றிய விளக்கமான ஆய்வு நுால். அவற்றின் வகைமை, சேகரிப்பது, பனுவலாக்கம் செய்வது பற்றி எல்லாம் விரிவாக உள்ளது. பண்பாட்டை அறிவதில் வாய்மொழிக்கதைகளின் முக்கியத்துவத்தை நுட்பமாக உரைக்கிறது. அதன் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்து, புராணக் கதை, பழமரபுக்கதை, நாட்டார் கதை என்ற வகைமைக்கு உட்படுத்தியுள்ளார். அவை பற்றி தனித்தனியாக விளக்கம் தரப்பட்டுள்ளது. வாய்மொழிக் கதைகளின் சூழல் பயன்பாடு பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவற்றை சேகரிப்பது, பனுவலாக்கம் செய்வதற்கான ஆய்வு உத்தியும் விரிவாக […]

Read more

வெண்ணிற இரவுகள்

வெண்ணிற இரவுகள் ,சிறுகதைகளும் குறுநாவல்களும் , ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி; தமிழில் – ரா. கிருஷ்ணய்யா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 394, விலை ரூ. 350. உலகின் தலைசிறந்த பத்து நாவலாசிரியர்கள் என எவரொருவர் பட்டியலிட்டாலும் அவர்களில் ஒருவராக இடம்பெறுபவர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி. “குற்றமும் தண்டனையும்’, “அசடன்’, “கரமசோவ் சகோதரர்கள்’ போன்ற பெருநாவல்களை எழுதிய ரஷிய எழுத்தாளர். நாவலைப் பற்றிப் பேசினாலே குற்றமும் தண்டனையையும் விட்டுவிட்டுப் பேச முடியாது.<br>இத்தனை பெருமைமிக்க தஸ்தயேவ்ஸ்கியால் 1848-இல் – இன்றைக்கு 172 ஆண்டுகளுக்கு முன் – எழுதப்பட்ட குறுநாவல் “வெண்ணிற […]

Read more

தேர்ந்தெடுக்கப்பட்ட புதுமைப்பித்தன் சிறுகதைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட புதுமைப்பித்தன் சிறுகதைகள், அருணா பதிப்பகம், விலைரூ.130.   சிறுகதை மன்னன் என புகழப்பட்டவர் புதுமைப்பித்தன். அவர் எழுதியதில் சிறந்தவற்றை தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் 18 கதைகள் இடம் பெற்றுள்ளன. அவர் எழுதிய, ‘பொன்னகரம்’ முதல் கதையாக உள்ளது. காலவரிசைப்படி கதைகளை தேர்வு செய்து தொகுத்துள்ளனர். என்றும் இனிமையுடன் வாசிக்க தகுந்த தொகுப்பு நுால். – பாவெல். நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031368_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

எட்டுக் கதைகள்

எட்டுக் கதைகள், திலக் ராஜ்குமார், கடற்காகம் வெளியீடு, விலை: ரூ.145. மதுரையைச் சேர்ந்த திலக் ராஜ்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இளமைக்கால அனுபவங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், மனித உறவுகள், அறிவியல் புனைவுகள் என வெவ்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் கதைகள். இந்த நூற்றாண்டின் இறுதியிலேயே ரோபாட்கள் மூலம் டோர் டெலிவரி செய்ய வாய்ப்புகள் உண்டு என்ற அறிவியல் கற்பனையோடு தொடங்குகிறது தொகுப்பின் முதல் சிறுகதையான ‘நீங்கள் கேட்டவை’. கூடவே, அது சாத்தியமாகும் நாளில், தமிழ்நாடு ஏழு பெருநகர மண்டலங்களாகி ஒவ்வொன்றுக்கும் தனி முதல்வர் இருப்பார் என்பது […]

Read more

ஆலய வழிபாடு

ஆலய வழிபாடு, தொகுப்பாசிரியர்: சத்யவதனா; சத்யா பதிப்பகம், பக். 198; விலை ரூ.150. ஆலயங்களின் சிறப்பம்சங்கள், விளக்கேற்றுதல், விரதம் இருத்தல், தானம் அளித்தல், வழிபாட்டு முறைகள், மந்திர மகிமை போன்றவை குறித்து விளக்கமாக எழுதப்பட்டிருக்கும் நூல். முதல் சிவபக்தன், விளக்கேற்றும் ரகசியம், சென்னையில் பஞ்சபூதக் கோயில்கள், கேதார கெளரி விரதம், புரட்டாசி விரதம், நவராத்திரி, மகாளய அமாவாசை என்பன உள்ளிட்ட 30 தலைப்புகளில் ஆன்மிக கட்டுரைகளும், 6 ஆன்மிக சிறுகதைகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. சிதம்பரம், காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகியவை பஞ்ச பூதத்தலங்களாக […]

Read more
1 4 5 6 7 8 80