வாழநினைப்போம், வாழுவோம்

  வாழநினைப்போம், வாழுவோம், டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 120ரூ. “எல்லா மாணவர்களுக்கும் சிறந்த வாழ்க்கை சாத்தியம் என்பதை நிச்சயப்படுத்தும்வகையில் நான் எழுதி இருக்கும் இந்தப் புத்தகத்தை பெற்றோரும் ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களையும் குழந்தைகளையும் படிக்க ஊக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”. இந்த நூல்குறித்து அப்துல் கலாம் அவர்களே சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை. இலட்சிய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். ஆங்கிலத்தை அழகுத் தமிழாக்கியிருக்கிறார் சிவதர்ஷினி. நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

புலி – ஆடு, புல்லுக்கட்டு

புலி – ஆடு, புல்லுக்கட்டு, டாக்டர் ஆர். கார்த்திகேயன், தாமரை பிரதர்ஸ் மீடியா, பக். 80, விலை 60ரூ. இந்த புத்தகத்தைப் பார்த்ததும், ‘இதெல்லாம் ஒரு புத்தகமா?’ என்று நினைக்க தோன்றுகிறதா? ‘ஆம்’ என்பது உங்கள் பதில் எனில், அதை வாங்க வேண்டிய இரண்டாம் நபர் நீங்கள். ‘இல்லை’ என்பது உங்கள் பதில் என்றால், முதல் நபர் நீங்கள் தான். ஏன் என்றால்… இதில் நீங்கள் விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஆயிரம், ‘ஏன்’களுக்கு இதில் விடை இருக்கிறது. ‘அதிகம் செல்பி எடுப்பவர்கள் ஆண்களா, […]

Read more

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0,

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0, சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், விலை 175ரூ. உணர்வு மேலாண்மை என்ற எமோஷனல் இன்டெலிஜென்ஸ் புத்தகத்தில் மனிதர்களிடையே நட்பை ஏற்படுத்த தேவைப்படும் குணாதிசயங்கள் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் நமக்கு ஏற்படும் விதவிதமான உணர்வுகளை எப்படி ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்ற வழியையும் இந்த நூல் கற்றுத்தருகிறது. அத்துடன், பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும், பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தங்களில் இருந்து மீள்வதற்கான வழிகளும் கற்றுத்தருகிறது. மன்னிப்பின் அவசியத்தையும், மற்றவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவத்தையும் இந்த நூல் மூலம் தெரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் […]

Read more

திருக்குறளில் தன்னம்பிக்கை

திருக்குறளில் தன்னம்பிக்கை, ஜெ.கமலநாதன், குமரன் பதிப்பகம், பக்.104, விலை 40ரூ. திருக்குறளில் கூறப்பட்டுள்ள மேலாண்மை அறிவியல் கருத்துக்களை முன்னிறுத்துகிறது. உலகின் மிகச் சிறந்த ஆங்கில தன்னம்பிக்கை நுால்களில் கூறப்பட்டுள்ள ஆளுமைப் பண்புகள் பல உள்ளன. அவை யாவும், ஏற்கனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளில் வலியுறுத்தப்பட்டுள்ள பெரும் விந்தையையும், பெருமையையும் நுாலாசிரியர் தக்க சான்றுகளோடு பதிவு செய்து, சிறப்பு சேர்க்கிறார். இந்நுால், இலக்கிய அன்பர்கள் அனைவர் கைகளிலும் தவழும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 7/1/2018.

Read more

முடிவு எடுத்தல்

முடிவு எடுத்தல், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.32, விலை 50ரூ. பிரச்னைகளின்போதும், சிக்கலாக உணரும் தருணங்களிலும் எப்படிப்பட்ட முடிவைத் தேர்ந்தெடுப்பது; எப்படியான அணுகுமுறையைக் கையாள்வது; சூழலுக்கேற்ப எப்படி நடந்து கொள்வது மற்றும் குழப்பங்களிலிருந்து விடுபடுவது போன்ற பல்வேறு விளக்கங்கள் இந்நுாலில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளன. முடிவெடுக்க இயலாத நிலையில் ஏற்படும் குழப்பங்களிலிருந்தும், மன உளைச்சல்களிலிருந்தும் மனித சமூகத்தை விடுவிக்கும் முயற்சியாக அமைந்துள்ளது இந்நுால். எளிய நடையில் ரத்தின சுருக்கமாக விளக்குகிறது. நன்றி: தினமலர், 7/1/2018.

Read more

சந்தோசம்

சந்தோசம், மு.ஞா.செ.இன்பா, பந்தள பதிப்பகம், விலை 299ரூ. கலை பேசும் சந்தோசம் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கடும் உழைப்பாலும், நேர்மையாலும் வெற்றியின் சிகரத்தைத் தொட்டவர்கள் வி.ஜி.பன்னீர்தாஸ் சகோதரர்கள். அண்ணன் பன்னீர்தாஸ் எதிர்பாராதவிதமாக இளமையிலேயே மறைந்து விட, சோதனைகளைத் தாங்கி அந்த நிறுவனத்தை கோபுரம் அளவுக்கு உயரச் செய்தவர் வி.ஜி.சந்தோஷம். எதிர்நீச்சல் போட்டு முன்னேறிய சந்தோஷத்தின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எழுதியுள்ளார் நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா. ஏராளமான படங்களுடன், கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் புத்தகம் அமைந்துள்ளது. வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள் அவசியம் படிக்க […]

Read more

நேரம்

நேரம், வெ.இறையன்பு, நியூ செஞ்சரி புக் ஹவுஸ்(பி)லிட், விலை 50ரூ. நேரம் நகர்ந்து கொண்டேதான் இருக்கும். அதன் நகர்தலுக்கு ஏற்ப நமது நகர்தலுக்கான திட்டமிடலைச் செய்தால், நேரம் இல்லை என்ற பிரச்னையே வராது. காலத்தை நம் கைப்பிடியில் வைத்துக் கொண்டு கணக்கிட்டு செயலாற்றும் வழியை சீராகச் சொல்லித் தந்திருக்கிறார் இறையன்பு. இளைஞர், முதியோர், ஏழை, பணக்காரர், எஜமானர், வேலைக்காரர், மாணவர், இல்லத்தரசி என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமே பயன்தரக்கூடிய அற்புதமான புத்தகம். -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

மோர் + ரசம் = முன்னேற்றம்

மோர் + ரசம் = முன்னேற்றம், கவி.முருகபாரதி, யோசி பதிப்பகம், பக். 80, விலை 80ரூ. மோர் + ரசம் = முன்னேற்றம்’ என்ற வித்தியாசமான தலைப்பை தந்துள்ள நுாலாசிரியரின் சிந்தனையே, இந்நுாலின் முதல் சிறப்பு. எந்த செயலையும், ஆர்வத்துடனும், சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும் செய்தால், வெற்றி நிச்சயம் என்பதை, அறிஞர்கள் பலரின், பொன்மொழிகளை மேற்கோள் காட்டி எடுத்துரைத்துள்ளது மேலும் சிறப்பு. டீ குடிப்பது குறித்து, ஆசிரியர் எழுதியிருக்கும் விஷயம், ‘இதில் கூட இவ்வளவு ரசனை மிக்க அம்சங்கள் உள்ளனவா?’ என, […]

Read more

நீங்களும்  ஆகலாம்

நீங்களும்  ஆகலாம், அ.டோமினிக் சேகர்கா, காகிதம் பதிப்பகம், விலை 50ரூ. மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகள் கொண்ட புத்தகம். “முயற்சி செய்தால் நீங்களும் ஆப்துல் கலாம் ஆகலாம்” என்று மாணவர்களை உற்சாகப்படுத்துகிறார் ஆசிரியர் அ.டோமினிக் சேகர். படிப்பில் சாதனை புரிந்த பல மாணவ மாணவிகள் பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. “இரத்தப் புற்றுநோயுடன் தேர்வு எழுதிய மாணவி”, “அன்று குழந்தை தொழிலாளி, இன்று முதல் மாணவர்”, “பார்வையற்ற மாணவரின் சாதனை” இதுபோன்ற தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளான மாணவர்கள் எத்தகைய அரிய சாதனைகள் […]

Read more

கவிதை ஒளி

  கவிதை ஒளி, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 130ரூ. பேராசிரியர், பேச்சாளர், திறனாய்வாளர் என்று பன்முகம் கொண்டவர் இரா.மோகன். அவர் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதில் கவி ஆளுமைகள் என்ற தலைப்பில் வ.சு.ப.மாணிக்கனார், ஈரோடு தமிழன்பன் போன்றோரின் ஆளுமைகள் குறித்தும் கவிதைக் கீற்றுகள் என்ற தலைப்பில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ பற்றியும் சுவைபட எழுதியுள்ளார். சங்கச் சித்திரங்கள் என்ற தலைப்பில் சங்க கால இலக்கியத்தின் சிறப்பை விவரிக்கிறார். இலக்கிய அன்பர்களுக்கு இனிய விருந்து. நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Read more
1 5 6 7 8 9 23