காலத்தை வென்ற காவிய நட்பு

காலத்தை வென்ற காவிய நட்பு, பழ. நெடுமாறன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 800ரூ. ஆசிரியர் பழ. நெடுமாறனின் கடும் முயற்சியாலும் அர்ப்பணிப்பாலும் இந்த புத்தகம் உருவாகி இருப்பதை நன்றாக உணரமுடிகிறது. இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் ஆதிகாலத்தில் இருந்து வரும் நட்பும் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட பண்பாட்டு பரிமாற்றமும் மிக நுணுக்கமாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு ரஷியா செய்த உதவிகள், ரஷியாவில் நடைபெற்ற புரட்சி இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம், இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே இருந்த ஆழ்ந்த […]

Read more

காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், நேசம் பதிப்பகம், பக். 136, விலை 90ரூ. காந்தியடிகளின் வாழ்க்கையை மக்கள் மனதில் எளிதில் பதிவு செய்ய முனைவர் ஆவுடையப்பன் எடுத்திருக்கும் உத்தி இது. ஒரு நிகழ்வைச் சொல்லி அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக காந்தியடிகளின் வாழ்வில் நடந்த சம்பவத்தை பொருத்தி விடுகிறார். அதை அந்த உரையாடல் மூலம் நிறைவு செய்வதால் படிப்போர் மனதில் எளிதில் காந்தியின் கொள்கைகள் வந்து உட்கார்ந்துவிடுகின்றன. அகிம்சை, சத்தியம், அன்பு, சகிப்புத்தன்மை, சத்தியாகிரகம் போன்றவற்றை காந்தி எப்படி தன் வாழ்வின் நெறிமுறைகளாகக் […]

Read more

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள்

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள், ஜீவா பதிப்பகம், பக். 176, விலை 90ரூ. தமிழில் கடித இலக்கியம் என்னும் துறை வளர பலர் பலவழிகளில் உதவியுள்ளனர். அவர்களில் வெ. சாமிநாத சர்மாவின் பங்கு அதிகம். மகாத்மா காந்திக்கும் நேதாஜிக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தை அன்றைய ஜோதி இதழில் அவர் முழுமையாக நேர்மையாக மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அந்த கடிதப் போக்குவரத்தின் தொகுப்பே இந்நூல். கடிதங்கள் ஒவ்வொன்றும், காலம், நேரம், இடம், அரசியல் சூழல், சமூக தேவை, காங்கிரஸின் அன்றைய நிலை, இந்திய தேசிய சுதந்திரப் […]

Read more

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள், ரமணன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 115ரூ. என்னுடைய வாரிசு ஜவஹர்லால் என்று காந்தி சொன்னார். இரண்டு பேருக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனாலும் காந்தியச் சிந்தனைக்கு மாற்றாக நேரு நடக்க மாட்டார் என்ற நம்பிக்கை மகாத்மாவுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றியது மட்டுமல்ல, இந்தியாவை வடிவமைத்தவர் நேரு. இந்தியா தனது முதலாவது விடுதலை நாளைக் கொண்டாடியபோது, அதைச் செய்தியாக வெளியிட்ட பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று. ‘அடுத்த ஆண்டு இப்படி […]

Read more

கலீல் கிப்ரானின் காதல் கதை

கலீல் கிப்ரானின் காதல் கதை, ராஜ்ஜா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. நீங்கள் மாதந்தோறும், 300 ரூபாய் செலவில் புத்தகங்கள் வாங்குகிறீர்கள். அந்த ரசீதை அரசிடம் கொடுத்தால், உங்களுக்குப் பணம் திரும்பக் கிடைத்துவிடும் என்றால் எப்படியிருக்கும்? ஹாலந்து நாட்டின் அரசு ஊழியர்களுக்கு, இப்படியொரு சலுகை வழங்கப்படுகிறது. தங்கள் நாட்டு மக்கள், படிப்பதில் ஆர்வம் குன்றாதிருக்க, புத்தக பதிப்பாளர்களுக்கு அவற்றை அச்சிட வேண்டிய காகிதத்தை, மிகக் குறைந்த விலைக்கு அளிக்கிறது. புத்தக விலையை ஏற்ற வேண்டிய அவசியமே அங்கு இல்லை. இப்படி […]

Read more

அகிம்சையின் சுவடுகள்

அகிம்சையின் சுவடுகள், ப. முத்துகுமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 360, விலை 260ரூ. மகாத்மா காந்தியடிகள், மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் ஆகிய இரு தலைவர்களைப் பற்றி விவரிக்கிறது இந்நூல். காந்திஜியின் கொள்ளையால் ஈர்க்கப்பட்ட லூதர் கிங், 1895 ஆம் ஆண்டில் தொடங்கி 1965 ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஆப்ரிக்க மக்களின் உரிமைகளுக்காக நடத்திய எண்ணற்ற போராட்டங்கள் காந்திய வழிப் போராட்டங்கள்தாம். காந்திஜியின் வழிமுறை, அமெரிக்காவில் பயன்படுத்தக் கூடியத என்பதை 1920களிலேயே அமெரிக்க கறுப்பின மக்கள் உணர்ந்திருந்தனர். இந்தப் போராட்டத்தின்போது பள்ளிச் […]

Read more

இந்தியா வரலாறும் அரசியலும்

இந்தியா வரலாறும் அரசியலும், டி. ஞானய்யா, விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர், விலை 400ரூ. 95 வயதையும் தாண்டி வாழும் வரலாறாக வாழ்ந்துகொண்டு இருப்பவர் தோழர் டி.ஞானய்யா. இன்றும், இன்னும் எழுதிக்கொண்டும் இருக்கிறார். நீண்ட ஆயுளுக்கு உடல் நலம் மட்டும் காரணம் அல்ல, சிந்தனைத் தெளிவும் முக்கியக் காரணமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் இவர். அவரது வன்மையான எழுத்தில் இந்தியாவின் வரலாறு சீரான பார்வையுடன் செதுக்கித் தரப்பட்டுள்ளது. புத்தகங்களில் இருந்து அல்லாமல், தன்னுடைய 74 ஆண்டுகால அரசியல் பயண அனுபவங்களின் மூலமாகப் பல்வேறு நிகழ்வுகளை அவர் […]

Read more

ராஜாஜியின் கருத்துக்கள்

ராஜாஜியின் கருத்துக்கள், ராஜாஜி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 176, விலை 70ரூ. 20 ஆம் நூற்றாண்டின் ‘இந்திய அரசியல் ஞானி’ என்று பாராட்டப்பட்டவர் சக்கரவர்த்தி சி. ராஜகோபாலாச்சாரியார். விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்திக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்பையும் வகித்தவர். பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்பழுக்கற்றவராகத் திகழ்ந்த இந்த மூதறிஞரின் கருத்துக்கள், தொலைநோக்குக் கொண்டவை. 1970-71ல் மத்தியிலும், மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் நிகழ்ந்த பல்வேறு பிரச்னைகள், சம்பவங்கள் குறித்து இவர் கூறிய கருத்துகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியாகின. […]

Read more

திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு

திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு, முனைவர் பி. யோகீசுவரன், நீலா பதிப்பகம், சென்னை, பக்கம் 344, விலை 175ரூ. தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை “மொழிவழியாக தமிழகம் அமைந்த சூழ்நிலையில், அதன் எல்லைகள் சுருங்கிய நிலை, நதிநீர் சிக்கல், தொன்மையான நம் தமிழ் மொழி தமிழகத்திலும், இந்தியாவிலும் பெற வேண்டிய இடத்தைப் பெறாத நடைமுறை ஆகியன, எனக்குள் ஓர் உறுத்தலாகவே இருக்கின்றன. “அதனால், என் மாணவ பருவத்தில், நான் ஈடுபாடு கொண்டிருந்த தெற்கெல்லைப் போராட்டத்தை, தமிழுலகிற்கு எடுத்துச் சொல்லுதல் இன்றைய என் கடமையென உணர்ந்தேன். அதுவே […]

Read more

படம் பார்த்து படி

படம் பார்த்து படி, சுரேகா, மதி நிலையம், பக். 128, விலை 100ரூ. நாவல் வடிவில், மேலாண்மைக் கருத்துக்களைப் புரிய வைப்பதுதான் நூலாசிரியர் சரேகாவின் பாணி. இந்த நாவலின் கதாநாயகன் குரு, ஓர் உதவி இயக்குனர். அவன் ஒரு விடுதியில் தங்கி இருக்கிறான். அங்கு பல நண்பர்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை. பிரச்சினையை அணுக தெரியாமல் தவிக்கின்றனர். நண்பர்களின் பிரச்னைக்கான தீர்வுகளை, பாய்ஸ், ரமணா, அற்புதம், வானவில், ஐயா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், நண்பன், நான் பேச நினைப்பதெல்லாம், புதிய கீதை போன்ற பிரபல சினிமா […]

Read more
1 24 25 26 27 28 44