தூக்கு மர நிழலில்

தூக்கு மர நிழலில், சி.ஏ. பாலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 156, விலை 120ரூ. பொதுவுடமை சித்தாந்தத்தை உடல், பொருள், ஆவியாகக் கருதிய உண்மையான கம்பூனிஸத் தோழர்களில் சி.ஏ. பாலனும் ஒருவர். மக்கள் நலனுக்காக 15 ஆண்டு, 9 மாதம், 21 நாள்கள் சிறைக் கொட்டடியில் தன் வாழ்நாளைக் கழித்து, மரணத்தின் வாசல் வரை சென்று உயிரோடு மீண்டு வந்த அவரின் நீண்ட, நெடிய மிகக்கொடுமையான சிறை அனுபவமே தூக்கு மர நிழலில். இது 1976இல் புத்தகமாக வெளியானது. […]

Read more

தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும்

தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும், செம்முதாய் பதிப்பகம், சென்னை, சிலம்பு, மேகலை ஆகிய நூல்களின் விலை ஒவ்வொன்றும் 450ரூ. தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். தமிழில் காப்பியம் கி.பி. 2-ம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரம் முதல் இன்று வரை பல காப்பியங்கள் தோன்றியுள்ளன. காப்பியங்கள் அனைத்தும் மனித சமுதாயத்தை மையப்படுத்தியே உள்ளன. பண்டைய காலம் முதல் தமிழர்களின் ஒழுக்கங்களையும், பண்பாட்டையும் காப்பியங்கள் பறைசாற்றி வருகின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை […]

Read more

நரேந்திரமோடி சுவைமிகு தேநீர் துளிகள்

நரேந்திரமோடி சுவைமிகு தேநீர் துளிகள், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 270ரூ. பிரதமர் நரேந்திரமோடி குஜராத் மாநில முதல் மந்திரியாக இருந்தபோது, அந்த மாநிலததை முன்மாதிரி மாநிலமாக மாற்றினார். குஜராத்தில் அவர் நிறைவேற்றிய செயல் திட்டங்கள் குறித்தும், மோடியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றியும், தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் எழுதியுள்ள நூல். பாலைவனமாக இருந்த குஜராத்தை சோலைவனமாக்க மோடி ஆற்றிய நற்காரியங்களை ஆசிரியர் அழகாக எடுத்துக்கூறியுள்ளார். பக்கத்துக்கு பக்கம் மோடியின் வண்ணப்படங்கள். இந்த […]

Read more

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், பி. எல். முத்தையா, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை,  பக். 208, விலை 80ரூ. பெரியார், அண்ணா, ராஜாஜி ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில், அரசியல், வரலாறு, சமூகம், கலை, இலக்கியம் என்று பல்துறை சம்பந்தமாக ஆற்றிய உரைகளில் உதிர்த்த பயனுள்ள கருத்துக்களின் தொகுப்பு. மேடையில் மட்டுமல்லாது நண்பர்களிடையே பேசும்போதும், மக்கள் மன்றத்தில் உரை நிகழ்த்தியபோதும் பல்வேறு ஏடுகளில் எழுதியபோதும் அவர்கள் சொன்ன அரிய தகவல்களின் அணிவகுப்பு இந்நூல். தனக்குச் சரி என்று தோன்றுவதைக் கூறவோ எழுதவோ தயங்காதவர் பெரியார் என்பதை நிறுவும் […]

Read more

குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள்

குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள், ஜெகாதா, சபரீஷ் பாரதி வெளியீடு, பக். 128, விலை 80ரூ. ஒரு போர் பற்றிய தகவல்கள் எந்தளவுக்கு பரபரப்பை கிளப்பி விடுகின்றனவோ, அதேபோல்தான், போர் குறித்த புகைப்படங்களும். ஆனால் செய்யதிகளைவிட அவை, மக்களிடம் ஒருவித அச்சத்தையும், இரக்கத்தையும் ஏற்படுத்துவதில் முன்னிற்கின்றன. அப்படி போர்களில் உயிரை துச்சமாக மதித்து, கேமராக்களுடன் ஓடி, போரின் பாதிப்புகள், மனித உரிமைமீறல்கள், பரிதாபம், கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்த, 50 புகைப்பட கலைஞர்களின் வாழ்க்கை பதிவு தான் இந்த நூல். அமெரிக்கா, சோவியத், பிரிட்டன் […]

Read more

இந்தியத் தேர்தல் வரலாறு

இந்தியத் தேர்தல் வரலாறு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, பக். 607,விலை 650ரூ. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலாவது பொதுத்தேர்தல் 1952ம் ஆண்டு இந்தியா முழுவதும் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடும், ஆந்திராவும் இணைந்து சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒரே மாநிலமாக இருந்தது. அந்த தேர்தலில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஐக்கிய முன்னணி அமைத்து, மந்திரசபையை அமைக்கத் திட்டமிட்டன. சுதந்திரம் அடைந்தபின், முக்கிய மாநிலமான சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழப்பதை பிரதமர் நேரு விரும்பவில்லை. […]

Read more

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகாதா, நக்கீரன், விலை 150ரூ. அண்மையில் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை வென்று, இந்தியாவை மட்டுமல்ல, உலகின் விழிகளையே வியப்பால் விரியச் செய்தவர், அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை அன்னா ஹசாரேயுடன் இணைந்து உருவாக்கியது முதல், மீண்டும் டெல்லி அரியணையில் அமர்ந்தது வரையிலான கெஜ்ரிவாலின் வாழ்க்கையை எழுத்தாளர் ஜெகாதா சுவைபட எழுதியுள்ளார். சாமானியனாக இருந்த சாதனை படைத்த அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்ட குணம், துணிச்சல் ஆகியவற்றை பாராட்டும் ஆசிரியர், அவரது ஆரவார […]

Read more

இந்தியாவும் ஈழத்தமிழரும்

இந்தியாவும் ஈழத்தமிழரும் (அவலங்களின் அத்தியாயங்கள்), நிராஜ் டேவிட், தோழமை வெளியீடு, சென்னை, பக். 320, விலை 250ரூ. இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையை முடிவுக்குக் கொண்டு வரவும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தனி நாடு கோரும் அமைப்பினரை ஒடுக்கவும் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டதுதான் இந்திய அமைதிப் படை (ஐ.பி.கே.எஃப்.). இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள 1987 முதல் 1990 வரை இந்திய அமைதிப் படை இலங்கையில் தங்கியிருக்க வேண்டும் என இந்தியா, இலங்கையிடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளை அடக்கி, […]

Read more

காலத்தை வென்ற காவிய நட்பு

காலத்தை வென்ற காவிய நட்பு (இந்திய – ரஷ்ய பண்டைய உறவும் பண்பாட்டுப் பரிமாற்றமும்), பழ. நெடுமாறன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 708, விலை 800ரூ. முப்பது ஆண்டு கால உழைப்பு. அசாத்தியமான தேடலுடன் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மிக விரிவாக எழுதப்பட்டுள்ள, பாராட்டுதலுக்குரிய நூல். மூன்றுவித தேடல் உள்ளவர்களுக்கு ஒரு கருவூலம் போன்றது இது. அதாவது 1. ரஷிய – இந்திய அரசியல் வரலாற்றுத் தொடர்புகள் குறித்தான தேடல். 2. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு வளர்ந்தது, […]

Read more

நீதிக்கட்சி வரலாறு (1616-1944)

நீதிக்கட்சி வரலாறு (1616-1944), க. திருநாவுக்கரசு, நக்கீரன் வெளியீடு, விலை 1200ரூ. நூற்றாண்டு விழாவை நெருங்கிகொண்டு இருக்கும் திராவிட இயக்கத்தின் முதல் 30 ஆண்டு கால முழுமையான வரலாறு இது. திராவிடர் இயக்க வரலாற்றுக் கணினி என்று பாராட்டப்பட்ட க. திருநாவுக்கரசு தனது அதீதமான உழைப்பால் இதை உருவாக்கியிருக்கிறார். அடுத்து சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முழுமையான வரலாற்றையும் அவர் பரபரப்பாய் எழுதி வருகிறார். பலரது கூட்டுமுயற்சியால் உருவாக்கப்பட வேண்டிய, பெரிய உழைப்பு தேவைப்படும் ஒரு பணியை தனி […]

Read more
1 23 24 25 26 27 44