நேரு முதல் மோடி வரை

நேரு முதல் மோடி வரை, சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு. 17 ஆண்டுகள் பதவி வகித்தார். பின்னர் அவர் மகள் இந்திரா காந்தி, பேரன் ராஜீவ் காந்தி ஆகியோரும் பிரதமராகப் பதவி வகித்தனர். பெரும்பாலானவர்களுக்கு இது தெரியும் என்றாலும், நேரு முதல் மோடி வரை மொத்தம் 15பேர் பிரதமர்களாக இருந்துள்ளனர் என்பது பலருக்குத் தெரியாது. அந்த 15 பேர்களும் எப்போது, எந்த சூழ்ந்லையில் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதையும், அவர்களுடைய சாதனைகள் பற்றியும் சுவைபடக் கூறுகிறார், பிரபல […]

Read more

தேவை

தேவை, மரபு மாறா மனிதர்கள், மருதம் கோகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 160ரூ. மீத்தேன் எதிர்ப்பின் மண்ணிலிருந்து காவிரி டெல்டாவை மிகப் பெரும் அச்சம் சூழ்ந்திருக்கிறது. முப்போகம் நெல் விளைந்த தஞ்சை பூமியின் அடையாளம் கொஞ்சகொஞ்சமாய் மாறிவருகிறது. பெட்ரோலியம் உள்ளிட்ட இயற்கை வளங்கள், அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்குக் கேடாய் மாறியிருக்கின்றன. பெட்ரோலிய எண்ணெய் தோண்டியெடுப்பதற்காக அந்த மண்ணில் ஒ.என்.ஜி.சி. ஆரம்பத்தில் காலடி எடுத்து வைத்தது. இப்போது மீத்தேன் வாயு, ஷேல் காஸ் என அங்கு பூமியை பிளந்தெடுத்து […]

Read more

நதிகள் இணைப்பு சாத்தியமா

நதிகள் இணைப்பு சாத்தியமா, குன்றில் குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 112, விலை 70ரூ. உ.பி., ஆந்திரா, கேரளா மாநிலங்களில் நதிகள் இணைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளதை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். நதிநீர் இணைப்பு திட்டம் பேரழிவு திட்டம் (பக். 68) என, ராகுலும், நதிகள் இணைப்பு என்பது ஒரு குப்பையான திட்டம் (பக். 70) என மேனகாவும் கூறியதை சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர். அதேநேரம் ஆந்திராவுக்கு தண்ணீர் தர ஒடிசாவும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கேரளாவும் விரும்பவில்லை. பீஹாரும், மேற்கு வங்கமும் கங்கை நீரை திசை […]

Read more

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, கோமல் அன்பரசன், கிழக்கு பதிப்பகம், விலை 140ரூ. தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய விவரங்கள் தினசரி ஊடகங்களில் வெளியிடப்பட்டன. அவை அனைத்தையும் தொகுத்து ஊடகவியலாளர் கோமல் அன்பரசன் எழுதியுள்ள இந்நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வழக்கின் தன்மை, சட்ட விளக்கங்கள், அன்றாட நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் நடந்த சுவையான வாதங்கள் அனைத்தையும் ஒரு சாதாரண வாசகன் புரிந்துகொள்ளும் விதத்தில் விரிவாக அன்பரசன் எழுதியுள்ளார். 1991 முதல் 1996 ஜெயலலிதா தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்தார். […]

Read more

தி.க.சி. என்றொரு தோழமை

தி.க.சி. என்றொரு தோழமை, தொகுப்பாசிரியர் கழனியூரன், காவ்யா, பக். 250, விலை 281ரூ. தோழர் தி.க.சி. என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் தி.க.சிவசங்கரன், 2014, மார்ச், 25ம் தேதி மறைந்தார். அவரது நினைவைப் போற்றும்வகையில், பல்வேறு அறிஞர்கள், அஞ்சலி செலுத்தினர். அவற்றை நூலாக்கம் செய்யவேண்டும் என்னும் ஆர்வத்தில் தொகுப்பாசிரியர், 52 கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். நாளிதழ்கள், பேரிதழ்கள், சிற்றிதழ்கள், மின்னிதழ்கள் என்று, அனைத்துவிதமான பத்திரிகைகளிலும், வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்த தொகுப்பில் கி.ரா., பொன்னீலன், வண்ணநிலவன், பாவண்ணன் போன்ற எழுத்தாளர்கள் தி.க.சி. […]

Read more

புரட்சித்தலைவர் கண்ட புரட்சித்தலைவி

புரட்சித்தலைவர் கண்ட புரட்சித்தலைவி, கலைமாமணி வி. ராமமூர்த்தி, வி.ஆர். பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. சினிமா உலகில் 40 ஆண்டு காலம் அனுபவம் உள்ள பத்திரிகையாளர் கலைமாமணி வி.ராமமூர்த்தி, எம்.ஜி.ஆருடனும், ஜெயலலிதாவுடனும் நெருங்கிப் பழகியவர். தனது 40 ஆண்டு அனுபவங்களை இப்புத்தகத்தில் சவைபட எழுதியிருக்கிறார். மைசூரில், பி.ஆர். பந்துலுவின் கங்காகவுரி படப்பிடிப்பு நடந்தபோது, அரிவாள் கத்தியுடன் வந்து கன்னடர்கள் கலாட்டா செய்தனர். ஜெயலலிதா அஞ்சா நெஞ்சத்துடன் எதிர்த்து நின்று, அவர்களை விரட்டி அடித்த அந்த சம்பவத்தைப் படிக்கிறபோது, சின்ன வயதிலேயே ஜெயலலிதாவிடம் வீரலட்சுமி குடிகொண்டிருந்ததை […]

Read more

பிளேட்டோவின் குடியரசு

பிளேட்டோவின் குடியரசு, தமிழாக்கம் ஆர். இராமானுஜாசாரி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 412, விலை 230ரூ. மண்ணிலேயே விண்ணரசு ஏற்படுத்த முடியுமா? முடியும் என்கிறது பிளேட்டோவின் குடியரசு. சாக்ரடீஸ் தன்னுடைய மாணவர்களுடன் நடத்தும் உரையாடல்தான் இந்த புத்தகம். இந்த உரையாடல்கள் மூலம் ஒரு சிறந்த குடியரசுக்கான அடிப்படை எவை, அவை எவ்வாறு அமையும், அதில் ஆட்சியாளர்கள், நீதிமான்கள், காவலர்கள், தகுதிகள் என்ன? அத்தகைய குடியரசில் இளைஞர்கள் எப்படி வளர்த்தெடுக்கப்பட வேண்டும், இத்தகைய குடியரசில் எவை தீமைக்கு இடம் அளிக்கும், எவை நன்மையைச் சேர்க்கும், எத்தகைய […]

Read more

நல்லவங்க அரசியலுக்கு வாங்க

நல்லவங்க அரசியலுக்கு வாங்க, சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 75ரூ. இந்நூலில் இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய லட்சியத் தலைவர்களாக பெருந்தலைவர் காமராஜர், உத்தமர் கக்கன், தோழர் ஜீவானந்தம், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரின் பொது வாழ்க்கை வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் தூய்மையான அரசியல் மூலம் நல்லாட்சி ஏற்பட தேவையான நீதித்துறை, காவல்துறை மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உடனடி தேவைகளாக ஊழலற்ற நிர்வாகம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு மற்றும் நதிகள் இணைப்பு […]

Read more

காமராஜ் புதிரா? புதையலா

காமராஜ் புதிரா? புதையலா, எஸ்.பி. கணேசன், காமராஜ் விழிப்புணர்வு மையம், விருதுநகர், பக். 192, விலை 70ரூ. வட மாநிலங்களை விட கல்வி, தொழில் வளர்ச்சி, அணைக்கட்டு, மின்சாரம் என்று பல்வேறு துறைகளில் தமிழகம் இன்றும் முன்னிலையில் இருப்பதற்குக் காரணம், பெருந்தலைவர் காமராஜ் என்றால் அது மிகையாகாது. எளிய குடும்பத்தில் பிறந்து, பள்ளிக் கல்வி மட்டுமே கற்று, எந்தவொரு பின்னணியும் இன்றி, காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்களுக்கு இணையாக அரசியலிலும், மக்கள் மனதிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் காமராஜ். தமிழக முதல்வராக ஒன்பது […]

Read more

நரேந்திர மோடி சுவைமிகு தேநீர் துளிகள்

நரேந்திர மோடி சுவைமிகு தேநீர் துளிகள், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பூம்புகார் பதிப்பகம், பக். 176,விலை  270ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024551.html மோடிக்கு பிடித்த வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் நரேந்திர மோடி பற்றி, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எழுதிய நூல். மோடியைப் பற்றிய 160 செய்திகளை கொண்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தம், விவசாயிகளுக்கு எதிரானது, தொழில் துறையினருக்கு ஆதரவானது என்பது குற்றச்சாட்டு. குஜராத்தில் 1960லிருந்து 2000ம் ஆண்டு வரையில், சொட்டு நீர் பாசனம் நிலம், 12 […]

Read more
1 21 22 23 24 25 44