கம்பனைத் தேடி

கம்பனைத் தேடி, சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 175ரூ. பிர்மஸ்ரீ வாசுதேவ் கோவிந்தாச்சார்யா, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா உள்பட 9 பேரின் படைப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கம்பனில் சட்டம் என்ற கட்டுரை, ராம காவியத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் நிகழ்த்திய சூழ்ச்சிகள் எந்தெந்த குற்றப் பிரிவுகளில் வருகின்றன? தசரதன் கைகேயிக்குக் கொடுத்த வாய்மொழி ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகுமா? கம்பனின் படைப்பில், தசரதனின் காலத்திலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்த விதம் போன்றவற்றை விளக்கி நம்மை வியக்க […]

Read more

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் அமுதமொழிகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் அமுதமொழிகள், இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9. ஒரு காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு யாரும் எந்த உதவியும் இலவசமாகத் தர வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டிப் பெறுகின்ற நிலை இருக்கக்கூடாது. அதை எனது வாழ்நாளில் நான் காண வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அதுதான் என் லட்சியம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இது போன்ற பல்வேறு உணர்ச்சிமயமான கருத்துகளைத் தொகுத்து தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுதமொழிகள் என்ற நூலாகத் தமிழக […]

Read more

அடைபட்ட கதவுகளின் முன்னால்

அடைபட்ட கதவுகளின் முன்னால், மலையாளத்தில்-அனுசிரீ, தமிழில்-யூமா. வாசுகி, திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை, விலை 60ரூ. மகனுக்குத் தாலாட்டுப் பாடிய ஒரு தாயின் போர்ப் பாட்டு இது. எல்லாத் தாயும் தன் பிள்ளைகளை சில ஆண்டுகாலம்தான் சுமப்பார்கள். 24 ஆண்டுகளாகச் சிறையில் சுமக்கும் தாய் அற்புதம் அம்மாள். சிறையின் கொடும் தனிமையிலும் எனக்குப் போராடுவதற்கான சக்தி என் அம்மாவிடம் இருந்து கிடைக்கிறது. வெயில் மழையைப் பொருட்படுத்தாது எனக்காக நீதிமன்றத்திலும் சிறையிலும் ஏறி தளரும் போதெல்லாம் ஒருக்கால் தூக்கு மரத்தின் கீழே நிற்க வேண்டி […]

Read more

இந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள்

இந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள், நிராஜ் டேவிட், தோழமை வெளியீடு, சென்னை, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-561-4.html ஈழப் போராட்டம் இலங்கையில் நடந்தாலும், இந்தியாவின் கால் நூற்றாண்டு கால அரசியலைப் பாதித்த போராட்டம். இந்திய அமைதிப்படையை அனுப்பி 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளோடு யுத்தம் தொடங்கியது முதல் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கோரக்கொலைக்கு ராணுவரீதியாக உதவிகள் செய்தது வரை இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் கடுமையான விமர்சனத்துக்கு உரியவை. சிங்கள அரசின் இரவல் […]

Read more

சோர்விலாச் சொல்

சோர்விலாச் சொல், பாராளுமன்ற உரைகள் 1991-2011, பசீர் சேகுதாவூத், விளிம்பு, புத்தாநத்தம், விலை 250ரூ. முப்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற செயல்பாட்டாளர் பஷீர் சேகுதாவூதின் நாடாளுமன்ற உரைகள் சோர்விலாச்சொல் என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. அவரது சமூகம், அறம் சார்ந்த அணுகுமுறை, சமூக, அரசியல் நோக்கில் நாட்டின் எதிர்காலம் குறித்த புரிதல், இயங்குதளம், ஒரு இஸ்லாமியராக அவர் எதிர்கொண்ட மானிடச் சிக்கல்கள் என்பவற்றின் சான்றாக இவை உள்ளன.  இன்றுவரை அறியப்பட்டிருந்த பஷீரின் ஆளுமையின் பன்முகத்தன்மையைச் சோர்விலாச் செல் வெளிச்சமிட்டுக்காட்கிறது. முஸ்லிம்களின்மீது படிந்த வரலாற்றுக் […]

Read more

அம்மா சொன்ன குட்டிக் கதைகள்

அம்மா சொன்ன குட்டிக் கதைகள், தொகுப்பு-சே. இளையகுமார், முத்துக்குமரன் பதிப்பகம், திண்டுக்கல், சென்னை 125ரூ. தமிழக மக்கள் வாழ்க்கையில் கலை, இலக்கியம், இயல், இசை, நாடகம் ஆகியவை இரண்டறக் கலந்துள்ளது. இதனால் கதை மூலமாக சொன்ன கருத்துக்கள் மிக எளிதாக மக்களை சென்றடைவதால், தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா கதை மூலமாக பல நல்ல கருத்துக்கள், சிந்தனைகள் அடங்கிய குட்டிகதைகளை மேடைகளில் கூறிவருகிறார். முதல் அமைச்சரின் 66வது பிறந்த நாளையொட்டி 66 கதைகள் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதைக்கும் ஏற்றார் போன்று ஓவியங்களையும் நூலாசிரியர் இணைத்துள்ளார். […]

Read more

வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத்

வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத், என்.எஸ். அப்துல் ஜலீல், சிராக் ஃபவுன்டேஷன் ட்ரஸ்ட், சென்னை, விலை 150ரூ. குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுவதை மறுத்து கல்வி, விவசாயம், கிராம முன்னேற்றம், ஒடுக்கப்பட்டோர் நிலையை ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் விளக்குகிறது இந்நூல். ஆனால் நூலின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு எதிரானதுபோல் உள்ளது. நன்றி: இந்தியா டுடே, 4/6/2014.   —- மழைக்காடுகளின் மரணம், நக்கீரன், பூவுலகின் நண்பர்கள், சென்னை, விலை 20ரூ. காடுகள் குறித்த ஒரு விரிவான பார்9வையை அளிக்கிறது இந்நூல். […]

Read more

காஞ்சி மகானின் கருணை அலைகள்

காஞ்சி மகானின் கருணை அலைகள், டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன், செங்கைப்பதிப்பகம், செங்கல்பட்டு, விலை 300ரூ. நடமாடும் தெய்வமாக போற்றப்பட்ட காஞ்சி முனிவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் விரிவான வாழ்க்கை வரலாறு, அவர் ஆண்டுவாரியாக மேற்கொண்ட யாத்திரைகள் பற்றிய விவரங்கள், நாட்டின் பெரும் தலைவர்கள் அவரை சந்தித்தபோது நடைபெற்ற அதிசய-ருசிகர தகவல்கள் போன்றவை மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியுடன் அவர் நடத்திய உரையாடல்கள் சிந்திக்கவைக்கின்றன. இவற்றுடன் காஞ்சி மடாதிபதியை சந்தித்த பலரின் அற்புத அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. காஞ்சி மகானைப் பற்றி தெளிவாக அறிந்து […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, பக். 240, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-232-1.html காமராஜரைப் பற்றி அருமையான நூல் எழுதிய பெரும் பேச்சாளர் இளசை சுந்தரம், கக்கன்ஜி பற்றி எழுதியுள்ள அபூர்வ நூல் இது. யார் யாருக்கோ நூல்கள் உள்ள இந்த நாட்டில் தன்னலமற்ற தேசத் தொண்டர் கக்கனுக்கு அதிக நூல்கள் இல்லையே என்பது என் ஆதங்கம் என்ற முன்னுரையுடன் துவங்கியுள்ள நூலாசிரியர், நூறு கட்டுரைகளாக தந்துள்ளார். கக்கன் பற்றி அவ்வளவாக பதிவுகள் […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, சென்னை, பக். 240, விலை 100ரூ. எளிய குடும்பத்தின் பிள்ளை கக்கன். 12ஆம் வயதில் பண்ணை வேலைக்குப் போனவர். ஆனால் கல்வியில் ஆர்வம் அதிகம். படித்தார். படிப்படியாக முன்னேறினார். மாவட்ட ஆட்சிக்குழு உறுப்பினர், காங்கிரஸ் தலைவர், அரசியல் சட்ட அமைப்புச் சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர் என்று மிகப் பெரிய பதவிகளையெல்லாம் வகித்தவர் என்றாலும் தமக்காக எதையும் சேர்த்து வைக்காதவர். பதவிகளை இழந்து வறுமையில் வாடியபோதும், தம் வாழ்க்கைப் பாதையில் தடம் […]

Read more
1 29 30 31 32 33 44