நாகசாமி முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்)

நாகசாமி முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்), ராம்குமார், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை, பக். 360, விலை 225ரூ. தொல்லியல் ஆராய்ச்சியாளர் நாகசாமி, தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன், கிருபானந்தவாரியார், தமிழ் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட பிரபலங்களின் நேர்காணல்களைக் கொண்ட புத்தகம் இது. தண்ணீர் இல்லாமல் குழம்பு வைப்பதற்கான செய்முறையைக் கிருபானந்தவாரியார் சொல்லித் தருகிறார்.‘பச்சைக் குழந்தை அலங்காரத்தை விரும்புவதில்லை. தாய் அக்குழந்தையின் மீதுள்ள அன்பினால் அலங்காரம் பண்ணிப் பார்க்கிறாள். அதுபோலத்தான் கடவுளுக்க நாம் பால் போன்றவற்றைக் கொட்டி அபிஷேகங்களைச் செய்கிறோம்’ […]

Read more

கண்ணதாசன் முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்)

கண்ணதாசன் முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்), கல்பனாதாசன், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை, பக். 200, விலை 125ரூ. கலைஞர்கள், அறிஞர்கள் எனப் பல பிரபல மனிதர்களின் நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு, புத்தக உருவம் பெற்றுள்ளது. இதில், மேண்டலின் ஸ்ரீநிவாஸ், கண்ணதாசன், கா.சிவத்தம்பி, கேப்டன் லட்சுமி முதலிய சிர் நம்மிடையே இல்லை. அதுவே இந்நூலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. கண்ணதாசனின் பேட்டியில் தொடங்கி, 22 பிரபலங்களின் விரிவான நேர்காணல்கள் இந்த நூலில் உள்ளன. நேர்காணல்களின் நோக்கம், ஒரு காலகட்டம், அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து […]

Read more

ஜமாஅத் கடந்து வந்த பாதை

ஜமாஅத் கடந்து வந்த பாதை (மூன்றாம் தொகுதி), தமிழில்-டி.அஜிஸ்லுத்புல்லாஹ், இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட், பக். 432, விலை 160ரூ. சுதந்திரத்திற்கு முன்பு பிரிக்கப்படாத இந்தியாவில் ஜமாஅத்தே இஸ்லாமி என்ற இயக்கம் முக்கிய பங்கு வகித்தது. 1945இல் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள், விவாதங்கள் குறித்த அரிய தொகுப்பு இந்நூல். தனிமனித ஒழுக்கம், ஆட்சி, சமூகத்தை கட்டமைத்தல் போன்றவற்றைப் பற்றி அந்த இயக்கம் என்ன விரும்புகிறது? அதனுடைய செயல்திட்டம், வழிமுறைகள் எவை என்பதே இந்நூல். நம்முடைய அழைப்பு என்ன? […]

Read more

வளமும் நலமும் அருளும் வலம்புரி இடம்புரிச் சங்கு பூஜைகளும் பயன்களும்

வளமும் நலமும் அருளும் வலம்புரி இடம்புரிச் சங்கு பூஜைகளும் பயன்களும், மு. இலக்குமணப்பெருமாள் நாயுடு, உலகத் தமிழ்ப் படைப்பாளர் நூல் வெளியீட்டகம், திருச்சி, பக். 656, விலை 490ரூ. எந்த வீட்டில் வலம்புரிச் சங்கு இருக்கிறதோ, தினசரி வழிபாடு செய்யப்படுகிறதோ, அந்த வீட்டில் செல்வத்திற்குக் குறைவு இருக்காது. சங்கு இருக்கும் வீட்டில் துர்சக்திகள், பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை அணுகாது. திருஷ்ட்டிகள் அகலும், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும், குடும்பத்தில் கடன் வாங்கும் சூழ்நிலை அமையாது, அவ்வாறு சூழ்நிலை அமைந்தாலும், கடன் சுலபத்தில் […]

Read more

அயல் பசி

அயல் பசி, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. உலகம் முழுவதும் பரவியிருக்கும் பலவகையான உணவு கலாசாரங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஷாநவாஸ். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.   —-   மனோராமா இயர்புக், மலையாள மனோரமா வெளியீடு, சென்னை, விலை 150ரூ. உலகம், இந்தியா, தமிழ்நாடு பற்றிய விவரங்களும், கடந்த ஆண்டு நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் மனோரமா இயர் புக்கில்,அத்துடன் “இயர்புக்” தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால் வெள்ளி விழா மலராக மலர்ந்துள்ளது. வெள்ளி […]

Read more

தமிழ் இதழியல் கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ் இதழியல் கருத்தரங்கக் கட்டுரைகள், பெ.சு.மணி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பக். 362, விலை 175ரூ. தமிழ் இதழியல் வரலாறு தொடர்பாக 13 கருத்தரங்கங்களில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. 1831-ஆம் ஆண்டு தொடங்கி 1892-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் பத்திரிகைகள் உருவான விதம், அதற்கு பிரிட்டிஷார் ஏற்படுத்திய தடைகள், அதையும் மீறி பத்திரிகை சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்ததோடு, பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தியவர்கள் குறித்து இந்நூலில் விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுதேசமித்திரன், லோகோபகாரி, ஞானபோதினி, தத்துவபோதினி, திராவிடன், தினமணி உள்ளிட்ட பத்திரிகைகளைப் பற்றியும் […]

Read more

அச்சுவெல்லம்

அச்சுவெல்லம், பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 145, விலை 176ரூ. சூழ்நிலைகளால் உருவாகும் சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கின்றன. அவை அவ்வப்போது சிறுகதைகளாக உருப்பெறுகின்றன. அந்த வகையில் பா. முருகானந்தம், 15 சிறுகதைகளை, அச்சுவெல்லம் எனும் தலைப்பில் சிறுகதைகளாக தொகுத்து அளித்துள்ளார். தலைப்பு கதையான, ‘அச்சுவெல்ல’த்தில் பண்ணையார் வீட்டிற்கு போகும் ஒவ்வொரு அச்சுவெல்லத்திலும், கரிகாலன் கலக்கும் ‘பதம்’, அடிமைத்தனத்திற்கு எதிராகவும், இயலாமையின் வெளிப்பாடாகவும் மிக அழுத்தமாக படைக்கப்பட்டுள்ளது. ‘முதுகு வலி’ கதையில், ‘உடம்பில் இயல்வு நிலையிலேர்ந்து மாறுபட்டா அதைப் புரிஞ்சுக்கிட்டு மீண்டும் […]

Read more

பன்முகப் பார்வை

பன்முகப் பார்வை, எஸ். பொன்னுசாமி என்ற எஸ்.பொ., மித்ரா பதிப்பகம். முற்போக்கிற்கு மாற்று நற்போக்கு இலங்கை எழுத்துலகில் முக்கிய இடத்தில் இக்கும் எஸ்.பொன்னுசாமி என்ற எஸ். பொ., வின் பன்முகப் பார்வை என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மித்ரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இலங்கையில், ஆறுமுக நாவலருக்கு அடுத்து, வசன நடையில், தரமான படைப்புகளை அளித்தவர் எஸ்.பொ. தலித் குடும்பத்தில் பிறந்ததால், கல்விக் கூடங்களில் மாணவர்களால் தரக்குறைவாக நடத்தப்பட்டார். இதுபோன்றதொரு நிலை, தன் வாரிசுகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, வளோள இனப் பெண்ணை திருமணம் செய்து […]

Read more

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும்

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-1.html நக்கீரர், கபிலர், அவ்வை, கம்பன், பாரதி, வ.உ.சி., கவிமணி, பெரியார், லெனின், உமர் கய்யாம் முதலான கவிஞர்களையும், அறிஞர்களையும் பார்த்தும் படித்தும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் பெற்ற அனுபவங்களின் தொகுப்புதான் இந்த நூல். 56 தலைப்புகளில், 56 அறிஞர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஜீவா. அவரின் உரைகள், புத்தக மதிப்புரைகள், அணிந்துரைகள் முதலானவற்றின் […]

Read more

அடுப்படியே ஒரு மருந்தகம்

அடுப்படியே ஒரு மருந்தகம், ச.சிவ. வல்லாளன், விகடன் பிரசுரம், விலை 155ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-243-6.html வெள்ளைப் பூண்டு சாப்பிட்டால் அது ரத்த உறைவைத் தடுக்கும். இஞ்சி சாப்பிடுவோருக்கு இதய நோய் ஏற்படுவது இல்லை. மஞ்சள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இப்படி நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருள்களின் மருத்துவ குணங்களை எடுத்துக் கூறுகிறார் ச.சிவ. வல்லாளன். நன்றி: தினத்தந்தி.   —- காகிதப் படகில் சாகசப்பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், சென்னை, […]

Read more
1 35 36 37 38 39 63