எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு, தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 288, விலை 180ரூ. பொதுவுடைமை இயக்கத் தலைவர் நல்லகண்ணுவின் உயர்ந்த பண்புகளையும் ஆளுமைத் திறனையும், போராட்ட வாழ்க்கையையும் எல்லாரும் அறிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்டிருக்கும் நூல். அவருடன் பழகியவர்கள், போராட்டங்களில் பங்கேற்றவர்கள், சிறையில் உடனிருந்தவர்கள், அவரைப் பற்றி எழுதிய கட்டுரைகள், கவிதைகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. நல்ல கண்ணுவின் துணைவியார் ரஞ்சிதம் நல்லகண்ணுவுடனான நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது. பொது வாழ்க்கையில் மட்டுமின்றி, தனி வாழ்க்கையிலும் எவ்வாறு ஒரு புரட்சிகரமான தோழராகவே […]

Read more

அறிந்தும் அறியாமலும்

அறிந்தும் அறியாமலும், வானவில் வெளியீடு, சென்னை, விலை 190ரூ. பேராசிரியரும், சொற்பொழிவாளருமான சுப. வீரபாண்டியன் எழுதி இணைய தளத்தில் 33 வாரங்கள் வெளியான தொடர், அறிந்தும் அறியாமலும் என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இன்றைய நம் இளைஞர்களின் கணிப்பொறி அறிவும், தொழில் நுட்ப அறிவும் நம்மை வியக்கவைக்கின்றன. இத்தகைய இளைஞர்களி இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளைப் பற்றி சிறிதும் அறியாமல் இருக்கிறார்கள். இதற்கு ஒரு தலைமுறை இடைவெளியே காரணம் என்று கூறும் ஆசிரியர், முதியவர்களின் பட்டறிவும், இளைஞர்களின் செயல் திறனும் இணையும் புள்ளியில் […]

Read more

கவி கா.மு. ஷெரீப் திரை இசைப்பாடல்கள்

கவி கா.மு. ஷெரீப் திரை இசைப்பாடல்கள், தொகுப்பாசிரியர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 50ரூ. புகழ்பெற்ற கவிஞர்களின் திரையிசைப் பாடல்களை ஆண்டு வரிசைப்படி தொடர்ந்து தொகுத்துவரும் தொகுப்பாசிரியர் கவிஞர் பொன்.செல்லமுத்து இம்முறை தொகுத்தளித்திருக்கும் நூல் கவி கா. மு. ஷெரீப் திரை இசைப்பாடல்கள். கவி. கா. மு. ஷெரீப் 1949 முதல் 1963 வரை 14 ஆண்டுகளில் 30 படங்களில் 90 பாடல்கள் எழுதியுள்ளார். கா. மு. ஷெரீப்பின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் இடம் பெற்றுள்ளது. பணம் பந்தியிலே குணம் […]

Read more

பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள்

பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள், எஸ்.எஸ். பாரத்வாஜ், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 204, விலை 175ரூ. ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் போன்ற சமயாச்சாரியார்களில் தொடங்கி, தேவார மூவர், மணிவாசகர், பன்னிரு ஆழ்வார்கள், தியாகராஜர் முதலான மும்மூர்த்திகள், தமிழிசை மூவர், தாயுமானவர், அருணகிரிநாதர், பட்டினத்தார், திருமூலர் போன்ற 43 அருளாளர்கள் பிறந்த காலம், அவர்களின் தீவிரமான தெய்வ பக்தி, வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், சுருக்கமான வரலாறு, அவர்கள் இயற்றிய நூல்கள் போன்றவை இந்நூலில் சிறப்பாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றோடு நின்றுவிடாமல், அவர்கள் இயற்றிய […]

Read more

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள்

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள், ஜீவா பதிப்பகம், பக். 176, விலை 90ரூ. தமிழில் கடித இலக்கியம் என்னும் துறை வளர பலர் பலவழிகளில் உதவியுள்ளனர். அவர்களில் வெ. சாமிநாத சர்மாவின் பங்கு அதிகம். மகாத்மா காந்திக்கும் நேதாஜிக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தை அன்றைய ஜோதி இதழில் அவர் முழுமையாக நேர்மையாக மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அந்த கடிதப் போக்குவரத்தின் தொகுப்பே இந்நூல். கடிதங்கள் ஒவ்வொன்றும், காலம், நேரம், இடம், அரசியல் சூழல், சமூக தேவை, காங்கிரஸின் அன்றைய நிலை, இந்திய தேசிய சுதந்திரப் […]

Read more

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள்

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள், காவ்யா, சென்னை, விலை 400ரூ. தமிழ் இலக்கியத்துக்கு அரும்பணியாற்றிய கிறிஸ்தவ படைப்பாளிகளை இனம் கண்டு, அவர்களைப் பற்றிய தகவல்களை நேர்த்தியாக தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் மதுரை இளங்கவின். அரிய பணியை இலகுவாக செய்திருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து மதப்பணி ஆற்ற வந்தவர்கள், அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை கற்றதுடன், அதில் தேர்ச்சியும் பெற்று, படைப்புகளையும் செய்திருக்கிறார்கள் என்பது அவர்களது தமிழார்வத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அந்த வகையில் தேம்பாவணி தந்த வீரமாமுனிவர், சீகல் பால்கு, கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்களைப் பற்றிய தகவல்கள் […]

Read more

கண்ணதாசன் பேட்டிகள்

கண்ணதாசன் பேட்டிகள், தொகுப்பாசிரியர் ஆர்.பி. சங்கரன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. கவிஞர் கண்ணதாசன் அளித்த பேட்டிகள் அடங்கிய புத்தகம். 1971ல் எதிரும் புதிருமாக உள்ள புரமுகர்களை சந்திக்க வைத்து, அவர்களின் உரையாடலை “குமுதம்” வெளியிட்டது. அப்போது, கண்ணதாசனும், ‘‘சோ”வும் சந்தித்து உரையாடினார்கள். சூடும், சுவையும் நிறைந்த அந்த உரையாடல் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.   —- டார்வின் ஸ்கூல், ஆயிஷா இரா. நடராசன், புக் பார் சில்டர்ன், சென்னை, விலை 75ரூ. மாந்திரீக எதார்த்த நாவல் […]

Read more

அகிம்சையின் சுவடுகள்

அகிம்சையின் சுவடுகள், ப. முத்துகுமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 360, விலை 260ரூ. மகாத்மா காந்தியடிகள், மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் ஆகிய இரு தலைவர்களைப் பற்றி விவரிக்கிறது இந்நூல். காந்திஜியின் கொள்ளையால் ஈர்க்கப்பட்ட லூதர் கிங், 1895 ஆம் ஆண்டில் தொடங்கி 1965 ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஆப்ரிக்க மக்களின் உரிமைகளுக்காக நடத்திய எண்ணற்ற போராட்டங்கள் காந்திய வழிப் போராட்டங்கள்தாம். காந்திஜியின் வழிமுறை, அமெரிக்காவில் பயன்படுத்தக் கூடியத என்பதை 1920களிலேயே அமெரிக்க கறுப்பின மக்கள் உணர்ந்திருந்தனர். இந்தப் போராட்டத்தின்போது பள்ளிச் […]

Read more

கவி.கா.மு.ஷெரீப் கவிதைகள்

கவி.கா.மு.ஷெரீப் கவிதைகள், காவ்யா, சென்னை, விலை 600ரூ. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், சினிமா பாடலாசிரியர், பேரூரையாளர் என பன்முகத் திறமை கொண்டவர் கவி.கா.மு.ஷெரீப். அவர் எழுதிய 208 கவிதைகள், ‘மச்சகந்தி’ என்ற குறுங்காவியம், ‘நபியே எங்கள் நாயகமே’ மற்றும் 77 திரைப்பாடல்கள் காண்ட அரும் தொகுப்பு இது. இந்த நூலை ‘காவ்யா’ சண்முக சுந்தரம் தொகுத்துள்ளார். தமிழுக்காவும், தமிழ்நாட்டுக்காகவும் உழைத்தவரும், அரசியல், பத்திரிகை, சினிமா, சீறாப்புராண உரை என பல்வேறு தளங்களில் வெற்றிக்கொடி நாட்டியவருமான கவிஞரின் நூற்றாண்டையொட்டி இந்த நூல் வருவது சிறப்புக்குரியது. நன்றி: […]

Read more

செம்பியன் செல்வி

செம்பியன் செல்வி,  கோவி. மணிசேகரனின், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 525ரூ. கலிங்கம் எறிந்த கருணாகரத் தொண்டைமானைப் பற்றி ‘கலிங்கத்துப்பரணி’ எனும் தமிழின் தவக்காவியம் புகழ்கிறது. அந்த கருணாகரத் தொண்டைமானைக் கதாநாயகனாகக் கொண்டு எழுந்த உரைநடைக் காப்பியமே இந்த பல்லவ சரித்திர நாவல். புலவர்கள் மத்தியில் கருணாகரனுடைய வீரம் அருமையான காவியமாக உலவி வருகிறது. இதயத்தை மகிழ்விக்கும் வர்ணனைகள், உள்ளத்தைத் திடுக்கிட வைக்கும் போர்க் காட்சிகள், உணர்ச்சியைக் கவரும் காதல் நிகழ்ச்சிகள், சுவையோடு செல்லும் சம்பவக் கோவை – இவை அனைத்தும் நிரம்பியிருக்கின்றன. நாவலாசிரியர் […]

Read more
1 33 34 35 36 37 63