சுந்தர காண்டம்

சுந்தர காண்டம், எஸ்.என். பி.ஜெயசிங், ஆனந்த நிலையம், சென்னை, விலை 60ரூ. ராமபிரானுக்காக சீதாதேவியிடம் அனுமன் தூது சென்ற காண்டத்தின் பெயர் இந்நூலின் தலைப்பாக இடம் பெற்றிருந்தாலும், ராமாயணத்தின் ஆறு காண்டங்களும் இந்த புத்தகத்தில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/7/2015.   —- அமுதமொழிகளின் அற்புத வரிகள், குந்தவையார் பதிப்பகம், தஞ்சாவூர், விலை 90ரூ. பயனுள்ள பொன்மொழிகளின் தொகுப்பு நூல் இது. நாமறிந்த வழக்கமான பொன்மொழிகளுடன், நூலாசிரியர் தஞ்சை பா.திருநாவுக்கரசு, திரட்டிச் சேகரித்த ஏராளமான அற்புத வரிகள் நூலுக்கு பெருமை சேர்க்கின்றன. நன்றி: […]

Read more

நாடாளுமன்றத்தின் கதை

நாடாளுமன்றத்தின் கதை, அருணகிரி, குமுதம் புதுத்தகம் வெளியீடு, பக். 408, விலை 240ரூ. இந்திய பாராளுமன்றத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் வரலாற்றுப் பின்னணியை அறிந்திருக்க வேண்டும். இந்தியாவை உருவாக்கிய சட்டங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் தெரிந்தவராக அருணகிரி விளக்குகிறார் என்பதை நாடாளுமன்றம் அமைந்த விதத்தை அவர் விளக்கும்போதே நிரூபணமாகிவிடுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகை, தலைமைச் செயலாகம், தலைவர்கள், பிரதமர்கள், நாடாளுமன்ற நடைமுறைகள், தேர்தல் ஆணையம், ஆணையர்கள், தேர்தல் நடைமுறைகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் உரிமைகள், […]

Read more

இந்துமதம்

இந்துமதம், கலைஞன் பதிப்பகம், சென்னை, பக். 440, விலை 300ரூ. இந்து மதம் என்பது பல்வேறு சமயக் கொள்கையின் ஒருமைப்பாடு என்பதை தமிழ் உலகிற்கு நிறுவும் அரிய முயற்சி இந்நூல். பல மெய்ஞானிகள், நான்கு வேதங்கள், 108 உபநிடதங்கள், கீதை, பிரம்மசூத்திரம், பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம், ஆலய தரிசனம், தீர்த்த யாத்திரை என்றெல்லாம் பலவகையான எண்ணிறந்த வழிமுறைகளை நம் இந்து சமய நெறியில் எதற்காக எடுத்து வைக்கப்பெற்றுள்ளன என்பதை இந்நூலைக் கற்போர் யாவரும் புரிந்து கொள்வர். பலதரப்பட்ட மக்கள் வாழும் நம் சமூகத்தில் […]

Read more

திருக்குறளில் காமம்

திருக்குறளில் காமம், இ.கி.இராமசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 188, விலை 125ரூ. ஒரு பொருள் பற்றிய இருபத்து மூன்று அறிஞர்களின் கட்டுரை தொகுப்பு இந்த நூல். திருக்குறளில், காமத்துப்பாலின் சிறப்பு, காமமும், இன்பமும் ஒன்றா, காமம் இழிபொருளாக எப்போது மாறியது, காமம் தரும் கனிந்த வாழ்வு, காமத்துப் பாலும் கானல்வரியும், அகத்திணை மரபும், காமத்துப்பாலும் எனப் பல்வேறு தலைப்புகளில், திருக்குறள் கருத்துக்கள் ஆராயப்பட்டு உள்ளன. காமம் என்பதற்கு சரியான பொருள், நூலின் முதலிலேயே கருத்துரைகள் என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கிறது. மனமொத்து இருபாலும் […]

Read more

பூக்கள் விடும் தூது

பூக்கள் விடும் தூது, ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 224, விலை 100ரூ. இந்த நாவல் ஒரு வளர்ப்பு தாயின் பாசத்தையும், அவள் வாழ்வின் வேதனைகளையும் பேசுகிறது. அவள் வளர்த்த குழந்தைகளின் அன்புக்காக, தன் கடந்த கால வாழ்வை துன்ப மயமாக்கியோரை, மன்னிக்கவும் தயாராகிறாள் அந்த அன்னை. இந்த நூலில் இடம்பெறும் மற்றொரு நாவலான, காற்றோடு போராடும் பூக்கள் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது. தந்தையின் குடிப்பழக்கத்தால், மகளின் கற்பே பறிபோகும் நிலை, அதிலிருந்து கதாநாயகி மீண்டாளா, அவளின் வாழ்க்கை லட்சியம் நிறைவேறியதா […]

Read more

தித்திக்கும் தீந்தமிழ்

தித்திக்கும் தீந்தமிழ், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. மரபுக் கவிதைகள் எழுதுவதில் புகழ் பெற்று விளங்கும் முன்னாள் அமைச்சர் கா. வேழவேந்தன், கட்டுரைகள் தீட்டுவதிலும் வல்லவர். தித்திக்கும் தீந்தமிழ் என்ற இந்த நூலில், எத்திக்கும் போற்றும் தித்திக்கும் தீந்தமிழ், திருக்குறள் ஏன் தேசிய இலக்கியம்? காந்தி அண்ணாவின் தமிழ்த் தொடர்புகள், அறிஞர் அண்ணாவின் உயர் தனிப்பண்புகள், டாக்டர் மு.வ. அவர்களின் தனிப்பெருமைகள், கலைஞரின் நகைச்சுவை தோரணங்கள், பாவேந்தர் விதைத்த புரட்சிக் கவிதைகள் உள்பட 24 கட்டுரைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் தமிழின் பெருமையையும், […]

Read more

சட்டப்பேரவையில் கே.டி.கே. தங்கமணி

சட்டப்பேரவையில் கே.டி.கே. தங்கமணி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. கே.டி.கே. தங்கமணியின் நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக இந்த வரலாற்று பெட்டக நூல் வெளிவந்துள்ளது. அவரது சட்டப் பேரவை உரைகளில் தெறிக்கிற மேதைமையும், வாதத்திறனும், சாதாரண மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து முன்வைக்கிற எளிய சொல் பயன்பாடும் பிரமிக்கத்தக்கதாய் இருக்கின்றன. கே.டி.கே. தங்கமணி பன்முகத் திறன் கொண்டவர். சட்டத்தை பெரிதும் மதிப்பவர். சிங்கப்பூரிலும் இலங்கையிலும் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர். தோற்றத்தில் எளிமையானவர். தொழிலாளர்களுக்கா போராடுபவர். அவர் அறிவுஜீவயாகவும், அர்ப்பணிப்பு மிகுந்தவராகவும், வாதங்களில் வல்லுனராகவும் திகழ்ந்தார் என்பதை படம் […]

Read more

தமிழ்ச்சுரபி

தமிழ்ச்சுரபி, அமுதசுரபி விக்கிரமன், இலக்கியப்பீடம், பக். 544, விலை 450ரூ. தமிழ் இலக்கிய உலகிலும் இதழியல் வரலாற்றிலும் தனிச்சிறப்பு மிக்கதோர் இதழ், அமுதசுரபி என்பது அனைவரும் ஏற்கும் ஒன்று. அதன் துவக்கால அருஞ்சாதனைகளின் முதல் தொகுப்பு நூலாக மலர்ந்துள்ளது இந்த, தமிழ்ச்சுரபி. அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக, அமுதசரபி ஆசிரியராகப் பணியாற்றிய விக்கிரமனே, இதைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். கி.ஆ.பெ. விசுவநாதம், யோகி சுத்தானந்த பாரதியார். பிஸ்ரீ,இ பெ.நா.அப்புசாமி, எஸ். வையாபுரி பிள்ளை, க.நா.சு., டாக்டர் மு.வ., தி.ஜ.ரா., மா.ராசமாணிக்கனார், க.அ. நீலகண்டசாஸ்திரி, கி.வா.ஜ., பரலி. […]

Read more

ஃபேஸ்புக் பக்கங்கள்

ஃபேஸ்புக் பக்கங்கள் (தொகுதி 1), தொகுப்பு சுப்ரஜா, கலைஞன் பதிப்பகம், பக். 416, விலை 312ரூ. முக நூலில் இருப்பவர்களுக்குத்தான் அந்த சுதந்திர தாகம் புரியும். இது வெட்டி வேலை என்று ஸ்டேட்டஸ் போடுவதில்கூட ஒரு கருத்து இருக்கும். அல்லது உண்மை இருக்கும். நிறையப் பேர் துணிச்சல் மிக்கவர்களானதே ஃபேஸ்புக் வருகைக்குப் பிறகுதான். பிரபலமாக இருந்தால்தான் எழுத முடியும் என்ற பெர்லின் கோட்டையை உடைத்தெறிந்தது ஃபேஸ்புக்தான். கவிதை, சிறுகதை, நாவல், அரசியல், நாடகம், பாட்டு, காமெடி, விமர்சனங்கள், சர்ச்சைகள், சண்டைகள், சமையல்கள், சோதிடம், பக்தி […]

Read more

தமிழ்ச்சுரபி

தமிழ்ச்சுரபி (தொகுதி 1), தொகுப்பாசிரியர் விக்கிரமன், இலக்கியபீடம், சென்னை, பக். 544, விலை 450ரூ. 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமுதசுரபி இதழின் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகளின் தொகுப்பாக இந்த தமிழ்ச்சுரபி வெளிவந்திருக்கிறது. இது முதல் தொகுதி. கட்டுரைகளில் ரா.பி. சேதுப்பிள்ளை, கி.வா. ஜகந்நாதன், கி.ஆ.பெ. விசுவநாதம், யோகி சுத்தானந்த பாரதியார், பி.ஸ்ரீ. போன்றோர் எழுதியவை தமிழர்களின் மனதில் பதிய வேண்டியவை. பசியற்ற, பண்புள்ள நாடாக தமிழகம் அமைய வேண்டும் என்கிறார் ரா.பி. சேதுப்பிள்ளை. எனது தலை சிலருடைய திருவடிகளில் மட்டுமே […]

Read more
1 31 32 33 34 35 63