பெண்ணின் நிலை

பெண்ணின் நிலை, முனைவர் ஜெயா வேணுகோபால், காவ்யா, விலை 140ரூ. சி.ஆர்.ரவீந்திரனின் நாவல்களில் அங்குத்தாய் (1988), ஈரம் கசிந்த நிலம் (1992), காலம் (1994), வெயில் மழை (1995) ஆகிய நாவல்களை ஆய்வு செய்கிறார். பெண் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பெண்ணின் இளம் பிராயத்தில் எதிர்கொள்கிற சிக்கல்கள், காதல் வயப்படுகையில் எதிர்கொள்கிற சிக்கல்கள், திருமண வாழ்வில் உருவாகும் சிக்கல்கள், குடும்ப வாழ்வினுள் நேரும் சிக்கல்கள், பெண் பணியின் பொருட்டு, பணியிடத்தில் வெளி உலகினரை எதிர்கொள்ளும்போது நேரும் பணியிடைச் சிக்கல்கள், கணவனது ஒழுக்க மீறல், […]

Read more

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், ராஜ் கௌதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 420, விலை 370ரூ. இந்நுால், தலித்திய அறிவுச் சொல்லாடலைக் காட்டுகிற முயற்சிகளில் ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதிக்க அறிவுச் சொல்லாடலை எதிர் கொண்டு அதன் அடக்கு முறையை வெளிப்படுத்தி, அதை கடந்து போகும் முயற்சி இது (பக்., 11) என்னும் நுாலாசிரியர், தலித்துகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை மழுங்கடிக்கும் விஷயங்கள் அறங்களில் உள்ளன. றம், அறமரபுகள், அறங்களின் தோற்றம், தொல்காப்பிய அறம், பிராமணிய தருமம், சமண – பவுத்த […]

Read more

மதிப்பிற்குரிய மழலைகள்

மதிப்பிற்குரிய மழலைகள், வெற்றிச்செல்வி, ஸ்ரீ ஜோதி நியூஸ் மீடியா,  பக்.144, விலை ரூ.100. குழந்தை வளர்ப்பு இப்போது சிக்கலான ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகளை இயல்பாக வளரவிடாமல் தடுக்கும் கல்விமுறை, செல்பேசி, தொலைக்காட்சி முதலான சமூக ஊடகங்களின் தாக்கம், வேலையின் காரணமாக குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்க இயலாத பெற்றோர்கள் எனபல்வேறு சூழல்கள் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. இந்நிலையில், குழந்தைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நூலாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. பிறந்தது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளின் மன, அறிவு வளர்ச்சி […]

Read more

அந்நிய உணவுக்கு அடிமையாகலாமா?

அந்நிய உணவுக்கு அடிமையாகலாமா?,  ஆர்.எஸ்.நாராயணன்,  யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், பக்.86, விலை ரூ.70; நூலின் முதல் கட்டுரையின் தலைப்பே நூலின் தலைப்புமாகியிருக்கிறது. எனினும் நூல் முழுக்க உணவு சார்ந்த பிரச்னைகளையே பேசியிருக்கிறது. நமதுநாட்டின் தீங்கற்ற பல உணவுவகைகள் காணாமற் போயிருக்க, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பல வேதிப்பொருள்கள் கலக்கப்பட்ட உணவுப் பொருள்கள் நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஜங்க் உணவுக்குப் பலவிதமான தடைகளும், வரிகளும், கட்டுப்பாடுகளும் உள்ளபோது இந்தியாவில் அதற்குக் கட்டுப்பாடில்லாத சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. ரொட்டி மாவில் பொட்டாசியம் புரோமேட்டும் அயோடேட்டும் சேர்ப்பது ஐரோப்பிய […]

Read more

அண்டை வீடு: பங்களாதேஷ்

அண்டை வீடு: பங்களாதேஷ், பயண அனுபவங்கள்,  சுப்ரபாரதிமணியன், காவ்யா, பக்.105, விலை ரூ.110. பின்னலாடை உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளில் திருப்பூருக்குப் போட்டியாக வங்காளதேசம் முன்னணியில் நிற்கிறது. எனவே வங்காள தேசத்தின் பின்னலாடை உற்பத்தியைப் பற்றி ஆய்வு செய்வதற்காக 12 பேர் கொண்ட குழு திருப்பூரிலிருந்து சென்றது. அக்குழுவில் நூலாசிரியரும் இடம் பெற்றிருக்கிறார்.வங்காளதேசம் சென்று அங்குள்ள நிலைமைகளை மிகத் தெளிவாக இந்நூலில் விளக்கியிருக்கிறார். இந்நூலை அங்கே அதைப் பார்த்தேன்… இங்கே இதைப் பார்த்தேன் என்று விவரிக்கும் வழக்கமான பயணக்கட்டுரைகளின் தொகுப்பாகக் கருத முடியாது. வங்காள தேசத்தின் […]

Read more

தமிழில் சுயசரித்திரங்கள்

தமிழில் சுயசரித்திரங்கள், சா.கந்தசாமி, சாகித்ய அகாடமி வெளியிடு, விலை 290ரூ. சுயசரித்திரம் என்பது, இந்தியாவில் முதன் முதலில் தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது என்றும், அதனை எழுதியவர் 1748ம் ஆண்டு புதுச்சேரியில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிய ஆனந்தரங்கப் பிள்ளை என்ற தகவலையும் தரும் இந்த நூலில், ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரனார், தமிழ்த் தாத்தா உவே.சாமிநாதைய்யர், பாரதியார், திரு.வி.க., மா.பொ.சி., கலைஞர் கருணாநிதி, ஜெயகாந்தன் ஆகியோர் உள்பட 12 தலைவர்களின் சுயசரிதங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு தலைவர்கள் பற்றிய குறிப்பும், அதனைத் தொடர்ந்து அந்த தலைவர்கள் […]

Read more

பண்டைக்கால இந்தியா

பண்டைக்கால இந்தியா, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.எஸ். புக்ஸ் வேல்டு, விலை 230ரூ. மார்க்சிய கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவரான எஸ்.ஏ.டாங்கே, 1942ம் ஆண்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது பெரும்பகுதி எழுதப்பட்ட இந்த நூல், இந்தியாவின் ஆரம்ப கால வரலாற்றை மார்க்சிய சிந்தனையோடு அணுகி இருக்கிறது. ஆரியர்கள் எனப்படுபவர்கள் யார்? அவர்கள் எங்கு இருந்து இந்தியாவுக்கு வந்தார்கள்? யாகம், வேதம் என்றால் என்ன? அந்தக் காலத்தில் இருந்த ஆண் பெண் திருமண உறவுமுறை எப்படி? என்பது போன்றவற்றை விளக்கி இருக்கும் ஆசிரியர், பகவத் கீதை என்பது, மகாபாரத […]

Read more

நிலம் உங்கள் எதிர்காலம்

நிலம் உங்கள் எதிர்காலம், சா.மு.பரஞ்சோதி, பெரிகாம் பதிப்பகம், விலை 525ரூ. நிலம், வீடு, மனைகளை வாங்குவோருக்கும், விற்போருக்கும் ஆலோசகர்களுக்கும், தரகர்களுக்கும் பயன் உள்ள வகையில் இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. பலவிதமான பட்டாக்கள், பத்திரங்கள், மற்ற ஆவணங்கள், வில்லங்க சான்றிதழ் கிரைய ஒப்பந்தத்தின் போதும் கவனிக்க வேண்டியவை, சர்வே தொடர்பான செய்திகள் என்று ரியல் எஸ்டேட் தொடர்பான அத்தனை ஐயப்பாடுகளுக்கும் இந்த நூலில் விளக்கம் தரப்பட்டு இருக்கின்றன. நிலம் மற்றும் வீடுகளை வாங்க நினைப்பவர்களுக்கு இந்த நூல் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி […]

Read more

மதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்

மதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம், எழில்மதி, மணிமேகலை பிரசுரம், விலை 55ரூ. குறள் பாக்கள் மூலம் குடியின் தீமைகளை விளக்குகிறார் நுாலாசிரியர். முதன் முதலில் இந்நுால் வெளிவந்த போது, ‘மது விலக்கில் முழு மூச்சுடன் இறங்கியுள்ள நம் மாநில அரசு இந்நுாலை வெளியிடுவது, நாட்டு மக்களுக்கு நலம் பயப்பதாக அமையும்’ என, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் சொன்னார். மது பிரச்னைக்குரிய எல்லா அம்சங்களையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துள்ளமை பாராட்டிற்கும், சிறப்பிற்கும் உரியது. குடிகாரர்களை இந்த நுால் திருத்தும்; நல்வழி காட்டும் என்பதில் எள்ளளவும் […]

Read more

வைணவம் வளர்த்த மகான்கள்

வைணவம் வளர்த்த மகான்கள், ஆர்.வி.பதி, நிவேதிதா பதிப்பகம், பக். 154, விலை 150ரூ. வைணவம் வளர்த்தவர் என்றதும் பன்னிரு ஆழ்வார்களையே நினைப்போம். ஆனால், வைணவத்தை எங்கும் பரப்பிய, 32 மகான்களை, இந்த நுாலில் மிகச் சுருக்கமாக ஆசிரியர் தந்துள்ளார். வைணவ குரு மரபில் முதல்வர் நாராயணர், இரண்டாம் ஆச்சார்யர் பெரிய பிராட்டியார், பின், விஷ்வக்சேனர் இவரே நம்மாழ்வாராக அவதரித்து நான்கு வேதங்களையும் திருவாய் மொழியாகப் பாடியவர். பெருமாள் கோவில்கள் தலையில் சாத்தப்படும் ஸ்ரீசடாரி, நம்மாழ்வார் சடகோபன் பெயரால் வழங்கப்படும் பெருமாள் பாதங்கள். பல நுாற்றாண்டுகளுக்கு […]

Read more
1 41 42 43 44 45 88