சிற்பியின் படைப்புத்தளம்

சிற்பியின் படைப்புத்தளம், தே.ஞானசேகரன், காவ்யா, விலை 450ரூ. கவிதை உலகில் தனியிடம் பெற்றவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் சிற்பி படைத்த கவிதைகளின் ஆய்வு நூலாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. ஏற்கனவே வெளிவந்த சிற்பிபின் படைப்புக்கலை, சிற்பி மரபும் புதுமையும் ஆகிய இரண்டு நூல்களையும் தொகுத்து ஒரே நூலாக இது வெளியிடப்பட்டு இருக்கிறது. மண் சார்ந்த கற்பனைகளுடனும், மக்கள் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் சிற்பி எழுதிய கவிதைகளை திறனாய்வு செய்து பல எழுத்தாளர்கள், அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் இலக்கியத் தரத்துடன் மிளிர்கின்றன. […]

Read more

விடை தேடும் வினாக்கள்

விடை தேடும் வினாக்கள், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், விலை 160ரூ. அன்றாட வாழ்வுக்குத் தேவையான அறிவுரைகள், ஆன்மிகக் கருத்துகள், சிந்தனையைத் தூண்டும் செய்திகள் போன்றவற்றை ஏராளமான கேள்விகளுக்குப் பதிலாக மிக நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர். அனைத்து கருத்துகளையும், ஆன்மிகப் பெரியோர்கள், பல அறிஞர்கள் ஆகியோரின் மேற்கோள்களுடன் தந்து இருப்பதால், அந்தக் கருத்துக்கள் அனைவரையும் கவரும் வண்ணம் திகழ்கின்றன. வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள் மற்றும் திருமூலரின் திருமந்திரம் உள்பட பல நூல்களின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டியும், ஆங்காங்கே ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான சிறுகதைகள் மூலமும் […]

Read more

தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்

தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும், ஆர்.நல்லகண்ணு, பத்மா பதிப்பகம், விலை: ரூ.190 நீரின்றி அமையாது உலகு தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக உருவாகியிருக்கும் தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மூலவராகத் திகழ்ந்தவரும் இளம் பருவத்திலிருந்தே பொதுவுடைமைக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு சமூக அர்ப்பணிப்போடு செயலாற்றிவருமான நல்லகண்ணுவின் முதிர்ந்த அனுபவப் பார்வையில் எழுதப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு அனுபவமும் வரலாறும் இத்தொகுப்பில் பதிவாகியுள்ளது. 1977-ன் புயல் வெள்ளச் சேதம் தொடங்கி காவிரி நீர்ப் பிரச்சினை, தாமிரபரணிப் பிரச்சினைகளோடு […]

Read more

சொட்டாங்கல்

சொட்டாங்கல், தமிழச்சி தங்கபாண்டியன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 100ரூ. இந்து தமிழின் ஓர் அங்கமான ‘காமதேனு’ வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நவீன வாழ்க்கையில் இன்றைய தலைமுறை தொலைத்துவிட்டு நிற்கும் பால்யத்தின் நினைவுகள் இவை. அழியும் நிலையிலிருக்கும் கிராமத்து விளையாட்டுகளையும் நினைவிலிருந்து அகலாத இளம்பருவத் தோழிகளையும் பற்றிய கட்டுரைகள். தமிழச்சி தங்கபாண்டியனின் கட்டுரைகள் கற்பனைகளிலிருந்து அல்ல, நினைவுகளிலிருந்து எழுதப்படுபவை என்பதற்கு இத்தொகுப்பு ஓர் இலக்கியச் சாட்சி. நன்றி: தமிழ் இந்து, 23/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள்

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள்,  தமிழில்: கோபால் மாரிமுத்து, மணிமேகலைப் பிரசுரம், பக்.520, விலை ரூ.350. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின்போது  தலைவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். ஆலிவர் க்ராம்வெல், நெப்போலியன் போனபர்ட் , டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட 8 அயல்நாட்டவர் ஆற்றிய சொற்பொழிவுகளும் இடம் பெற்று உள்ளன. குறிப்பிட்ட கால வரலாற்று நிகழ்வையும் அதன் பின்னணியையும் தெரிந்து கொள்ள இந்நூலில் உள்ள சொற்பொழிவுகள் உதவுகின்றன. தாதாபாய் நெரோஜி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசியது, சுவாமி விவேகானந்தர் 1893 – இல் […]

Read more

விழித்தால் விடியும்

விழித்தால் விடியும் (தமிழியக்கக் கட்டுரைகள்),  புலவர் வே.பதுமனார், செயக்கொடி பதிப்பகம், பக்.224, விலை ரூ.200; தமிழைப் படிப்பது, பேசுவது, எழுதுவது ஆகியவற்றில் எல்லாம் ஆர்வமற்று தமிழ்மக்கள் இருப்பதை எண்ணி வருந்தி, இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம்? என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள ஆழமான கட்டுரைகள் அடங்கிய நூல். இயற்கையோடியைந்து தமிழ் எப்படி உருவாகி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறார் நூலாசிரியர். வீட்டில், கடைகளில், ஊடகங்களில், திரைப்படங்களில், சின்னத்திரையில் எல்லாம் நல்ல தமிழ் பேசப்படுவதில்லை என வருந்தும் நூலாசிரியர், ஒரு மொழி எப்போது பேச்சு வழக்கை இழந்துவிடுகிறதோ அப்போதே […]

Read more

புத்தரின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை

புத்தரின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை, மானா பாஸ்கரன், சாக்பீஸ் வெளியீடு. எளிமையின் ருசி வாழ்க்கையை ஆழ்ந்து ரசிக்கும் மனதின் பார்வையில் எந்த விஷயமும் சுவை மிக்கதாக அமைந்துவிடும். பால்யகால நினைவுகள், அன்றாடக் குழப்பங்கள் எனப் பல விஷயங்களை இலகுவான மொழியில் பேசும் மானா பாஸ்கரனின் இப்புத்தகம், அமைதியான நீரோட்டத்தின் குளிர்ச்சியை உணர்த்தும் சுவையான படைப்பு. ‘பசி வந்தாலும் பறக்காத பத்து’ எனும் ஆளுமைகளின் பட்டியலில் புத்தர், அம்பேத்கர், பெரியார் தொடங்கி வடிவேலு வரை இடமளிக்கிறார் மானா. சின்னக்குத்தூசியின் அசாத்தியமான பெருந்தன்மை, கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் […]

Read more

தமிழ் அறிஞர்கள்

தமிழ் அறிஞர்கள், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.440, விலை ரூ.500. தமிழின் இன்றைய நிலைக்குக் காரணமான தமிழ்அறிஞர்கள் 36 பேர் தமிழுக்காற்றிய அரும்பணிகளைப் பற்றி விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது . உ.வே.சாமிநாத அய்யர், அ.ச.ஞானசம்பந்தன், ஒளவை துரைசாமிப் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன், தேசிக விநாயகம் பிள்ளை, ஜி.யு.போப், தேவநேயப் பாவாணர், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், வ.வே.சு.ஐயர், நீதியரசர் மு.மு.இஸ்மாயில் உள்ளிட்ட முப்பத்தாறு தமிழறிஞர்களின் வாழ்க்கைச்சம்பவங்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அவர்களின் கருத்துகள், அவர்கள் பங்கு கொண்ட இயக்கங்கள் என விரிந்து செல்கிறது. நூலாசிரியர் எழுதிய நீண்ட […]

Read more

க.நா.சு. கவிதைகள்

க.நா.சு. கவிதைகள், பதிப்பாசிரியர்: இளையபாரதி, விலை: ரூ.165 புதுக்கவிதையின் தந்தையாக ந.பிச்சமூர்த்தி பொதுவில் அறியப்படுகிறார்; பாரதிக்குப் பிறகு வசனகவிதையை முயன்ற கு.ப.ராவும் புதுமைப்பித்தனும் முன்னோடிகள். ஆனால், புதுக்கவிதை என்ற பெயரை அந்த வடிவத்துக்குப் புனைந்ததோடு மட்டுமின்றி புதுக்கவிதைக்கு, இருபதாம் நூற்றாண்டு இந்திய, தமிழ் வாழ்க்கையின் நவீனத்தையும் லட்சணங்களையும் அழகியலையும் ஏற்றியவர் க.நா.சுப்ரமணியம். புதுக்கவிதை தன்னை நிறுவிக்கொண்ட கதை அவ்வளவு எளிதானதல்ல. இலக்கண வயப்பட்ட சட்டகங்களிலிருந்து மட்டுமல்ல, பழமையின் இறுகிய தடைகொண்ட மனோபாவங்களிலிருந்தும், சிந்தனை மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பெற்ற உருவம் புதுக்கவிதை. ஒரு உயிர் […]

Read more

நகைச்சுவை குதிரையில் என் சிந்தனைப் பயணம்

நகைச்சுவை குதிரையில் என் சிந்தனைப் பயணம், திண்டுக்கல் ஐ. லியோனி, அசசி பதிப்பகம், பக். 204, விலை 180ரூ. வாழ்வியல் குறித்த சிந்தனைகள்: பட்டிமன்றங்களில் நகைச்சுவையால் பலரையும் ஈர்த்து வரும் லியோனி எழுதிய,  கட்டுரைகள் அடங்கிய இந்நுால் அவரது முதல் நுால். பல எடுத்துக்காட்டுகள், வழித் தீட்டப்பட்ட கட்டுரைகள் படிப்போருக்கு நல்ல விருந்து. பேச்சுக் கலை பற்றிக் குறிப்பிடும்போது, ‘நல்லதைப் பேசுவோம்; நன்றாகப் பேசுவோம்’ என்ற அடிப்படையில் எழுந்த அக்கட்டுரை, சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வாறு ஒருவர் பேச வேண்டும் என்பதைப் பல உதாரணங்களோடு விளக்குகிறது. […]

Read more
1 46 47 48 49 50 88