வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம், வாழ்வியல் கட்டுரை, வித்யா சாகர், முகில் பதிப்பகம்,  பக்.144, விலை ரூ.125. நிம்மதி: கிலோ நாலு ரூபாய்,  உடம்பு ஓர் ஆயுதம்: ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப் போர் புரிவோம் வசவு: வசவு வாங்கலையோ வசவு, எல்லோரும் தற்கொலை செய்து கொள்ளுங்கள் – இவ்வாறு வித்தியாசமான பல தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள 25 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இன்றைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல பிரச்னைகளை எதிர்கொள்ள நம்மை நாம் எப்படித் தயார் செய்து கொள்ள வேண்டும் என்றஅடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியரின் அனுபவம் […]

Read more

முகத்தில் முகம் பதித்தோர்

முகத்தில் முகம் பதித்தோர், இளமாறன், மணிவாசகர் பதிப்பகம், பக்.192, விலை ரூ.150. முகம் சிற்றிதழில் வாழ்வில் சாதனை செய்தவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. அவை பல தொகுப்புகளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இத்தொகுப்பில் சாதனை புரிந்த ஆற்றலாளர்களைப் பற்றிய கட்டுரைகள் அடங்கியுள்ளன. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. தலைவர் க.அன்பழகன் போன்ற அரசியல் தொடர்புள்ளவர்கள், பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன், ஒளிப்படக் கலைஞர் இரா.மணி, கல்வெட்டாய்வாளர் கோ.கிருட்டிணமூர்த்தி, தொல்லியலறிஞர் ச.கிருட்டிணமூர்த்தி, மருத்துவர் க.கோபால் போன்ற பல்வேறு துறை சார்ந்தவர்களின் […]

Read more

நிறம் மாற்றும் மண்

நிறம் மாற்றும் மண்,  இயகோகா சுப்பிரமணியன்; நமது நம்பிக்கை வெளியீடு,பக்.208; விலை ரூ.120. அமெரிக்காவுக்குப் பலமுறை சென்ற நூலாசிரியர், பயணக் கட்டுரையாக எழுதாமல், அமெரிக்காவில் போக்குவரத்து காவலரின் பணிகள், நீதித்துறையின் செயல்பாடுகள், சிறைச்சாலைகள் செயல்படும் விதம், துப்பாக்கி வைத்துக் கொள்ளும் முறை, கருப்பின மக்களின் வாழ்க்கை முறை, அங்கு வாழும் தமிழரின் பண்பாட்டுச் செயல்பாடுகள், பெண்களின் நிலை, மருத்துவத்துறை செயல்படும் விதம், அரசியல்வாதிகளின் செயல்கள் என அமெரிக்காவின் பல்வேறு முகங்களை நமக்கு விளக்கிச் சொல்கிறவிதத்தில் இந்நூலை எழுதியிருக்கிறார். அங்குள்ள நிலைமைகளையும், இங்குள்ள நிலைமைகளையும் விளக்கும் […]

Read more

புனைவும் நினைவும் – வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம்

புனைவும் நினைவும் – வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம்,  சமயவேல்,  மணல்வீடு இலக்கிய வட்டம், பக்.136; விலை ரூ.100. 1972 இல் பள்ளி இறுதியாண்டை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்வதற்காக தனது சொந்த ஊரான எட்டயபுரம் அருகில் உள்ள வெம்பூரை விட்டுக் கிளம்பிய நூலாசிரியர், அதற்குப் பிறகு அங்கே தொடர்ந்து வாழவில்லை. சொந்த ஊரைப் பிரிந்து 50 ஆண்டுகளானாலும் அதன் நினைவுகளில் அவர் எப்போதும் மூழ்கிக் கிடந்திருப்பது நூலைப் படிக்கும்போது தெரிய வருகிறது. மழை பெய்தால் நிறையும் கண்மாய். கண்மாய் நீரை நம்பி விவசாயம். மழையில்லாவிட்டால் […]

Read more

கம்பனில் ஆழம் கண்ட வேழம் கம்பன் அடிப்பொடி

கம்பனில் ஆழம் கண்ட வேழம் கம்பன் அடிப்பொடி, சொ.சேதுபதி, வானதி பதிப்பகம்,  பக்.352, விலை ரூ.250. கம்பன் கழகங்களுக்கெல்லாம் தாய்க் கழகமாக விளங்குவது "கம்பன் அடிப்பொடி சா.கணேசனால் 1939-ஆம் ஆண்டு காரைக்குடியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம்தான். இக்கழகத்தின் மூலம் உலகம் முழுவதும் கம்ப காவியத்தைக் கொண்டு சேர்த்த பெருமை சா.கணேசனையே சாரும். இந்நூல், சா.கணேசனை வேழமாக உருவகப்படுத்தி, அவர் கம்ப காவியத்தில் கண்டஆழத்தைக் கூறி, முழுக்க முழுக்க அவர் புகழபாடியிருக்கிறது. இதுவரை அச்சு வாகனம் ஏறாமல் இருந்த சா.கணேசனின் உரையும் பாட்டும் நூல் முதன்முதலில் இந்நூலில் […]

Read more

நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்

நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்,சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், பக்.240, விலை ரூ. 150. வாழ்க்கை என்பது பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு எனலாம். அதை நம் மனதுக்கு நெருக்கமாக உணரும் வகையில் தொகுத்துத் தந்திருப்பது இந்நூலின் சிறப்பம்சம். செயற்கரிய செயல்களைச் செய்தவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான 200 சம்பவங்கள் இந்நூலில் மணம் வீசுகின்றன. சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் குடும்பத்துக்கு பசும்பொன்தேவர் மரியாதை கொடுத்த சம்பவத்திலிருந்து தொடங்கும் இத்தொகுப்பில், சிறுவனிடம் பாடம் கற்ற தமிழ்த்தாத்தா உ.வே.சா, அப்துல்கலாமின் பெருந்தன்மை, தியாக சீலர் கக்கன், சாதிகளை வெறுத்த ஜீவா, திரு.வி.க.வின் […]

Read more

இறையன்பு கருவூலம்

இறையன்பு கருவூலம், இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 110ரூ. மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று, தமிழக அரசின் முதன்மை செயலாளராக, முது முனைவராக, நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த வெ.இறையன்பு எழுதிய 16 நூல்களைத் தேர்ந்தெடுத்து, அந்த நூல்களைப் பற்றிய மதிப்பீடுகளைத் தந்து இருக்கும் இந்த நூல், இறையன்புவின் ஆற்றல்களை தெளிவாக அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது. ‘தந்தி’ பதிப்பகம் வெளியிட்ட ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’, ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ ஆகியவை உள்பட இறையன்பு எழுதிய புத்தகங்களில் காணப்படும் […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், மனோஸ், ஹலோ பப்ளிகேஷ்ன்ஸ், விலை 500ரூ. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியமான சிலப்பதிகாரம் முழுவதும் அப்படியே தரப்பட்டு அத்துடன் அவற்றுக்கு எளிய உரையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஏன் நேரடியாக எழுதவில்லை? சிலப்பதிகாரத்தை மதுரை கடைச் சங்கத்தில் அரங்கேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது ஏன்? சிலப்பதிகாரத்தை மதுரை கடைச்சங்கத்தில் அரங்கேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது ஏன்? சிலப்பதிகாரத்தில் உள்ள நிகழ்வுகள் கற்பனையா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு ஆசிரியர் தந்துள்ள விளக்கங்கள் ஆய்வுக்கு உரியவையாக விளங்குகின்றன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

அய்யாவின் அடிச்சுவட்டில்

அய்யாவின் அடிச்சுவட்டில்,கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 250ரூ. தந்தை பெரியாரின் இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு 75 ஆண்டுகளாக தொடர்ந்து சமூகப் பணியாற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியாருடன் இணைந்து ஆற்றிய இயக்கப் பணிகள் குறித்து ஏற்கனவே எழுதிய 224 கட்டுரைகள், 5 பாகங்களாக வெளியாகி உள்ள நிலையில், மேலும் 41 கட்டுரைகளுடன் இந்த ஆறாவது தொகுதி வெளியாகி உள்ளது. ஆங்கில நாளேட்டை தமிழர் தொடங்க வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பியது, தஞ்சையில் வரலாற்றுச் சாதனையாக மகளிர் பாலிடெக்னிக் […]

Read more

வெட்டவெளியில் ஒரு கரிசல் கிராமம்

வெட்டவெளியில் ஒரு கரிசல் கிராமம், சமயவேல், மணல்வீடு, விலை 100ரூ. ஊர் நினைவுகள் பாரதி பிறந்த எட்டயபுரம் அருகே வேம்பூர் என்ற கிராமத்தில் பிறந்து இப்போது மதுரையில் வாழ்பவர் கவிஞர் சமயவேல். இவர் தான் பிறந்த கரிசல் சமயவேல். இவர் தான் பிறந்த கரிசல் மண் கிராமத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் கட்டுரைகள் அடங்கியது இந்நூல். அந்த கிராமத்தின் வெட்டவெளியை, அது 360 டிகிரியில் காண்பிக்கும் அடிவானத்தை, விளாத்திகுளம் சுவாமியின் பாட்டில் கேட்கும் அந்த வெட்ட வெளியின் இசையை இங்கே பதிவு செய்திருக்கிறார் அவர். பால்யமும் […]

Read more
1 44 45 46 47 48 88